search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வயதானவர்கள்"

    • டைப் 2 நீரழிவு நோய் வயதானவர்களிடம் தான் அதிகம் காணப்படுகிறது.
    • டைப் 2 நீரழிவுநோயை ஒருவரின் மூச்சிலிருந்து கண்டறிய முடியும்.

    இந்தியாவில் வயது வித்தியாசமின்றி அதிகரித்து வரும் நீரழிவு நோய் பற்றிய போதுமான புரிதல் இல்லாதது நோயை முன்கூட்டியே கண்டறிவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. எனவே நோயின் அறிகுறிகுறிகள் குறித்து முதலில் விழிப்புணர்வடைவது அவசியம்.

    உடலில் அதிக குளுக்கோஸ் இருந்தால், அது ரத்தத்தில் காலத்து சர்க்கரை அளவை அதிகரிக்கும். உடலால் அதிக குளுக்கோஸை பயன்படுத்த முடியும் அளவுக்கு இன்சுலின் சுரக்க முடியாது. இன்சுலின் சுரப்பில் குறைபாடு ஏற்படும் போது, டைப் 2 நீரிழிவு நோய் உண்டாகிறது.

     

    டைப் 2 நீரழிவு நோய் வயதானவர்களிடம் தான் அதிகம் காணப்படுகிறது. சமீப காலமாக, உடல் பருமன் பிரச்சனை உள்ள குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடமும் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுகிறது. டைப் 1 நோய் மரபணு ரீதியாக அடுத்த தலைமுறைக்கு பரவும் நிலையில் டைப் 2 வாழ்க்கை முறைகளாலும் உணவுப் பழக்கத்தாலும் ஏற்படுகிறது.

    டைப் 2 நோயை ஒருவரின் மூச்சிலிருந்து கண்டறிய முடியும். உங்களது. உங்களது மூச்சில் பழத்த்தின் வாசனையை அடிக்கடி நேரிட்டால் அது டைப் 2 நீரழிவு நோய் இருப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

     

     ஆரம்பத்தில் கூறியபடி ரத்தத்தில் உள்ள அதிக குளுக்கோஸை சமன் செய்ய கெடோஆசிடோசிஸ் (ketoacidosis) என்ற செயல்பாடு உடலில் நடப்பதால் மூச்சில் இந்த பழ வாசனை உருவாகிறது. இந்த டைப் 2 சர்க்கரை வியாதி இதயம் மற்றும் கல்லீரல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • மேல்மலையனூரில் ஜமாபந்தி நிறைவு விழா 260 பேருக்கு ரூ.19. 89 லட்சம் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களால் வழங்கப்பட்டது
    • மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார்.மாவட்ட வருவாய்அலுவலர் ராஜசேகரன் வரவேற்றார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் ஜமாபந்தி நிறைவு விழா தாசில்தார் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய்அலுவலர் ராஜசேகரன் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டுபயனா ளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    நிறைவு நாள் நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் 50 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளும் இலவச வீட்டுமனைப்பட்டா 31 பேருக்கும் ரேசன் கார்டு 20 பேருக்கும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 3பேருக்குஅரசு நலத்திட்ட உதவிகளும், தோட்டக்கலைத் துறையின் மூலம் 3 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 260 பேருக்கு ரூ.19 லட்சத்து 89 ஆயிரத்து290 ரூபாய் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

    நிகழ்ச்சியில் மேல்மலையனூர் யூனியன் தலைவர் தலைவர் கண்மணி நெடுஞ்செழியன், மேல்மலையனூர் தாசில்தார் கோவர்தனன், ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், சுப்பிரமணியன், ஜமாபந்தி கண்காணிப்பு அலுவலர் உஷா, யூனியன் துணைத்தலைவர் விஜயலட்சுமி முருகன் மேல்மலையனூர் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன்,மாவட்ட கவுன்சிலர் சாந்தி சுப்பிரமணியன், செல்வி ராம சரவணன், ஒன்றிய கவுன்சிலர் யசோதை சந்திரகுப்தன்,மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×