என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரட்டை இலை வழக்கு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சூர்ய மூர்த்தியின் மனு குறித்து 4 வாரங்களில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    • ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்க வேண்டும்.

    திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி தாக்கல் செய்துள்ள மனுவில், அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சி சட்டதிட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்டது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்துக்கு 2017 முதல் 2022 ம் ஆண்டு வரை புகார்கள் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டு உள்ளார்.

    உள்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்சனை தொடர்பாக தாக்கல் செய்திருக்கும் உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனுவுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை எனவும் மனுவில் தெரிவித்து இருந்தார்.

    தனது மனு மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்து இருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று நடைபெற்றது.

    அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சூர்ய மூர்த்தியின் மனு தொடர்பாக அதிமுகவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு பதில் கிடைக்கப் பெற்றதாக கூறினார். இது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

    ஓ.பன்னீர்செல்வம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் தங்கள் தரப்புக்கு நோட்டீஸ் அளிக்கப்படவில்லை எனவும் தங்களது தரப்பையும் கேட்ட பின்னரே முடிவெடுக்க உத்தரவிட வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார்.

    இதனையடுத்து, சூர்ய மூர்த்தியின் மனு குறித்து 4 வாரங்களில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்க வேண்டுமெனவும் உத்தரவிட்டனர்.

    • கடந்தமுறை முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி தலைமையின் பதவி காலம் 2026 டிசம்பர் வரை உள்ளது.
    • தன்னை கட்சியை விட்டு நீக்கிய நடவடிக்கை என்பது கட்சியின் அடிப்படை விதிக்கு முரணான எடப்பாடி பழனிசாமியின் சட்டவிரோத நடவடிக்கை.

    சென்னை:

    அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி திண்டுக்கல்லை சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த ஐகோர்ட்டு சூர்யமூர்த்தியின் மனு மீது தேர்தல் ஆணையம் 4 வாரங்களில் முடிவெடுக்க உத்தரவிட்டிருந்தது.

    இதைத்தொடர்ந்து கடந்த 23 மற்றும் 24-ந்தேதிகளில் எடப்பாடி பழனிசாமி, புகழேந்தி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சூர்யமூர்த்தி ஆகியோர் சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த நிலையில், இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    கடந்த 6.12.2021-ல் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை முதன்மை உறுப்பினர்கள் மூலம் அ.தி.மு.க. கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று தேர்ந்தெடுத்ததே கட்சி அடிப்படை விதியின்படி சட்டப்பூர்வமானது.

    ஒருமுறை முதன்மை உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி தலைமை 5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும், அதனை பொதுக்குழுவின் ஒரு சிறப்பு தீர்மானம் மூலம் கலைத்து விடவோ அல்லது செல்லாது என்று முடக்கி விடவோ முடியாது.

    மேலும், கடந்தமுறை முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி தலைமையின் பதவி காலம் 2026 டிசம்பர் வரை உள்ளது, எனவே அதனை ஒரு சிறப்பு தீர்மானம் மூலம் செல்லாது என அறிவிக்க கட்சியின் அடிப்படை சட்டவிதி அனுமதிக்காது.

    அதேபோல கட்சியின் அடிப்படை சட்ட விதியில் முதன்மை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமையை முன்கூட்டியே நீக்கம் செய்ய எந்த வழிவகையும் இல்லை.

    அதேபோல கடந்த 6.12.2021ல் ஜனநாயக பூர்வமாக நடத்தப்பட்ட தலைமைக்கான அந்த தேர்தலை எவரும் இதுவரை எதிர்க்கவில்லை. மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியையும் எதிர்க்கவில்லை.

    தன்னை கட்சியை விட்டு நீக்கிய நடவடிக்கை என்பது கட்சியின் அடிப்படை விதிக்கு முரணான எடப்பாடி பழனிசாமியின் சட்டவிரோத நடவடிக்கை ஆகும்.

    ஏனெனில் ஒருவரை நீக்குவது என்பது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரின் அதிகாரம் ஆகும், குறிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை பொதுக்குழு கூடி கட்சியைவிட்டு விலக்க அதிகாரமோ, சட்ட விதியோ இல்லை.

    பொதுக்குழு என்பது கட்சியின் கொள்கை மற்றும் நிகழ்வுகளை வரையறுப்பதற்கானது மட்டுமே.

    மேலும் தேர்தல் ஆணையத்தில் உள்ள ஆவணத்தின் அடிப்படையிலும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் அ.தி.மு.க. கட்சியின் இரட்டை இலை சின்னத்தின் உரிமை தனக்கானது ஆகும்.

    மேலும் தற்போது உள்ள கட்சியின் நிர்வாகம் என்பது சட்டவிரோதமானது, அவ்வாறு சட்டவிரோதமாக செயல்படும் கட்சி தலைமைக்கு இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அதிகாரம் கிடையாது.

    எனவே தற்போதைய அ.தி.மு.க. கட்சி மற்றும் இ.பி.எஸ். இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும், அந்த அதிகாரத்தை தேர்தல் ஆணையம் திரும்பப்பெற வேண்டும்.

    மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் வசம் இரட்டை இலை சின்னத்தையும் , கட்சியையும் ஒப்படைக்க வேண்டும். எங்கள் தரப்பையே அ.தி.மு.க. என்று அங்கீகரிக்க வேண்டும்.

    மேலும், அ.தி.மு.க. தொடர்பாக உரிமை வழக்குகள் தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது, எனவே அதில் முடிவு வரும் வரை எடப்பாடி பழனிசாமி வசம் உள்ள கட்சி தொடர்பான அதிகாரங்கள், உரிமைகளை தேர்தல் ஆணையம் திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு பதில் மனுவில் அவர் கூறியுள்ளார்.

    டிடிவி தினகரனின் குரல் மாதிரி பரிசோதனை தொடர்பான வழக்கின் விசாரணையை செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #TTVDhinakaran
    புதுடெல்லி:

    இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா உள்ளிட்டோர் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட டி.டி.வி. தினகரன், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    அதன்பின்னர் ஹவாலா புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோர் பேசிய ஆடியோவை டெல்லி குற்றவியல் போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்து அதுகுறித்து விரிவான விசாரணை நடத்தும்படி கோரிக்கை வைத்தனர். இதற்காக டிடிவி.தினகரனின் குரலை எடுத்து பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். இதற்கு டி.டி.வி.தினகரன் ஒத்துழைப்பு தர மறுத்துவிட்டார்.

    இந்த ஆடியோக்கள்  ஜோடிக்கப்பட்டவை என்று கூறிய டிடிவி தினகரன், தன் மீதான வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தார். இதையடுத்து குரல் பரிசோதனை தொடர்பான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், குரல் பரிசோதனை வழக்கு விசாரணையை ஒத்திவைக்கும்படி டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதனை ஏற்ற நீதிபதிகள், வழக்கின் விசாரணையை செப்டம்பர் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். #TTVDhinakaran
    எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் சசிகலா சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. #SupremeCourt #DoubleLeafSymbol #Sasikala
    புதுடெல்லி:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு எதிராக டி.டி.வி.தினகரன் தரப்பில் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதற்கு தடை விதிக்க மறுத்து விட்டனர்.

    இந்தநிலையில் இந்த உத்தரவை சீராய்வு செய்யக்கோரியும், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கவும் வி.கே.சசிகலா தரப்பில் நேற்று அவருடைய வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்தார்.



    அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 23-ந் தேதி தேர்தல் கமிஷன் இரட்டை இலை சின்னத்தை முடக்கி உத்தரவு பிறப்பித்தபோது, பெரும்பான்மை என்னிடம் (சசிகலாவிடம்) இருந்தது. ஆனால் தேர்தல் கமிஷன் பெரும்பான்மையை கருத்தில் கொள்ளாமல் சின்னத்தை முடக்கியது. முற்றிலும் பாரபட்சமாக நடந்து கொண்டது.

    இதனைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்து கட்சியின் விதிமுறைகளை சட்டவிரோதமாக மாற்றினார்கள். ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என 2 பதவிகளை உருவாக்கினார்கள். தேர்தல் கமிஷன் இதனையும் ஒரு தலைபட்சமாக ஏற்றுக்கொண்டது. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தேர்தல் கமிஷனில் போலி ஆவணங்களை தாக்கல் செய்தனர். இதுகுறித்த எங்கள் புகார்களை தேர்தல் கமிஷன் கருத்தில் கொள்ளவில்லை. டெல்லி ஐகோர்ட்டும் மேற்கண்ட அம்சங்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாமல் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது.

    கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை மாற்றுவதற்கு அடிப்படை அதிகாரம் யாருக்கும் கிடையாது. இந்த அம்சத்தையும் தேர்தல் கமிஷனும், டெல்லி ஐகோர்ட்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவில்லை. சுப்ரீம் கோர்ட்டிலும் இந்த விஷயங்கள் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் பரிசீலனைக்கு எடுக்கவில்லை.

    எனவே, இரட்டை இலை தொடர்பான டெல்லி ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு சுப்ரீம்கோர்ட்டு இது தொடர்பாக பிறப்பித்த உத்தரவை மறுசீராய்வு செய்ய வேண்டும்.

    இவ்வாறு இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.  #SupremeCourt #DoubleLeafSymbol #Sasikala 
    இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர் செல்வம் தரப்புக்கு ஒதுக்கியதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. #SC #TwoLeaves #TTVDhinakaran
    புதுடெல்லி:

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டாக பிரிந்தது. இரண்டாக பிரிந்த அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒன்று சேர்ந்தது. சசிகலா- டி.டி.வி. தினகரன் அணி தனியாக செயல்படுகிறது.

    இந்த இரண்டு தரப்பும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கொண்டாடியது. இதை தொடர்ந்து 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் கமி‌ஷன் அந்த சின்னத்தை முடக்கியது.

    பல்வேறு விசாரணைக்கு பிறகு 2017-ம் ஆண்டு நவம்பர் 23-ந்தேதி இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சொந்தம் என்று தேர்தல் கமி‌ஷன் அறிவித்தது.

    இதை எதிர்த்து தினகரன் தரப்பு டெல்லி ஐகோர்ட்டை அணுகியது. இந்த வழக்கில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது.

    இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.வுக்கே என்று தீர்ப்பளித்தது. மேலும் இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க.வுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது சரியே என்று கூறி தினகரன் மனுவை தள்ளுபடி செய்தது.



    இதை எதிர்த்து தினகரன் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். இந்த வழக்கு  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

    மேலும் குக்கர் சின்னத்தை தனக்கு ஒதுக்க கோரி டிடிவி தினகரன் தாக்கல் செய்த மனுவுக்கு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. #SC #TwoLeaves #TTVDhinakaran 
    அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்று கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். #pugalenthi #admkleaf #edappadipalanisamy

    பெங்களூரு:

    கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி இன்று நிருபரிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் உள்ள அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை எதிர்த்து சசிகலா மற்றும் தினகரன் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு விசாரணை முடிந்து தீர்ப்பு வர உள்ளது.

    இந்த இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கை 4 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே 4 வாரங்களுக்குள் தீர்ப்பு வரவேண்டும். தீர்ப்பு வந்தாலும் இரட்டை இலை சின்னம் அவர்களுக்கு கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.

    எங்களுக்கு சின்னமே இல்லை என்று கேலி செய்தவர்களுக்கு சின்னம் கிடைக்குமா என்பதே கேள்விக்குறியாகி விட்டது. இப்போது இரட்டை இலை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.

    இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும். அப்படி கிடைக்கவில்லை என்றால் குக்கர் சின்னத்தை மீண்டும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு கொடுக்க வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்துக்கு ஏற்படும்.

    எந்த காலத்திலும் அ.தி.மு.க.வுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணையாது.

    இவ்வாறு அவர் கூறினார். #pugalenthi #admkleaf #edappadipalanisamy

    இரட்டை இலை சின்னத்தை மீட்பதே எங்கள் நோக்கம் என்று திருச்சியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தினகரன் கூறியுள்ளார். #dinakaran #admkleaf #admk
    திருச்சி:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர்  டி.டி.வி.தினகரன் திருச்சியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தீயசக்தியான தி.மு.க.வை விட்டு எம்.ஜி.ஆர். வெளியே வந்தது போல், துரோக சக்தியான அ.தி.மு.க.விடம் இருந்து விலகி வந்து விட்டோம். அவர்களுடன் இணைவதற்கான வாய்ப்பே இல்லை. முதல்வர்களாக இருந்த எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் அனைத்து தரப்பு அடித்தட்டு மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தினர்.

    ஸ்டெர்லைட், 8 வழிச்சாலை போன்ற மக்கள் எதிர்க்கும் திட்டங்களை அவர்கள் கொண்டு வரவில்லை. தேர்தல் நேரத்தில் மத்திய அமைச்சர் வேடிக்கையாக பேசியுள்ளார். தற்போதுள்ள மத்திய அரசு வெளிநாட்டு முதலீடுகள் மூலம் தொழில் துறையை  வளர்ப்பதாக கூறி விவசாயத்தை அழிக்க நினைக்கின்றனர். 

    நாங்கள் துரோக கும்பலை விட்டு ரொம்ப தூரம் தள்ளி வந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். இரட்டை இலை சின்னத்தை மீட்டு எடுக்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம்.

    இவ்வாறு அவர் கூறினார். #dinakaran #admkleaf #admk
    இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி குற்றப்பதிவு நகலை டி.டி.வி. தினகரன் பெற்றுக்கொண்டார். #TwoLeaves #TTVDhinakaran
    புதுடெல்லி:

    ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டதால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கியது.

    இரட்டை இலை சின்னத்தை தங்களது அணிக்கு ஒதுக்க கோரி டி.டி.வி. தினகரன் தேர்தல் கமி‌ஷனில் மனுகொடுத்தார். மேலும் சின்னம் பெறுவதற்காக தேர்தல் கமி‌ஷன் அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தினகரன் கைதானார். இந்த வழக்கு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.


    இந்த வழக்கின் நிலை குறித்து டிசம்பர் 5-ந்தேதிக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று டெல்லி போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து டெல்லி கோர்ட்டில் டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன் நகலை சம்பந்தப்பட்டவர்கள் நாளை (5-ந்தேதி) பெற்றுக்கொள்ளலாம் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்தநிலையில் தினகரன் இன்றே டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜரானார். இதைத்தொடர்ந்து குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது தொடர்பான ஆவணத்தில் கையெழுத்திட்டு நகலை பெற்றுக்கொண்டார்.

    இதையடுத்து வழக்கு விசாரணை வருகிற 17-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. #TwoLeaves #TTVDhinakaran
    இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விசாரணையை டெல்லி ஐகோர்ட்டு 21-ந் தேதிக்கு ஒத்திவைத்து தீர்ப்பு வழங்கியது. #TwoLeaves #DelhiHighCourt
    புதுடெல்லி:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.



    இந்த வழக்கில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் தரப்பில் வாதங்கள் ஏற்கனவே முடிவடைந்தன. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் வாதம் நிறைவடைந்தது.

    இந்நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் டெல்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. சசிகலா, டி.டி.வி.தினகரன் தரப்பில் மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, ராஜா செந்தூர்பாண்டி, அ.தி.மு.க. தரப்பில் மூத்த வக்கீல் விஸ்வநாதன், பாபு முருகவேல் ஆகியோர் ஆஜராகி இருந்தனர். அமைச்சர் சி.வி.சண்முகம் பார்வையாளர் பகுதியில் ஆஜராகி இருந்தார். இரு நீதிபதிகளில் ஒருவர் வராததால் விசாரணை 21-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.  #TwoLeaves #DelhiHighCourt
    இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். #TwoLeavesSymbol #TTVDhinakaran
    சென்னை:

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது இரட்டை இலை சின்னத்துக்கு தினகரனும், மதுசூதனனும் உரிமை கோரியதால் சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கியது. இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற தேர்தல் அதிகாரிகளுக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீஸ் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    கைதான இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா மற்றும் ஹவாலா ஏஜெண்டுகள் சிலர் கைது செய்யப்பட்டனர். டெல்லி திஸ்ஹசாரி நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணை, அங்கிருந்து பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. 



    இதற்கிடையே, இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் முகாந்திரம் உள்ளது எனக்கூறி டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தினகரனை விடுவிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், டிடிவி தினகரன் டுவிட்டரில் கூறுகையில், சிலரது சதியின் காரணமாக இரட்டை இலையை பெற லஞ்சம் கொடுத்ததாக என் மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து என்னை விடுவிக்கச் சொல்லி நான் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இந்த வழக்கை தொடர்ந்து நடத்தி, இது பொய் வழக்கு தான் என்பதை நீதிமன்றம் மூலம் நிரூபிப்பேன் என பதிவிட்டுள்ளார். #TwoLeavesSymbol #TTVDhinakaran
    இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்றதாக டிடிவி தினகரன் மீது தொடரப்பட்ட வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அரவிந்த்குமார் அமர்விலிருந்து சிறப்பு நீதிபதி பரத்வாஜ் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. #TwoLeaves
    சென்னை:

    இரட்டை இலை சின்னத்தை பெற தலைமை தேர்தல் கமி‌ஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி. தினகரன் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கை டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதில் பல்வேறு மாநிலங்களில் குற்ற வழக்குகள் உள்ளதால் ஹவாலா புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் மட்டும் தற்போது வரை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த வழக்கு ஏற்கனவே பாட்டியாலா சிறப்பு நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் அமர்வு விசாரித்து வந்தது.

    இந்தநிலையில் தினகரன் மீது தொடரப்பட்ட வழக்கு தற்போது அரவிந்த் குமார் அமர்வில் இருந்து சிறப்பு நீதிபதி பரத்வாஜ் அமர்வுக்கு மாற்றப்படுகிறது.

    இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 1-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #TwoLeaves
    இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் நடந்து வரும் நிலையில், உள்ளாட்சி தேர்தல் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்பதால் வழக்கை விரைந்து முடிக்க ஓ.பன்னீர் செல்வம் தரப்பு கோரியுள்ளது. #OPS
    புதுடெல்லி:

    இரட்டை இலை சின்னம் மற்றும் அ.தி.மு.க. கட்சியை எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதனை எதிர்த்து டிடிவி தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்கள் தற்போது நடந்து வருகிறது.

    இன்று விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கு விசாரணையில் ஆஜரான துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வழக்கறிஞர், “தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற சூழல் இருப்பதால், இந்த வழக்கு விசாரணையை  விரைந்து முடிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர்.

    இதனை அடுத்து, வழக்கை ஜூன் 4-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். இந்த வழக்கை ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என ஐகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 
    ×