search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொன்முடி"

    • குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்திற்கு அரசியல் கொள்கைகள் குறுக்கீடுகள் தடையாக இருக்கக்கூடாது.
    • தமிழ் மொழியுடன் பன்மொழிகளை மாணவர்கள் கற்பதை ஊக்குவிக்க மத்திய அரசு ஒருங்கிணைந்த முயற்சி எடுத்து வருகிறது.

    தேசிய கல்விக்கொள்கையை [2020] ஏற்காததால் 2024-25 நிதியாண்டில் சமக்ரா சிக்ஷா திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி தொகையை மத்திய அரசு விடுவிக்க மறுத்து வருகிறது. தாமதமின்றி மாணவர்கள் நலனுக்காக இந்த தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்துக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்திற்கு அரசியல் கொள்கைகள் குறுக்கீடுகள் தடையாக இருக்கக்கூடாது. புதிய கல்விக் கொள்கையின் பலன்கள் நாடு முழுவதும் உள்ள மாணவர்களைச் சென்றடைய வேண்டும். தமிழ் மொழியுடன் பன்மொழிகளை மாணவர்கள் கற்பதை ஊக்குவிக்க மத்திய அரசு ஒருங்கிணைந்த முயற்சி எடுத்து வருகிறது.

    சமக்ர சிக்சா திட்டத்தின் மூலம் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். இத்திட்டத்தை தமிழகம் செயல்படுத்தி வருவதால் கல்வி தரத்தை மேலும் உயர்த்த பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்பது அவசியம். பி.எம்.ஸ்ரீ திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். என்று வலியுறுத்தியுள்ளார்.

    இதனால் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மத்திய அரசு நிர்பந்தித்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதற்கிடையே இதுகுறித்து தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது, எந்த கல்விக் கொள்கையைத் திணித்தாலும், அதனை ஏற்க நாங்கள் தயாராக இல்லை, இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். 

    • பொதுப்பிரிவு கலந்தாய்வு 29-ந்தேதி தொடங்குகிறது.
    • முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் சேர்ந்து வருகிறார்கள்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. 2 லட்சம் மாணவ-மாணவிகள் கல்லூரிகளில் சேருவதற்கு தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப இயக்ககத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்தாய்வை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு இன்று தொடங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து சிறப்பு இடஒதுக்கீடு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு கவுன்சிலிங் நடைபெறும்.

    பொதுப்பிரிவு கலந்தாய்வு 29-ந்தேதி தொடங்குகிறது. பல்வேறு கட்டங்களாக நடைபெறும் கலந்தாய்வு செப்டம்பர் மாதம் 11-ந்தேதி வரை நடக்கிறது.

    தமிழகத்தில் தற்போது 433 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் உள்ள 2.41 லட்சம் இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். எல்லோருக்கும் இடங்கள் கிடைக்கும். ஆனால் விரும்பிய கல்லூரிகளில் பாடப்பிரிவுகள் கிடைப்பதுதான் கடினம்.

    பொறியியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

    முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் சேர்ந்து வருகிறார்கள். படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் பாடங்கள் உள்ளன. 3 சுற்றுகளாக ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடைபெறுகிறது.

    கலந்தாய்வு முடிந்த பிறகும் மாணவர்கள் விரும்பினால் கல்லூரிகளில் சேருவதற்கு வாய்ப்பு வழங்கப்படும்.

    இந்த ஆண்டு 8 கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. போதிய கட்டமைப்பு வசதி இல்லாத காரணத்தால் மூடப்பட்டுள்ளது. புதிதாக 3 கல்லூரிகள் உருவாகி உள்ளன. அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் 36 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    • அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் மாணவியர்களுக்கென தனி ஓய்வறைக் கட்டடம் 8.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
    • அரசு பொறியியல் மற்றும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அளிக்கப்படும்.

    சட்டமன்ற கூட்டத்தொடரின் உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கையின்போது அமைச்சர் பொன்முடி 15 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட்டார்.

    அதன் விவரம் பின்வருமாறு:-

    1. அச்சு தொழில்நுட்பம், வேதியியல் தொழில்நுட்பம், தோல் தொழில்நுட்பம் மற்றும் நெசவு தொழில்நுட்பம் ஆகிய 4 சிறப்பு பயிலகங்களில் புதிதாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப 6 புதிய பட்டயப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும்.

    2. கோவையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 300 பேர் தங்கும் வகையில் கூடுதல் ஆண்கள் விடுதிக் கட்டடம் 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

    3. ஈரோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 200 பேர் தங்கும் வகையில் கூடுதல் ஆண்கள் விடுதிக் கட்டடம் 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

    4. மைய பலவகை தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் சிறப்பு பயிலக மாணவர்களுக்காக சென்னை மைய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் 300 பேர் தங்கும் வகையில் கூடுதல் ஆண்கள் விடுதிக் கட்டடம் 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

    5. அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் மாணவியர்களுக்கென தனி ஓய்வறைக் கட்டடம் 8.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

    6. கோவை, சேலம் மற்றும் பர்கூர் ஆகிய இடங்களில் உள்ள 3 அரசு பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திரனியல் ஆய்வகம் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.

    7. திருநெல்வேலி, தருமபுரி மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் உள்ள 3 அரசு பொறியியல் கல்லூரிகளில் மின்சார வாகன தொழில்நுட்ப ஆய்வகம் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.

    8. காரைக்குடி மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய இடங்களில் உள்ள 2 அரசு பொறியியல் கல்லூரிகளில் பொருட்களின் இணையம் ஆய்வகும் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.

    9. வேலூர், தஞ்சாவூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் உள்ள 3 அரசு பொறியியல் கல்லூரிகளில் பொருள்சேர் உற்பத்தி ஆய்வகம் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.

    10. GATE, IES, CAT, GMAT, GRE, IELTS, TOEFL உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தீவிர பயிற்சி பெறும் மாணாக்கர்களின் எண்ணிக்கையை 500-ல் இருந்து 1400 ஆக உயர்த்தப்படும். இதற்காக கூடுதலாக 77 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.

    11. அரசு பொறியியல் மற்றும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அளிக்கப்படும்.

    12. அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு தேவையான தளவாடங்கள் 7.05 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.

    13. தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் செயல்படும் தமிழ்நாடு வரலாற்று ஆராய்சி மன்னறம் மீளுருவாக்கம் செய்யப்படும்.

    14. திருச்சி அண்ணா அறிவியல் மையம் கோளரங்கத்தில் வேடிக்கை அறிவியல் காட்சிக்கூடம் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

    15. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணாக்கர்களின் சேர்க்கை அதிகரிக்கப்படுகிறது. அரசு கல்லூரிகளில் 20 சதவீதம், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 15 சதவீதம், சுயநிதி கல்லூரிகளில் 10 சதவீத மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கப்படும்.

    இவ்வாறு அந்த மானிய கோரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. போட்டியிடுகின்றது.
    • கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தி வெற்றி பெற்றார்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் ஜூலை 10-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கள் கடந்த 14-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. பா.ம.க. சார்பில் சி. அண்புமணி போட்டியிடுவதாகவும் அறிவிப்பு வெளியானது. இத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக அக்கட்சி தலைமை அறிவித்தது.

    இந்நிலையில் தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அன்னியூர் சிவா இன்று காலை 11 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது, அமைச்சர் பொன்முடி, ஜெகத்ரட்சகன் எம்.பி. மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி. விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு வெளியில் வந்த பின்னர் அமைச்சர் பொன்முடி கூறுகையில், கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தி வெற்றி பெற்றார். அப்போது, அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க. போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடது. அந்த நேரத்திலேயே 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றி பெற்றது.

    தற்போது, பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. போட்டியிடுகின்றது. இவர்களுடன் அ.தி.மு.க. இல்லை. எனவே, தி.மு.க. வேட்பாளர் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இடைத்தேர்தலில் மக்கள் தி.மு.க.வுக்கு தான் ஓட்டு போடுவார்கள்.
    • சமூக நீதி பற்றி பேசும் ராமதாஸ், அதைப்பற்றி மோடியிடம் தான் பேச வேண்டும்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் காணை அடுத்த கொசப்பாளையத்தில் நடந்தது. தேர்தல் பணிக்குழு தலைவரும் அமைச்சருமான பொன்முடி தலைமை தாங்கி வேட்பாளர் அன்னியூர் சிவாவை அறிமுகப்படுத்தி பேசியதாவது:-

    இந்த இடைத்தேர்தலில் மக்கள் தி.மு.க.வுக்கு தான் ஓட்டு போடுவார்கள். காரணம் மகளிர் உரிமைத் தொகை, புதுமை பெண், இலவச பஸ் பயணம் உள்ளிட்ட பல்வேறு அரசின் திட்டங்களில் பயனடைந்துள்ளனர்.

    இடைத்தேர்தலை அ.தி.மு.க., புறக்கணித்துள்ளது. அவர்களை பற்றி நமக்கு கவலையில்லை. அ.திமு.க.வினர் ஓட்டுகள் அனைத்தும் நிச்சயமாக இம்முறை தி.மு.க.,விற்கு தான் வரும்.

    சமூக நீதி பற்றி பேசும் பா.ம.க. நிறுவனர் டாக்டர். ராமதாஸ், இத்தேர்தலில் பா.ஜ.க, வுடன் கூட்டணி வைத்துள்ளார். ஜாதி வாரி கணக்கு எடுப்பு பற்றி பேசும் ராமதாஸ், அதை மத்திய அரசு தான் எடுக்க வேண்டும் என்பது தெரிந்தும், தெரியாத மாதிரி நடிக்கிறார்.

    சமூக நீதி பற்றி பேச தி.மு.க.,விற்கு தான் தகுதி உண்டு, காரணம் ஜாதி, மதம் பார்த்து தி.மு.க., எதையும் செய்வதில்லை. சமூக நீதி பற்றி பேசும் ராமதாஸ், அதைப்பற்றி மோடியிடம் தான் பேச வேண்டும்.

    தி.மு.க., மாதிரி தோழமை கட்சிகளை ஒருங்கிணைத்து செயல்படுகிற கட்சிகள் ஏதுவும் கிடையாது. சமூக நீதிக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதால் தான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகராக வாய்ப்பளித்தார்.

    இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்.

    • தமிழக முதலமைச்சர் கடந்த 3 ஆண்டுகளில் செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறி வாக்கு பெற வேண்டும்.
    • உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வந்தபோதே சபாநாயகர் சட்டமன்ற உறுப்பினராக அறிவித்துவிட்டார்.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் தி.மு.க. கூட்டணி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி, டாக்டர் பொன் கவுதமசிகாமணி எம்.பி., மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ., விழுப்புரம் எம்.எல் .ஏ. டாக்டர் லட்சுமணன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது:-

    தி.மு.க.வை எதிர்த்து நிற்பவர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். தமிழக முதலமைச்சர் கடந்த 3 ஆண்டுகளில் செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறி வாக்கு பெற வேண்டும். 10 ஆண்டுகளில் பா.ஜனதா எதையும் செய்யாத நிலையில் 3 ஆண்டுகளில் சொன்னதை செய்த முதல்வராக ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே உணவு என்ற கோட்பாட்டில் பாசிச ஆட்சியை கொண்டு வர மோடி நினைத்து செயல்பட்டு வருகிறார்.

    உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வந்தபோதே சபாநாயகர் சட்டமன்ற உறுப்பினராக அறிவித்துவிட்டார். அதன் பிறகும் கவர்னர் பதவி பிரமாணம் செய்யவில்லை. உச்சநீதி மன்ற நீதிபதி பதவிபிரமாணம் செய்யவில்லை என்றால் கவர்னர் மீது நடவடிக்கை எடுப்பேன் என கூறியதை தொடர்ந்து தான் எனக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அமலாக்கதுறையை கையில் வைத்துக்கொண்டு முதலமைச்சரையே கைது செய்துள்ளவர்கள் தான் பா.ஜனதா அரசு. அமலாக்க துறையை அனுப்பி தான் பா.ஜ.க.விற்கு 2500 கோடி நிதி பெறப்பட்டுள்ளது.

    இவ்வாறு பொன்முடி பேசினார்.

    • கருணாநிதியின் வழியில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொண்டனாக செயல்பட்டுக் கொண்டிருப்பவன் நான்.
    • தற்போது கிடைத்துள்ள இந்த தீர்ப்பு என்பது அனைவருக்கும் வழிகாட்டுதலாக இருக்கும்.

    சென்னை:

    தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக மீண்டும் பதவியேற்ற பொன்முடி, சென்னை மெரினாவில் அமைந்துள்ள அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கருணாநிதியின் வழியில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொண்டனாக செயல்பட்டுக் கொண்டிருப்பவன் நான். அவர் எடுத்த சட்டபூர்வ நடவடிக்கைகள் காரணமாகத்தான், நான் இந்த பொறுப்பில் மீண்டும் அமர வைக்கப்பட்டுள்ளேன்.

    எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், கட்சியின் வக்கீல்கள் வில்சன், இளங்கோ உள்ளிட்டோருக்கும் எனது உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது கிடைத்துள்ள இந்த தீர்ப்பு என்பது அனைவருக்கும் வழிகாட்டுதலாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பதவிப் பிரமாண நிகழ்ச்சியானது நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சேகர்பாபு, தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் பங்கேற்றனர்.

    சென்னை:

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறை தண்டனை வழங்கப்பட்டதை அடுத்து பதவியை இழந்த பொன்முடி ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் தண்டனையை நிறுத்திவைத்து உத்தரவிட்டது.

    இதையடுத்து பொன்முடி திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக தொடரலாம் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆனதை தொடர்ந்து அவரை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில் முடிவு எடுக்க கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் 24 மணி நேரம் கெடு விதித்திருந்த நிலையில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கவர்னர் ஆர்.என்.ரவி பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதாக இன்று காலை 11 மணியளவில் கவர்னர் மாளிகையில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பதவிப் பிரமாண நிகழ்ச்சியானது நடைபெற்றது. பொன்முடிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து பொன்முடி உயர்கல்வித்துறை அமைச்சரானார்.


    இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா. சுப்பிரமணியன், சேகர்பாபு, தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் பங்கேற்றனர்.

    • பொன்முடிக்கு கிண்டி கவர்னர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.
    • அமைச்சர் காந்தியின் பொறுப்பில் உள்ள கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்தினை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என். ரவி எழுதியுள்ள கடிதத்தில்,

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 13.3.2024 நாளிட்ட கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளபடி, பொன்முடிக்கு தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கிட ஒப்புதல் அளிப்பதாகவும், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பொன்முடிக்கு கிண்டி கவர்னர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.

    மேலும், முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று, தற்போது அமைச்சர் காந்தியின் பொறுப்பில் உள்ள கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்தினை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்கிறேன்.

    இவ்வாறு அக்கடிதத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆனதை தொடர்ந்து அவரை அமைச்சராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னருக்கு கடிதம் அனுப்பினார்
    • பொன்முடியை அமைச்சராக்குவது சரியாக இருக்காது என்று தமிழக அரசுக்கு கவர்னர் கடிதம் எழுதி விட்டார்

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சராக இருந்த பொன்முடிக்கு சென்னை ஐகோர்ட் கடந்த டிசம்பர் மாதம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனால் பொன்முடி அமைச்சர் பதவியை இழந்ததுடன் எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார்.

    இந்த வழக்கில் பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார். இதில் அவருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு கடந்த 11-ம் தேதி நிறுத்தி வைத்தது.

    இதனால் பொன்முடி திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக தொடரலாம் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆனதை தொடர்ந்து அவரை அமைச்சராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து பதவி பிரமாணம் செய்து வைக்க கவர்னருக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் கவர்னர் ஆர்.என்.ரவி அதை பொருட்படுத்தவில்லை.

    பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறைதண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர அவர் நிரபராதி என்று கோர்ட்டு கூறவில்லை என்பதால் பொன்முடியை அமைச்சராக்குவது சரியாக இருக்காது என்று தமிழக அரசுக்கு கவர்னர் கடிதம் எழுதி விட்டார்.

    கவர்னரின் இந்த முடிவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    அவ்வழக்கு தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக கவர்னரின் செயல்பாடு தொடர்பாக சரமாரியாக கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, கவர்னர் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறுவதாக அப்போது கண்டனம் தெரிவித்தார்.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கவர்னர் தரப்பில் இருந்து நேற்று முதல் எந்த அழைப்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவில்லை.

    இந்நிலையில், இன்று பிற்பகலில் பொன்முடி அமைச்சராக பதவி ஏற்க உள்ளார். பதவி ஏற்க வருமாறு கவர்னர் ஆர்.என். ரவி அழைத்து விடுத்துள்ளார். இதையடுத்து இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பொன்முடி அமைச்சராக பதவியேற்கிறார்.

    இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

    அதில், "அரசியலமைப்பு நெறிமுறைக்கு எதிராக செயல்படுவது" என்பதை தனது அடிப்படை கொள்கையாகவே கொண்டிருக்கிறார் தமிழக கவர்னர்.

    பதவிப்பிரமாணம் செய்ய மறுப்பது, அரசு தயாரிக்கும் கவர்னர் உரையை படிக்காமல் செல்வது, மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்திருப்பது உள்ளிட்ட சட்டத்திற்கு புறம்பானவற்றை கவர்னர் தொடர்ந்து செய்து வருகிறார்.

    இவைகள் "திருடக்கூடாது" என்பது "இந்தியத் தண்டனைச் சட்டத்தின் நெறிமுறைகளுக்கு எதிரானது" என்று சொல்வது போல் உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

    • சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பதவிப் பிரமாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • ராஜகண்ணப்பன் கூடுதல் பொறுப்பாக உயர்கல்வித்துறையை கவனித்து வருகிறார்.

    சென்னை:

    பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில் முடிவு எடுக்க கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் 24 மணி நேரம் கெடு விதித்திருந்த நிலையில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கவர்னர் ஆர்.என்.ரவி பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

    சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பதவிப் பிரமாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இந்நிலையில் மீண்டும் பொன்முடிக்கு அவர் வகித்துவந்த உயர்கல்வித் துறையே தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. அது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இப்போது அந்த துறை ராஜகண்ணப்பன் வசம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அரசியல் அமைப்பு சட்டத்தை மீறும் கவர்னரின் நடவடிக்கையை பார்த்து சுப்ரீம் கோர்ட் ஏன் கண்ணை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
    • பொன்முடியின் தண்டனையை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைத்த பிறகு அவர் குற்றவாளியா? இல்லையா? என கவர்னர் எங்களுக்கு பாடம் நடத்த முடியாது.

    சென்னை:

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சராக இருந்த பொன்முடிக்கு சென்னை ஐகோர்ட் கடந்த டிசம்பர் மாதம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனால் பொன்முடி அமைச்சர் பதவியை இழந்ததுடன் எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார்.

    இந்த வழக்கில் பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார். இதில் அவருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு கடந்த 11-ந்தேதி நிறுத்தி வைத்தது.

    இதனால் பொன்முடி திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக தொடரலாம் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆனதை தொடர்ந்து அவரை அமைச்சராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து பதவி பிரமாணம் செய்து வைக்க கவர்னருக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் கவர்னர் ஆர்.என்.ரவி அதை பொருட்படுத்தவில்லை.

    பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறைதண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர அவர் நிரபராதி என்று கோர்ட்டு கூறவில்லை என்பதால் பொன்முடியை அமைச்சராக்குவது சரியாக இருக்காது என்று தமிழக அரசுக்கு கவர்னர் கடிதம் எழுதி விட்டார்.

    கவர்னரின் இந்த முடிவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தமிழக அரசு சார்பில் மூத்த வக்கீல்கள் அபிஷேக் மனுசிங்வி, பி.வில்சன் ஆகியோர் ஆஜரானார்கள். கவர்னர் தரப்பில் அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி ஆஜரானார்.

    தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக கவர்னரின் செயல்பாடு தொடர்பாக சரமாரியாக கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, கவர்னர் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறுவதாக அப்போது கண்டனம் தெரிவித்தார்.

    குற்றவாளி என்ற தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்த பிறகு பொன்முடியை மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைப்பது அரசியல் அமைப்புக்கு எதிரானது என கவர்னர் எப்படி கூற முடியும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    அரசியல் அமைப்பு சட்டத்தை மீறும் கவர்னரின் நடவடிக்கையை பார்த்து சுப்ரீம் கோர்ட் ஏன் கண்ணை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    அப்போது அட்டர்னி ஜெனரலிடம் தலைமை நீதிபதி கூறும்போது, கவர்னரிடம் இருந்து சாதகமான தகவல் கிடைக்கப்பெறாவிட்டால், அரசமைப்பு சட்டத்தின்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிடும். ஆனால் அந்த சூழலை தவிர்க்க விரும்புகிறோம்.

    எனவே கவர்னருக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் இன்று (நேற்று) அவகாசத்தை அளித்து அரசியலமைப்பு சட்டத்தை நிலை நிறுத்த விரும்புகிறோம். எனவே கவர்னர் இவ்வாறு நடந்து கொள்வது முறையல்ல. அவர் சுப்ரீம் கோர்ட்டை அவமதித்துள்ளார். பொன்முடியின் தண்டனையை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைத்த பிறகு அவர் குற்றவாளியா? இல்லையா? என கவர்னர் எங்களுக்கு பாடம் நடத்த முடியாது.

    எனவே கவர்னருக்கு இன்று (நேற்று) இரவு முழுவதும் காலக்கெடு விதிக்கிறோம். இல்லையென்றால் நாளை (இன்று) தீர்ப்பு அளிக்கிறோம் என்று தலைமை நீதிபதி கூறினார்.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கவர்னர் தரப்பில் இருந்து நேற்று முதல் எந்த அழைப்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவில்லை.


    இந்நிலையில், இன்று பிற்பகலில் பொன்முடி அமைச்சராக பதவி ஏற்க உள்ளார். பதவி ஏற்க வருமாறு கவர்னர் ஆர்.என். ரவி அழைத்து விடுத்துள்ளார். இதையடுத்து இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பொன்முடி அமைச்சராக பதவியேற்கிறார்.

    சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு சற்று நேரத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் கவர்னர் அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×