என் மலர்
நீங்கள் தேடியது "குமரகோட்டம் முருகன் கோவில்"
- 2-ந்தேதி திருத்தேர் உற்சவம் நடக்கிறது.
- 3-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கந்தபுராணம் அரங்கேற்றிய திருக்கோவிலான குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை மூலவருக்கும், உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானைக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பிரம்மோற்சவ விழாவின் முதல் நாளான இன்று முதல் காலை மற்றும் மாலை இரு வேலைகளில் பல்வேறு வாகனங்களில் முருகர், வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி நான்கு ராஜவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தர உள்ளார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 26-ந்தேதி மயில்வாகன வீதி உலாவும், ஜூன் 2-ந்தேதி திருத்தேர் உற்சவமும், ஜூன் 3-ந்தேதி வள்ளி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. ஜூன் 4-ந் தேதி விடையாற்றி உற்சவத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.
கடந்த இரண்டு வருடக்ளாக கொரோனா நோய் தொற்று கட்டுப்பாட்டு காரணமாக பிரம்மோற்சவ விழா நடைபெறாமல் இருந்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை மூலவருக்கும், உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானைக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பிரம்மோற்சவ விழாவின் முதல் நாளான இன்று பவழக்கால் சப்பரத்தில் சுப்பிரமணயசுவாமி எழுந்தருளி நான்கு ராஜவீதிகள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 5-ந்தேதி மயில்வாகன வீதி உலாவும், 9-ந்தேதி திருத்தேர் உற்சவமும், 13-ந்தேதி வள்ளி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.
16-ந்தேதி விடையாற்றி உற்சவத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.