search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்சிற்றம்பலம்"

    • சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நடிகை நித்யா மேனன் வென்றார்.
    • திரைப்படம் வெளியாகி இன்றுடன் இரண்டு வருடங்கள் முடிவடைந்துள்ளது.

    தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைப்பெற்றது. இதில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நடிகை நித்யா மேனன் வென்றார்.

    சிறந்த நடனத்திற்கான விருதையும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் மேகம் கருக்காதா பாடலுக்கு நடனம் அமைத்த ஜானி, சதீஷ் தேசிய விருதை வென்றனர்.

    திரைப்படம் வெளியாகி இன்றுடன் இரண்டு வருடங்கள் முடிவடைந்த நிலையில் சன் பிக்சர்ஸ் இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

    இந்நிலையில் நடிகை நித்யா மேனன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தில் எடுக்கப்பட்ட பிடிஎஸ் காட்சிகளை பகிர்ந்து அப்படத்தில் நடித்த அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார்.

    திருச்சிற்றம்பலம் படத்திற்காக எனது முதல் தேசிய விருது பெற்றதில் மகிழ்ச்சி. பார்ப்பதற்கு எளிமையான தெரியும் நடிப்பிதற்கு பின்னால் இருக்கும் உழைப்பு எளிமையானதல்ல என புரிந்துக்கொண்ட தேசிய விருது தேர்வுக்குழுவிற்கு நன்றி.

    சிறந்த நடிப்பு என்பது எடை குறைப்போ , அதிகரிப்போ, செயற்கையான உடலை மாற்றிக்கொள்வதிலோ கிடையாது. அது நடிப்பின் ஒரு பகுதிதானே தவிர அதுவே நடிப்பு கிடையாது. இதை நிரூபிக்கவே முயற்சித்து வருகிறேன்.

    இந்த விருது பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், தனுஷ், என எங்கள் 4 பேருக்கான விருது. ஏனென்றால் ஒரு படத்தில் நடிகருக்கு இணையாக நடிகைக்கும் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நான் இதுவரை நடித்ததில்லை. உண்மையை விட வதந்திகள் அதிகம் பேசப்படும் ஒரு இடத்தில் முன்னேறுவது என்பது மிகவும் கடினம். என பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மேகம் கருக்காதா பாடலுக்கான நடன அமைப்பிற்காக விருது கிடைத்துள்ளது.
    • சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு கட்ச் எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் நடித்த மானசி பரேக் தேர்வு.

    தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறுகிறது. இதில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நடிகை நித்யா மேனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    சிறந்த நடனத்திற்கான விருதையும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் பெற்றுள்ளது. மேகம் கருக்காதா பாடலுக்கான நடன அமைப்பிற்காக விருது கிடைத்துள்ளது.

     

    திருச்சிற்றம்பலம் படத்தின் மேகம் கருக்காதா பெண்ணே பாடலுக்கு நடனம் அமைத்த ஜானி, சதீஷ் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு கட்ச் எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் நடித்த மானசி பரேக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வாயு மூலையில் சிவனும், அக்னி மூலையில் எமனும் காட்சியளிக்கிறார்கள்.
    • ஒவ்வொரு நாளும் எமகண்ட நேரத்தில் எமதர்மனுக்கு பூஜைகள் நடக்கும்.

    கோவில் தோற்றம்

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ளது, திருச்சிற்றம்பலம் கிராமம். இங்கு எமதர்ம ராஜா ஆலயம் உள்ளது. ஆறடி உயர எருமை வாகனத்தின் மீது முறுக்கிய மீசையுடன், பாசக்கயிறு, ஓலைச்சுவடி மற்றும் கதையுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார் எமதர்ம ராஜா.

    2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இவர்தான், இப்பகுதி மக்களுக்கு இஷ்ட தெய்வம். சாதாரண மண் கட்டிடமாக இருந்த இந்த ஆலயம், தற்போது பலதரப்பட்ட மக்களின் உதவியோடு, மிகச் சிறப்பான முறையில் கல் கட்டிடமாக எடுத்துக் கட்டப்பட்டுள்ளது.

    தல வரலாறு

    அன்னை பார்வதி தேவி ஒரு முறை செய்த தவறுக்கு பரிகாரமாக பூலோகம் செல்ல வேண்டிய நிலை வந்தது. பிரகதாம்பாள் என்ற பெயர் பெற்ற சிறு குழந்தையாக பூலோகம் வந்த அன்னையை வளர்க்கும்படி எமதர்ம ராஜாவுக்கு கட்டளையிட்டார், சிவபெருமான்.

    பிரகதாம்பாள் வளர்ந்து பெரியவள் ஆனதும், தனக்கு மணம் முடித்து வைக்க வேண்டும் என்ற நிபந்தனை எமதர்மனுக்கு ஈசனால் விதிக்கப்பட்டது. அதன்படியே அன்னையை வளர்த்து வந்தார், எமதர்மராஜா.

    இந்த நிலையில் பருவ வயதை எட்டிய பிரகதாம்பாளை, சிவபெருமானுக்கு மணம் முடித்து வைக்க தேவர்களும், முனிவர்களும் முடிவு செய்தனர். ஆனால் சிவபெருமானோ நீண்ட தியானத்தில் இருந்தார். அவரை எப்படி தியானத்தில் இருந்து மீளச் செய்வது என்று அனைவரும் ஆலோசித்தனர்.

    சாதாரணமாக போய் அவரது தியானத்தை கலைத்தால், அதற்கான தண்டனையை அனுபவித்தாக வேண்டும் என்று தேவர்களுக்குத் தெரியும். எனவே மன்மதனை அழைத்து, சிவபெருமானின் மீது மலர் கணையை தொடுக்கும்படி தேவர்கள் வற்புறுத்தினர்.

    அவர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்ட மன்மதனும், திருச்சிற்றம்பலத்திற்கு மிக அருகில் உள்ள மன்மதனின் ஊரான மதமட்டூரில் இருந்து சிவபெருமானின் மீது பூங்கணை தொடுக்கிறார். தியானம் கலைந்ததால் கடும் கோபத்துடன் கண் விழித்த சிவபெருமான், தன் நெற்றிக்கண் பார்வையால் மன்மதனை அழித்தார்.

    இதனால் பதறிப்போன ரதிதேவி, மன்மதனை உயிர்ப்பிக்கும்படி சிவபெருமானிடம் வேண்டினாள். ஆனால், "மாண்டவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது. வேண்டுமானால் ஆண்டு தோறும் மாசி மாதத்தில் மன்மதனுக்குத் திருவிழா நடைபெறும்போது, ரதியின் கண்களுக்கு மட்டும் மன்மதன் தெரிவான்" என்று கூறி அருளினார் சிவபெருமான்.

    மன்மதனின் உயிரைப் பறிக்க, மேலோகத்தில் இருந்து பூலோகத்தில் எமதர்மராஜா வந்திறங்கிய இடம்தான் திருச்சிற்றம்பலம். அதன் காரணமாகவே இங்கே எமதர்மனுக்கு கோவில் அமைத்து வழிபடும் முறை வழக்கத்தில் வந்ததாக சொல்லப்படுகிறது.

    வாயு மூலையில் சிவனும், அக்னி மூலையில் எமனும் காட்சியளிக்கிறார்கள். கோவில் அருகே எம தீர்த்த குளம் உள்ளது. இங்குள்ள குளத்தில் பெண்கள் யாரும் நீராடுவது கிடையாது. துக்க நிகழ்ச்சி போன்றவற்றில் கலந்துகொண்ட ஆண்களும் இந்தக் குளத்தில் நீராடுவது கிடையாது.

    கோவிலின் சிறப்புகள்

    ஒவ்வொரு நாளும் எமகண்ட நேரத்தில், இத்தல எமதர்மனுக்கு பூஜைகள் நடக்கும். அந்த நேரத்தில் எமனை ஒரு நீதிபதியைப் போல்தான் பாவிக்க வேண்டும். திருமணம், வளைகாப்பு போன்ற மங்கல நிகழ்வுகளின் பத்திரிகைகளை, எமதர்மனின் காலடியில் வைத்து வழிபடும் வழக்கம் நெடுங்காலமாக இருக்கிறது.

    பணத்தை வாங்கிக்கொண்டு யாரேனும் ஏமாற்றி இருந்தால் அவர்களின் பெயரை ஒரு தாளில் எழுதி, அதைப் பூஜித்து சூலத்தில் கட்டி விடும் வழக்கமும் இங்கே உண்டு. இதற்குப் 'படி கட்டுதல்' என்று பெயர். படி கட்டிய சில நாட்களிலேயே பணம் பலருக்குத் திரும்பக் கிடைத்துள்ளதாம்.

    எமபயத்தை போக்கிக்கொள்ளவும், ஆயுளை நீட்டித்துக் கொள்ளவும், திருமணத் தடை நீங்கவும் பலர் இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். அது மட்டுமின்றி, நவக்கிரக தோஷம், பெண்பாவ தோஷம், நட்சத்திர தோஷம், ராசி அதிபதி தோஷம் போன்றவற்றிற்கும் பரிகார தெய்வமாக இவ்வாலயத்தில் அருளும் எமதர்மராஜா விளங்குகிறார்.

    நாளுக்கு நாள் இந்தக் கோவிலுக்கு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. வருடம்தோறும் ஆடி மாதத்தில் திருவிழாவும், மாசி மாதத்தில் மன்மதன் திருவிழாவும் நடக்கும்.

    எமதர்ம மகாராஜாவை சனிக்கிழமைகளில் எமகண்ட நேரத்தில் வழிபடுவது மிகவும் சிறப்பான பலன்களைத் தரும் என்கிறார்கள். இவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை, பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    பட்டுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி செல்லும் சாலையில் சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது, திருச்சிற்றம்பலம்.

    பண் குறிஞ்சி: திருச்சிற்றம்பலம்

    பொன்றிரண் டன்ன புரிசடை புரளப்

    பொருகடற் பவளமொ டழல்நிறம் புரையக

    குன்றிரண் டன்ன தோளுடை யகலங்

    குலாயவெண் னூலொடு கொழும்பொடி யணிவர்

    மின்திரண் டன்ன நுண்ணிடை அரிவை

    மெல்லிய லாளையோர் பாகமாப் பேணி

    அன்றிரண் டுருவம் ஆயஎம் அடிகள்

    அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

    1

    தேனினும் இனியர் பாலன் நீற்றர்

    தீங்கரும் பனையர்தந் திருவடி தொழுவார்

    ஊன்நயந் துருக உவகைகள் தருவார்

    உச்சிமே லுறைபவர் ஒன்றலா தூரார்

    வானக மிறந்து வையகம் வணங்க

    வயங்கொள நிற்பதோர் வடிவினை யுடையார்

    ஆணையின் உரிவை போர்த்தஎம் அடிகள்

    அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

    2

    காரிரு ளுருவம் மால்வரை புரையக்

    களிற்றின துரிவைகொண்ட டரிவைமே லோடி

    நீருரு மகளை நிமிர்சடைத் தாங்கி

    நீறணிந் தேறுகந் தேறிய நிமலர்

    பேரரு ளாளர் பிறவியிற் சேரார்

    பிணியிலர் கேடிலர் பேய்க்கணஞ் சூழ

    ஆரிருண் மலை யாடுஎம் அடிகள்

    அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

    3

    மைம்மலர்க் கோதை மார்பின ரெனவும்

    மலைமகள வளடு மருவின ரெனவும்

    செம்மலர்ப் பிறையுஞ் சிறையணி புனலுஞ்

    சென்னிமே லுடையரெஞ் சென்னிமே லுறைவார்

    தம்மல ரடியன் றடியவர் பரவத்

    தமிழ்ச்சொலும் வடசொலுந் தாள்நிழற் சேர

    அம்மலர்க் கொன்றை யணிந்தஎம் அடிகள்

    அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

    4

    விண்ணுலா மதியஞ் சூடின ரெனவும்

    விரிசடை யுள்ளது வெள்ளநீ ரெனவும்

    பண்ணுலாம் மறைகள் பாடின ரெனவும்

    பலபுக ழல்லது பழியில ரெனவும்

    எண்ணலா காத இமையவர் நாளும்

    ஏத்தர வங்களோ டெழில்பெற நின்ற

    அண்ணலான் ஊர்தி ஏறும்எம் அடிகள்

    அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

    5

    நீடிருஞ் சடைமேல் இளம்பிறை துளங்க

    நிழல்திகழ் மழுவொடு நீறுமெய் பூசித்

    தோடொரு காதினிற் பெய்துவெய் தாய

    சுடலையி லாடுவர் தோலுடை யாகக்

    காடரங் காகக் கங்குலும் பகலுங்

    கழுதொடு பாரிடங் கைதொழு தேத்த

    ஆடர வாட ஆடும்எம் அடிகள்

    அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

    6

    ஏறுமொன் றேநி நீறுமெய் பூசி

    இளங்கிளை அரிவைய டொருங்குட னாகிக்

    கூறுமொன் றருளிக் கொன்றையந் தாருங்

    குளிரிள மதியமுங் கூவிள மலரும்

    நாறுமல் லிகையும் எருக்கொடு முருக்கும்

    மகிழிள வன்னியும் இவைநலம் பகர

    ஆறுமோர் சடைமேல் அணிந்தஎம் அடிகள்

    அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

    7

    கச்சும்ஒள் வாளுங் கட்டிய வுடையர்

    கதிர்முடி சுடர்விடக் கவரியுங் குடையும்

    பிச்சமும் பிறவும் பெண்அணங் காய

    பிறைநுத லவர்தமைப் பெரியவர் பேணப்

    பச்சமும் வலியுங் கருதிய அரக்கன்

    பருவரை யெடுத்ததிண் தோள்களை யடர்வித்

    தச்சமும் அருளுங் கொடுத்தஎம் அடிகள்

    அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

    8

    நோற்றலா ரேனும் வேட்டலா ரேனும்

    நுகர்புகர் சாந்தமொ டேந்தியமாலைக்

    கூற்றலா ரேனும் இன்னவா றென்றும்

    எய்தலா காததொ ரியல்பினை யுடையார்

    தோற்றலார் மாலும் நான்முக முடைய

    தோன்றலும் அடியடு முடியுறத் தங்கள்

    ஆற்றலாற் காணா ராயஎம் அடிகள்

    அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

    9

    வாதுசெய் சமணுஞ் சாக்கியப் பேய்கள்

    நல்வினை நீக்கிய வல்வினை யாளர்

    ஓதியுங் கேட்டு உணர்வினை யிலாதார்

    உள்கலா காததோ ரியல்பினை யுடையார்

    வேதமும் வேத நெறிகளு மாகி

    விமலவே டத்தொடு கமலமா மதிபோல்

    ஆதியும் ஈறும் ஆயஎம் அடிகள்

    அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

    10

    மைச்செறி குவனை தவளைவாய் நிறைய

    மதுமலர்ப் பொய்கையிற் புதுமலர் கிழியப்

    பச்சிற வெறிவயல் வெறிகமழ் காழிப்

    பதியவர் அதிபதி கவுணியர் பெருமான்

    கைச்சிறு மறியவன் கழலலாற் பேணாக்

    கருத்துடை ஞானசம் பந்தன தமிழ்கொண் டச்சிறு பாக்கத் தடிகளை யேத்தும்

    அன்புடை யடியவர் அருவினையிலரே.

    • மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’.
    • இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் தற்போதுவரை ரசிகர்களின் பேவரைட்டாக உள்ளது.

    இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. இந்த படத்தில் நடிகை நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


    'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வசூலை குவித்தது. இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் உள்ளது. அதிலும், தனுஷ் வரிகளில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடியிருந்த தேன்மொழி பாடல் தற்போது வரை அடிக்கடி முணுமுணுக்கும் பாடலாக அமைந்துள்ளது.


    இந்நிலையில், இந்த பாடலின் புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, தேன்மொழி பாடல் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளது. இந்த


    • மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்த திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’.
    • இப்படம் வசூல் ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. இந்த படத்தில் நடிகை நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


    திருச்சிற்றம்பலம்

    "திருச்சிற்றம்பலம்" திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வசூலை குவித்தது. இப்படத்தில் தனுஷ் எழுதி பாடியுள்ள 'தாய் கிழவி' பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று அடிக்கடி முணுமுணுக்கும் பாடலாக அமைந்தது.


    திருச்சிற்றம்பலம்

    இந்நிலையில், 'தாய் கிழவி' பாடல் தற்போது 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    • அம்பல் > அம்பலம் என்றால் கூடுகிற இடம். அக்காலத்திலே கோயில் தானே மக்கள் கூடுகிற இடம்.
    • இன்றைக்கும் மலையாள மொழியில் கோயிலை ‘அம்பலம்’ என்றே அழைக்கின்றனர்.

    திருச்சிற்றம்பலம் என்பதற்கு பொருள் என்ன?

    சிற்றம்பலம் - என்ற அழகிய தமிழ்ப் பெயரோ தற்காலத்தில் 'சிதம்பரம்' - எனச் சிதைந்து விட்டது!

    சிற்றம்பலம் > சித்தம்பலம் > சித்தம்பரம் > சிதம்பரம்!

    திருச்சிற்றம்பலம் - என அழகுத் தமிழில் அழைக்க வேண்டிய நாம் சிதம்பரம் என்ற புரியாத சொல்லைப் புழங்கிக் கொண்டிருக்கிறோம்.

    அதன் காரணமாக சிதம்பரம் அறிந்த நமக்கு - அதன் பண்டைய பெயரான 'திருச்சிற்றம்பலம்' - தெரியவில்லை!

    அம்பல் > அம்பலம் என்றால் கூடுகிற இடம். அக்காலத்திலே கோயில் தானே மக்கள் கூடுகிற இடம். இன்றைக்கும் மலையாள மொழியில் கோயிலை 'அம்பலம்' என்றே அழைக்கின்றனர். அம்பலம் என்பதற்கு அரங்கம் /அரண்மனை என்ற பொருளும் உண்டு.

    தில்லையில் இருக்கும் ஆடலரசன் கோயில் என்பது மூன்றாம் நூற்றாண்டு காலத்திலிருந்த 'சிறிய அம்பலம்' ஆகும் .

    சிறிய அம்பலம் = சிற்றம்பலம்.

    அதை அந்நாளில் 'சிற்றம்பலம்' என்றே அழைத்தனர். பின்னர் பேரரசுச் சோழர் காலங்களில் அது பேரம்பலம் ஆயிற்று. பொற்கூரை வேயப்பட்டு பொன்னம்பலமும் ஆயிற்று.

    தில்லையும் மதுரையும் தமிழர்கள் வரலாற்றில் பெரும் பங்கு கொண்டவை.

    சோழர்கள் முடி சூடிக்கொண்ட இடம் = பொன்னம்பலம்.

    பாண்டியர்கள் முடி சூடிக் கொண்ட இடம் = வெள்ளம்பலம் (மதுரை வெள்ளியம்பலம்).

    சிற்றம்பலம் - என்ற அழகிய தமிழ்ப் பெயரை சித்தம்பரம் > சிதம்பரம் எனத்திரித்து பின்

    சித் + அம்பரம் என்று பிரித்து "ஞான ஆகாசம்" என்று பொருள் சொல்லி இன்று புது விளக்கங்கள் சொல்லப்படுகிறது.

    -நித்தியானந்தபாரதி

    • மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. இந்த படத்தில் நடிகை நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


    திருச்சிற்றம்பலம்

    "திருச்சிற்றம்பலம்" திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வசூலை குவித்தது. இப்படத்தில் தனுஷ் எழுதி பாடியுள்ள 'மேகம் கருக்காதா' பாடல் காதலர்கல் மத்தியில் வரவேற்பை பெற்று அடிக்கடி முணுமுணுக்கும் பாடலாக அமைந்தது.


    திருச்சிற்றம்பலம்

    இந்நிலையில், இந்த பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    • இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் 'திருச்சிற்றம்பலம்'.
    • 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது.

    'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. இந்த படத்தில் நடிகை நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


    திருச்சிற்றம்பலம்

    "திருச்சிற்றம்பலம்" திரைப்படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது. இந்நிலையில், படம் வெளியான முதல் நாள் உலக அளவில் ரூ.9.52 கோடியையும் இரண்டாவது நாள் ரூ.8.79 கோடியையும் வசூலித்ததாக கூறப்படுகிறது.

    மேலும், முதல் வாரம் மட்டும் 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் ரூ.51.42 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இரண்டாவது வாரத்தின் முதல் நாள் ரூ.3.47 கோடியும், இரண்டாவது நாள் ரூ.4.61 கோடியுடன் வசூலில் முன்னேற்றம் காணும் இப்படம் தற்போது வரை ரூ.59.50 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் 'திருச்சிற்றம்பலம்'.
    • 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது.

    'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. இந்த படத்தில் நடிகை நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


    திருச்சிற்றம்பலம்

    "திருச்சிற்றம்பலம்" திரைப்படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது. இதில் நித்யா மேனனின், ஷோபனா கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது.

    இந்நிலையில், நடிகை நித்யா மேனன் தனது சமூகவலைதளப் பக்கத்தின் நேரலையில் ரசிகர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது தயவு செய்து தன்னை "தாய்க்கிழவி" என்று அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் 'திருச்சிற்றம்பலம்'.
    • 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

    'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. இந்த படத்தில் நடிகை நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

     

    திருச்சிற்றம்பலம்

    திருச்சிற்றம்பலம்

    இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தியேட்டரில் வெளியாகும் தனுஷ் படம் என்பதால், ரசிகர்களும் பெரிய அளவில் திரண்டு வந்து, படத்தைக் கொண்டாடினர். இந்நிலையில் திருச்சிற்றம்பலம் பட ரிலீசான தியேட்டரில் ரசிகர்கள் ஸ்கிரீனை கிழித்ததால் உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

     

    சென்னை கோயம்பேட்டில் உள்ள திரையரங்கில் முதல் காட்சியை பார்க்க வந்த ரசிகர்கள், மகிழ்ச்சியில் ஸ்கிரீன் முன்பு நடனமாடியதாகவும், அப்போது சிலர் விரும்பத்தகாத செயலில் ஸ்கிரீனை கிழித்ததாகவும் கூறப்படுகிறது. ரசிகர்களின் இந்த செயலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் 'திருச்சிற்றம்பலம்'.
    • 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் இன்று (ஆகஸ்ட் 18) திரையரங்குகளில் வெளியானது.

    யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் 'திருச்சிற்றம்பலம்' இப்படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.


    திருச்சிற்றம்பலம்

    சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ( ஆகஸ்ட் 18) திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், திருச்சிற்றம்பலம் படத்தின் காட்சியை சென்னை தனியார் திரையரங்கில் ரசிகர்களுடன் தனுஷ் மற்றும் அனிருத் சேர்ந்து பார்த்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    ×