search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறைவைப்பு"

    • போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பரங்குன்றம் மலையை காக்க கோரி இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் இன்று திருப்பரங்குன்றத்தில் அறப்போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த போராட்டத்திற்கு போலீசார் தடை விதித்தனர். மேலும் திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும் போலீசார் தடையை மீறி திருப்பரங்குன்றத்திற்கு செல்வோம் என இந்து அமைப்புகள் தெரிவித்தன. இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கு செல்வதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் நேற்றிரவு முதல் போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திருப்பூரை சேர்ந்தவர் என்பதால் அவரது தலைமையில் இந்து முன்னணியினர் திருப்பரங்குன்றம் செல்வார்கள் என்பதால் திருப்பூர் மாநகர் பகுதியில் நேற்றிரவு முதல் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    ஒரு சோதனை சாவடியில் 6 போலீசார் வீதம் வாகனங்களை சோதனை செய்தனர். வாகனங்களில் மொத்தமாக செல்பவர்களை விசாரித்து அதன்பிறகே அனுப்பி வைத்தனர். நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய வாகன சோதனை நடைபெற்றது. இன்று காலையும் சோதனை தொடர்ந்தது.

    திருப்பூர் மாநகரில் இருந்து வெளியேறும் கார், வேன் மற்றும் பேருந்துகளில் செல்பவர்கள் எங்கே செல்கிறார்கள் என்ற விவரம் சேகரிக்கப்பட்டு அவர்களது ஆவணங்களை சரிபார்த்து அனுப்பி வைத்தனர். போராட்டத்திற்கு பங்கேற்க செல்வதாக கருதப்பட்டவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

    மேலும் முருக பக்தர்களுடன் இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மற்றும் இந்து அமைப்பைச் சார்ந்தவர்கள் திருப்பரங்குன்றம் செல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டதால் இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் வீடு-அலுவலகம் அமைந்துள்ள திருப்பூர் பெரிச்சிபாளையம் பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் காடேஸ்வரா சுப்பிரமணியம் வீட்டில் சிறைவைக்கப்பட்டார்.

    மாநகர போலீஸ் துணை கமிஷனர் ராஜராஜன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் செல்ல முயலும் பட்சத்தில் அவர் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கைது செய்யப்பட்ட பிறகு மாநகரின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெறும் என்ற தகவலால் பல்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    வீட்டு வாடகை பணம் தராததால் வீட்டில் சிறைவைக்கப்பட்ட மூதாட்டியை போலீசார் பூட்டை உடைத்து மீட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவொற்றியூர்:

    சென்னை காசிமேடு, காசிமாநகரை சேர்ந்தவர் ரங்கநாதன், மீன் வியாபாரம் செய்துவருகிறார். இவரது வீட்டில் பாப்பாத்தி (வயது 65) என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். பூ வியாபாரம் செய்துவரும் பாப்பாத்தி 3 மாதங்களுக்கு ஒருமுறை வாடகை பணத்தை சேர்த்து கொடுப்பாராம்.

    கடந்த 4 மாதங்களாக அவர் வாடகை கொடுக்கமுடியாமல் காலம்தாழ்த்தி வந்தார். இதனால் ரங்கநாதனுக்கும், பாப்பாத்திக்கும் இடையே கடந்த வாரம் தகராறு ஏற்பட்டது. போலீசார் அவர்களை சமரசம் செய்துவைத்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பாப்பாத்தியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு தன்னுடைய வீட்டையும் பூட்டிக்கொண்டு ரங்கநாதன் வெளியூர் சென்றுவிட்டார்.

    பாப்பாத்தி காலையில் எழுந்துவந்து பார்த்தபோது வீடு வெளியே பூட்டியிருந்தது தெரிந்தது. வீட்டை விட்டு வெளியே வரமுடியாததால் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து செல்போனில் தனது சகோதரிக்கு தகவல் கூறினார். இரவில் இருந்து எதுவும் சாப்பிடாததால் மயக்கமான நிலையில் படிக்கட்டில் விழுந்துகிடந்தார்.

    தகவல் அறிந்து அவரை பார்க்கவந்த உறவினர்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காசிமேடு போலீசார், வீட்டின் பூட்டை உடைத்து மயங்கிய நிலையில் இருந்த பாப்பாத்தியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    வெளியூர் சென்ற வீட்டின் உரிமையாளர் ரங்கநாதன் பாப்பாத்தி வீட்டில் இருப்பது தெரியாமல் வீட்டை பூட்டிவிட்டுச் சென்றாரா? அல்லது வாடகை பணம் கொடுக்காததால் பூட்டிவிட்டுச் சென்றாரா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். #tamilnews
    ×