என் மலர்
நீங்கள் தேடியது "மெரினா கடற்கரை"
- ரசீதில் வாகனத்தின் பதிவு எண், பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
- கியூ.ஆர். குறியீடு வாயிலாக ரசீதின் உண்மை தன்மையை கண்டறிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை மாநகராட்சியில் மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை, அண்ணாநகர், நுங்கம்பாக்கம் உள்பட 10 இடங்களில் வாகன நிறுத்தம் உள்ளது. இங்கு தனியார் வாயிலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
அந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழக நிறுவனம் சார்பில் வாகனம் நிறுத்த கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி 1 மணி நேரத்துக்கு இரு சக்கரவாகனங்களுக்கு 5 ரூபாய், 4 சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாய், பஸ்-வேன்களுக்கு 60 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதற்கான ரசீதில் வாகனத்தின் பதிவு எண், பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மேலும் கியூ.ஆர். குறியீடு வாயிலாக ரசீதின் உண்மை தன்மையை கண்டறிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் டிஜிட்டல் வழியாக மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். வாகன நிறுத்தம் தொடர்பாக 1913 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
- நீல கொடி கடற்கரை திட்டத்தின் கீழ் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது.
- பராமரிப்பு பணிகளுக்கான கட்டணத்தை மாநகராட்சியே ஈடு செய்யும்.
மெரினா கடற்கரைக்கு செல்ல கட்டணம் வசூலிக்கப்படும் என வெளியான செய்தி தவறானது. நீல கொடி கடற்கரை திட்டத்தின் கீழ் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. பராமரிப்பு பணிகளுக்கான கட்டணத்தை மாநகராட்சியே ஈடு செய்யும் என மாநிகராட்சி ஆணையர் குமரகுருபரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
- சென்னை மெரினா கடற்கரை மணல் பரப்பில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் கடல் அழகை ரசிக்கும் வகையில் மரக்கட்டையால் சிறப்பு நடைபாதை வசதி சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது.
- அடுத்த வாரத்தில் இந்த சிறப்பு நடைபாதை வசதியை திறக்க மாநகராட்சி முடிவு செய்து உள்ளது.
சென்னை:
சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான நிரந்தர நடைபாதை வசதி அடுத்த வாரம் திறக்கப்பட உள்ளது.
சென்னை மெரினா கடற்கரை மணல் பரப்பில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் கடல் அழகை ரசிக்கும் வகையில் மரக்கட்டையால் சிறப்பு நடைபாதை வசதி சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது.
கடற்கரை மணல் பரப்பில் அமைக்கப்பட்ட இந்த நடைபாதையில் மாற்றுதிறனாளிகள், முதியோர்கள் வீல்சேருடன் சென்று கடல் அலையை ரசிக்க கடற்கரை ஒழுங்கு முறை ஆணையம் சிறப்பு அனுமதி அளித்து உள்ளது.
இந்த சிறப்பு நடைபாதை 380 மீட்டர் நீளம், 3 மீட்டர் அகலத்தில் மரத்தினால் அமைக்கப்பட்டு உள்ளது. கடற்கரை சாலை விவேகானந்தர் இல்லம் எதிரே மணல் பரப்பில் மரப்பலகையால் இந்த சிறப்பு நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது.
ரூ.1 கோடி செலவில் இந்த நடைபாதை அமைப்பு பணிகள் செய்யப்பட்டு உள்ளன.
இந்த பணிகள் அனைத்தும் தற்போது நிறைவடைந்த நிலையில் அடுத்த வாரத்தில் இந்த சிறப்பு நடைபாதை வசதியை திறக்க மாநகராட்சி முடிவு செய்து உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. இந்த நடைபாதை வழியாக செல்லும் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் கடல் அழகை ரசிப்பதற்காக 4 சிறப்பு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
- மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதையை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ திறந்துவைத்தார்.
- இந்த நடைபாதை சுமார் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை மெரினா கடற்கரையின் அழகை மாற்றுத்திறனாளிகளும் ரசிப்பதற்காக நடைபாதை அமைக்கும் பணிகள் தமிழக அரசால் முன்னெடுக்கப்பட்டது. சுமார் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த நடைபாதை 263 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும், தரையில் இருந்து ஒரு மீட்டர் உயரமும் கொண்டது.
மாற்றுத்திறனாளிகள், முதியோர் சிரமம் இன்றி நடக்க நடைபாதையின் இருபுறங்களிலும் கைப்பிடிகள் போலவே மரத்தால் அழகுற அமைக்கப்பட்டு இருக்கிறது. மணற்பரப்பில் இருந்து சற்று உயரம் கூட்டி அமைக்கப்பட்டுள்ள இந்த நடைபாதையில் எந்தவித சிரமமும் இன்றி மாற்றுத்திறனாளிகள் செல்லலாம்.
மேலும் சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர் இந்த நடைபாதை வழியாக சென்று கடல் அழகை ரசித்து மகிழலாம். இதற்காக சர்வீஸ் சாலையில் இருந்து நடைபாதைக்கு இருபுறத்திலும் சாய்வுதளம் அமைக்கப்பட்டு உள்ளது. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டு உள்ள இந்த நிரந்தர நடைபாதை விவேகானந்தர் இல்லத்துக்கு எதிரே மணற்பரப்பில் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இந்த நடைபாதையை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. இன்று மாலை திறந்துவைத்தார். இதில் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், நேரு, தயாநிதி மாறன் எம்.பி, மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்றனர்.
- கலைஞர் நினைவிடத்தில், திறந்தவெளி காட்சி அரங்கம், அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது.
- வருகிற ஜூன் 3-ந்தேதி கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் விழா பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது.
சென்னை:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆற்றிய பணிகளை போற்றும் வகையில் அவரது சாதனைகள், சிந்தனைகளை அடுத்த தலைமுறை அறியும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் கருணாநிதி நினைவிடம் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது
கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறைகளில் முத்திரை பதித்தன் அடையாளமாக உதயசூரியன் போன்று முகப்பில் கருணாநிதி நினைவிடத்தில் 3 வளைவுகள் அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.39 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த நவம்பர் 8-ந்தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டு கடந்த 28-ந்தேதி ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.
கலைஞர் நினைவிடத்தில், திறந்தவெளி காட்சி அரங்கம், அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது. இதற்காக கடற்கரையில் கருணாநிதி நினைவிட வளாகத்தில் இரும்பு தடுப்புகள் மற்றும் தகரம் மூலம் 30 அடி உயரத்துக்கு வேலி அமைக்கப்பட்டது
கருணாநிதி நினைவிட முகப்பில் 3 வளைவுகள் அமைக்கும் பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக அங்கு 15 அடி ஆழத்தில் துளைகள் போடப்பட்டு உள்ளது. 3 வளைவுகள் சிமெண்ட் கான்கிரீட்டில் அமைக்கப்படுகிறது. அந்த கான்கிரீட் வளைவுகளில் கிரானைட் அல்லது மார்பிள் கற்கள் பதிக்கப்பட உள்ளது. மேலும் திறந்த வெளிகாட்சி அரங்கம், அருங்காட்சியம் அமைக்கப்படுகிறது
சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடம் கட்டுமானகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப்பணிகள் இன்னும் 6 மாதத்தில் முடிக்கப்பட உள்ளது.
வருகிற ஜூன் 3-ந்தேதி கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் விழா பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் கருணாநிதியின் நினைவிடத்தை திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.
- மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பாதையை பிறர் பயன்படுத்துவதாக புகார்.
- அனைவரும் பயன்படுத்தினால் பாதை சேதம் அடைய வாய்ப்பு உள்ளதாக குற்றசாட்டு.
சென்னை மெரினா கடற்கரையின் அழகை மாற்றுத் திறனாளிகளும் ரசிப்பதற்காக நிரந்தர நடைபாதை அமைக்கும் பணிகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டது. சுமார் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் விவேகானந்தர் இல்லத்துக்கு எதிரே மணற்பரப்பில் 263 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும், தரையில் இருந்து ஒரு மீட்டர் உயரமும் கொண்டதாக அமைக்கப் பட்ட இந்த சிறப்பு பாதையை கடந்த 27ந் தேதி அமைச்சர்கள் மற்றும் உதயநிதி எம்எல்ஏ ஆகியோர் திறந்து வைத்தனர்.
மாற்றுத்திறனாளிகள், முதியோர் சிரமம் இன்றி நடக்க இந்த நடைபாதையின் இருபுறங்களிலும் மரத்தால் ஆன கைப்பிடிகள் அழகுற அமைக்கப்பட்டு இருக்கிறது. சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர் இந்த சிறப்பு பாதை வழியாக கடலின் அருகே சென்று அலைகளில் கால்களை நனைத்தபடி கடல் அழகை ரசித்து மகிழலாம். இதற்காக சர்வீஸ் சாலையில் இருந்து நடைபாதைக்கு இருபுறத்திலும் சாய்வுதளம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த சிறப்பு பாதை திறக்கப்பட்ட முதல் நாள் மாற்று திறனாளிகள் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது மற்றவர்களும் அந்த பாதையை பயன்படுத்தி கடற்கரைக்குள் செல்வதாக புகார் எழுந்துள்ளது. அனைவரும் பயன்படுத்தும் போது சிறப்பு பாதை சேதம் அடையும் என்றும், இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாற்று திறனாளிகள் சிலர் கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து மெரினாவில் உள்ள மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பாதைக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- மாண்டஸ் புயலால் சென்னை மெரினா கடற்கரை அலங்கோலமாக உள்ளது.
- மணல் பரப்பில் உள்ள மழைத் தண்ணீர் தனித்தனி குட்டை தீவுகள் போல் காணப்பட்டு வருகிறது.
சென்னை:
ஆசியாவிலேயே மிக நீண்ட கடற்கரை என பெயர் பெற்றது சென்னை மெரினா கடற்கரை ஆகும். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த பலத்த மழையால் மெரினா கடற்கரை மணற்பரப்பில் குளம்போல் மழைத்தண்ணீர் தேங்கி நிற்கிறது.
மாண்டஸ் புயலால் சென்னை மெரினா கடற்கரை அலங்கோலமாக உள்ளது. மணல் பரப்பில் உள்ள மழைத் தண்ணீர் தனித்தனி குட்டை தீவுகள் போல் காணப்பட்டு வருகிறது. மேலும் அங்குள்ள மழைத் தண்ணீரில் பாசி பிடித்து துர்நாற்றம் வீசுகிறது.
அதில் கொசுக்கள் உற்பத்தியாகி வருகின்றன. இதனால் அங்கு பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் தொற்றும் அபாயம் உருவாகி உள்ளது. கனமழையின் பாதிப்பால் மெரினா கடற்கரையில் உள்ள சிறிய பெட்டிகடைகள், மற்றும் ராட்டினங்கள் துருப்பிடித்து பழுதடைந்து அலங்கோலமாக ஆங்காங்கே கிடக்கின்றன.
மழையால் இந்த கடைகள் மேலும் சிதைந்து வருகின்றன. கடைகள் மற்றும் ராட்டினங்கள் மீண்டும் உபயோகப்படுத்த முடியாத அளவுக்கு உள்ளன.
கடற்கரையில் துர்நாற்றம் வீசும் மெரினா மணல் பரப்பு பகுதியை மீண்டும் சுத்தமாக பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- பயந்து நடுங்கிய சாந்தியிடம் கொள்ளையர்கள் நகை-பணத்தை தருமாறு கேட்டனர்.
- சந்தோசும் அவனது கூட்டாளிகளும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மது குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்துள்ளனர்.
சென்னை:
சென்னை மெரினா கடற்கரையையொட்டிய சர்வீஸ் சாலை பகுதிகளில் இரவு நேரங்களில் வாலிபர்கள் சுற்றி வந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மெரினாவில் தூங்குபவர்களிடம் பணம் பறிப்பது, காதல் ஜோடியை மிரட்டி செல்போன்களை பறித்துச் செல்வது போன்ற சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மெரினா கடற்கரையை பகுதியில் நேற்று நள்ளிரவு பரபரப்பான கொள்ளை சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாந்தோம் சர்ச்சுக்கு பின்புறம் உள்ள கடற்கரை பகுதியையொட்டி உள்ளது லூப் ரோடு. இந்த சாலையில் நேற்று இரவு சாந்தி என்ற வயதான பெண் ஆட்டோவில் பயணம் செய்தார். நள்ளிரவு 1.30 மணி அளவில் இவர் சென்று கொண்டிருந்தபோது மழை பெய்தது.
இதனால் ஆட்டோவை சாலையோரமாக டிரைவர் நிறுத்தி இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 4 வாலிபர்கள் வந்தனர்.
அவர்கள் மழை பெய்வதால் சிறிது நேரம் ஆட்டோவில் ஒதுங்கிவிட்டு செல்கிறோம் என்று கூறினர். இதற்கு ஆட்டோ டிரைவரும் மூதாட்டி சாந்தியும் சம்மதித்தனர்.
இதையடுத்து ஆட்டோவில் ஏறி அமர்ந்த 4 பேரும் திடீரென கத்தியை காட்டி மிரட்ட தொடங்கினார்கள்.
முதலில் ஆட்டோ டிரைவரிடம் சென்று "பேசாமல் இங்கிருந்து ஓடி விடு... சத்தம் போட்டால் நீ காலி" என்று எச்சரித்தனர். இதனால் பயந்துபோன ஆட்டோ டிரைவர் எதுவும் செய்யாமல் அங்கிருந்து ஓடிவிட்டார்.
இதைதொடர்ந்து பயந்து நடுங்கிய சாந்தியிடம் கொள்ளையர்கள் நகை-பணத்தை தருமாறு கேட்டனர். ஆனால் அவர் தரமறுத்து கூச்சல் போட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த கொள்ளை கும்பல் சாந்தியின் முகத்தில் ஓங்கி கத்தியால் குத்தியது. பின்னர் கழுத்து பகுதியிலும் கொள்ளையர்கள் கீறல் போட்டனர். இதனால் நிலைகுலைந்த சாந்தி உயிர் பயத்தில் நடுங்கினார். அப்போது தங்க கம்மல், ரூ.10 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளை கும்பல் பறித்தது.
பின்னர் கொள்ளையர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதை தொடர்ந்து சாந்தி, திருடன்... திருடன் என்று சத்தம் போட்டார். அப்போது அந்த வழியாக வந்த போலீசார் கொள்ளையர்களை விரட்டினர்.
கொள்ளையர்களில் 3 பேர் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
ஆனால் ஒருவன் மட்டும் மோட்டார் சைக்கிளில் ஏற முடியாமல் தவித்தான். அவன் போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க கடலில் குதித்தான்.
ஆனால் காவலர்கள் விடாமல் விரட்டிச் சென்று கொள்ளையனை மடக்கி பிடித்தனர். பின்னர் கடலில் இருந்து குண்டுகட்டாக கையையும், காலையும் பிடித்து கரைக்கு தூக்கி வந்தனர்.
கொள்ளை சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு மயிலாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகர் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். பிடிபட்ட கொள்ளையனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவனது பெயர் சந்தோஷ் என்பது தெரியவந்தது. அயனாவரம் பகுதியை சேர்ந்த இவன்மீது கொலை முயற்சி வழக்கு ஒன்றும் உள்ளது. இந்த வழக்கில் சிறை சென்ற இவன் சமீபத்தில்தான் வெளியில் வந்துள்ளான்.
இந்த நிலையில்தான் பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்டு மாட்டிக் கொண்டு உள்ளான். தப்பி ஓடிய இவனது கூட்டாளிகள் யார்-யார்? என்பது பற்றி சந்தோஷிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் தலைமறைவான கொள்ளையர்கள் 3 பேரும் யார்-யார்? என்பது தெரிய வந்தது. அவர்களை அடையாளம் கண்டுள்ள போலீசார் கைது செய்ய தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சந்தோசும் அவனது கூட்டாளிகளும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மது குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்துள்ளனர்.
அப்போதுதான் சாந்தோம் லூப்ரோடு பகுதியில் ஆட்டோவில் பெண் ஒருவர் தனியாக அமர்ந்திருப்பதை பார்த்து அருகில் சென்று பேச்சு கொடுத்து துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
போலீசில் சிக்கியுள்ள கொள்ளையர்கள் சந்தோஷ், சூர்யா இருவரையும் விசாரணைக்கு பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் மெரினா பகுதியில் நேற்று இரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
- காமராஜர் சாலையில் திரண்டு பொதுமக்கள் புத்தாண்டை கொண்டாடினார்கள்.
- அண்ணாசதுக்கம் பகுதியில் சுமார் 75 ஆயிரம் பேரும் மெரினா பகுதியில் 25 ஆயிரம் பேரும் திரண்டு இருந்தனர்.
சென்னை:
சென்னை மெரினாவில் வழக்கமாக புத்தாண்டு கொண்டாட பல்லாயிரக்கணக்கில் திரளுவார்கள். இந்த ஆண்டு பொதுமக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு கருதி கடற்கரை மணலில் இறங்க பொதுமக்களை போலீசார் அனுமதிக்கவில்லை.
இதனால் காமராஜர் சாலையில் திரண்டு பொதுமக்கள் புத்தாண்டை கொண்டாடினார்கள். ஆனாலும் கடற்கரை மணலில் கால்பதிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் இருந்துள்ளார்கள்.
அந்த ஆதங்கத்தை தீர்க்கும் வகையில் நேற்று மெரினா கடற்கரையில் பொதுமக்கள் திரள தொடங்கினார்கள். நேரம் செல்ல செல்ல கூட்டம் பல மடங்கு அதிகரித்தது.
அண்ணா சதுக்கம், மெரினா காவல் சரகத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டார்கள்.
போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் அண்ணா சதுக்கம் பகுதியில் உதவி கமிஷனர் பாஸ்கர், இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரம் ஆகியோரும் மெரினா பகுதியில் தென்சென்னை கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார்.
அண்ணாசதுக்கம் பகுதியில் சுமார் 75 ஆயிரம் பேரும் மெரினா பகுதியில் 25 ஆயிரம் பேரும் திரண்டு இருந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் பல குழந்தைகள் காணாமல் போனது. இதனால் பெற்றோர்கள் தவித்தனர்.
ஒரு குடும்பத்தில் பேத்தி காணாமல் போனது. அதை தேடி சென்ற பேரனையும், பாட்டியையும் காணவில்லை. இப்படி மொத்தம் 30 பேர் காணாமல் போனார்கள். அவர்களை போலீசார் தேடி கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்தனர். இதனால் கண்ணீரில் தவித்தவர்கள் ஆனந்த கண்ணீருடன் வீடுகளுக்கு திரும்பினார்கள்.
- பொங்கலுக்கு இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில் மக்கள் பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
- மெரினா கடற்கரையில் காணும் பொங்கல் நாளில் சுமார் ஒரு லட்சம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தை முதல் தேதியில் இருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
தை ஒன்றாம் தேதி பொங்கல் கொண்டாட்டமும் இரண்டாவது நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டமும் களைகட்டும்.
மூன்றாவது நாள் காணும் பொங்கலாக மக்கள் சுற்றுலா தலங்களில் ஒன்று கூடி மகிழ்வார்கள்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தவித கொண்டாட்டங்களும் பெரிய அளவில் நடைபெறவில்லை. அந்த வகையில் காணும் பொங்கல் கொண்டாட்டத்திற்கும் தமிழகம் முழுவதும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் பொங்கலையொட்டி வரும் காணும் பொங்கல் கொண்டாட்டம் நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு தைப்பொங்கலை வரவேற்க மக்கள் மிகுந்த உற்சாகத்தோடு தயாராகி வருகிறார்கள். வருகிற 15-ந் தேதி தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.
பொங்கலுக்கு இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில் மக்கள் பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் கடைவீதிகளில் மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. பொங்கல் தினத்தன்று வீடுகளில் பொங்கல் வைத்து சூரியனை வழிபடும் மக்கள் மறுநாள் 16-ந் தேதி மாட்டுப் பொங்கலை கொண்டாடி மகிழ்வார்கள். வீடுகளில் உள்ள மாடுகளை குளிப்பாட்டி கொம்புகளில் வர்ணம் தீட்டி மாட்டுப் பொங்கலையும் உற்சாகமாகக் கொண்டாடுவார்கள்.
மூன்றாவது நாளான 17-ந்தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுவதையொட்டி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு காணும் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட மக்கள் இப்போதே ஆவலுடன் உள்ளனர்.
சென்னையில் காணும் பொங்கல் கொண்டாட்டம் மெரினா கடற்கரையில் மிகுந்த உற்சாகத்தோடு இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் தென்சென்னை கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மெரினா கடற்கரைக்குட்பட்ட அண்ணா சதுக்கம் மற்றும் மெரினா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள உரிய அறிவுரைகளை உயரதிகாரிகள் வழங்கி உள்ளனர்.
மெரினா கடற்கரை மட்டுமன்றி சென்னையில் உள்ள சிறிய மாநகராட்சி பூங்காக்கள் முதல் பெரிய பூங்காக்கள் வரை அத்தனை பூங்காக்களிலும் மக்கள் கூட்டம் காணும் பொங்கல் அன்று அலைமோதும்.
கிண்டி சிறுவர் பூங்காவிலும் பொதுமக்களின் கூட்டம் அதிக அளவில் காணப்படும். இதனை கருத்தில் கொண்டு சென்னை மாநகரம் முழுவதும் 16 ஆயிரம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்தந்த பகுதிகளை சேர்ந்த துணை கமிஷனர்கள் உதவி கமிஷனர்கள் ஆகியோருக்கு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மெரினா கடற்கரையில் காணும் பொங்கல் நாளில் சுமார் ஒரு லட்சம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அன்றைய தினம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மெரினா கடற்கரைக்கு சென்று பொழுதை போக்குவார்கள்.
காணும் பொங்கல் அன்று மாலை 6 மணியில் இருந்தே மக்கள் மெரினாவில் கூடத் தொடங்கி விடுவார்கள். இரவு 9 மணி அளவில் கட்டுக்கடங்காத வகையில் கூட்டம் காணப்படும். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட் கொள்ளையர்கள் யாரும் கைவரிசை காட்டி விடக்கூடாது என்பதற்காக மாறுவேடத்திலும் போலீசார் கண்காணிக்க உள்ளனர். பைனாகுலர் மூலமாக கூட்டத்தை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக கடற்கரை மணல் பகுதிகளில் சுமார் 10 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன. அதில் இருந்தபடியே போலீசார் கூட்டத்தை கண்காணிக்க உள்ளனர். குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் மெரினா கடற்கரையில் சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறை ஒன்றும் தற்காலிகமாக திறக்கப்பட உள்ளது.
அதில் இருந்தபடியே காவல் துறையினர் ஒலி பெருக்கி மூலமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான தகவல்களை தெரிவிக்க உள்ளனர்.
பொங்கல் பண்டிகை நாளில் இருந்தே மெரினா கடற்கரையில் மக்கள் பொழுதைப் போக்க திரளாக கூடுவார்கள் என்பதால் 15, 16, 17 ஆகிய மூன்று நாட்களும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இதை அடுத்து வருகிற 14-ந் தேதி சனிக்கிழமை மாலையில் இருந்தே மெரினாவில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட உள்ளது. இதேபோன்று பொங்கலை ஒட்டி மக்கள் கூடும் பகுதிகளில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
- மெரினா கடற்கரை முழுவதும் டிரோன் மூலம் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை சர்வீஸ் சாலை நுழைவு வாயில்களில் 11 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
பொங்கல் பண்டிகையை யொட்டி 3 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள் சுற்றுலா தலங்களில் திரண்டு வருகிறார்கள்.
பொங்கல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், இன்று மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. நாளை காணும் பொங்கல் கொண்டாட்டத்துக்கு மக்கள் தயாராகி வருகிறார்கள். காணும் பொங்கல் அன்று சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு தலங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவது வழக்கம். அந்த வகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) சென்னை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடற்கரை, பூங்காக்கள் போன்ற இடங்களில் காணும் பொங்கல் கொண்டாடத்துக்காக மக்கள் காலையிலேயே கூடுவார்கள்.
மாலை நேரத்தில் கட்டுக்கடங்காத வகையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். சென்னையில் மெரினா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி உற்சாகமாக பொழுதை போக்குவார்கள். இதேபோன்று மாநகராட்சி பூங்காக்கள் மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும்.
மெரினாவில் நாளை பொதுமக்கள் கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் மக்கள் கடலில் இறங்கி கால் நனைக்கும் பகுதியில் சவுக்கு கட்டைகளை கட்டி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான பணிகள் இன்று நடைபெற்றன. மெரினாவில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை கருத்தில் கொண்டு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மெரினாவில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக மெரினாவில் 15 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் இருந்தபடியே போலீசார் பைனாகுலர் மூலமாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். கூட்ட நெரிசலில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடித்து மீட்கவும், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சிறுவர்-சிறுமிகளின் கைகளில் பெற்றோர்கள் மற்றும் காவல் உதவி மைய செல்போன் எண்கள் அடங்கிய சிறிய வடிவிலான 'டேப்'பை ஒட்டுதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரை முழுவதும் டிரோன் மூலம் கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக டிரோன்களை இயக்குவதில் நன்கு பயிற்சி பெற்ற காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 15 ஆயிரம் போலீசாருடன் 1000 ஊர் காவல் படையினரும் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர்.
உழைப்பாளர் சிலை மற்றும் காந்தி சிலை அருகில் தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை சர்வீஸ் சாலை நுழைவு வாயில்களில் 11 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு அவசர மருத்துவ உதவிக்காக 7 ஆம்புலன்ஸ் வாகனங்களில் மருத்துவக் குழுவினர் மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். இது தவிர மீட்புப் பணிக்காக மோட்டார் படகுகள் மற்றும் சுமார் 140-க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
16 குதிரைகள் மற்றும் சிறிய அளவிலான 4 சக்கர வாகனங்கள் ஆகியவற்றையும் போலீசார் பாதுகாப்பு பணிக்காக பயன்படுத்த உள்ளனர்.
மெரினாவில் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு சூரிய ஒளி உதவி மையங்கள் ஏற்படுத்த உள்ளன. 12 முக்கியமான இடங்களில் அதிக ஒளி திறன் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவை தற்காலிக கட்டுப்பாட்டறையில் உள்ள அகன்ற திரைகளில் கண்காணிக்கப்படும்.
இந்த வருடம் மெரினா கடற்கரை மணற்பரப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் காவல் உதவி மையங்களை இரவு நேரங்களில் பொதுமக்கள் எளிதாக அடையாளம் கண்டு காவல் உதவி பெற முடியும்.
காணாமல் போகும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை பற்றி புகார் தெரிவிப்பதற்கும், அவர்களை கண்டுபிடிக்கவும் இந்த காவல் உதவி மையங்கள் பெரிதும் உதவும்.
மெரினா கடற்கரை உயிர்காக்கும் பிரிவினருடன் கடலில் மூழ்கி உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- மாயமான 15 குழந்தைகள் இந்த அட்டை மூலம் அடையாளம் காணப்பட்டனர்.
- பெண்களை கேலி-கிண்டல் செய்த நபர்களை போலீசார் விரட்டி அடித்தனர்.
சென்னை:
காணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசலில் குழந்தைகள் மாயமானால் எளிதில் கண்டுபிடிப்பதற்காக அவர்கள் கையில் பெற்றோரின் செல்போன் எண்ணுடன் கூடிய அடையாள அட்டை கட்டி விடப்பட்டது. நேற்றிரவு 7 மணி நிலவரப்படி 10 ஆயிரம் குழந்தைகள் கையில் இந்த அட்டை கட்டப்பட்டது.
இந்த நிலையில் மாயமான 15 குழந்தைகள் இந்த அட்டை மூலம் அடையாளம் காணப்பட்டனர். ஒலிப்பெருக்கி மூலம் தகவல் கொடுத்து குழந்தைகளை குடும்பத்தினருடன் பத்திரமாக ஒப்படைத்தனர். சமூக விரோதிகள் நடமாட்டம் இருக்கிறதா? என்பதை மாறுவேடத்தில் மக்களோடு மக்களாக 9 தனிப்படை போலீசார் கண்காணித்தனர். அப்போது பெண்களை கேலி-கிண்டல் செய்த நபர்களை விரட்டி அடித்தனர்.
குற்ற வழக்கு பின்னணி உள்ளவர்கள் வருகிறார்களா என்பதை முக அடையாள கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார் கண்காணித்தனர். இந்த கேமராவில் சிக்கியவர்களை போலீசார் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர்.
திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் எம்.எஸ்.பாஸ்கர் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.