search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனுமன்"

    • மூலவருக்கு பின்புறம் இருந்த குன்றில் வளர்ந்து கொண்டிருக்கும் நந்தீஸ்வரரும், நாகர்களின் சிலைகளும் காணப்பட்டன.
    • ஸ்ரீ காட்டுவீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் வேங்கடரமண சுவாமி, மகாலட்சுமி தேவி சந்நிதிகள் விசேஷமானவை.

    கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேவசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீகாட்டுவீர ஆஞ்சநேயர் திருக்கோயில். அனுமன் சிறுவயது முதலே காடுகளில் வலம் வந்தமையாலும் , இந்த பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பு வனமாக இருந்தமையாலும், மூலவரானவர் 'காட்டுவீர ஆஞ்சநேயர்' என்ற திருநாமம் கொண்டு அழைக்கப்பெறுகிறார்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு காட்டுவீர ஆஞ்சநேயரின் திருக்கோயில் இல்லை. இந்த பகுதி குன்றுகளாகவும் விளைநிலங்களாகவுமே இருந்துள்ளது. இந்த விளைநிலங்கள் யாவும் வெங்கட்ராம செட்டியாருடையது என்கிறது வரலாறு. அப்போது நிலத்தில் உள்ள பாறையின் மீது ஆஞ்சநேயர் திருவுருவம் செதுக்கப்பட்டிருந்தது. இதனைப் பார்த்த மக்கள் ஆஞ்சநேயரை பூசித்து வழிபட்டு வந்தனர். மூலவருக்கு பின்புறம் இருந்த குன்றில் வளர்ந்து கொண்டிருக்கும் நந்தீஸ்வரரும், நாகர்களின் சிலைகளும் காணப்பட்டன. இந்த அதிசயத்தைக் காண நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகரித்து கொண்டே சென்றது.


    ஆஞ்சநேயரின் மீது அளவற்ற பக்தியையும் நம்பிக்கொண்டு மக்கள் வழிபட்டு வருவதை கண்ட வெங்கட்ராம செட்டியார், அங்கு ஆஞ்சநேயருக்கு கோயில் ஒன்றை கட்ட வேண்டும் என முடிவு செய்தார். திருக்கோயில் கட்டுவதற்கு தன்விளைநிலத்தில் இருந்து எவ்வளவு அளவு இடம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என ஊர்மக்களிடம் கூறியுள்ளார். பிறகு இதற்கென்று அறக்கட்டளை ஒன்றும் அமைக்கப்பட்டது, திருக்கோயிலானது எழிலுற எழுந்தது.

    மூலவர் ஸ்ரீஅருள்மிகு ஆஞ்சநேயர் ஒற்றைப் பாறையின் மீது செதுக்கப்பட்டிருப்பது வேறு எங்கும் காணமுடியாத சிறப்பு. இந்த சிற்பத்தை செதுக்கியவர் யார் என்பது தெரியவில்லை என்றாலும் வரலாறு செவி வழி செய்தியாக ஒரு தகவலைக் கூறுகிறது. கிருஷ்ணதேவராயர் காலத்தில் மார்கத பிராமணர் என ஒருவர் இருந்தாராம். இவர் அனுமன் மீது மிகுந்த பக்தி கொண்டவர். இதனால் இவர் பல ஊர்களுக்குச் சென்று அங்குள்ள பாறைகளின் மீதும் மலைகளின் மீதும் அனுமன் சிலைகளை செதுக்கி வந்தாராம். இதனால் அனுமனின் மீது பலருக்கும் பக்தி வரும் என்று எண்ணி உள்ளார். அதனால் இதுவும் அவருடைய கைவண்ணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

    ஏனென்றால் அவர் வடிவமைத்த அனுமன் சிற்பங்கள் அனைத்திலும், அனுமன் வலது புறம் திரும்பி நின்றும், தலை மேல் நோக்கியும் , வால் தூக்கி நின்றவாறும், வாலில் சிறிய மணி ஒன்று கட்டியவாறும் இருக்கும். இங்கும் அவ்வாறே உள்ளது. ஸ்ரீ காட்டுவீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் வேங்கடரமண சுவாமி, மகாலட்சுமி தேவி சந்நிதிகள் விசேஷமானவை.


    ராம நாமம் எழுகிறதோ அவ்விடத்தில் நிச்சயம் அனுமன் இருப்பார். இங்கும் ஆஞ்சநேயர் கோயிலின் வலது பக்கம் பொன்மலை எனும் சிறுமலையொன்றுள்ளது. அங்கு ஒரு பெருமாள் கோயில் உள்ளது. மூலவர் அனுமன் வலது புறம் திரும்பி தலை தூக்கி மலைமீதுள்ள பெருமாளைத் துதித்தபடி நின்றிருக்கிறார். இதனை காணக் கண் கோடி வேண்டும்.

    பல ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலையில் இருந்து ஸ்ரீமத் பாலமுருக நரசிம்ம ஸ்வாமி எனும் சித்தர் ஒருவர் காட்டுவீர ஆஞ்சநேயரை தரிசிக்க வந்துள்ளார். அவர், ஹரியும் சிவனும் ஒன்று என்பதை மெய்ப்பிக்கும் சிறப்பை பெற்றுள்ளது இத்திருத்தலம் என கூறியிருக்கிறார். ஹரிக்கு உகந்தவரான அனுமனும், சிவபெருமானுக்கு உகந்தவரான நந்தீஸ்வரரும் ஒரே இடத்தில் எழுந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பது வேறு எங்குமே காணப்படாத அதிசயம் என்றும் கூறியுள்ளார்.

    மூலவருக்கு இடது புறம் பெரிய உருண்டை பாறையின் மீது சிறிய நந்தீஸ்வரர் சிலை ஒன்று உள்ளது. இச்சிலை வளர்ந்து கொண்டு வருவதாக கூறப்படுகிறது. எல்லா அனுமன் கோயில்களிலும் வடைமாலை, வெற்றிலை மாலை, துளசி மாலை, வெண்ணெய் காப்பு, சந்தனக்காப்பு சாத்தி வழிபடுதல் விசேஷம் எனலாம். ஆனால் இங்கு தேங்காய் நேர்த்திக்கடன் விசேஷம். எவரொருவர் ஒரு முழுத்தேங்காயை, மனதார வேண்டி அனுமனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றாரோ, அவருடைய கோரிக்கைகள் மூன்று மாதங்களுக்குள்ளாக நிறைவேறுவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.


    ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாளன்று மூலவருக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, ஆந்திரம், கர்நாடகம் மற்றும் இந்தியாவின் ஏனைய பகுதிகளிலிருந்தும் ஏராளமாகப் பக்தர்கள் இங்கு வந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

    காட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலில் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுவதால் மக்கள் கூட்டம் அலைமோதும். அந்த நாட்களில் அனுமனை வழிபட்டு தேங்காய் கட்டினால் தங்களது வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

    கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஆவின் மேம்பாலம் எனப்படும் சேலம் பைபாஸை ஒட்டிய இடதுபுற சாலையில் அமைந்துள்ள தேவசமுத்திரத்தில் கலையம்சத்துடன் வளர்ந்து நிற்கிறது அருள்மிகு ஸ்ரீ காட்டுவீர ஆஞ்சிநேயர் திருக்கோயில்.

    • 2011 ஆம் ஆண்டு சாம்பி ரெட்டி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார் தேஜா சஜ்ஜா .
    • பிரசாந்த வர்மா இயக்கத்தில் இந்தாண்டு ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் அனுமன்.

     2011 ஆம் ஆண்டு சாம்பி ரெட்டி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார் தேஜா சஜ்ஜா . தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் . பிரசாந்த வர்மா இயக்கத்தில் இந்தாண்டு ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் அனுமன்.

    அமிர்த்தா ஐயர், வரலட்சுமி சரத்குமார், சமுத்திரகனி, வினய் ராய் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். இத்திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதுவரை இப்படம் 330 கோடி ரூபாய் வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதைத்தொடர்ந்து தேஜா சஜ்ஜாவின் அடுத்த படமான மிராய் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான கார்த்திக் கட்டாமானேனி இயக்கவுள்ளார். பீபில் மீடியா ஃபேக்டரி மிராய் படத்தை தயாரிக்கவுள்ளனர்.

    படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்ரையும் பட முன்னோட்டத்தையும் படக்குழுவினர் வெளியிட்டனர். இப்படம் பேரரசரான அசோகன் மற்றும் அவரது 9 ரகசியங்களை பற்றிய கதையாகும். 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் 2டி மற்றும் 3டியில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இறைவனை விடவும் இறைவனின் நாமம் அதிக வலிமை உடையது.
    • கர்வம் தோன்றினால் கடமைகளும் பொறுப்புகளும் மறந்துவிடும்.

    ஒருநாள் அர்ஜூனன் வனத்தின் வழியாகச் சென்றுகொண்டிருந்தான். அப்போது வழியில் ஓரிடத்தில் ஒரு குரங்கு `ராமநாமம்' ஜெபித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தான். அவனுக்கு நீண்டநாளாகவே ஒரு சந்தேகம் இருந்தது.

    `ராமர் மிகச் சிறந்த வில்லாளி' என்று சொல்கிறார்களே. அப்படி அவர் உண்மையிலேயே வில்லாளி என்றால், `சேதுவுக்கும், இலங்கைக்கும் இடையில் வில்லால் பாலம் கட்டாமல், ஏன் வானரங்களைக் கொண்டு பாலம் கட்டவேண்டும்?' என்பதுதான் அந்த சந்தேகம்.

    தன்னுடைய சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள ஒரு வழி கிடைத்துவிட்டது என்று நினைத்த அர்ஜூனன், அந்த வானரத்திடம் சென்று, "வானரமே! உன் ராமனுக்கு வலிமை இல்லையா? அவன் சிறந்த வில் வீரன் என்று சொல்கிறார்களே. அது உண்மையானால், அவன் ஏன் வில்லால் பாலம் அமைக்காமல், வானரங்களின் உதவியை நாடவேண்டும்?" என்று கேட்டான்.

    அர்ஜூனனின் இந்த ஆணவப் பேச்சால், தியானம் கலைந்தது அனுமனுக்கு. தன் எதிரே நிற்பது அர்ஜூனன் என்பதை அறிந்து கொண்ட அனுமன் , அர்ஜூனனின் அகந்தையை ஒடுக்க முடிவு செய்தார்.

    "சரங்களால் கட்டப்படும் சரப்பாலம் என் ஒருவனின் பாரத்தையே தாங்காது. எனில் ஒட்டுமொத்த வானரங்களின் பாரத்தை எப்படித் தாங்கும்?" என்று அனுமன் கேட்டார். உடனே அர்ஜூனன். "ஏன் தாங்காது, என்னால் முடியும். நான் ஒரு பாலம் கட்டுகிறேன், உன் ஒட்டு மொத்த வானரக் கூட்டங்களையும் அது தாங்கும்" என்றான். மேலும், "பந்தயத்தில் நான் தோற்றால் வேள்வித் தீயில் குதித்து உயிர்துறப்பேன் என்றான். தன் காண்டீபத்தின்மேல் உள்ள நம்பிக்கையால்.

    அனுமனோ, "நான் தோற்றால் என் ஆயுள் முழுவதும் உனக்கு அடிமையாக இருக்கிறேன்" என்கிறார். போட்டி தொடங்கியது.

     அர்ஜூனன் சரப் பாலத்தை கட்டத்தொடங்கினான். அனுமனோ ஓர் ஓரத்தில் அமர்ந்து 'ராம நாமம்' ஜபித்துக் கொண்டிருந்தார். பாலம் கட்டி முடித்தான் அர்ஜூனன்.

    அனுமன் அதன் மீது ஏற ஆரம்பித்தார். முதல் அடியை எடுத்து வைத்த கணமே பாலம் சுக்குநூறானது. அனுமனுக்கோ எல்லையற்ற மகிழ்ச்சி. அர்ஜூனனோ அவமானத்தில் தலை குனிந்தான். "போரில் எப்படியாவது வெல்ல வேண்டும். என் சகோதரர்களை காப்பாற்ற வேண்டும் என்று பாசுபதாஸ்திரத்தை தேடி வந்தேன். ஆணவத்தால் வானரத்திடம் தோற்றுவிட்டேன். கிருஷ்ணா, நீதான் என்னை மன்னிக்க வேண்டும்" என்றவாறு வேள்வித் தீ வளர்த்து அதில் குதிக்கத் தயாரானான்.

    அனுமன் எவ்வளவோ தடுத்தும் அர்ஜூனன் கேட்கவில்லை. அப்போது ஒரு குரல் "இங்கே நடப்பது என்ன"? என்று கேட்டது. குரல் கேட்ட திசையில், இருவரும் பார்த்தனர். அந்தணர் ஒருவர் தென்பட்டார். இருவரின் அருகே வந்து நடந்தவற்றை கேட்டறிந்தார்.

    பின்பு அவர், "எந்தவொரு பந்தயத்திற்குமே சாட்சி என்பது மிக அவசியமானது. சாட்சியே இல்லாமல் நீங்கள் இருவரும் செய்தது ஒருபோதும் பந்தயம் ஆகாது" என்றார். தொடர்ந்து, "நீ பாலம் கட்டு. இப்போது வானரம் அதை உடைக்கட்டும். பின்பு யார் பலசாலி என்பதை முடிவு செய்துகொள்ளலாம்" என்றார். அர்ஜூனனும், அனுமனும் ஒப்புக்கொண்டனர்.

    'போனமுறைதான் தோற்றுவிட்டோம். எனவே இந்த முறை கிருஷ்ணனை நினைத்துக் கொண்டே கட்டுவோம்' என்று முடிவெடுத்தான் அர்ஜூனன். எனவே 'கிருஷ்ணா கிருஷ்ணா' என்று ஜபித்துக் கொண்டே பாலம் கட்டிமுடித்தான். சென்ற முறையே எளிதாக வென்றுவிட்டோம், இந்த முறையும் வென்றுவிடலாம் என்ற கர்வத்தோடு 'ராம நாமம்' சொல்லாமல் பாலத்தில் ஏறினார் அனுமன்.

     பாலம் அப்படியே இருந்தது. ஓடினார், குதித்தார் பாலம் ஒன்றுமே ஆகவில்லை. பரிதாபத்தோடு நின்ற அனுமனைப் பார்த்து அர்ஜூனன் "பார்த்தாயா, எங்கள் கண்ணன் மகிமையை, இப்போது சொல் எங்கள் கண்ணன்தானே வலிமையானவர்?" என்று கேட்டான்.

    அர்ஜூனனின் இந்தக் கேள்வி அனுமனுக்கு மேலும் குழப்பத்தைத் தந்தது. அந்தணர் அருகே வந்து, "யார் நீங்கள்?" என்று கேட்டான். அந்தணரின் உருவம் மறைந்து பரந்தாமன் காட்சி தரவே, இருவரும் அவர் கால்களில் விழுந்து ஆசி பெறுகின்றனர். பகவான் வாய்திறந்தார் "நீங்கள் இருவருமே தோற்கவில்லை வென்றது கடவுள் பக்தியும், நாமஸ்மரணையும் தான்.

    இறைவனை விடவும் இறைவனின் நாமம் அதிக வலிமை உடையது. அர்ஜூனன் முதல்முறை பாலம் கட்டும்போது, தன்னால் முடியாதது எதுவும் இல்லை என்ற ஆணவத்தோடு பாலம் கட்டினான். அனுமனோ எப்படியாவது வெல்ல வேண்டும் என்று ராமநாமத்தை ஜெபித்தான். எனவே அனுமனின் வெற்றி ராமநாமத்தால் உறுதியானது.

    மறுமுறை போட்டி நடந்தபோது, அகந்தை ஒழிந்த அர்ஜூனன் என்னை நினைத்தபடி பாலம் கட்டினான். அனுமனோ தன் பலத்தை நம்பி, இறைவனை நாடாமல் தோற்றான். எனவே இருமுறையும் வென்றது நாம ஸ்மரணையே" என்றார். கர்வம் தோன்றினால் கடமைகளும் பொறுப்புகளும் மறந்துவிடும். எனவேதான் தேவையற்ற சந்தேகம் தோன்றி அனுமனை சீண்டினான் அர்ஜூனன். அப்போதுதான் தான் சீண்டிய வானரம் அனுமன் என்பதை அறிந்தான் அர்ஜூனன். உடனே அனுமனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான்.

     உங்கள் இருவரின் பக்தியும் எல்லையற்றது. ஆனால், இறைவன் ஒருவன் தான் என்பதை உணர மறந்துவிட்டீர்கள். இதை உணர்த்தவே இந்த நாடகம் என்று சொல்லி இருவருக்கும் ஆசி வழங்கி மறைந்தார் பகவான் கிருஷ்ணன்.

    • வெற்றியைக் காரணமாக்கி ஆசீர்வதித்தமையால் இதற்கு ‘வெற்றிலை’ என்று பெயர் வந்தது.
    • திருமணங்களில் வெற்றிலை தாம்பூலம் கொடுப்பது வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வேண்டும் என்பதால்தான்.

    ராமதூதன் அனுமானுக்கு துளசி மாலை சார்த்துவதால் ஸ்ரீராம கடாட்சம் பெற்று நல்ல கல்வி, செல்வம் ஆகியவை பெறலாம்.

    அசோக வனத்தில் சீதையைக் கண்டு ராமபிரானின் நிலையை விளக்கமாக எடுத்துரைத்ததைப் பார்த்த சீதா சந்தோஷமடைந்து அனுமனை ஆசீர்வதிக்க எண்ணி அருகில் வளர்ந்திருந்த கொடிகளின் இலைகளைக் கிள்ளி தலையில் தூவி ஆசீர்வதித்தாள்.

    'இந்த இலை உனக்கு வெற்றியைத் தரட்டும்' என்றாளாம்.

    வெற்றியைக் காரணமாக்கி ஆசீர்வதித்தமையால் இதற்கு 'வெற்றிலை' என்று பெயர் வந்தது.

    ஆகையால், பக்தர்கள் தன் வேண்டுதல் எதுவாக இருந்தாலும் அது வெற்றியடைய வேண்டும் என்ற காரணத்தினால் வெற்றிலை மாலையை சார்த்தி தன் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

    திருமணங்களில் வெற்றிலை தாம்பூலம் கொடுப்பது வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வேண்டும் என்பதால்தான்.

    எலுமிச்சம் பழம் ராஜாக்களுக்கு கொடுக்கக்கூடிய மரியாதை நிமித்த மான பழம். மற்றொன்று சம்ஹார தொழில் செய்யும் கடவுள்களுக்கு மிகவும் பிடித்தமான பழம்.

    நரசிம்மன், வராகம், கருடன் ஆகிய சக்திகள் அனுமானிடத்தில் ஒருங்கே அமைந்துள்ளதாலும், ஈஸ்வரனின் அம்சம் ஆனதாலும் இவருக்கு எலுமிச்சம் பழ மாலை சார்த்தி வழிபடுவோர் வாழ்வில் எதிரிகளின் தொல்லை நீங்கப் பெறுவர்.

    • விபீஷணனுக்கு ராமன் `சிரஞ்சீவி’ வரம் அளித்தார்.
    • யாரேனும் ராமஜெயம் சொல்ல, அதை நான் காதுகுளிர கேட்க வேண்டும்.

    அனுமனுக்கு `சிரஞ்சீவி' வரம் அளித்தார் ராமன். அதேபோல ராவண வதத்திற்குப் பிறகு, இலங்கைக்கு அரசனான விபீஷணனுக்கு முடிசூட்டி வைத்த ராமன் அவனுக்கும் `சிரஞ்சீவி' வரம் அளித்தார். அப்போது ராமருக்கு ஒரு சந்தேகம் உண்டானது. `தான் மட்டும் தான் சிரஞ்சீவி' என்று நினைத்துக் கொண்டிருக்கும் அனுமன், தற்போது விபீஷணனும் சிரஞ்சீவியாகி விட்டதை நினைத்து வருந்துவானோ' என்று நினைத்த ராமர், அது பற்றி அனுமனிடம் கேட்கவும் செய்தார்.

    அதற்கு பதில் அளித்த அனுமன். `எங்கே நான் ஒருவன் மட்டுமே சிரஞ்சீவியாக இருந்து விடுவேனோ என்று பயந்திருந்தேன். நல்ல வேளையாக விபீஷணனையும் சிரஞ்சீவியாக்கி விட்டீர்கள். எனக்கு சந்தோஷம் தான் ராமா' என்று பணிவுடன் பதில் சொன்னார் அனுமன்.

    `அதெப்படி, உனக்கு சந்தோஷம்?' என்று ராமன் கேட்டார்.

    `நான் சிரஞ்சீவி என்றால் இந்த உலகம் முற்றிலும் அழிந்த பிறகும் நான் நிலைத்திருப்பேன் என்பதுதானே? நான் தனி ஒருவனாக இருந்தால், என் காதுகளுக்கு வேலையே இல்லாமல் போய்விடுமே. யாரேனும் ராமஜெயம் சொல்ல, அதை நான் காதுகுளிர கேட்க வேண்டும் என்ற என் ஆசை, நான் தனித்து நிற்கும் போது ஈடேறாது அல்லவா? தற்போது விபீஷணனும் சிரஞ்சீவியாகி விட்டதால் அவர் `ராம' நாமம் உச்சரித்துக் கொண்டே இருப்பார், நான் கேட்டுக் கொண்டே இருப்பேன். இந்தப் பேறு நான் தனிஆளாக இருந்தால் கிடைக்காதே" என்று பணிவுடன் சொன்னார், அனுமன்.

    • கிழக்கு மேற்கு கோபுரங்கள் அடிமுதல் நுனிவரை கருங்கற்களால் கட்டப்பட்டவை.
    • ராமேஸ்வரம் கோவில் கட்டிடக் கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

    இத்திருக்கோவிலானது மிகவும் பழமை வாய்ந்தது.

    இதன் கர்ப்ப கிரகம் இலங்கையை சேர்ந்தது.

    பராக்கிரம பரகு என்ற மன்னனால் கி.பி.1173ல் கட்டியதாக கல்வெட்டின் மூலம் தெரிய வருகிறது.

    ராமேஸ்வரம் கோவில் கட்டிடக் கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

    இக்கோவிலின் கிழக்கு மேற்கு கோபுரங்கள் அடிமுதல் நுனிவரை கருங்கற்களால் கட்டப்பட்டவை.

    இக்கோவிலில் உள்ள நந்தி (செங்கற்சுண்ணாம்பு) அறையால் அமைக்கப்பட்டது.

    இதன் நீளம் 22 அடி, அகலம் 12 அடி உயரம் 17 அடி). இது அழகிய வடிவில் அமையப் பெற்று பார்ப்பதற்கு அழகாக அமையப்பெற்றுள்ளது.

    இத்திருக்கோவிலில் உள்ள பிரகாரங்கள் அனைத்தும் மிகவும் நேர்த்தியாகவும், அழகாகவும் அமையப் பெற்றுள்ளது.

    இத்திருக்கோவில் மூன்றாம் பிரகாரம் உலகத்திலேயே நீண்ட பிரகாரமாக கருதப்படுகிறது.

    பக்தர்களுக்கு வசதி

    பக்தர்கள் தங்குவதற்கு தேவஸ்தானத்தில் நவீன வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதிகள் கிடைக்கும்.

    இவை தவிர தனியார் துறையில் தங்கும் விடுதிகளும் (லாட்ஜ்) ஏராளமாக உள்ளன.

    இவைகளில் நவீன வசதியுடன் கூடிய அறைகள் குறைந்த வாடகையில் கிடைக்கும்.

    • ஆருத்ரா தரிசனம் (10 நாட்கள்) (டிசம்பர், ஜனவரி)
    • மகா கிருத்திகை (திருக்கார்த்திகை நாள் (பஞ்சமூர்த்திகள் ரத வீதியில் வலம் வருதல்)

    இத்திருக்கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்கள்:

    1. மகா சிவராத்திரி திருவிழா (பிப்ரவரி, மார்ச்).

    2. வசந்த உத்ஸவம் (மே, ஜூன்)

    3. ராமலிங்கம் பிரதிஷ்டை (மே, ஜூன்) ராவண சம்ஹாரம், விபீஷணர் பட்டாபிஷேகம், ராமலிங்க பிரதிஷ்டை.

    4. திருக்கல்யாண திருவிழா (17 நாட்கள்) (ஜூன், ஆகஸ்ட்). தபசு நாள் பல்லக்கில் சயன சேவை திருக்கல்யாண நாள்.

    5. நவராத்திரி விழா (10 நாட்கள்) (செப்டம்பர், அக்டோபர்)

    6. கந்த சஷ்டி விழா (6 நாள்) (அக்டோபர், நவம்பர்)

    7. ஆருத்ரா தரிசனம் (10 நாட்கள்) (டிசம்பர், ஜனவரி)

    இவை தவிர மாத நாள், வார சிறப்பு விழாக்களும் உண்டு.

    1. மாத விழா (ஒவ்வொரு கார்த்திகை)

    2. பட்ச விழா : பிரதோஷம்

    3. வார விழா (வெள்ளிக்கிழமை) அம்பாள் புறப்பாடு.

    சிறப்பு விழாக்கள்

    1. சங்ராந்தி (தை மாத முதல் நாள்) பஞ்ச மூர்த்திகள் ரதவீதியில் வலம் வருதல்.

    2. சித்திரை மாத பிறப்பு (சித்திரை மாத முதல்நாள்) (பஞ்ச மூர்த்திகள் ரத வீதியில் வலம் வருதல்)

    3. மகா கிருத்திகை (திருக்கார்த்திகை நாள் (பஞ்சமூர்த்திகள் ரத வீதியில் வலம் வருதல்)

    4. தெப்போத்ஸவம் : தை மாத பவுர்ணமியில் பஞ்சமூர்த்திகள் வீதி வலம் வந்து லட்சுமண தீர்த்தத்தில் தெப்பத்திருவிழா நடைபெறும்.

    5. வைகுண்ட ஏகாதசியன்றும் ஸ்ரீராம நவமியன்றும் ராமர் புறப்பாடு நடைபெறும்.

    6. ஆடி அமாவாசை தை அமாவாசை நாளில் ஸ்ரீகோதண்டராமர் கருட வாகனத்தில் அக்கினி தீர்த்தத்தில் எழுந்தருளி தீர்த்தம் கொடுப்பார்.

    • ஆலயத்தில் நடத்தப்படும் அபிஷேக, அர்ச்சனைகள் விபரங்கள்
    • உற்சவ விஷேச அலங்காரங்கள் செய்ய, கோவில் முன்அனுமதி பெற வேண்டும்.

    ராமேஸ்வரம் ஆலயத்தில் நடத்தப்படும் அபிஷேக, அர்ச்சனைகள் விபரங்கள்:

    1. சகஸ்ரகலச அபிஷேகம்

    2. சங்காபிஷேகம் (1008)

    3. அஷ்டோத்திர கலச அபிஷேகம் (1008)

    4. ருத்ராபிஷேகம்

    5. உபயாபிஷேகம் (பஞ்சாமிர்தம்)

    6. சங்காபிஷேகம் (108) நெய்வேத்தியத்துடன்

    7. கெங்காபிஷேகம்

    8. பால் அபிஷேகம்

    9. ஸ்படிகலிங்க அபிஷேகம் (சுவாமி சன்னதி)

    10. பன்னீர் அபிஷேகம் (பன்னீர் நீங்கலாக)

    11. கோடி தீர்த்த அபிஷேகம்

    12. விபூதி அபிஷேகம்

    உற்சவங்கள்:

    1. வெள்ளி ரத உத்ஸவம்

    2. பஞ்ச மூர்த்தி உத்ஸவம்

    3. ஸ்ரீஅம்பாளுக்கு அலங்காரம் செய்ய தங்கப் பல்லக்கில் மூன்றாம் பிரகாரம் சுற்றி வருதல்

    4. தங்க ரத வீதி உத்ஸவம்

    உற்சவங்கள் விஷேச அலங்காரங்கள் செய்ய விரும்புகிறவர்கள் கோவில் முன் அனுமதி பெற்று சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும்.

    திருக்கோவிலாரின் சவுகரியத்தை அனுசரித்து இவைகள் நடத்தி வைக்கப்படும்.

    • ஆனால் இந்த ஊரில் பாறைகள் தண்ணீரில் மிதக்கின்றன.
    • வடமாநில தலங்களில் காணப்படும் மிதக்கும் பாறைகள் இங்கிருந்து கொண்டு செல்லப்பட்டவையே.

    பாறைகள் தண்ணீரில் விழுந்தால் அல்லது போடப்பட்டால் அவைகள் மூழ்குவதுதான் இயல்பு.

    ஆனால் இந்த ஊரில் பாறைகள் தண்ணீரில் மிதக்கின்றன.

    ராவணனால் கவர்ந்து செல்லப்பட்ட சீதையை மீட்கும் பொருட்டு இலங்கை செல்ல ராமபிரான் பாறைகளை கடலில் தூக்கிப் போட்டு பாலம் அமைத்தார் என்று சொல்வார்கள்.

    இலங்கைக்கும், ராமேஸ்ரத்திற்கும் இடையே உள்ள ஆதம் பாலம் அதாவது

    தற்போது ராமர் பாலம் என்று கருதுவது ராமபிரான் அமைத்ததே என்ற கருத்து இப்போதும் உள்ளது.

    அவ்வாறு ராமர் அமைத்ததாகக் கூறப்படும் பாலத்திற்கும், இங்கே தண்ணீரில் மிதக்கும் பாறைக்கும் நிறைய தொடர்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்.

    தீவு நகரமான ராமேஸ்வரத்தில் உள்ள துளசி பாபா மடத்தில் இந்த மிதக்கும் பாறைகள் உள்ளன.

    அந்த மடத்தில் ஒரு தொட்டிக்குள் தண்ணீர் நிரப்பி அதில் இரண்டு பாறைகளை மிதக்க விட்டிருக்கிறார்கள்.

    இன்னும் சில பாறைகளை அங்கே வருவோர் கைகளால் தொட்டுப் பார்ப்பதற்காக அருகே வைத்திருக்கிறார்கள்.

    இலங்கைக்கு செல்ல பாலம் கட்டிய போது ராமர் பயன்படுத்திய பாறைகள்தான் இவைகள் என அங்குள்ளவர்கள் விளக்கம் தருகிறார்கள்.

    சிறிதளவு கல்லை தண்ணீருக்குள் போட்டாலே அது மூழ்கிவிடும்.

    இவ்வளவு பெரிய பாறைகள் மட்டும் எப்படி மிதக்கின்றன என்று ஆச்சரியத்தில் வியக்கும் பக்தர்கள் இந்த பாறைகளை தொட்டுப் பார்த்து பிரமிக்கிறார்கள்.

    மிதக்கும் பாறைகளை தூக்கிப் பார்க்க விரும்புபவர்களை மகிழ்ச்சிப்படுத்த தனியாக இன்னொரு சிறிய தொட்டியில் தண்ணீர் நிரப்பி அதிலும் இரு பாறைகளை மிதக்க விட்டிருக்கிறார்கள்.

    விரும்புவோர் அவற்றை தூக்கிப் பார்த்து மகிழலாம்.

    அந்தப் பாறை இந்த மடத்திற்கு எப்படி வந்தது என்று விசாரித்த போது "ராமபிரான் இலங்கைக்கு சீதையை மீட்கச் சென்ற போது குறுக்கிட்ட கடலை எப்படி கடப்பது என்று யோசித்தார்.

    அப்போது ஒரு கல்லைத் தூக்கி கடலில் போட்டார்.

    அவரைத் தொடர்ந்து லட்சுமணரும், ஆஞ்சனேயரும், வானரப்படைகளும் கற்களை தூக்கி போடவே அவைகள் யாவும் மூழ்காமல் மிதந்தன.

    மிதந்த பாறைகள் வழியாக இலங்கை சென்று சீதையை மீட்டு வந்ததாக புராணம்.

    ராமர் இலங்கை செல்ல கடலுக்குள் தூக்கிப் போட்ட பாறைகள் தான் இவைகள் என்றும்

    தற்போது இந்த மடத்தில் உள்ள பாறைகள் தனுஷ்கோடியில் இருந்து எடுக்கப்பட்டவையே என்றும் தெரிவித்தனர்.

    1964இல் ஏற்பட்ட புயலில் தனுஷ்கோடி சின்னா பின்னமானதற்குப் பிறகு அந்தப் பகுதிக்கு வந்த வடநாட்டு சாதுக்கள்

    தனுஷ்கோடி கடலில் கரைப்பகுதியில் ஏராளமான பாறைகள் மிதந்து கொண்டிருந்ததை கண்டு ஆச்சரியப்பட்டனர்.

    அந்த பாறைகளில் சுமார் இரண்டாயிரம் பாறைகளை அவர்கள் சேகரித்தனர்.

    அவர்கள் எடுத்துச் சென்ற பாறைகளில் 60 பாறைகள் இந்த மடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

    மீதமுள்ள பாறைகளை வடநாட்டிற்கு கொண்டு சென்றனர்.

    இன்று பூரி ஜெகநாதர் கோவில், குஜராத் மாநிலத்தில் உள்ள துவாரக கிருஷ்ணர் கோவில் மற்றும் ரிஷிகேஷ்,

    பத்ரிநாத், அலகாபாத், திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களில் காணப்படும் மிதக்கும் பாறைகள்

    இங்கிருந்து கொண்டு செல்லப்பட்டவையே.

    புதுச்சேரி அனுமார் கோவிலிலும் இந்த மிதக்கும் பாறைகளைக் காணலாம் என்றும் தெரிவித்தனர்.

    ராமமேஸ்வரம் பஸ் நிலையத்தில் இருந்து ராமநாத சுவாமி கோவிலுக்குச் செல்லும் வழியில் மெயின் ரோட்டிலேயே இந்த துளசி பாபா மடம் அமைந்துள்ளது.

    இங்கே மிதக்கும் பாறைகளைக் காணலாம்.

    • பைரவர் பிரம்மஹத்தி தோஷத்தை தன் திருவடியால் அழுத்தி பாதாளத்தில் தள்ளினார்.
    • பக்தர்களின் கொடிய பாவங்களைப் பாதாளத்துக்குள் தள்ளுபவராக அருள் செய்கிறார்.

    ராமர் இங்கு சிவபூஜை செய்த போது அவரைப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் விலகியது.

    அந்த தோஷம் எங்கு செல்வதென தெரியாமல் திணறியது.

    அதனால் வேறு யாருக்கும் பாதிப்பு உண்டாகாமல் இருக்க சிவபெருமான் பைரவரை அனுப்பினார்.

    பைரவர் பிரம்மஹத்தி தோஷத்தை தன் திருவடியால் அழுத்தி பாதாளத்தில் தள்ளினார்.

    பின்னர் இத்தலத்திலேயே அமர்ந்து இங்கு வரும் மனம் திருந்திய பக்தர்களின் கொடிய பாவங்களைப் பாதாளத்துக்குள் தள்ளுபவராக அருள் செய்கிறார்.

    இவருக்கு பாதாள பைரவர் என்று பெயர். இவரது சன்னதி கோடி தீர்த்தம் அருகில் உள்ளது.

    • பத்திரகாளி கோயிலுக்குக் கீழ்ப்புறம் பிரம தீர்த்தம் அமைந்துள்ளது.
    • அக்கினி தீர்த்தத்திற்கு வடக்கே அகத்திய தீர்த்தம் அமைந்துள்ளது.

    ஒன்பது தீர்த்தங்கள்

    கந்த மாதன பர்வதத்திற்குச் செல்லும் வழியிலும், அதனருகிலும் சுக்கிரீவ தீர்த்தம், அங்கத தீர்த்தம், சாம்பவ தீர்த்தம், தரும தீர்த்தம், பீம தீர்த்தம், அருச்சுன தீர்த்தம், நகுல தீர்த்தம், சகா தேவ தீர்த்தம், திரௌபதி தீர்த்தம் என்னும் ஒன்பது தீர்த்தங்கள் அமைந்துள்ளன.

    பிரம தீர்த்தம்

    பத்திரகாளி கோயிலுக்குக் கீழ்ப்புறம் பிரம தீர்த்தம் அமைந்துள்ளது.

    அனும குண்டம்

    திருக்கோயிலின் வெளி வீதிக்கு வடக்கே இத்தீர்த்தம் அமைந்துள்ளது.

    அகத்திய தீர்த்தம்

    கோவிலுக்கு வெளியே ஈசான திசையில் அக்கினி தீர்த்தத்திற்கு வடக்கே அகத்திய தீர்த்தம் அமைந்துள்ளது.

    நாக தீர்த்தம்

    ராமேசுவரம் கீழவீதியில், தேவஸ்தான கட்டிடத்தின் பின்புறமுள்ள தோட்டத்தில் நாக தீர்த்தம் அமைந்துள்ளது.

    கங்கை முதலிய எல்லா தீர்த்தங்களும் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்ள இங்கு உறைவதாகக் கூறப்படுகின்றது.

    சடாமகுட தீர்த்தம்

    இத்தீர்த்தம், ராமேசுவரத்திற்குக் கிழக்கே தனுஷ்கோடிக்குச் செல்லும் வழியில், கோதண்ட ராமசுவாமி கோயிலுக்கு அருகில் மணல் மேட்டில் உள்ள திருக்குளம்.

    ராம லட்சுமணர்கள் இத்தீர்த்தத்தில் தங்கள் சடை முடியைக் கழுவியதாகக் கூறப்படுகின்றது.

    இத்திருத்தலத்தில் மற்றும் தேவ தீர்த்தம், விபீடண தீர்த்தம், கஜ தீர்த்தம், சரப தீர்த்தம், குமுத தீர்த்தம், அர தீர்த்தம், பனச தீர்த்தம் ஆகியவையும் இருந்ததாகப் புராண நூல்கள் கூறுகின்றன.

    • அரம்பை, கபி தீர்த்தத்தில் நீராடி சாப விமோசனம் பெற்றாள்.
    • இந்திரன் இத்தீர்த்தத்தில் நீராடி பிரமஹத்தியை நீக்கிக் கொண்டான்.

    சக்கர தீர்த்தம்

    இத்தீர்த்தம், தேவி பட்டினத்திலுள்ள திருக்குளம்.

    இங்குக் காலவ முனிவர் தவம் செய்ததாகவும், சக்கரத்தாழ்வார் சாப விமோசனம் அடைந்ததாகவும் கூறப்படுகின்றது.

    வேதாளவரத தீர்த்தம்

    மண்டபம் ரெயில் நிலையத்திலிருந்து வெற்றிலை மண்டபம் என்னும் ஊர் சென்று, அங்கிருந்து இரண்டு கல் தொலைவிலுள்ள வேதாளை என்னும் இடத்தில் இத்தீர்த்தம் உள்ளது.

    சுதரிசனன் என்னும் கந்தருவன் இத்தீர்த்தத்தில் நீராடி வேதாள உருவத்திலிருந்து நீங்கினான்.

    பாபவிநாச தீர்த்தம்

    மண்டபம் ரெயில் நிலையத்திலிருந்து வெற்றிலை மண்டபம் சென்றால், அங்குள்ள கடலுக்கு அருகே இத்தீர்த்தம் அமைந்துள்ளது. இத்தீர்த்தத்தில் நீராடியவர்கள் எல்லாப் பாவங்களும் நீங்கப் பெறுவார்கள்.

    பைரவ, கபி தீர்த்தங்கள்

    பாம்பன் ரெயில் நிலையத்திலிருந்து இத்தீர்த்தங்கட்டுக்குச் செல்ல வேண்டும்.

    அரம்பை, கபி தீர்த்தத்தில் நீராடி சாப விமோசனம் பெற்றாள்.

    சீதா குண்டம் தீர்த்தம்

    கபி தீர்த்தத்திற்குக் கிழக்கே சீதா குண்டம் என்னும் தீர்த்தம் அமைந்துள்ளது.

    இந்திரன் இத்தீர்த்தத்தில் நீராடி பிரமஹத்தியை நீக்கிக் கொண்டான்.

    ×