என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை"

    • தொழிலதிபர் ராஜேஷ்-க்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரகத்தில் பிரச்சனை உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
    • தனது மகனுக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுக்க ராஜேஷ்-ன் தாய் முன்வந்தார்.

    டெல்லியில் சிறுநீரக கோளாறால் அவதியுற்ற 59 வயது மகனுக்கு 80 வயதான தாய் தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

    டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ்-க்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரகத்தில் பிரச்சனை உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து தனது மகனுக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுக்க அவரது தாய் முன்வந்தார்.

    மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு, அவரது தாயாரின் சிறுநீரகம் அவருக்குப் பொருத்தமானது என்று மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

    இதனையடுத்து, இருவருக்கும் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடைபெற்று தற்போது இருவரும் நலமுடன் உள்ளனர் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • 5-வதாக ஒரு சிறுநீரகம் பொருத்தி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
    • 10 நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஜ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    புதுடெல்லி:

    இந்திய விஞ்ஞானி தேவேந்திர பார்லேவர் சிறுநீரக பாதிப்பு காரணமாக டெல்லி பரிதாபாத்தில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 47 வயதான அவர் கடந்த 2010-ம் ஆண்டு முதல் நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு நீண்டகாலமாக சிகிச்சை பெற்று வந்தார்.

    2011-ம் ஆண்டு அவரது முதல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அவரது தாயாரிடம் இருந்து வந்தது. ஆனால் ஒரு வருடம் மட்டுமே வேலை செய்ய முடிந்தது. இரண்டாவது உறுப்புமாற்று அறுவை சிகிச்சை 2012-ம் ஆண்டு நடந்தது.

    பின்னர் 2022-ம் ஆண்டு பார்லேவருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்தது. பின்னர் மூளைச்சாவு அடைந்த ஒருவரிடம் இருந்து அவருக்கு சிறுநீரகம் தானம் கிடைத்தது.

    அதன்படி கடந்த மாதம் ஆஸ்பத்திரியில் 4 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது அவரது உடலில் நான்கு செயல்படாத சிறுநீரகங்கள் இருந்ததால் அறுவை சிகிச்சை சவாலாக இருந்துள்ளது.

    பின்னர் 5-வதாக ஒரு சிறுநீரகம் பொருத்தி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் ஒன்று மட்டுமே செயல்படுகிறது. அதன்பிறகு தொடர் சிகிச்சை மூலமாக குணமடைந்து 10 நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஜ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #ArunJaitley #JaitleyTransplant
    புது டெல்லி :

    மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி கடந்த சில மாதங்களாகவே  சிறுநீரக பாதிப்பால் அவதியுற்று வந்தார். இதற்காக, கடந்த ஒருமாத காலமாக அவர் டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுவந்தார். இதன் காரணமாக வீட்டில் ஓய்வெடுத்தபடியே நிதியமைச்சக விவகாரங்களை அவர் கவனித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த சனிக்கிழமை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை 8 மணி முதல் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்று வருவதாக எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு, எய்ம்ஸ்  இயக்குனர் ரந்தீப் குலரியாவின் சகோதரரும், அப்பல்லோ ஆஸ்பத்திரியின் சிறுநீரகவியல் மருத்துவருமான சந்தீப் குலரியா சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்துவருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஏற்கனவே, அருண் ஜெட்லிக்கு இதய அறுவை சிகிச்சை மற்றும்  உடல் எடை அதிகரிப்பு அறுவைசிகிச்சைகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #ArunJaitley #JaitleyTransplant
    ×