search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐ.ஏ.எஸ்."

    • பாஜக வேட்பாளர் சுதாகர் சார்பில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கப்பட்டதாக கூறப்படும் ₹4.8 கோடியை படை பறிமுதல் செய்தது
    • பாஜக வேட்பாளர் சுதாகர் மீது மதநாயக்கஹள்ளி காவல் நிலையத்தில் அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்

    பாஜக வேட்பாளர் சுதாகர் சார்பில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கப்பட்டதாக கூறப்படும் ₹4.8 கோடியை படை பறிமுதல் செய்தது

    கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சுதாகர் சார்பில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கப்பட்டதாக கூறப்படும் ₹4.8 கோடியை ஏப்ரல் 24 அன்று பறக்கும் படை பறிமுதல் செய்தது.

    இதனையடுத்து பாஜக வேட்பாளர் சுதாகர் மீது மதநாயக்கனஹள்ளி காவல் நிலையத்தில் அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.

    இந்நிலையில், பணம் பறிமுதல் செய்யப்பட்டவுடன் தேர்தல் அதிகாரி முனிஷ் முட்கலை பாஜக வேட்பாளர் சுதாகர் தொடர்புகொண்டு பேசியதாகவும் பிடிபட்ட பணத்தை விடுவிக்கும்படியும், வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பி பணத்தை விடுவிக்க சுதாகர் உதவி கோரியதாகவும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி முனிஷ் மௌத்கில் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    இதனையடுத்து மதநாயக்கனஹள்ளி போலீசார் சுதாகர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 

    • யு.பி.எஸ்.சி., என்பது கடினமான தேர்வு. மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் சோர்வடையச் செய்யும்.
    • ஆன்லைன் வாயிலாக கற்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    உடுமலை :

    உடுமலை டிஜிட்டல் நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவருடன் சாதனையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. நூலக வாசகர் வட்டத்தலைவர் லெனின்பாரதி தலைமை வகித்தார். நூலகர் பீர்பாஷா, வரவேற்றார். அவ்வகையில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற சந்தோஷ் குமாருக்கு, வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து போட்டித்தேர்விற்கு தயாராகும் மாணவர்களுடன் அவர் பேசியதாவது:-

    யு.பி.எஸ்.சி., என்பது கடினமான தேர்வு. மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் சோர்வடையச் செய்யும்.எனவே, இந்த தேர்வுக்கு தயாராகுபவர்கள் தங்கள் திறன்களின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை அவசியம்.வேறு எந்த கவனச்சிதறல்களுக்கும் இடம் கொடுக்கக்கூடாது. தேர்வில் எந்த மாதிரியான வினாக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என, சுயமாக புரிந்து வைத்துக்கொண்டால் வெற்றி பெறலாம்.

    ஆன்லைன் வாயிலாக கற்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கான பாடத்திட்டம் பெரியது. அதை புரிந்து படிக்க வேண்டும். பயிற்சி மையத்தில் பணியில் இருக்கும் அதிகாரிகள், ஆசிரியர்களின் ஆலோசனைகள் பெற்றால் மிகவும் உதவியாக இருக்கும் என்றார். நிர்வாகிகள் சண்முகசுந்தரம், தண்டபாணி, வேலாயுதம், கண்டிமுத்து, விஜயகுமார், கண்ணபிரான், மணி உட்பட பலர் பங்கேற்றனர்.

    ×