search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திவாகரன்"

    • எடப்பாடி பழனிசாமிக்கு ஆலோசனை கூறும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை.
    • எடப்பாடி பழனிச்சாமி உள்ளடக்கிய அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு தான் நடக்கும்.

    விராலிமலை:

    சசிகலாவின் சகோதரர் திவாகரன் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். முன்னதாக அவர் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக தேர்ந்தெடுப்பதற்கு முன்பு சபாநாயகராக இருந்த தனபாலை முதலமைச்சராக ஆக்கலாம் என்று நான் சசிகலாவிடம் கூறி முன்மொழிந்தேன். அப்போது அதற்கு திருமாவளவன் உள்ளிட்டோர் வரவேற்றனர்

    ஆனால் அப்போது 35 பட்டியலின எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் அவர்கள் அதற்கு ஒத்துவரவில்லை. எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு விரைவில் நடைபெறும்.

    2026 தேர்தலுக்குள் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு நடந்து விடும்.

    மத்திய அரசோடு தி.மு.க. 24 மணி நேரமும் மோதல் போக்கை கடைபிடித்து வருவதால் நிதிகள் வருவது இல்லை. இதனால் பாதிக்கப்படுவது மக்கள் தான்.

    மோதல் போக்கை கைவிட்டு நிர்வாக ரீதியாக சமூகமான முறையை தமிழ்நாடு அரசு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

    மத்திய அரசுக்கு மாநில அரசுக்கும் இடையே நடக்கும் போட்டியால் என்னைப் போன்ற கல்வியாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    எடப்பாடி பழனிசாமிக்கு ஆலோசனை கூறும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. அவர் என்னை விட சீனியர்.

    எடப்பாடி பழனிச்சாமி உள்ளடக்கிய அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு தான் நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தனது பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தினால் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என திவாகரனுக்கு சசிகலா தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். #Sasikala #Divakaran
    சென்னை:

    டிடிவி தினகரனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது தனி அணி தொடங்கியுள்ள திவாகரன், முதல்வர் - துணை முதல்வர் அணிக்கு ஆதரவாக பேசி வருகிறார். இதனால், தினகரன் - திவாகரன் இடையே வார்த்தை மோதல்கள் ஏற்பட்டது. இந்நிலையில், சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் திவாகரனுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

    அதில், சசிகலா புகைப்படத்தையோ, பெயரையோ எங்கும் பயன்படுத்த கூடாது. மீறி பயன்படுத்தினால் சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும். உடன்பிறந்த சகோதரி என சசிகலா என ஊடகங்களில் குறிப்பிடுவதை நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நோட்டீஸ் குறித்து திவாகரன் தரப்பில் எந்த கருத்தும் இதுவரை கூறப்படவில்லை. #Sasikala #Divakaran
    ×