என் மலர்
நீங்கள் தேடியது "மெமு ரெயில்"
- சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு காலை 6.35 மணிக்கு புறப்படும் மெமு ரெயில் நாளை மற்றும் 16-ந்தேதிகளில் விழுப்புரம் வரை மட்டும் இயக்கப்படும்.
- புதுச்சேரி-திருப்பதி மெமு ரெயில் முண்டியம்பாக்கத்தில் இருந்தும் நாளை (9-ந்தேதி), மற்றும் 16-ந்தேதிகளில் புறப்படும்.
தாம்பரத்தில் இருந்து விழுப்புரத்துக்கு காலை 9.45 மணிக்கு புறப்படும் மெமு ரெயில் நாளை (9-ந்தேதி), 16 ஆகிய தேதிகளில் விக்கிரவாண்டி வரை மட்டும் இயக்கப்படும். அதே போன்று சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு காலை 6.35 மணிக்கு புறப்படும் மெமு ரெயில் நாளை மற்றும் 16-ந்தேதிகளில் விழுப்புரம் வரை மட்டும் இயக்கப்படும்.
மறுமார்க்கமாக விழுப்புரம்-சென்னை கடற்கரை இடையே பிற்பகல் 1.40 மணிக்கு இயக்கப்படும் மெமு ரெயில் நாளை மற்றும் 16-ந்தேதி விக்கிரவாண்டியில் இருந்து இயக்கப்படும். விழுப்புரம்-மயிலாடுதுறை மெமு ரெயில் சேர்ந்தனூரில் இருந்தும், புதுச்சேரி-திருப்பதி மெமு ரெயில் முண்டியம்பாக்கத்தில் இருந்தும் நாளை (9-ந்தேதி), மற்றும் 16-ந்தேதிகளில் புறப்படும்.
சென்னை எழும்பூரில் இருந்து காலை 10.20 மணிக்கு புறப்படும் குருவாயூர் விரைவில் ரெயில் 1 மணி நேரம் 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டுச் செல்லும்.
- வருகிற 16ந் தேதி வரை கோவையில் இருந்து காலை 9:05 மணிக்கு புறப்படும் (06802) ரெயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
- கோவை - இருகூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள வழித்தடத்தில் என்ஜினீயரிங் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
திருப்பூர்:
கோவை என்ஜினீரியங் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோவை - சேலம் இடையிலான மெமு ெரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ெரயில்வே துறை அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ெரயில்வே சேலம் டிவிஷன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
கோவை - இருகூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள வழித்தடத்தில் என்ஜினீயரிங் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் வருகிற 16ந் தேதி வரை கோவையில் இருந்து காலை 9:05 மணிக்கு புறப்படும் (06802) ரெயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், சேலத்தில் இருந்து மதியம் 1:40 மணிக்கு புறப்படும் (06803) ரெயிலும் மே 1முதல் 16ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
- திருப்பூர் நோக்கி வரக்கூடிய தொழிலாளர்கள் வந்து செல்வதற்கு மிகப்பெரிய போக்குவரத்து வசதியாக இருந்த பயணிகள் மெமு எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்றை ரெயில்வே நிர்வாகம் ரத்து செய்து இருக்கிறது.
- மெமு ரெயிலானது கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு வழியாக சேலம் வரை உள்ள அனைத்து சின்னஞ்சிறு ரெயில் நிலையங்களிலும் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி சென்ற ரெயில் ஆகும்.
திருப்பூர்:
தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் உள்ள கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு மாநகரங்கள் தொழில் வளர்ச்சி பெற்ற நகரங்களாக இருக்கின்றன. அதிலும் திருப்பூர் மாநகரத்தில் பனியன் தொழிலை நம்பி சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளியூர் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் வாழ்கிறார்கள். இதில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் திருப்பூருக்கு பக்கத்தில் உள்ள கோவை, ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி திருப்பூருக்கு வந்து செல்லும் தொழிலாளர்கள் ஆவார்கள்.
இப்படி திருப்பூருக்கு பல்வேறு ஊர்களில் இருந்து தொழில் மற்றும் வேலை நிமித்தமாக வந்து செல்வதற்கு தொழிலாளர்கள் பஸ் மற்றும் ரெயில்களை பயன்படுத்துகிறார்கள். குறைந்த கட்டணத்தில் இருப்பதாலும், உடல் அசதி குறைவாக இருப்பதாலும், ரெயில் பயணம் திருப்பூருக்கு வரும் பக்கத்து மாவட்டத்துக்காரர்களின் முக்கிய தேர்வாக இருக்கிறது.
இப்படி திருப்பூர் நோக்கி வரக்கூடிய தொழிலாளர்கள் வந்து செல்வதற்கு மிகப்பெரிய போக்குவரத்து வசதியாக இருந்த பயணிகள் மெமு எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்றை ரெயில்வே நிர்வாகம் ரத்து செய்து இருக்கிறது. மேலும் கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக செல்லக்கூடிய நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் திருச்சி பாலக்காடு ரெயில்களின் நேரத்தை மாற்றி அமைத்து இருப்பதும் பயணிகளுக்கு பெரும் அலைச்சலையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி இருக்கிறது.
பயணிகளின் பேராதரவு பெற்ற ரெயிலாக இருந்த மெமு ரெயிலானது, ரெயில் எண் 06802 என்ற எண்ணில் கோவையில் இருந்து காலையில் 9.05 மணிக்கு புறப்பட்டு சேலம் நோக்கி சென்று கொண்டு இருந்தது. மறுமார்க்கமாக 06803 என்ற எண்ணுடன் சேலத்தில் மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு மாலை கோவையை அடைந்தது. இந்த ரெயில் தான் கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு வழியாக சேலம் வரை உள்ள அனைத்து சின்னஞ்சிறு ரெயில் நிலையங்களிலும் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி சென்ற ரெயில் ஆகும். இந்த ரெயிலில் தான் கோவை ஜங்ஷன், கோவை வடக்கு, பீளமேடு, சிங்காநல்லூர், இருகூர், சூலூர் ரோடு, சோமனூர், வஞ்சிபாளையம், திருப்பூர், ஊத்துக்குளி, விஜயமங்கலம், ஈங்கூர், பெருந்துறை, தொட்டிபாளையம், ஈரோடு ஜங்ஷன், காவேரி, அனங்கூர், மாவெலிபாளையம், மகுடஞ்சாவடி, வீரபாண்டி ரோடு, சேலம் ஜங்ஷன் உள்பட 22 ரெயில் நிலையங்களில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி சென்றது.
இந்த ரெயில் மூலமாக கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் மாவட்டம் வரை தினமும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பயனடைந்து வந்தார்கள். அதிலும் சீசன் டிக்கெட் மூலமாக குக்கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பெருமளவு பயன்படுத்தி வந்த இந்த ரெயிலை ஒரு ஆண்டாக தொடர்ச்சியாக ரத்து செய்து வைத்திருக்கிறது தென்னக ரெயில்வேயின் சேலம் கோட்டம். அதே நேரம் இந்த ரெயில் அதே அளவு பெட்டிகளுடன் கோவையில் இருந்து கேரளத்துக்கு மட்டும் இயக்கப்பட்டு விட்டு, தமிழக பகுதியில் ரத்து செய்து வைத்திருப்பது தான் சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களிடத்தில் கேள்வியை எழுப்பி இருக்கிறது.
அதாவது இந்த மெமு ரெயிலானது சேலத்தில் இருந்து கோவை வந்து சேர்ந்ததும், 06805 என்ற எண்ணில் கோவையில் இருந்து பாலக்காடு வரை பாசஞ்சர் ரெயிலாக இயக்கப்பட்டு வந்தது. 06806 என்ற எண்ணில் பாலக்காட்டில் இருந்து கோவை வந்து சேர்ந்து, அங்கிருந்து கோவை-சேலத்துக்கு இயக்கப்பட்டு வந்தது. ஆனால், கோவை-சேலம் இடையே ஒரு ஆண்டாக ரத்து செய்யப்பட்ட இந்த ரெயிலை, கேரள பயணிகளுக்கு எந்தவித சிக்கலும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக கேரள பகுதிகளில் மட்டும் தொடர்ந்து இயக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் மற்றும் பயணிகள் புகார் கூறுகிறார்கள்.
06802 மற்றும் 06803 என்ற எண்களில் இயங்கக்கூடிய இந்த ரெயிலை ரத்து செய்ததற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவிக்கிற ஒரே காரணம் என்னவென்று கேட்டால், தண்டவாள பராமரிப்பு பணி என்பது மட்டுமே. கேரளத்தையும், தமிழகத்தையும் இணைக்கக் கூடிய மேற்கு மண்டல ரெயில் பாதையில் தண்டவாள பராமரிப்பு என்ற காரணத்தை கூறி ஒவ்வொரு மாதமும் இந்த ரெயிலை ரெயில்வே நிர்வாகம் ரத்து செய்து அறிக்கையை அனுப்புகிறது. இப்படி ஒரு ஆண்டாக செய்யக் கூடியதற்கு பின்னணி காரணம் என்று பொதுமக்கள் கூறும் காரணங்கள் தான் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
இந்த ரெயில் தடத்தில் தினமும் 30க்கும் மேற்பட்ட பயணிகள் செல்லக்கூடிய ரெயில்களும், அது தவிர சரக்கு ரெயில்களும் இயக்கப்பட்டாலும், பயணிகள் அதிகம் பயன்படுத்திய மெமு ரெயில் ரத்து செய்யப்பட்டதற்கு காரணம் தனியார் பஸ் உரிமையாளர்கள் தான் என்கிறார்கள் ரெயில் பயணிகள். தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு கொரோனா காலத்தில் இந்த மெமு ரெயில் ரத்து செய்யப்பட்ட போது, வருமானம் குவிந்தது. எனவே அவர்கள் இந்த ரெயிலை தொடர்ச்சியாக ஓட விடக்கூடாது என்று முடிவு செய்து, ரெயில்வே அதிகாரிகளை சரிக்கட்டி இந்த ரெயிலை ரத்து செய்ய வைப்பதாக திருப்பூரை சேர்ந்த பயணிகள் கூறுகிறார்கள்.
கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழித்தடத்தில் பல்வேறு ரெயில்கள் தடையின்றி இயக்கப்படும் போது, ரெயில் தண்டவாள பராமரிப்பு பணி என்று சொல்லி இந்த மெமு ரெயிலை மட்டும் ரத்து செய்வது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
இந்த ரெயிலை இயக்க வேண்டி கோவை பாராளுமன்ற உறுப்பினர் நடராஜன், திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் ஆகியோரும் பலமுறை கோரிக்கை விடுத்தார்கள். ஆனாலும் பலனில்லை. கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்ட ரெயில் பயணிகளும் மனு மேல் மனு கொடுத்து பார்த்து விட்டார்கள். ஆனாலும் அசரவில்லை ரெயில்வே நிர்வாகம்.
இதே போல திருச்சியில் இருந்து பாலக்காடு செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரெயிலானது கோவை -திருப்பூருக்கு இடையே இருகூர், சிங்காநல்லூர் ரெயில் நிலையங்களில் நிற்காமல் செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றி உள்ளார்கள். இத்துடன் கோவை - நாகர்கோவில் பாசஞ்சர் ரெயிலானது காலை 7.20 மணிக்கு கோவையில் புறப்பட்டு வடகோவை, பீளமேடு, சிங்காநல்லூர், இருகூர், சூலூர், சோமனூர், வஞ்சிபாளையம் வழியாக திருப்பூர் நின்று பின்னர் புறப்பட்டு சென்றது. ஆனால் இந்த ரெயில் இப்போது கடந்த 2 வருடங்களாக எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றப்பட்டு உள்ளது. இதனால் கோவை, திருப்பூருக்கு இடையே சிங்காநல்லூர், இருகூர், வஞ்சிபாளையம் ரெயில் நிலையங்களில் நிற்காமல் செல்கிறது. இதனால் இதில் வந்து கொண்டு இருந்த பள்ளி மாணவர்கள் உள்பட பல்லாயிரம் பொதுமக்கள், தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகிறார்கள். இத்துடன் இந்த ரெயில் மாலை நேரத்தில் 7.20 மணிக்கு திருப்பூர் வந்து கொண்டு இருந்தது. தற்போது 5.10 மணிக்கு வரும்படி அட்டவணை மாற்றி உள்ளதும் தொழிலாளர்கள் வேலை முடித்து செல்வதில் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.
தண்டவாள பராமரிப்பு பணி என்று சொல்லி பல்லாயிரம் மக்களை அலைக்கழிக்கும் ரெயில்வே நிர்வாகம், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக சென்று பல்லாயிரம் கிராம மக்களுக்கு பயனளித்த மெமு ரெயிலை உடனடியாக இயக்கத்துக்கு கொண்டு வர வேண்டும் என்பதே மேற்கு மண்டலத்தில் பயணிக்கும் ரெயில் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. மேலும் கோவை -நாகர்கோவில் ரெயில் மற்றும் திருச்சி-பாலக்காடு ரெயில்களை ஏற்கனவே நின்று சென்ற அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- செங்கல்பட்டு வரை நீட்டிக்கவும் திட்டம் உள்ளது.
- அடிப்படை கட்டணம் 10 கி.மீட்டருக்கு ரூ.29 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை நகரில் ஏ.சி. வசதி கொண்ட புறநகர் ரெயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பது பயணிகளின் நீண்டநாள் கோரிக்கையாகும். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே ஏ.சி. வசதி கொண்ட மெமு ரெயில்கள் விரைவில் இயக்கப்பட உள்ளது.
இந்த ரெயிலை செங்கல்பட்டு வரை நீட்டிக்கவும் திட்டம் உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தெற்கு ரெயில்வே செய்து வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில், அதாவது டிசம்பர் இறுதிக்குள் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் இருந்து முதல் ஏ.சி. மெமு ரெயில் தயாராக உள்ளது.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
முதல் ஏ.சி. மெமு ரெயிலை இயக்குவதற்கு சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தை இறுதி செய்துள்ளோம். ஆனால் சேவையை செங்கல்பட்டு வரை நீட்டிக்கும் திட்டமும் ஆலோசனையில் உள்ளது.
சாதாரண ஏ.சி. மெமு ரெயில்களுக்கான அடிப்படை கட்டணம் 10 கி.மீ. வரையிலான பயணங்களுக்கு ரூ.29 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 491 முதல் 500 கி.மீ. வரையிலான பயணங்களுக்கு ரூ.423 ஆகும்.
11 முதல் 15 கி.மீ. வரையிலான பயணங்களுக்கு கட்டணம் ரூ.37 ஆகவும், 16 முதல் 25 கி.மீ. வரையிலான பயணங்களுக்கு ரூ.56 ஆகவும் கட்டணம் இருக்கும்.
10 கி.மீ. வரையிலான பயணங்களுக்கு மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணம் ரூ.590 ஆகவும், 15 நாட்களுக்கு ரூ.445 ஆகவும், வாராந்திர சீசன் டிக்கெட் ரூ.295 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எழும்பூர் - தாம்பரம் இடையே 25 கி.மீ. வரையிலான பயணங்களுக்கு மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணம் ரூ.1,200 ஆகவும், 15 நாட்களுக்கு ரூ.900 ஆகவும், வாராந்திர சீசன் டிக்கெட் ரூ.605 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மேலும் சென்னை - திருவள்ளூர் இடையே டிக்கெட் கட்டணம் ரூ.85 ஆகவும், சென்னை-செங்கல்பட்டு இடையே ரூ.99 ஆகவும், சென்னை - திருத்தணி இடையே ரூ. 123 ஆகவும், சென்னை - திருப்பதி இடையே ரூ.170 ஆகவும், சென்னை - புதுச்சேரி இடையே ரூ.204 ஆகவும் நிர்ணயிக்கப்பட உள்ளது.
- உள்ளூர் பயணிகள் உட்பட பல்வேறு ரெயில்கள் நிறுத்தப்பட்டன.
- பாடல்கள் ஒளிபரப்ப ஒவ்வொரு பெட்டியிலும் ஸ்பீக்கர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் :
கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 2020 ஏப்ரல் மாதம் முதல் எக்ஸ்பிரஸ், உள்ளூர் பயணிகள் உட்பட பல்வேறு ரெயில்கள் நிறுத்தப்பட்டன. இதில் ஈரோடு - கோவை மற்றும் ஈரோடு - பாலக்காடு, சேலம் - கோவை வரை இயக்கப்பட்ட மெமு ரெயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.இதனை தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கழிந்து, கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் ஈரோடு - கோவை இடையே மீண்டும் மெமு ரெயில் சேவையை துவங்கியது.
தற்போது விடப்பட்டுள்ள அதி நவீன மெமு ரெயிலில் கழிவறை, சீட் அமைப்புகள் வசதியாகவும், அனைத்து பெட்டிகளிலும் அதி நவீன கண்காணிப்பு கேமரா ஒவ்வொரு பெட்டியிலும் 4 வீதம் அனைத்து பெட்டிகளிலும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண் பயணிகள் பாதுகாப்பு உறுதி செய்யப் பட்டுள்ளதோடு, ரெயிலில் நடக்கும் விரும்பத்தகாத செயல்களும் குறைந்துள்ளது.மேலும் கேமரா பொருத்தப் பட்டுள்ளதால் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு தப்பிச் செல்லும் குற்றவாளிகள் இதன் மூலம் கண்டுபிடிக்க உதவி கரமாக இருந்து வருகிறது.பயணிகள் ரெயிலில் கண்காணிப்பு கேமரா மட்டுமின்றி, அடுத்து வரும் ெரயில் நிலையம் பற்றி டிஜிட்டல் அறிவிப்பு பலகை,பாடல்கள் ஒளிபரப்ப ஒவ்வொரு பெட்டியிலும் ஸ்பீக்கர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.