என் மலர்
நீங்கள் தேடியது "திவால் சட்டம்"
- ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் 301 கோடி கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் திவாலானது.
- ஹீரோ எலெக்ட்ரிக் கடந்த நிதியாண்டில் 11,500 மின்சார பைக்குகளை மட்டுமே விற்பனை செய்தது.
இந்தியாவின் முதல் இ- ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ எலெக்ட்ரிக், ரூ.301 கோடி கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் திவாலானது.
கடந்த டிசம்பர் மாதம் திவால் நடவடிக்கை தொடங்கிய நிலையில், அந்நிறுவனத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் ஏலத் தொகையை பதிவு செய்வதற்கான கால அவகாசம் மார்ச் 14ம் தேதி நிறைவடைகிறது.
பாங்க் ஆஃப் பரோடா, கோடக் மஹிந்திரா வங்கி, சவுத் இந்தியன் வங்கி மற்றும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி உள்ளிட்ட வங்கிகளிடம் மட்டும் ஹீரோ எலெக்ட்ரிக் ரூ.82 கோடி கடன் வாங்கியுள்ளது.
ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் 2023 நிதியாண்டில் 1,00,000 மின்சார இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் கடந்த நிதியாண்டில் வெறும் 11,500 மின்சார இரு சக்கர வாகனங்களை மட்டுமே விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.
திவால் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. இதில் வீடு வாங்குகிறவர்களுக்கு நிவாரணம் உண்டா என்ற கேள்வி எழுந்து உள்ளது. #UnionCabinet #Bankruptcy
புதுடெல்லி:
மத்திய மந்திரிசபை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத், நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர், திவால் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கு மத்திய மந்திரிசபை தனது ஒப்புதலை அளித்து உள்ளது என்று கூறினார்.
“திவால் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கு 14 உறுப்பினர்களை கொண்ட திவால் சட்ட குழு பரிந்துரைகள் செய்து உள்ளது. அதன் அடிப்படையில், வீடுகள் வாங்குவோருக்கான நிவாரண அம்சங்களுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்து உள்ளதா?” என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு ரவிசங்கர் பிரசாத், “இது ஒரு புதிய சட்டம். நான் எல்லாவற்றையும் இங்கு சொல்லி விட முடியாது. அரசியல் சாசன மரபு என்று ஒன்று இருக்கிறது. அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கிற வரையில், அதன் விவரங்கள் குறித்து நான் பேச முடியாது” என பதில் அளித்தார்.
திவால் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கு கார்ப்பரேட் விவகாரங்கள் துறை செயலாளர் இன்ஜெட்டி சீனிவாஸ் தலைமையிலான குழு செய்த பரிந்துரையில், வீடு வாங்குகிறவர்களை பாதுகாக்கிற விதத்தில் சில புதிய விதிகளை சேர்க்குமாறு கூறப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியானது நினைவுகூரத்தக்கது.
குறிப்பாக, வீடு வாங்குபவர்கள் நிதி கடன் வழங்குபவர்களாக கருதப்பட வேண்டும், அப்படி கருதப்படுகிறபோது, அவர்கள் திவால் தீர்மான செயல்முறையில் பங்கேற்க அனுமதி கிடைக்கும்.
இந்த பரிந்துரைக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்ததா என்பது தெரியவில்லை.
மேலும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு சில சலுகைகளை வழங்க வேண்டும் என்றும் அந்த குழு பரிந்துரை செய்தது. அதுவும் என்னவாயிற்று என்பது தெரியவரவில்லை.
பிற முக்கிய முடிவுகள் வருமாறு:-
* உணவு பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு அளிப்பதற்கு டென்மார்க் நாட்டுக்கும், இந்தியாவுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்டு உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு, மத்திய மந்திரிசபை தனது ஒப்புதலை அளித்தது.
* நாட்டின் முதலாவது தேசிய விளையாட்டு பல்கலைக்கழகத்தை மணிப்பூரில் அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது.
* மரபுசாரா எரிசக்தி துறையில், ஒத்துழைப்பதற்காக பிரான்ஸ், மொராக்கோ நாடுகளுடன் இந்தியா செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
* பணியாளர் மேலாண்மை, பொது நிர்வாக துறைகளில் ஒத்துழைப்பதற்கு சிங்கப்பூருடன் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்வதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது.
மத்திய மந்திரிசபை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத், நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர், திவால் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கு மத்திய மந்திரிசபை தனது ஒப்புதலை அளித்து உள்ளது என்று கூறினார்.
“திவால் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கு 14 உறுப்பினர்களை கொண்ட திவால் சட்ட குழு பரிந்துரைகள் செய்து உள்ளது. அதன் அடிப்படையில், வீடுகள் வாங்குவோருக்கான நிவாரண அம்சங்களுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்து உள்ளதா?” என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு ரவிசங்கர் பிரசாத், “இது ஒரு புதிய சட்டம். நான் எல்லாவற்றையும் இங்கு சொல்லி விட முடியாது. அரசியல் சாசன மரபு என்று ஒன்று இருக்கிறது. அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கிற வரையில், அதன் விவரங்கள் குறித்து நான் பேச முடியாது” என பதில் அளித்தார்.
திவால் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கு கார்ப்பரேட் விவகாரங்கள் துறை செயலாளர் இன்ஜெட்டி சீனிவாஸ் தலைமையிலான குழு செய்த பரிந்துரையில், வீடு வாங்குகிறவர்களை பாதுகாக்கிற விதத்தில் சில புதிய விதிகளை சேர்க்குமாறு கூறப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியானது நினைவுகூரத்தக்கது.
குறிப்பாக, வீடு வாங்குபவர்கள் நிதி கடன் வழங்குபவர்களாக கருதப்பட வேண்டும், அப்படி கருதப்படுகிறபோது, அவர்கள் திவால் தீர்மான செயல்முறையில் பங்கேற்க அனுமதி கிடைக்கும்.
இந்த பரிந்துரைக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்ததா என்பது தெரியவில்லை.
மேலும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு சில சலுகைகளை வழங்க வேண்டும் என்றும் அந்த குழு பரிந்துரை செய்தது. அதுவும் என்னவாயிற்று என்பது தெரியவரவில்லை.
பிற முக்கிய முடிவுகள் வருமாறு:-
* உணவு பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு அளிப்பதற்கு டென்மார்க் நாட்டுக்கும், இந்தியாவுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்டு உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு, மத்திய மந்திரிசபை தனது ஒப்புதலை அளித்தது.
* நாட்டின் முதலாவது தேசிய விளையாட்டு பல்கலைக்கழகத்தை மணிப்பூரில் அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது.
* மரபுசாரா எரிசக்தி துறையில், ஒத்துழைப்பதற்காக பிரான்ஸ், மொராக்கோ நாடுகளுடன் இந்தியா செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
* பணியாளர் மேலாண்மை, பொது நிர்வாக துறைகளில் ஒத்துழைப்பதற்கு சிங்கப்பூருடன் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்வதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது.