என் மலர்
நீங்கள் தேடியது "கியா இந்தியா"
- கியா இந்தியா நிறுவனம் அக்டோபர் மாத விற்பனை விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
- கியா நிறுவனத்தின் EV6 எலெக்ட்ரிக் மாடலின் வினியோகம் கடந்த மாதம் துவங்கியது.
கியா இந்தியா நிறுவனம் 2022 அக்டோபர் மாதத்தில் மட்டும் 23 ஆயிரத்து 323 யூனிட்களை இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது. இதுதவிர 2022 நிதியாண்டில் கியா கார் விற்பனையில் இரண்டு லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. 2021 நிதியாண்டில் கியா நிறுவனம் 18 ஆயிரத்து 583 யூனிட்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கியா நிறுவனம் அறிமுகம் செய்த EV6 எலெக்ட்ரிக் காரின் வினியோகத்தை ஜூன் மாத வாக்கில் துவங்கியது. கியா இந்தியா நிறுவனம் வருடாந்திர விற்பனையில் 43 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கியா நிறுவனத்தின் அதிகம் விற்பனையான கார்களில் செல்டோஸ் மாடல் முதலிடம் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து சொனெட் மற்றும் கரென்ஸ் மாடல்கள் இடம்பெற்றுள்ளன.
மூன்று கார்களும் முறையே 9 ஆயிரத்து 777, 7 ஆயிரத்து 614 மற்றும் 5 ஆயிரத்து 479 யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. கடந்த ஆண்டு கியா இந்தியா நிறுவனத்தின் கார்னிவல் மாடல் 301 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. சமீபத்திய புதுவரவு எலெக்ட்ரிக் கார் கியா EV6 மாடல் இதுவரை 152 பேருக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
- கியா இந்தியா நிறுவனத்தின் கரென்ஸ் எம்பிவி மாடல் இந்திய விற்பனையில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
- புதிய கரென்ஸ் எம்பிவி விலை இந்தியாவில் மீண்டும் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.
கியா இந்தியா நிறுவனம் தனது கரென்ஸ் எம்பிவி மாடல் விலையை இந்திய சந்தையில் இரண்டாவது முறையாக அதிகரித்து இருக்கிறது. முன்னதாக ஏப்ரல் மாத வாக்கில் கியா கரென்ஸ் விலை முதல் முறையாக உயர்த்தப்பட்டது. அப்போது கியா கரென்ஸ் அறிமுக விலை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு புதிய விலை அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக கரென்ஸ் மாடல் விலை ரூ. 70 ஆயிரம் உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில், கியா கரென்ஸ் விலை இந்தியாவில் மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. கியா கரென்ஸ் புதிய விலை நவம்பர் 1 ஆம் தேதி அமலுக்கு வந்தது. அதன்படி கரென்ஸ் மாடல் விலை தற்போது ரூ. 50 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. கியா கரென்ஸ் 1.5 லிட்டர் NA பெட்ரோல் பிரெஸ்டிஜ் வேரியண்ட் விலை ரூ. 50 ஆயிரம் அதிகரித்துள்ளது.

கரென்ஸ் 1.5 லிட்டர் NA பெட்ரோல் பிரீமியம் வேரியண்ட் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் லக்சரி வேரியண்ட் விலை முறையே ரூ. 40 ஆயிரம் மற்றும் ரூ. 15 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. 1.5 லிட்டர் லக்சரி வேரியண்ட் விலை ரூ. 35 ஆயிரமும், மற்ற டீசல் வேரியண்ட் விலை ரூ. 30 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது.
கியா கரென்ஸ் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்ட பிரெஸ்டிஜ் பிளஸ் டிசிடி, லக்சரி+ 6எஸ், லக்சரி+ 7எஸ், லக்சரி+ 6எஸ் டிசிடி மற்றும் லக்சரி+ 7எஸ் டிசிடி விலை ரூ. 20 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதே போன்று பிரீமியம், பிரெஸ்டிஜ் மற்றும் பிரெஸ்டிஜ் பிளஸ் வேரியண்ட்களின் விலை ரூ. 10 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய விலை உயர்வை அடுத்து கியா கரென்ஸ் மாடலின் துவக்க விலை தற்போது ரூ. 10 லட்சம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17 லட்சத்து 70 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- கியா செல்டோஸ் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர் தனது காரில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாக குற்றம்சாட்டி வந்தார்.
- பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காத விரக்தியில் கோபமுற்ற வாடிக்கையாளர் தனது காரை தீ வைத்து எரித்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரை சேர்ந்த நபர் தனது கியா செல்டோஸ் காரை தீ வைத்து எரித்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். கியா சர்வீஸ் தனக்கு திருப்திகரமாக இல்லை என்ற விரக்தியில் இருந்த நபர் கோபத்தில் இவ்வாறு செய்து இருக்கிறார். பின் கியா சர்வீஸ் செண்டர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் காரை எரித்த வாடிக்கையாளரை கைது செய்தனர்.
கியா செல்டோஸ் காரை வாங்கி பயன்படுத்தி வந்த நபருக்கு கடந்த இரண்டு ஆண்டுகவாகவே காரின் என்ஜினில் குறைபாடு ஏற்பட்டு வந்ததாக அதன் வாடிக்கையாளர் குற்றம்சாட்டி வருகிறார். என்ஜின் குறைபாடை சரி செய்ய அந்த நபர் சர்வீஸ் செண்டர் சென்றுள்ளார். காரில் ஏற்படும் புகார்களை சர்வீஸ் செண்டர் மேலாளரிடம் தெரிவித்து இருக்கிறார். பின் சர்வீஸ் செய்யும் ஊழியர், மேலாளர் மற்றும் வாடிக்கையாளர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியதில் கோபமுற்ற வாடிக்கையாளர் தான் எடுத்து வந்த பெட்ரோல் கேனை திறந்து, தனது கியா செல்டோஸ் முழுக்க ஊற்றினார். கார் சர்வீஸ் செண்டரின் உள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையிலேயே அவர் தனது காருக்கு தீ வைத்து எரித்தார். தீ வைத்ததும் கார் முழுக்க தீ மளமளவென பரவியது. இதைத் தொடர்ந்த கியா சர்வீஸ் செண்டர் ஊழியர் தீயணைப்பானை எடுத்து வந்து தீயை கட்டுப்படுத்தினார்.
கியா சர்வீஸ் செண்டர் ஊழியர் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக கியா சர்வீஸ் செண்டர் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காரை தீ வைத்து எரித்த வாடிக்கையாளர் மற்றும் அவருடன் வந்த மற்றொரு நபரை காவல் துறையினர் கைது செய்தனர். பின் கைது செய்யப்பட்டவர்கள் பினையில் விடுதலை செய்யப்பட்டனர்.
- கியா நிறுவனத்தின் செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
- முதற்கட்டமாக இந்த மாடல் அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு, அதன்பின் இந்தியா வருகிறது.
இந்திய சந்தையில் கியா நிறுவனத்தின் செல்டோஸ் மாடல் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் செல்டோஸ் மாடல் மூலம் கியா குறிப்பிடத்தக்க பங்குகளை பெற்றது. 2019 வாக்கில் இந்தியாவில் களமிறங்கிய கியா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலாக கியா செல்டோஸ் இருக்கிறது. புதிய செல்டோஸ் பேஸ்லிப்ட் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
அமெரிக்காவில் ஸ்போர்டேஜ், சொரெண்டோ மற்றும் டெலுரைடு மாடல்களை போன்று செல்டோஸ் அதிக வரவேற்பு பெறவில்லை. புதிய மேம்பட்ட செல்டோஸ் மூலம் இந்த நிலையை மாற்ற கியா திட்டமிட்டுள்ளது. புதிய செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடலில் மேம்பட்ட முகப்பு பகுதி, பெரிய கிரில், இலுமினேட் செய்யப்பட்ட அக்செண்ட்கள் வழங்கப்படுகிறது. இதன் ஹெட்லைட்களும் மாற்றப்பட்டு அழகாக டிசைன் செய்யப்பட்டு உள்ளன.

பின்புறம், டெயில் லைட்களும் புதிதாக வழங்கப்படுகின்றன. இவை ஸ்டிரெட்ச் செய்யப்பட்ட லைட் ஸ்ட்ரிப் மூலம் இண்டர்கனெக்ட் செய்யப்படுகின்றன. காரின் உள்புறத்தில் மேம்பட்ட 10.25 இன்ச் இன்போடெயின்மெண்ட் டிஸ்ப்ளே, 10.25 இன்ச் அளவில் மேம்பட்ட டிரைவர் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. காரின் ஏர் வெண்ட்கள் மாற்றப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இந்த மாடல் ஏற்கனவே தென் கொரிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது.
அமெரிக்காவில் இந்த மாடல் அதன் தென் கொரிய வெர்ஷனில் வழங்கப்பட்டு இருந்த என்ஜின்களை பெறும் என கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய கியா செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடலில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 147 ஹெச்பி பவர், 180 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என தெரிகிறது. இத்துடன் 1.6 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜினும் வழங்கப்படலாம்.
இந்த என்ஜின் 195 ஹெச்பி பவர், 265 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தலாம். இந்திய சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படும் செல்டோஸ் மாடலில் 1.4 லிட்டர் GDI டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் ஸ்மார்ட்ஸ்டிரீம் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடல் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.
- கியா நிறுவனம் இந்திய சந்தையில் EV6 ஃபிளாக்ஷிப் எலெக்ட்ரிக் கார் மாடலை விற்பனை செய்து வருகிறது.
- சர்வதேச சந்தையில் கியா EV6 மாடல் ஏராளமான விருதுகளை வாங்கி குவித்த நிலையில், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
கியா இந்தியா நிறுவனம் தனது EV6 எலெக்ட்ரிக் கிராஸ்ஓவர் மாடலை இந்த ஆண்டு மத்தியில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. சர்வதேச சந்தையில் ஹூண்டாய் ஐயோனிக் 5, ஃபோர்டு மஸ்டங் மேக்-இ, ஸ்கோடா என்யாக் iV, ரெனால்ட் மெகன் இ டெக் மற்றும் பியுஜியோட் 308 போன்ற மாடல்களை பின்னுக்குத் தள்ளி சர்வதேச விருதுகளை வாங்கி குவித்து இருக்கிறது.
புதிய கியா EV6 மாடல் WLTP சைக்கிள் சோதனையில் முழு சார்ஜ் செய்தால் 528 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. எனினும், ARAI சோதனையில் கியா EV6 மாடல் அதிக ரேன்ஜ் வழங்குவது அம்பலமாகி இருக்கிறது. இந்த காரின் GT லைன் வேரியண்ட் டூயல் எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் கொண்டிருக்கிறது. இந்த கார் 321 ஹெச்பி பவர், 605 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

இதன் ஆல்-வீல் டிரைவ் வேரியண்ட் 77.4 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி பேக் கொண்டிருக்கிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 708 கிலோமீட்டர் வரை செல்லும் என ARAI சான்று பெற்று இருக்கஇறது. தற்போது கியா EV6 மாடல் இந்தியாவுக்கு CBU முறையில் இறக்குமதி செய்யப்படுகிறது. கியா EV6 RWD வேரியண்ட் விலை ரூ. 60 லட்சம் என துவங்குகிறது. இதன் AWD வேரியண்ட் விலை ரூ. 64 லட்சத்து 95 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.
இந்திய சந்தையில் கியா EV6 எலெக்ட்ரிக் கார் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதுவரை கியா நிறுவனம் 200 EV6 யூனிட்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. மேலும் 150 யூனிட்களை வினியோகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த காரை 350 கிலோவாட் DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்யும் போது 18 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்திட முடியும்.
- கியா இந்தியா நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் எலெக்ட்ரிக் வாகனத்திற்கான டீசர் வெளியாகி இருக்கிறது.
- புதிய ஃபிளாக்ஷிப் எலெக்ட்ரிக் வாகனத்திற்கான டீசர்கள் கியா இந்தியா நிறுவன சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
கியா இந்தியா நிறுவனம் தனது EV9 கான்செப்ட் மாடலின் டீசரை அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு இருக்கிறது. இந்த கான்செப்ட் மாடல் இந்தியாவில் 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய EV9 கான்செப்ட் மட்டுமின்றி கார்னிவல் மற்றும் செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களையும் கியா இந்தியா அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2021 லாஸ் ஏஞ்சல்ஸ் மோட்டார் விழாவில் முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்ட கியா EV9 கான்செப்ட் அந்நிறுவனத்தின் E-GMP பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த காரின் ஸ்பை படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஸ்பை படங்கள் நர்பர்க்ரிங் அருகே நடத்தப்பட்ட சோதனையின் போது எடுக்கப்பட்டவை ஆகும்.

கியா EV9 கான்செப்ட்-இல் கிலாம்ஷெல் பொனெட், டைகர்-நோஸ் கிரில், காண்டிராஸ்ட் நிற ஃபௌக்ஸ் ஸ்கிட் பிலேட்கள், பானரோமிக் சன்ரூஃப், காரை சுற்றி கிலாடிங், செங்குத்தாக பொருத்தப்பட்ட டெயில் லைட்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. உள்புற டேஷ்போர்டில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்டி கன்சோல் மற்றும் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற செயல்படும் பெரிய திரை உள்ளது.
இத்துடன் ஹேப்டிக் பட்டன்கள், ஃபுளோடிங் செண்டர் கன்சோல், ஆர்ம்-ரெஸ்ட், ஆம்பியண்ட் லைட்டிங், ஏ பில்லர் மவுண்ட் செய்யப்பட்ட டுவீட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. கியா EV9 காரின் ப்ரோடக்ஷன் வெர்ஷனில் வழங்கப்படும் பேட்டரி 450 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என கியா நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.
- கியா இந்தியா நிறுவனத்தின் வாகன விற்பனை விவரங்கள் வெளியாகி உள்ளது.
- வாகன விற்பனையில் வருடாந்திர அடிப்படையில் கியா இந்தியா 47.7 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.
கியா இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் வேகமாக வளர்ந்து வருகிறது. சமீபத்தில் 2022 ஆண்டு விற்பனையில் 3 லட்சத்து 36 ஆயிரத்து 619 யூனிட்களை பதிவு செய்தது. 2021 ஆண்டுடன் ஒப்பிடும் போது கடந்த ஆண்டு விற்பனை 47.7 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
இவற்றில் உள்நாட்டு விற்பனை 2 லட்சத்து 54 ஆயிரத்து 556 யூனிட்கள் அடங்கும். இது முந்தைய விற்பனையை விட 40.1 சதவீதம் அதிகம் ஆகும். 2022 ஆண்டு மட்டும் கியா இந்தியா நிறுவனம் 82 ஆயிரத்து 063 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இந்திய சந்தையில் 2019 ஆகஸ்ட் மாத வாக்கில் களமிறங்கிய கியா இந்தியா நிறுவனம் விற்பனையில் எட்டு லட்சம் யூனிட்களை கடந்து அசத்தி உள்ளது.

இதுதவிர டிசம்பர் 2022 மாதத்தில் மட்டும் கியா இந்தியா நிறுவனம் 15 ஆயிரத்து 184 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இது வருடாந்திர அடிப்படையில் 94.7 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு புது மைல்கல் எட்டியதோடு இந்தியாவில் முன்னணி யுவி ஏற்றுமதியாளர் எனும் பெருமையை கியா இந்தியா எட்டியது. 2022 ஆண்டில் மட்டும் கியா இந்தியா 82 ஆயிரத்து 063 யூனிட்களை ஏற்றுமதி செய்து இருக்கிறது.
உள்நாட்டில் செல்டோஸ் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் எஸ்யுவி-க்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த மாடல் ஒரே ஆண்டில் ஒரு லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டியது. 2022 ஆண்டில் இந்த எஸ்யுவி மாடல் 1 லட்சத்து 01 ஆயிரத்து 569 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. இதைத் தொடர்ந்து சொனெட் மாடல் இதே ஆண்டு 86 ஆயிரத்து 251 யூனிட்கள் விறபனையாகி இருந்தது.
கியா கரென்ஸ் மாடல் கடந்த ஆண்டு 62 ஆயிரத்து 756 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. இது இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் இரண்டாவது பெரிய எம்பிவி மாடல் எனும் பெருமையை பெற்று இருக்கிறது. இதைத் தொடர்ந்து கியா கார்னிவல் மற்றும் கியா EV6 எலெக்ட்ரிக் கார் மாடல்கள் முறையே 3 ஆயிரத்து 550 மற்றும் 430 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
- கியா இந்தியா நிறுவனம் தனது அடுத்த தலைமுறை கார்னிவல் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- 2020 வாக்கில் கியா நிறுவனத்தின் நான்காம் தலைமுறை கார்னிவல் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
கியா இந்தியா நிறுவனம் புதிய தலைமுறை கார்னிவல் மாடலுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. புதிய தலைமுறை கியா கார்னிவல் மாடல் 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கிறது. தற்போது விற்பனை செய்யப்படும் நான்காம் தலைமுறை கியா கார்னிவல் மாடலுக்கு மாற்றாக புதிய கார்னிவல் மாடல் இருக்கும். இந்த மாடல் ஏற்கனவே நடைபெற்ற பயெனியல் மோட்டார் விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது.
சர்வதேச சந்தையில் 2020 ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், நான்காம் தலைமுறை கியா கார்னிவல் மாடல் டீசர்களில் ஏராளமான அம்சங்கள் தெரியவந்துள்ளது. அதன்படி புதிய காரில், பிரஷ்டு சில்வர் இன்சர்ட்கள், கிரில் பகுதியில் இண்டகிரேட் செய்யப்பட்ட ஹெட்லேம்ப்கள், புதிய செவ்வக வடிவம் கொண்ட ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள், டூயல் டோன் அலாய் வீல்கள், பாடி கலர் கிலாடிங், ராப்-அரவுண்ட் 2-பீஸ் எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய கியா கார்னிவல் மாடல் சர்வதேச சந்தையின் சில நாடுகளில் KA4 அல்லது செடோனா பெயர்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசரின் படி புதிய கார்னிவல் மாடல் புளூ நிறம் கொண்டிருக்கும் என்றும் சி பில்லரில் பிரஷ்டு சில்வர் இன்சர்ட்கள், ரூஃப், ORVM-கள், பில்லர் மற்றும் ரூஃப் ரெயில்களில் பிளாக்டு அவுட் அம்சங்கள் வழங்கப்படுகிறது. புதிய டிசைன் மட்டுமின்றி அடுத்த தலைமுறை கியா கார்னிவல் மாடல் சர்வதேச சந்தையில் டூயல் டோன் இண்டீரியர், டூயல் சன்ரூஃப், ADAS, Uvo டெலிமேடிக்ஸ் வழங்கப்படுகிறது.
இத்துடன் வயர்லெஸ் சார்ஜிங், ஹேண்ட்ஸ்-ஃபிரீ பவர்டு டெயில்கேட், ஸ்லைடிங் டோர்கள், 12.3 இன்ச் அளவில் இரண்டு ஸ்கிரீன்கள் (ஒன்று டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் யூனிட், மற்றொன்று இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர்), 3-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 12-ஸ்பீக்கர் போஸ் மியூசிக் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இந்த கார் ஏழு, ஒன்பது மற்றும் பதினொரு இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது.
- கியா இந்தியா நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் பல்வேறு புது வாகனங்களை காட்சிப்படுத்த இருக்கிறது.
- கியா சர்வதேச சந்தையில் ஏற்கனவே விற்பனை செய்து வரும் சொரெண்டோ 7 சீட்டர் எஸ்யுவி ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் காட்சிக்கு வைக்கிறது.
கியா இந்தியா நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் புது கார்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. அடுத்த வாரம் துவங்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் பத்து புது வாகனங்களை கியா இந்தியா காட்சிக்கு வைக்க இருக்கிறது. இந்த பட்டியலில் கியா மோட்டார்ஸ் சர்வதேச சந்தையில் விற்பனை செய்து வரும் சொரெண்டோ 7 சீட்டர் எஸ்யுவி மாடல் இணைந்திருக்கிறது.
முன்னதாக ஆட்டோ எக்ஸ்போ 2018 நிகழ்வில் கியா சொரெண்டோ மாடலை இந்தியாவில் காட்சிக்கு வைத்திருக்கிறது. இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்ட சொரெண்டோ மூன்றாம் தலைமுறை மாடல் ஆகும். தற்போது சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் சொரெண்டோ மாடல் அதன் நான்காவது தலைமுறையை சேர்ந்தது. இந்த கார் 2020 வாக்கில் விற்பனைக்கு வந்தது. இந்த மாடல் தான் தற்போது ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட இருக்கிறது.

கியா சொரெண்டோ மாடலின் வெளிப்புறம் கியாவின் டைகர்-நோஸ் கிரில், 3-பாட் எல்இடி ஹெட்லைட்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் அப்ரைட் எஸ்யுவி ஸ்டான்ஸ் மற்றும் ஃபிளேர்டு வீல் ஆர்ச்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. பின்புறம் செங்குத்தாக டெயில் லைட் செட்டப் மற்றும் டெயில்கேட் பகுதியில் சொரெண்டோ எழுதப்பட்டுள்ளது.
சொரெண்டோ மாடல் 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் ஹைப்ரிட், 1.6 லிட்டர் பிளக்-இன் ஹைப்ரிட், 2.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 2.2 லிட்டர் டீசல் என நான்கு வித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், முன்புற வீல் அல்லது ஆல்-வீல் டிரைவ் செட்டப் உடன் வழங்கப்படுகிறது.
Photo Courtesy: Rushlane
- கியா இந்தியா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கான்செப்ட் எஸ்யுவி மாடல் ஆட்டோ எக்ஸ்போ 2023-இல் அறிமுகம்.
- முன்னதாக இந்த கான்செப்ட் கார் 2021 லாஸ் ஏஞ்சல்ஸ் மோட்டார் விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது.
கியா இந்தியா நிறுவனம் தனது EV9 கான்செப்ட் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலை ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் அறிமுகம் செய்தது. முற்றிலும் புதிய கியா கார்னிவல் மாடலுடன் இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டது. 2024 இறுதியில் கியா EV9 கான்செப்ட் உற்பத்தி பணிகள் துவங்கும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
முன்னதாக 2021 லாஸ் ஏஞ்சல்ஸ் மோட்டார் விழாவில் கியா EV9 கான்செப்ட் முதன் முதலாக காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் கியா பிராண்டின் E-GMP பிளாட்ஃபார்மை சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. காரின் ஒட்டுமொத்த தோற்றம் பிரமாண்டமாக காட்சியளிக்கும் போதிலும், இதன் டிசைன் ஏரோடைனமிக் அம்சங்களை கொண்டிருக்கிறது.

வெளிப்புறம் இந்த காரில் கிளாம்ஷெல் பொனெட், பிலான்க்டு-ஆஃப் டைகர் நோஸ் கிரில், டாட் பேட்டன் ஹெட்லேம்ப்கள், L வடிவ டிஆர்எல்-கள், காண்டிராஸ்ட் நிற ஃபௌக்ஸ் ஸ்கிட் பிலேட்கள், பொனெட்டில் ஸ்டிராங் கிரீஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. காரின் முன்புறம் லைன் மிக தெளிவாக காட்சியளிக்கிறது. கான்செப்ட் மாடல் என்பதால், இதன் பக்கவாட்டில் டோர் ஹேண்டில்கள் காணப்படவில்லை.
இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலில் தடிமனான வீல் ஆர்ச்கள், ஏரோடைனமிக் டிசைன் கொண்ட பெரிய வீல்கள், வழக்கமான ORVM-களுக்கு மாற்றாக கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. பின்புறம் நேரான ரூஃப் லைன் இண்டகிரேட் செய்யப்பட்ட ரூஃப் ஸ்பாயிலருடன் இண்டகிரேட் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் ரியர் குவார்டர் கிளாஸ் மற்றும் விண்ட்ஷீல்டு உள்ளிட்டவை அளவில் பெரியதாக இருக்கிறது.
கியா நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட தகவல்களின் படி EV9 கான்செப்ட் மாடல் ப்ரோடக்ஷன் நிலைக்கு தயாராக இருப்பதாகவே தெரிவித்து இருந்தது. இதில் வழங்கப்படும் பேட்டரி முழு சார்ஜ் செய்தால் 450 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் என்றும் இதனுடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை ஐந்து நொடிகளுக்குள் எட்டிவிடும் என கூறப்படுகிறது.
- கியா நிறுவனத்தின் செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ADAS தொழில்நுட்பம் வழங்கப்படும் என தகவல்.
- கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம்.
கியா செல்டோஸ் எஸ்யுவி மாடல் விரைவில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட இருக்கிறது. இந்திய சந்தையில் இந்த ஆண்டு மத்தியில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. முன்னதாக 2022 ஜூன் மாத வாக்கில் கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. வெளியீட்டிற்கு முன் இந்த கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் படங்கள் வெளியாகி வருகின்றன.
புதிய கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 160 ஹெச்பி பவர், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. தற்போது விற்பனை செய்யப்படும் மாடலில் உள்ள 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 140 ஹெச்பி பவர், 242 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டிசிடி, 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஃபேஸ்லிஃப்ட் மாடல் என்ற வகையில், செல்டோஸ் மாடலில் ரிடிசைன் செய்யப்பட்ட கிரில், முன்புற ஹெட்லேம்ப்கள், எல்இடி டேடைம் ரன்னிங் லைட்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் அலாய் வீல்களில் புது டிசைனை எதிர்பார்க்கலாம். காரின் பின்புறம் டெயில் லேம்ப் மற்றும் எல்இடி லைட் பார் ஒன்றாக இணைக்கப்பட்டு இருக்கும் என்றும் இதன் மத்தியில் கியா பேட்ஜ் இடம்பெற்று இருக்கும் என தெரிகிறது.
இந்திய சந்தையில் கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர், மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மற்றும் ஹூண்டாய் கிரெட்டா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
- கியா நிறுவனத்தின் 2023 செல்டோஸ் மாடல் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
- புதிய 2023 செல்டோஸ் மாடலில் பிஎஸ் 6 2.0 புகை விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் வழங்கப்படுகிறது.
கியா இந்தியா நிறுவனம் செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய செல்டோஸ் மாடல் கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், 2023 செல்டோஸ் மாடல் இந்தியாவில் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
2019 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், செல்டோஸ் மாடல் அப்டேட் செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும். புதிய மாடல் ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்ட நிலையில், இந்த எஸ்யுவி வெளிப்புற ஸ்டைலிங்கில் மாற்றங்களை பெற்று இருக்கிறது. 2023 மாடலில் சிக்னேச்சர் டைகர் நோஸ், எல்இடி ஹெட்லேம்ப் கிளஸ்டர்கள், முன்புற கிரில் பகுதியில் டிஆர்எல்கள் உள்ளன.

இத்துடன் டூயல் டோன் சில்வர் மற்றும் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்ட அலாய் வீல்கள், ரிடிசைன் செய்யப்பட்ட டெயில் லேம்ப்கள், இலுமினேட் செய்யப்பட்ட லைட் ஸ்டிரைப் டெயில்கேட் முழுக்க இடம்பெற்று இருக்கிறது. கேபினுள் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் எவ்வித மாற்றங்களையும் பெறவில்லை.
பவர்டிரெயினை பொருத்தவரை 2023 செல்டோஸ் மாடலில் தற்போதைய வெர்ஷனில் உள்ளதை போன்றே 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இவை புதிய RDE மற்றும் BS6 2 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் அப்டேட் செய்யப்பட்டு இருக்கும். இரு என்ஜின்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
வரும் மாதங்களில் 2023 கியா செல்டோஸ் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், இந்த மாடல் மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர், ஃபோக்ஸ்வேகன் டைகுன், எம்ஜி ஆஸ்டர், ஸ்கோடா குஷக் மற்றும் ஹூண்டாய் கிரெட்டா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
Photo Courtesy: Rushlane