என் மலர்
நீங்கள் தேடியது "கல்வி நிதி உதவி"
- PM SHRI திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கேரளா கையெழுத்திடவில்லை.
- கேரளாவுக்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய ரூ.1186.84 கோடியை உடனடியாக ஒதுக்க வேண்டும்
கேரளாவின் பொதுக் கல்வி மேம்பாட்டிற்காக மத்திய அரசு ஒதுக்க வேண்டிய ரூ.1186.84 கோடியை உடனடியாக ஒதுக்க வேண்டும் என்று கேரளா கல்வி அமைச்சர் சிவன்குட்டி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அமைச்சர் சிவன்குட்டி, "2023-24 மற்றும் 2024-25 ஆம் ஆண்டுகளுக்கான மத்திய பங்கின் நிலுவைத் தொகை முறையே ரூ.280.58 கோடி மற்றும் ரூ.513.54 கோடி என்றும், 2025-26 ஆம் ஆண்டிற்கு அங்கீகரிக்கப்பட்ட தொகை ரூ.654.54 கோடி என்றும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "PM SHRI திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால், கேரளாவின் கல்வி நிதிக்கான பங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய கல்வியை வழங்குவதற்கும் விளையாட்டுகளை ஊக்குவிப்பதற்கும் கேரளாவைப் பாராட்டும் மத்திய அரசு, கல்விக்கான நிதியை நிறுத்தி வைத்துள்ளது" என்று தெரிவித்தார்.
- இது திமிர் பிடித்தவர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்.
- வரியை திருப்பிக் கேட்டால் அற்பத்தனம் என்கிறார் மத்திய அமைச்சர்.
மும்மொழிக் கொள்கை, தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ஒதுக்காதது உள்ளிட்டவற்றை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், "இது திமிர் பிடித்தவர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம். வரியை திருப்பிக் கேட்டால் அற்பத்தனம் என்கிறார் மத்திய அமைச்சர்.
மத்திய அமைச்சரின் பெயர் தர்மேந்திரா, ஆனால் எந்த தர்மமும் இல்லாதவர். ஆனால் இந்திய ஏற்காததால் தமிழ்நாட்டிற்கு நிதி கொடுக்க முடியாது என ஆணவத்துடன் கூறுகிறார். இதை கேட்ட தமிழ்நாட்டு மக்கள் உங்கள் அப்பன் வீட்டு பணமா என்று கேட்கிறார்கள்.
எங்களின் உரிமையை தான் நாங்கள் கேட்கிறோம். யாசகம் கெடக்கவில்லை. மும்மொழியை ஏற்காத மாநிலங்களுக்கு நிதி கொடுக்க கூடாது என்று அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது?
1965 இல் தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்பட்டபோது அதற்கு எதிராக இங்கு மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இப்போராட்டத்தில் பலர் உயிரிழந்தார்கள். அப்போது ரெயில் நிலையங்கள், அஞ்சல் நிலையங்களில் இருந்த இந்தி அழிக்கப்பட்டது.
இதனையடுத்தது இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி திணிக்கப்படாது என்று அப்போதைய பிரதமர் நேரு உறுதி அளித்தார். இப்போது மோடி மன்னர் போல இருக்கிறார். அவர்களின் பாசிஸ்ட்ட ஆட்சியை எதிர்த்து தான் இங்கு போராட்டம் நடைபெற்று வருகிறது.
தனது வீட்டின் முன்பு தன்னை தானே சாட்டையால் அடித்து கொண்ட அண்ணாமலை இருமொழி கொள்கை காலாவதியாகிவிட்டது என்று கூறுகிறார். உண்மையில் அண்ணாமலை தான் காலாவதி ஆகிவிட்டார். தமிழ்நாட்டில் பாஜகவை தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளும் இந்தி திணிப்பை எதிர்க்கிறார்கள்.
ஒன்றிய அமைச்சர் தர்மேந்திரா பிரதான தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்" என்று தெரிவித்தார்.
- தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே செருப்புப் போடுவேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- மூன்றாவதாக எதாவது ஒரு மொழி என்று பிதற்றுகிறார்கள். அதெல்லாம் பொய்.
மும்மொழிக் கொள்கை, தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ஒதுக்காதது உள்ளிட்டவற்றை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கொ.ம.தே.க. தலைவர் ஈஸ்வரன், "ஒன்றிய அரசுக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் திரண்டிருக்கிறார்கள். இந்தி நமக்கு எந்த விதத்தில் நமக்கு பயன் தரும். இந்திய கற்றுக்கொள்வது பெரிய விஷயம் இல்லை. நான் அசாமில் இருந்தபோது 3 மாதத்தில் இந்தி கற்றுக்கொண்டேன்.
மூன்றாவதாக எதாவது ஒரு மொழி என்று பிதற்றுகிறார்கள். அதெல்லாம் பொய். இதில் ஏமாந்தோம் என்றால் பள்ளிகளில் இந்தி, சம்ஸ்கிருத ஆசிரியர்கள் மட்டும் தான் இருப்பார்கள்.
பள்ளியில் 50 மாணவர்கள் வெவ்வேறு மொழி தேர்ந்தெடுத்தால் எப்படி அதற்கு ஆசிரியர்களை நியமிக்க முடியும். அது நடைமுறை சாத்தியமற்றது. இது ஒரு பிளாக்மெயில் அரசாங்கம்.
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே செருப்புப் போடுவேன் என மாநிலத் தலைவர் தெரிவித்துள்ளார். ஜென்மத்திற்கும் நீங்கள் செருப்பு அணிய மாட்டீர்கள். செருப்புப் போட வாய்ப்பு அமையாது
தி.மு.க. தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது சொந்த பொறுப்பில் அளித்த ரூ.5 கோடியை வங்கியில் வைப்புநிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப் பெறும் வட்டி தொகையை கொண்டு மாதந்தோறும் ஏழை-எளிய, நலிந்தோருக்கு உதவி தொகையாக கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2007-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டு வருகிறது. வைப்புநிதியாக போடப்பட்ட ரூ.5 கோடியில், 30-வது புத்தகக் கண்காட்சியை கருணாநிதி திறந்த வைத்த போது, கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கத்துக்கு ரூ.1 கோடி வழங்கினார். இதையடுத்து ரூ.4 கோடியில் வரும் வட்டி தொகையில் இருந்து கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து உதவி தொகை வழங்கப்படுகிறது.
2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ.4 கோடியே 55 லட்சத்து 90 ஆயிரம் ஆகும். தற்போது வங்கியின் வட்டி விகிதம் குறைந்துள்ளதால், கடந்த மாதம் வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்தை 15-ந் தேதி(நேற்று) வழங்கினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.