என் மலர்
நீங்கள் தேடியது "ஈஞ்சம்பாக்கம்"
- வெற்றி பெற்ற முதல் 3 பேருக்கு பரிசுகளை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
- பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஈஞ்சம்பாக்கத்தில் படகு போட்டி நடைபெற்றது. உத்தண்டி முதல் ஊரூர் குப்பம் வரை இந்த போட்டி நடைபெற்றது. இதில் 13 மீனவ கிராம மக்கள் பங்கேற்றனர்.
படகு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடலுக்குள் தனிப்படகில் சென்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இந்த போட்டியில் முதல் பரிசை கொட்டிவாக்கம் குப்பத்தை சேர்ந்த மோகன், கண்ணன் ஆகியோர் தட்டிச் சென்றனர். போட்டியில் வெற்றி பெற்ற முதல் 3 பேருக்கு பரிசுகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
மார்ச் 8-ந்தேதி மகளிர் தினம் கொண்டாடப் பட்டது. இந்த ஆட்சி அமைந்த பின்னர் ஒவ் வொரு நாளும் மகளிர் தினம் தான். ஒவ்வொரு திட்டத்தையும் முதல்-அமைச்சர் பார்த்து, பார்த்து செய்து வருகிறார்.
மீனவர்கள் நலவாரிய உறுப்பினர்கள் இயற்கை மரணம் அடைந்தால் அவர் களுக்கான நிவாரண தொகையை ரூ.25 ஆயிரமாக உயர்த்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றிக் கொடுத்தார். மீன் பிடி படகு உரிமம் புதுப்பித்தலை 3 வருடத்திற்கு ஒரு முறை மாற்றி அமைத்தார். மீன் வள பல்கலைக்கழகத்தில் மீனவ மாணவர்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீட்டை 20 சதவீதமாக உயர்த்தியுள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
திருவான்மியூர்:
சென்னை நீலாங்கரையை அடுத்த ஈஞ்சம்பாக்கம், தட்கல் நகர் பொதிகை தெருவை சேர்ந்தவர் விஜய ரங்கன். இவரது மகன் பால முருகன் (வயது28). ஐ.டி. முடித்த இவர் போலீஸ் வேலைக்கு சேர்ந்தார்.
அசோக்நகரில் உள்ள போலீஸ் பயிற்சி அகாடமியில் 2 வருடமாக பயிற்சி பெற்று வந்தார். அவருக்கு கம்ப்யூட்டர் டைப் செய்யும் பிரிவில் பணி வழங்கப்பட்டு இருந்தது.
பாலமுருகனுக்கு விடுமுறை கொடுக்காமல் இரவு பகலாக பணி வழங்கப்பட்டது. அதிக வேலைப்பளு காரணமாக அவர் அவதிப்பட்டு வந்தார்.
இதுதொடர்பாக அவர் தனதுதந்தையிடம் கூறி வருத்தப்பட்டார். அவரிடம் தந்தை ஐ.டி.படித்துவிட்டு ஏன் போலீஸ் வேலைக்கு போக வேண்டும்? வேறு ஏதாவது வேலைப்பார்க்கலாம் என்று கூறி சமாதானப்படுத்தினார். இதனால் கடந்த 2 நாட்களாக பாலமுருகன் வேலைக்கு செல்லவில்லை.
நேற்று இரவு உடனே வேலைக்கு வருமாறு பாலமுருகனுக்கு அழைப்பு வந்தது. இதனால் மன உளைச்சல் அடைந்த அவர் மீண்டும் தனது தந்தையிடம் கூறி புலம்பினார். அவர் மகனை சமாதாப்படுத்தினார். ஆனால் பாலமுருகன் ஆறுதல் அடையவில்லை.
இன்று அதிகாலை பாலமுருகன் தனது அறையில் தாயாரின் சேலையை மின்விசிறியில் கட்டி தூக்கில் தொங்கினார். இன்று காலையில் மகனை எழுப்புவதற்காக விஜயரங்கன் அறைக்கதவை திறந்தார். அப்போது மகன் மின்விசிறியில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக தூக்கில் இருந்து மகனை இறக்கி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், பாலமுருகன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews