search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சருமம்"

    • சருமத்திற்கு இயற்கையான நிறத்தை கொடுக்க உதவுகிறது.
    • கடலை மாவு ஃபேஸ் பேக் முகத்தை பளபளப்பாக வைக்க உதவுகிறது.

    சருமம் வறட்சியாக இருக்கும்போது சருமத்தில் ஈரப்பதத்தை மீட்டெடுக்க கடலை மாவு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்த கலவையை பயன்படுத்தலாம். மேலும் இது முகப்பரு பிரச்சனைகளை சரி செய்யவும் உதவுகிறது.

    செய்முறை:

    1 டீஸ்பூன் கடலை மாவு, 1/4 டீஸ்பூன் மஞ்சள் இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இதனை பேஸ்ட் வடிவில் வரும் வரை நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

    இந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் நன்றாக தடவி, 20 நிமிடங்கள் இருக்க வேண்டும். அதன் பிறகு தண்ணீரில் கழுவ வேண்டும்.

    சருமத்திற்கு இயற்கையான நிறத்தை கொடுக்க உதவுகிறது. மேலும் முகத்தை பளபளப்பாக வைக்க உதவுகிறது.

    சிலருக்கு முகத்தில் உள்ள துளைகள் திறந்தே இருக்கும். இதை சரிசெய்ய 1 டீஸ்பூன் உளுத்தம் மாவு, 1/2 டீஸ்பூன் மஞ்சள் சேர்த்து சிறிது பால் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதை முகம் மற்றும் கழுத்தில் தடவி சிறிது நேரம் கழித்து சாதாரண நீரில் கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள துளைகள் விரைவில் மூடி விடும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அழகை வெளிப்படுத்த சருமத்தை எப்படி இயற்கை முறையில் பராமரிப்பது என்பதை பற்றி பார்ப்போம்.
    • முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு முகம் பளிச்சென்று மாறிவிடும்.

    தற்போதைய உலகில் பெரும்பாலும் பெண்கள் அழகிற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

    எனவே அத்தகைய அழகை வெளிப்படுத்த சருமத்தைப் பராமரிப்பது மிகவும் அவசியமாகிறது. கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட கிறீம்களை பயன்படுத்துவதை விட இயற்கை முறையில் ஒரு சில பொருட்களை பயன்படுத்துவது சிறந்தது.

    ஆகவே அழகை வெளிப்படுத்த சருமத்தை எப்படி இயற்கை முறையில் பராமரிப்பது என்பதை பற்றி பார்ப்போம்.

    கற்றாழை ஜெல்லைக் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்து ஊற வைத்து கழுவி வந்தால் முகத்தில் வரும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி முகம் அழகாகவும் வெள்ளையாக மாறுவதை காணலாம்.

    கசகசாவை பாலில் சேர்த்து 15 நிமிடத்திற்கு ஊறவைக்கவும். பின் அதை மிக்சியில் சேர்த்து மைய அரைத்து அதை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகம் அழகான தோற்றத்தை பெறுவதுடன் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளிச்சிடும்.

    இரவில் படுக்கும் போது சூரியகாந்தி விதையை பாலில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதில் சிறிது குங்குமப்பூ மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து அரைத்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும்.

    சிலரது முகம் எப்போதும் எண்ணெய் வடிந்தது போல் பொலிவு இல்லாமல் இருக்கும். அவ்வாறு இருப்பவர்கள் கனிந்த தக்காளிப் பழத்தை தோல் நீக்கி அதனை நன்கு அரைத்துக் கொள்ளவும். அதில் சிறிதளவு பால் கலந்து பேஸ்ட் போல செய்து முகத்திற்கு பூசவும். இதனால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு முகம் பளிச்சென்று மாறிவிடும்.

    தேனில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகம் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் காணப்படும்

    • சருமத்தை நீரேற்றமாகவும் இளமையாகவும் வைத்திருக்கும் ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது.
    • குங்குமடி எண்ணெயின் நன்மைகள் தோலின் பளபளப்பை மேலும் மேம்படுத்துகிறது.

    தோல் பராமரிப்புக்கு வரும்போது, இயற்கை மற்றும் பாரம்பரிய வைத்தியம் சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளது. குங்குமடி தைலம் என்பது நீண்ட வரலாற்றைக் கொண்ட அத்தகைய ஒரு தீர்வு. அதன் சக்தி வாய்ந்த மற்றும் ஊட்டமளிக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்ற குங்குமடி தைலம் ஒரு பிரபலமான ஆயுர்வேத எண்ணெய் கலவையாகும், இது சருமத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது. இந்த கட்டுரையில், குங்குமடி தைலம் என்றால் என்ன, அதன் பொருட்கள் மற்றும் பண்புகள், அது வழங்கும் நன்மைகள், அதை எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது மற்றும் மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் ஆகியவற்றை ஆராய்வோம். தோல் பராமரிப்பு ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்தமான குங்குமடி தைலம் பலன்களைப் பற்றி ஆராய்வோம்.

    குங்குமடி தைலம் என்றால் என்ன?

    குங்குமடி தைலம், குங்குமடி எண்ணெய் என்றும் அழைக்கப்படுகிறது, இது பல்வேறு தாவரவியல் பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஆயுர்வேத மூலிகை எண்ணெய் கலவையாகும். இது பாரம்பரிய இந்திய மருத்துவத்தில் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தையும் தோற்றத்தையும் மேம்படுத்தும் திறனுக்காகப் புகழ்பெற்றது. முகப்பரு மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷன் போன்ற தோல் நிலைகளுக்கு சிகிச்சையளிப்பதில் இருந்து கதிரியக்க நிறத்தை ஊக்குவித்தல் மற்றும் வயதான அறிகுறிகளைக் குறைப்பது வரை குங்குமடி தைலத்தின் பயன்பாடுகள் வேறுபட்டவை. இந்த ஆயுர்வேத எண்ணெய் வளமான வரலாற்றைக் கொண்ட பல்துறை தோல் பராமரிப்பு தீர்வாகும்.


    பொருட்கள் மற்றும் பண்புகள்

    குங்குமப்பூ, சந்தனம், மஞ்சள், வெட்டிவேர் மற்றும் பல்வேறு ஆயுர்வேத மூலிகைகள் மற்றும் எண்ணெய்கள் போன்ற சக்திவாய்ந்த பொருட்களின் கலவையை குங்குமடி தைலம் கொண்டுள்ளது. ஒவ்வொரு மூலப்பொருளும் அதன் தனித்துவமான பண்புகளை வழங்குகிறது, இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு மற்றும் சருமத்தை பிரகாசமாக்கும் விளைவுகள், குங்குமடி தைலத்தை ஒரு சக்திவாய்ந்த தோல் பராமரிப்பு தீர்வாக மாற்றுகிறது . "குங்குமடி தைலத்தை ஒரே இரவில் பயன்படுத்தலாமா?" என்று பலர் ஆச்சரியப்படுகிறார்கள். ஒரே இரவில் பயன்படுத்தினால், அது உங்கள் சருமத்தை ஆழமாக ஊட்டமளித்து புத்துயிர் பெறச் செய்து, காலையில் பொலிவான நிறத்தை உங்களுக்கு வழங்குகிறது.

    குங்குமடி தைலத்தின் பலன்கள்

    குங்குமடி தைலம் சருமத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் தோற்றத்தையும் மேம்படுத்த உதவும் பல நன்மைகளை வழங்குகிறது. எண்ணெய் நிறமி மற்றும் கரும்புள்ளிகளை குறைக்கும் திறனுக்காக அறியப்படுகிறது, இதனால் சருமம் கதிரியக்கமாகவும், சீரான நிறமாகவும் இருக்கும். கூடுதலாக, இது சருமத்தை நீரேற்றமாகவும் இளமையாகவும் வைத்திருக்கும் ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது.


    குங்குமடி தைலத்தின் முக்கிய நன்மைகளில் ஒன்று, சருமத்தை பிரகாசமாக்கும் மற்றும் சருமத்திற்கு இயற்கையான பொலிவை அளிக்கும் திறன் ஆகும். குங்குமப்பூ மற்றும் குங்குமப்பூ தைலத்தில் உள்ள மற்ற சருமத்தை பிரகாசமாக்கும் பொருட்களின் கலவையானது கரும்புள்ளிகள், நிறமி மற்றும் சீரற்ற தோல் நிறத்தின் தோற்றத்தைக் குறைக்க உதவுகிறது, இதன் விளைவாக மிகவும் ஒளிரும் மற்றும் இளமை நிறம் கிடைக்கும்.

    வயதான எதிர்ப்பு மற்றும் சுருக்கம் குறைப்பு

    குங்குமடி தைலம் முதுமையைத் தடுக்கும் சக்தி வாய்ந்தது. எண்ணெய்கள் மற்றும் மூலிகைகள் நிறைந்த கலவையானது சருமத்தை ஊட்டமளிக்கிறது மற்றும் ஈரப்பதமாக்குகிறது, மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் மற்றும் வயது புள்ளிகளின் தோற்றத்தை குறைக்கிறது. குங்குமடி தைலத்தின் வழக்கமான பயன்பாடு, உறுதியையும் நெகிழ்ச்சியையும் மேம்படுத்த உதவுகிறது, மேலும் சருமத்திற்கு இளமை மற்றும் புத்துணர்ச்சியூட்டும் தோற்றத்தை அளிக்கிறது.

    முகப்பரு மற்றும் தழும்பு கட்டுப்பாடு

    குங்குமடி தைலம் முகப்பருவைக் கட்டுப்படுத்துவதிலும், தழும்புகளைக் குறைப்பதிலும் பயனுள்ளதாக இருக்கிறது. அதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் எரிச்சலூட்டும் சருமத்தை அமைதிப்படுத்தவும், சிவப்பைக் குறைக்கவும், முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கவும் உதவுகிறது. வழக்கமான பயன்பாடு பிரேக்அவுட்களைக் குறைக்கவும், தெளிவான நிறத்தை மேம்படுத்தவும் உதவும். குங்குமடி எண்ணெயின் நன்மைகள் தோலின் பளபளப்பை மேலும் மேம்படுத்துகிறது.

    • தக்காளியை முகத்தில் நன்கு தேய்த்து ஒரு மணிநேரம் கழித்து கழுவினால் முகம் பொலிவு பெறும்.
    • சிறிதளவு மஞ்சள் மற்றும் உப்பை நீரில் கலந்து முடிகளின் மேல் மெதுவாக தேய்க்க வேண்டும்.

    பொடுகுத் தொல்லை உள்ளவர்கள் எலுமிச்சை சாறில் சிறிதளவு உப்பு கலந்து தலையில் நன்கு தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும்.

    * நாட்டுக் கோழியின் முட்டையின் வெள்ளைக் கருவுடன் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து பருக்களின் மீது தடவினால் குணமாகும்.

    * திராட்சைப் பழத்தை சிறிதளவு எடுத்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.

    * தக்காளியை முகத்தில் நன்கு தேய்த்து ஒரு மணிநேரம் கழித்து கழுவினால் முகம் பொலிவு பெறும்.

    * ஆப்பிள் பழத்தை தோல் நீக்கி அரைத்து அதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவி நன்கு ஊறிய பிறகு குளித்தால் முகச் சுருக்கம், பருக்கள் போன்றவை ஏற்படாது. மேலும் முகம் பொலிவு பெறும்.


    * புதினா, கொத்தமல்லி அல்லது கருவேப்பிலை இவற்றுள் ஏதாவது ஒன்றை துவையல் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் சோம்பல் ஏற்படாமல் இருக்கும்.

    * பிழிந்த எலுமிச்சம் பழத்தோலை மோர் அல்லது தயிருடன் சேர்த்து முகத்தில் நன்கு தேய்த்துக் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.

    * பெண்களுக்கு உதட்டின் மேல் மற்றும் கீழ் தாடைகளில் வளரும் முடிகளை அகற்ற சிறிதளவு மஞ்சள் மற்றும் உப்பை நீரில் கலந்து முடிகளின் மேல் மெதுவாக தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் முடி நாளடைவில் உதிர்ந்துவிடும். மேலும் அந்த இடத்தில் முடி முளைக்காது.

    * முகத்தில் உள்ள துவாரங்களை போக்க ஒரு குச்சியில் பஞ்சை சுற்றி அதை எலுமிச்சை சாறில் நனைத்து துவாரங்கள் இருக்கும் இடத்தில் தடவினால் துவாரங்கள் அடைபட்டு விடும்.

    * காலில் உள்ள நகங்களை உப்பு கலந்த நீரில் பத்து நிமிடம் ஊறவைத்து பிறகு பழைய பிரஷ்ஷினால் தேய்த்தால் நகங்கள் சுத்தமாகும். மேலும் கிருமிகள் அழிந்து விடும்.

    • கோடை காலத்தில் உடலுக்குக் குளிர்ச்சியை தருவதில் சிறந்த பழமாக முலாம் பழம் உள்ளது.
    • முலாம் பழம் சரும செல்களை பாதுகாக்கிறது.

    முலாம் பழத்தில் நீர்ச்சத்தும், வைட்டமின்களும், நார்ச்சத்தும் நிறைந்துள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. முலாம் பழம் வைட்டமின் ஏ, பி மற்றும் சி போன்ற இயற்கை ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. கோடை காலத்தில் உடலுக்குக் குளிர்ச்சியை தருவதில் சிறந்த பழமாக முலாம் பழம் உள்ளது.

    முலாம் பழம் சரும செல்களை பாதுகாக்கிறது. முலாம் பழம் சாப்பிடுபவர்களின் சருமம், வறட்சியாகவோ, சொரசொரப்பாகவோ இருக்காது.

    முலாம் பழத்தை சாப்பிட்டாலும் நமது உடலுக்கும் முக அழகிற்கும் நன்மை கிடைக்கும். அத்துடன் முலாம் பழத்தை அப்படியேவும் முகத்தில் தடவி மசாஜ் செய்து, முகத்தை கழுவினால் முகம் அழகு பெறும்.

    * முலாம் பழத்தை துண்டுகளாக்கி அரைத்து 2 ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் 1 ஸ்பூன் தேன், அரை ஸ்பூன் மஞ்சள் சேர்த்து முகத்தில் தடவவும். 15 நிமிடம் கழித்து முகத்தை சாதாரண நீரில் கழுவி வந்தால் முகத்தில் சேர்ந்துள்ள தூசுகள் அழுக்குகள் நீங்கி வெண்மை பெறும்.

    * முலாம் பழ ஜூஸ் 2 ஸ்பூன், எலுமிச்சை சாறு 1 ஸ்பூன், கடலை மாவு 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த முலாம் பழ சாற்றை முகத்தில் பூசி 20 நிமிடத்திற்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் முகத்தில் எண்ணெய் வடிதல் நின்று, பருக்கள் உண்டாவதை தடுக்கும்.

    • குங்குமப்பூ சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் வடுக்களை நீக்குகிறது.
    • சருமம் பொலிவற்று கருமையாக இருந்தால் குங்குமப்பூ சிறந்த மருந்தாகும்.

    மலைப்பிரதேசங்களில் அதிகம் விளையக்கூடிய குங்குமப்பூ உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. குங்குமப்பூவில் வைட்டமின் சி மற்றும் ஈ போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன.

    குங்குமப்பூவை பால் (அ) தயிர் அல்லது தேனுடன் கலந்து பயன்படுத்தலாம். இந்த கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். குங்குமப்பூவில் உள்ள கரோட்டினாய்டுகள் சருமத்தை மென்மையாக்கி, ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். குங்குமப்பூ சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் வடுக்களை நீக்குகிறது.

    குங்குமப்பூவில் உள்ள ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவும். சருமம் பொலிவற்று கருமையாக இருந்தால் குங்குமப்பூ சிறந்த மருந்தாகும். இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் இயற்கையாகவே சருமத்தை பளபளப்பாக்கும்.

    கண்களை சுற்றி உள்ள கருவளையங்களுக்கு குங்குமப்பூவை அரைத்து தினமும் தடவி வர மாற்றம் தெரியும். தேங்காய் பாலுடன் சேர்த்து பயன்படுத்தும்போது கண்களுக்கு கீழ் உள்ள கருவளையங்கள் குறையும்.

    குங்குமப்பூவில் உள்ள லிகோபீன் சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவும்.

    குங்குமப்பூ சிலருக்கு சரும ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். முதலில் ஒரு சிறிய பகுதியில் பரிசோதனை செய்து பின்னர் பயன்படுத்தலாம்.

    • தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிப்பது உடலுக்கு மட்டுமின்றி சருமத்திற்கும் நல்லது.
    • ரசாயனங்கள் இல்லாத தோல் பராமரிப்பு பொருட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    கல்லூரி செல்லும் பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்கள், நடுத்தர வயது பெண்கள் அழகாக இருக்க பல மேக்கப் பொருட்களை பயன்படுத்துகின்றனர்.

    மேக்கப் பொருட்கள் தினமும் பயன்படுத்தும்போது அதில் உள்ள ரசாயனங்கள் சில நேரங்களில் சருமத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். மேக்கப் இல்லாமல் அழகான தோற்றத்தை பெற பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

    * ஆரோக்கியமான சருமத்தை அடைய தினசரி உணவில் சத்தான பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். 

    * தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிப்பது உடலுக்கு மட்டுமின்றி சருமத்திற்கும் நல்லது. அதிக தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும்.

    * அன்றாடம் ஆரோக்கியமான உணவை சேர்த்துக்கொள்வதுடன் இரவு தூக்கமும் சரும அழகிற்கு உதவுகிறது. தினமும் 6 முதல் 8 மணிநேர உறங்குவதால் காலையில் புத்துணர்ச்சி ஏற்படும்.

    * சருமத்தை எரிச்சலூட்டும் அல்லது உங்கள் முடியின் ஆரோக்கியத்தை சேதப்படுத்தும் கெமிக்கல்கள் சேர்க்கப்பட்ட பொருட்களை பயன்படுத்த வேண்டாம். இயற்கை பொருட்கள் கொண்ட தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டும்.

    * உடற்பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. உடற்பயிற்சி சருமத்திற்கு வழங்கப்படும் ஆக்ஸிஜனின் அளவை அதிகரிக்கிறது, மன அழுத்தத்தை குறைக்கிறது, தோற்றத்தை மேம்படுத்துகிறது.

    * சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க, ஒவ்வொரு நாளும் சருமத்திற்கு ஏற்ற பராமரிப்பு முறையை பின்பற்ற வேண்டும். ரசாயனங்கள் இல்லாத தோல் பராமரிப்பு பொருட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உறங்கும் முன் தோலை சுத்தம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். 

    * சன்ஸ்கிரீனை கோடையில் மட்டும் பயன்படுத்த வேண்டியதில்லை. வருடத்தின் அனைத்து காலங்களிலும் சன்ஸ்கிரீனை பயன்படுத்தலாம். சன்ஸ்கிரீம் தொடர்ந்து பயன்படுத்துவதால் சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை தடுக்கிறது.

    * மன அழுத்தமே முடி உதிர்தல், முடி நரைத்தல், முகப்பரு போன்ற பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகிறது. எனவே மன அழுத்தத்தைக் குறைக்க தினமும் தியானம், இசையை கேட்பது, பிடித்தமான செயல்களில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.

    • பாதாம் எண்ணெய் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வரலாம்.
    • சருமத்தை எப்போதும் ஈரப்பதமாக வைத்திருங்கள்.

    வயதை கடந்ததுமே சருமத்தில் சுருக்கங்கள் எட்டிப்பார்க்கக் கூடும். வயதுக்கு ஏற்பவே கொலாஜன் மற்றும் எலாஸ்டின் என்ற புரதங்களை சருமம் உற்பத்தி செய்கிறது. அவை சருமத்தை குண்டாகவும், இறுக்கமாகவும், மீள்தன்மையுடனும், இளமையுடனும் வைத்திருக்க உதவுகிறது. வயது அதிகரிக்கும்போது இவற்றின் உற்பத்தி குறைந்துவிடும். அதனால் சருமம் மெல்லியதாக மாறிவிடக்கூடும். அதுவே சுருக்கங்கள் எட்டிப்பார்க்க காரணமாகிவிடுகிறது.

    ஒருசில முக பயிற்சிகள் மற்றும் உணவு பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் விரைவாகவே சருமத்தில் சுருக்கங்கள் தோன்றுவதை தவிர்த்துவிடலாம். கண்களைச் சுற்றியுள்ள தோல் முகத்தின் மற்ற பகுதிகளை விட மெல்லியதாக இருப்பதால், முதுமைக்கான அறிகுறிகளான சுருக்கங்களை சட்டென்று வெளிப்படுத்த தொடங்கிவிடும்.

    பயிற்சி 1: தாடை எலும்பை உறுதியாக வைத்துக்கொண்டு, இரு கண்களையும் வலமிருந்து இடமாகவும், பின்பு இடமிருந்து வலமாகவும், மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் சுழலவிடவும். கண்களைச் சுற்றியுள்ள சுருக்கங்களைத் தடுக்க உதவும் இந்த பயிற்சியை ஒவ்வொரு திசையிலும் ஐந்து முறை செய்யவும்.

    பயிற்சி 2: இரு விரல்களை கண்களின் உள் மற்றும் வெளிப்புற மூலைகளிலும், மற்ற விரல்களை தாடைப்பகுதியிலும் வைக்கவும். பின்பு கண்களை மூடி இறுக்கமாக அழுத்தவும். இதற்கிடையில், விரல்களை பயன்படுத்தி, கண்களின் வெளிப்புற மூலைகளை வெளிப்புறமாகவும் சற்று மேல்நோக்கியும் அழுத்தி தேய்க்கவும். இந்த நிலையில் சுமார் 5-10 விநாடிகள் வைக்கவும். பின்பு ஓய்வெடுக்கவும். அது போன்று 10 முதல் 25 முறை செய்யவும்.

    மல்லார்ந்த நிலையில் தூங்குவது முக தசைகளுக்கு அழுத்தம் கொடுப்பதை தவிர்க்க உதவும். சுருக்கங்களும் எட்டிப்பார்க்காது. மென்மையான தலையணையையும் உபயோகிக்கலாம். பட்டு துணியிலான தலையணை சிறந்தது.

    சுருக்கங்களை தடுக்கும் உணவுகள்: வெண்ணெய், ஆளிவிதை, சோயாபீன் போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலம் கொண்ட உணவு பொருட்கள், கருப்பு எள், பூசணி விதை போன்ற சருமத்தை அழகுபடுத்தும் ஊட்டச்சத்துக்கள், குறைந்த கொழுப்புள்ள பாலாடைக்கட்டி, பருப்பு வகைகள், முட்டைகள் மற்றும் கரும் பச்சை இலை கீரைகள், மிளகுத்தூள், ஆரஞ்சு, பப்பாளி மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற வைட்டமின் சி உள்ளடங்கிய பொருட்கள், ஆலிவ் எண்ணெய், முழு கோதுமை, பாதாம், காலே போன்ற வைட்டமின் ஈ நிரம்பிய பொருட்களை உட்கொள்வதன் மூலம் சரும சுருக்கங்களை கட்டுப்படுத்தலாம்.

    சருமத்திற்கான மசாஜ்: தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வரலாம். கற்றாழை ஜெல்லையும் சருமத்திற்கு உபயோகிக்கலாம். முட்டையின் வெள்ளைக்கருவை சருமத்தில் தடவுவதும் சுருக்கங்களை விரட்டக்கூடும். வாழைப்பழத்தை மசித்து சருமத்தில் தடவலாம். வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி 'பேஸ் பேக்'காக பயன் படுத்தலாம். காய்ச்சாத பாலில் பருத்தி பஞ்சுவை முக்கியும் சருமத்தில் பூசி வரலாம்.

    சரும சுருக்கத்தை தடுக்கும் வழிகள்: சருமத்தை எப்போதும் ஈரப்பதமாக வைத்திருங்கள். சருமம் எண்ணெய் பசை தன்மையுடன் இருந்தால் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துங்கள். அது உங்கள் சரும வகைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். வெளியே செல்லும்போது குறிப்பாக வெயிலின் ஆதிக்கம் நிலவும் சமயங்களில் மறக்காமல் சன்ஸ்கிரீனை உபயோகியுங்கள். கெட்டுப்போகாத ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள். உடலில் போதுமான அளவு நீர்ச்சத்தை பேணுங்கள். மதுப்பழக்கம், புகைப்பழக்கத்தை தவிருங்கள். அடிக்கடி முகம் சுளிப்பது, பற்களை கடிப்பது போன்ற பழக்கங்களை தவிருங்கள்.

    • வெண்ணையில் மிக அதிக அளவில்வைட்டமின் ஏ நிறைந்துள்ளது.
    • உங்கள் முகத்திற்கு இயற்கையான பளபளப்பினைத் தரும்.

    வெண்ணையில் மிக அதிக அளவில் கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஏ நிறைந்து உள்ளதால் இது உங்கள் சருமத்தினை மென்மையாகவும், ஈரப்பதமாகவும் மற்றும் ஒளிரும் தன்மையுடையதாகவும் மாற்றும் பண்பினை கொண்டுள்ளது.

    பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் கலந்து கிரீம் போல கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த கிரீமை முகம் முழுவதும் தடவி அப்ளை செய்து பின் துடைத்து எடுத்தால் ஆரம்பத்தில் முகத்தில் எண்ணெய் ஒட்டிக் கொண்டிருப்பது போல தோன்றினாலும், சிறிது நேரத்தில் நல்ல ரிசல்ட் தெரியும். வாரம் இரண்டு முறை இதை செய்யலாம்.

    ஒரு கப் தயிரில் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். வறண்ட சருமத்தினர் இதை முகத்தில் வாரம் ஒரு முறை தடவி, உலர விட்டு கழுவினால் மெத்தென்று மிருதுவாக ஈரப்பதத்துடன் உங்களுடைய சருமம் நீடிக்கும்.

    ஒரு வாழைப்பழம் ஒரு தேக்கரண்டியளவு உப்பு இல்லாத வெண்ணெயை மிக்ஸியில் போட்டு அரைத்து அந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் விட்டு பின்பு குளிர்ந்த நீரில் அலசுங்கள். இந்த மாஸ்கினை கழுவிய பின்பு முகத்தில் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். இதனை நீங்கள் வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம். இது உங்கள் முகத்திற்கு இயற்கையான பளபளப்பினைத் தரும்.

    ஒரு தேக்கரண்டியளவு ரோஸ் வாட்டர் ஒரு தேக்கரண்டியளவு உப்பு இல்லாத வெண்ணெய் எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக கலந்து காட்டன் பஞ்சினை எடுத்து அதில் நனைத்து உங்கள் முகம் மற்றும் கழுத்தில் நன்றாக அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தினை கழுவி மாய்ஸ்சரைசரை பயன்படுத்தி மசாஜ் செய்யுங்கள். இந்த முறையை நீங்கள் வாரத்தில் 3 முதல் 4 முறை செய்யலாம். ரோஸ் வாட்டர் மற்றும் வெண்ணெய் இரண்டும் கலந்த கலவை உங்கள் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றி புதுப்பிக்கிறது. அத்துடன் ரோஸ் வாட்டர் சருமத்தினை நீரேற்றமாகவும் மற்றும் ஈரப்பதத்துடனும் வைக்க உதவுகிறது.

    இவற்றுள் எது உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஒன்றோ அதனைத் தேர்வு செய்து பயன்படுத்துங்கள்.

    • ஆப்பிள் சிடர் வினிகர் ஆப்பிள் சாற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
    • இது கூந்தல் முதல் பாதம் வரை அழகுச் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது.

    ஆப்பிள் சாற்றிலிருந்து தயாரிக்கப்படும் வினிகர்தான் ஆப்பிள் சிடர் வினிகர். முகப்பரு பாதிப்புக்குள்ளான சருமத்திற்கும், பொடுகு போன்ற தலைமுடி சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் ஆப்பிள் சிடர் வினிகர் உதவுகிறது.

    பொதுவான அழகு சார்ந்த பிரச்சினைகளுக்கு மிகவும் பயனுள்ள தீர்வுகளில் ஒன்றாக ஆப்பிள் சீடர் வினிகர் உள்ளது. இது உங்கள் சருமம் மற்றும் உச்சந்தலையில் அமில-கார சமநிலையை மீட்டெடுக்க உதவுகிறது.

    பல்வேறு ஊட்டச்சத்து நிறைந்த ஆப்பிள் சீடர் வினிகர் கூந்தல் முதல் பாதம் வரை அழகுச் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது. சருமத்திற்கு பல நன்மைகளை தரக்கூடிய இந்த வினிகரை பயன்படுத்தி உங்கள் அழகை மெருகேற்றுவது எப்படி என்பது குறித்து இங்கு பாப்போம்.

    உங்கள் கூந்தல் பொலிவிழந்து காணப்பட்டாலோ, அதிகமாக கொட்டினாலோ நீங்கள் ஆப்பிள் சிடர் வினிகரை பயன்படுத்தி பார்க்கலாம். இது உங்கள் கூந்தலுக்கு பிரகாசத்தை சேர்க்கிறது. நீங்கள் தலைக்கு குளிக்கும் போது ஷாம்பு பயன்படுத்தி உங்கள் முடியை நன்கு அலசவும். பின்னர் ஒரு குவளை தண்ணீரில் இரண்டு தேக்கரண்டி ஆப்பிள் சிடர் வினிகரை சேர்த்து கடைசியாக ஒரு முறை மீண்டும் அலசவும். இப்படி செய்து வந்தால் முடி உதிர்வு குறைந்து நன்கு வளரும்.

    சரும பராமரிப்பிலும் ஆப்பிள் சிடர் வினிகர் பயன்படுகிறது. ஆப்பிள் சிடர் வினிகரை சிறிதளவு தூய நீருடன் சேர்த்துக் கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதைப் பஞ்சில் தொட்டு சருமத்திலும், முகத்தில் பருக்கள், தேமல், கரும்புள்ளி உள்ள இடங்களிலும் தடவி 5 - 10 நிமிடங்கள் காற்றில் காய வைத்து பிறகு, குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வர சருமம் பளபளவென்று பொலிவடையும். ஆனால், சோரியாசிஸ், சிரங்கு, சிராய்ப்பு போன்ற சருமப் பிரச்னை உள்ளவர்கள் இதைப் பயன்படுத்தக் கூடாது

    ஆப்பிள் சீடர் வினிகரைக் (apple cider vinegar ) கொண்டு தினமும் முகத்திற்கு சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால் ஆப்பிள் போன்ற கன்னங்களைப் பெறலாம். இதனை தொடர்ந்து செய்து வந்தால் சருமத்தில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறி புத்துணர்ச்சி கிடைக்கும்.

    அனைத்து வித சருமத்திலும் ஆப்பிள் சீடர் வினிகர் செயலாற்றுகிறது. வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து கொள்ள வேண்டும். இதனுடன் ஆப்பிள் சீடர் வினிகரை கலந்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். பின்னர் பத்து நிமிடங்களுக்கு பிறகு கழுவி விட வேண்டும். இதனை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் இளமையான தோற்றம் தக்கவைக்கப்படும்.

    • தேன் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது.
    • வீட்டிலேயே எளிமையான முறையில் செய்யக்கூடிய சருமத்தைப் பாதுகாக்கும் ஃபேஸ்பேக்குகளை பற்றி பார்க்கலாம்.

    தேன் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது, இது சருமத்திற்கு ஊட்டமளித்து, அதன் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. ரசாயனம் இல்லாத மேக்கப்-க்கு நீங்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய இயற்கையான ஃபேஸ் பேக் இங்கே உள்ளது. இந்த ஃபேஸ் பேக் வறண்ட மற்றும் டிஹைட்ரேட்டிங் சருமம் உள்ளவர்களுக்கு சிறப்பாக வேலை செய்யும். வீட்டிலேயே எளிமையான முறையில் செய்யக்கூடிய சருமத்தைப் பாதுகாக்கும் ஃபேஸ்பேக்குகளை பற்றி பார்க்கலாம்.

    தயிர், தேன் தலா 1 தேக்கரண்டி எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக கலந்து சுத்தமான முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் அப்படியே விட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும். தயிர் சருமத்தில் நன்றாக இருப்பது மட்டுமின்றி, அதில் உள்ள லாக்டிக் அமிலம் மற்றும் புரோபயாடிக்குகள், வறண்ட சருமத்தை மென்மையாக்கி வீக்கத்தை தணிக்கும். தேன் அழற்சி எதிர்ப்பு மற்றும் மிகுந்த ஈரப்பதத்தை வழங்குகிறது.

    சமையலறையில் இருக்கும் சில பொருட்களைப் பயன்படுத்தி வீட்டிலேயே சுலபமாக ஸ்க்ரப் ஒன்றை தயார் செய்யலாம். வீட்டில் உள்ள ஓட்ஸ் மற்றும் தேன் பயன்படுத்தி ஸ்க்ரப் செய்ய கற்றுக்கொள்ளுங்கள். இது, சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கிப் புது பொலிவை தரும்.

    1 டீஸ்பூன் ஓட்ஸை மிக்ஸியில் அரைத்து, அதில் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும். இதை முகத்தில் தடவி கைகளால் மென்மையாகத் தேய்க்கவும். 10 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவவும். அதை வாரத்தில் 2 நாட்கள் பயன்படுத்தினால் போதுமானது. தேன் மற்றும் ஓட்ஸ், இவை இரண்டுமே நம் சருமத்திற்கு நன்மை அளிக்கின்றன. ஓட்ஸ், நம் முகத்தில் உள்ள அழுக்கு மற்றும் அதிகப்படியான எண்ணெயை சுத்தம் செய்து புதிய பொலிவைத் தரும் அதே சமயம், தேன் நம் முகத்திற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்குகிறது.

    ஒரு முட்டையின் வெள்ளைக் கரு, ஒரு டேபிள்ஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் கற்றாழை (Aloe vera) ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் அடித்துக்கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் ஊறியதும், வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை முகத்தில் பூசுவதால், வறண்ட தன்மை நீங்கி முகத்துக்குப் பொலிவு கிடைக்கும். இது சருமத்தில் காணப்படும் அதிகப்படியான வறண்ட தன்மையை உறிஞ்சுவதோடு அழுக்கையும் அகற்றும்.

    ஒரு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டேபிள்ஸ்பூன் தேன், ஒரு பெரிய பழுத்த தக்காளி பழம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்துக் கழுவலாம். முகம் பளிச்சென மாறும். சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றும். எண்ணெய் பசையை நீக்கும். சிறந்த டோனராகச் செயல்படும். இயற்கையாகவே பளபளப்பான சருமம் பெற உதவும்.

    • பூக்களில் ஏராளமான வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளன.
    • ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு வகையான நன்மைகளைக் கொண்டது.

    ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு வகையான நன்மைகளைக் கொண்டது. அவற்றில் அடங்கியுள்ள சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. பூக்களில் ஏராளமான வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளன. இதனால் சருமத்தை இளமையாக மாற்றுவதோடு, மினுமினுப்பாகவும் வைக்க உதவுகிறது. அந்த வகையில், பூக்கள் முக அழகை பராமரிக்க எவ்வாறு உதவுகிறது என்பதை பார்ப்போம்:

    சாமந்திபூ: இது வெயிலினால் கலை இழந்த முகத்தை முற்றிலுமாக அழகுபெற செய்கிறது.

    தேவையானவை: சாமந்தி பூக்கள் 3, பால் 1 தேக்கரண்டி, யோகர்ட் - 1 தேக்கரண்டி, துருவிய கேரட் -2 தேக்கரண்டி.

    செய்முறை: முதலில் துருவிய கேரட்டையும், சாமந்தி பூ இதழ்களையும் ஒன்று சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். அடுத்து இவற்றுடன் பால் மற்றும் யோகர்ட் சேர்த்து முகத்தில் பூசவும். பின் 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் முகம் மினுமினுக்க செய்யும்.

    ரோஜா பூ

    தேவையானவை: ரோஜாப் பூ- 1, பால் - 1 தேக்கரண்டி, கோதுமை தவிடு - 1 தேக்கரண்டி.

    செய்முறை: முதலில் ரோஜாப் பூவின் இதழை நன்கு அரைத்துக் கொள்ளவும். அடுத்து இவற்றுடன் கோதுமை தவிடையும் சேர்த்து அரைத்துக் கொண்டு பால் சேர்க்கவும். இந்த கலவையை முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். பின் 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முகம் மிகவும் அழகு பெறும்.

    செம்பருத்தி பூ: செம்பருத்தி பூ முடி பிரச்னையை சரி செய்வதோடு, முக அழகை பராமரிக்க உதவுகிறது.

    தேவையானவை: செம்பருத்தி பூ -1, தயிர் - 1 தேக்கரண்டி, முல்தானி மட்டி- 2 தேக்கரண்டி, ரோஜா பூ - 1.

    செய்முறை: முதலில் ரோஸ் மற்றும் செம்பருத்தி இதழ்களை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அடுத்து இவற்றுடன் தயிர் மற்றும் முல்தானி மட்டி கலந்து முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து இந்த முக பூச்சை குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் மிருதுவாகும். அத்துடன் கரும்புள்ளிகள், அழுக்குகள் போன்றவற்றையும் நீக்கிவிடும்.

    ×