என் மலர்
நீங்கள் தேடியது "ரெயில் கழிவறை"
- டிக்கெட் பரிசோதகர் அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படைக்கும், ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.
- போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரது பெயர் சோகன் தாஸ் என்று கூறினார்.
அரக்கோணம்:
ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் 20-ந் தேதி காலை புறப்பட்டு எர்ணாகுளம் நோக்கி வந்து கொண்டிருந்தது.
இந்த எக்ஸ்பிரஸ் ரெயிலின் எஸ்-2 பெட்டியின் கழிவறை ரெயில் புறப்பட்டதில் இருந்து பூட்டிய நிலையிலேயே இருந்துள்ளது. ஆனால் கழிவறையின் உள்ளே ஆள் இருக்கும் சத்தம் மட்டும் கேட்டது.
இதற்கிடையே ரெயில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை கடந்து அரக்கோணம் வந்து கொண்டிருந்த போது மீண்டும் கழிவறையில் இருந்து சத்தம் வந்தது. பயணிகள் இதுகுறித்து சம்பந்தப்பட்ட ரெயில் பெட்டியில் இருந்த டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து டிக்கெட் பரிசோதகர் அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படைக்கும், ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.
ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்தை வந்தடைந்ததும் போலீசார் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் சென்று அந்த கழிவறை கதவை உடைத்து திறந்தனர். அதில் வாலிபர் ஒருவர் பதுங்கி இருந்தார்.
அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரது பெயர் சோகன் தாஸ் என்று கூறினார்.
சுமார் 31 மணி நேரம் வாலிபர் உணவு, தண்ணீர் அருந்தாமல் கழிவறையில் பயணம் செய்து உள்ளார்.
மேலும் மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்று முன்னுக்கு பின் முரணாக பேசியதால் முழுமையான விவரம் தெரியவில்லை. அவரை பாதுகாப்புப் படை போலீசார் அரக்கோணம் ரெயில்வே மருத்துவமனையில் சேர்த்தனர்.
வாலிபர் மனநிலை பாதிக்கபட்டவர் என்பது தெரியவந்தது. இன்று அதிகாலை வாலிபரை சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு வாலிபருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
- கண்ணாடி உடைக்கப்பட்டது அறிந்த ரெயில்வே அதிகாரிகள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
- போலீசார் ரிஸ்வானிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:
அரக்கோணத்தில் இருந்து காட்பாடி நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது.
இதில் ரிஸ்வான் (வயது 22) என்பவர் பொதுப்பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். சிக்னல் காரணமாக மேல்பாக்கத்தில் ரெயில் நின்றது.
வெகு நேரமாக ரெயில் செல்லாததால் பொதுப் பெட்டியில் பயணம் செய்த ரிஸ்வான் ரெயிலில் இருந்து கீழே இறங்கினார். பின்னர் முன்பதிவு செய்த பெட்டியின் அருகே சென்றார்.
ரெயில் அங்கிருந்து செல்லாததால் ஆத்திரம் அடைந்த ரிஸ்வான் கீழே இருந்த கல்லை எடுத்து முன்பதிவு பெட்டியின் கழிவறையின் கண்ணாடி மீது வீசியதாக கூறப்படுகிறது. இதில் கழிவறையின் கண்ணாடி உடைந்தது.
சிறிது நேரத்திற்கு பின்பு ரெயில் அங்கிருந்து புறப்பட்டது. கண்ணாடி உடைக்கப்பட்டது அறிந்த ரெயில்வே அதிகாரிகள் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் ரிஸ்வானை பிடித்து அரக்கோணம் ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ரெயில்வே போலீசார் ரிஸ்வானிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- வாலிபர் மரணம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் கிளம்பி வந்து கொண்டிருந்தது. இதில் முன்பதிவு இல்லாத பொது பெட்டியில் நூற்றுக்கணக்கானவர்கள் பயணம் செய்து வந்து கொண்டிருந்தனர்.
இந்த பொதுப் பெட்டியில் உள்ள கழிப்பறையில் 35 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் ஒருவர் உள்ளே சென்றார். பின்னர் அவர் மீண்டும் திரும்பி வரவில்லை.
கதவு நீண்ட நேரம் திறக்கவில்லை. பயணிகள் கதவை தட்டினாலும் பதில் இல்லை. அப்போது அந்த ரெயில் சேலத்தைத் தாண்டி ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. இதனை அடுத்து இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஈரோடு ரெயில்வே போலீசார் உஷார் நிலையில் இருந்தனர்.
பின்னர், அந்த ரெயில் ஈரோடு இரண்டாவது நடைமேடையில் வந்து நின்றது. அங்கு தயாராக இருந்த ஈரோடு ரெயில்வே போலீசார் கழிப்பறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அந்த நபர் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த நபர் எப்படி இறந்தார் என தெரியவில்லை. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை. இறந்த நபர் சந்தன கலர் முழுக்கை ரவுண்ட் நெக் பனியன் அணிந்திருந்தார். ப்ளூ கலர் ஜீன்ஸ் பேண்ட் அணிதிருந்தார். நெற்றியின் வலது பக்கம் ஒரு கருப்பு மச்சம் இருந்தது. வலது கால் முட்டியில் ஒரு கருப்பு மச்சம் உள்ளது. வலது தொடையின் வெளிப்புறத்தில் ஒரு காய தழும்பு உள்ளது.
மேலும், அந்த நபரின் சட்டை பையில் ரெயில்வே பிளாட்பாரம் டிக்கெட் இருந்தது. மற்றபடி எந்த ஒரு பொருட்களும் பைகளும் சிக்கவில்லை. அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ரெயில்வே போலீசார் அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூர் நகரில் இருந்து கடந்த 24-ம் தேதி பாட்னா-கோடா எக்ஸ்பிரஸ் ரெயிலில் சஞ்சய் அகர்வால் என்பவர் பயணம் செய்தார். ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் சஞ்சய் உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது. ரெயில் கழிவறைக்கு சென்ற அவர் தனது மனைவியை போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
தனக்கு உடல்நலம் சரியில்லை என கூறினார். அதன்பின் அவரை தொடர்பு கொண்டு பேச முடியவில்லை. இதனால் சந்தேகமடைந்த சஞ்சயின் மனைவி ரெயில்வே போலீசுக்கு தகவல் அளித்தார். ஆனால் அவர் தவறான ரெயில் எண் கூறியதால் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அதற்குள் எக்ஸ்பிரஸ் கோடாவிற்கு சென்று விட்டு மீண்டும் பாட்னா திரும்பியது. பாட்னாவில் வைத்து ரெயிலை சோதனை செய்த போலீசார் கழிவறையில் இருந்த சஞ்சயின் உடலை கடந்த ஞாயிற்று கிழமை மீட்டனர். இரண்டு நாட்களுக்கு பிறகு உடல் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #PatnaKotaExpress