search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளஸ் 2"

    • 10-ம் வகுப்பு படித்த சுமார் 33.5 லட்சம் மாணவர்கள், 11-ம் வகுப்புக்கு செல்லவில்லை.
    • 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் திறந்தநிலைப் பள்ளிகளின் செயல்திறன் மோசமாக உள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நாடு முழுவதும் 56 மாநில கல்வி வாரியங்கள் மற்றும் 3 தேசிய கல்வி வாரியங்கள் உட்பட 59 பள்ளி கல்வி வாரியங்கள் மூலம் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகள் நடத்தப்படுகின்றன. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வு முடிவுகளை பகுப்பாய்வு செய்ததில், பிளஸ்-2 தேர்வை அரசு பள்ளிகளில் அதிக அளவு மாணவிகள் எழுதியுள்ளனர், ஆனால் தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் குறைந்த அளவிலான மாணவிகளே தேர்வு எழுதியுள்ளனர்.

    10-ம் வகுப்பு படித்த சுமார் 33.5 லட்சம் மாணவர்கள், 11-ம் வகுப்புக்கு செல்லவில்லை. காரணம் 5.5 லட்சம் பேர் தேர்வு எழுதவில்லை, 28 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.

    இதேபோல், சுமார் 32.4 லட்சம் மாணவர்கள், 12-ம் வகுப்பை தாண்டவில்லை. இவர்களில் 5.2 லட்சம் பேர் தேர்வே எழுதவில்லை. 27.2 லட்சம் பேர் தோல்வியடைந்துள்ளனர்.

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மத்திய கல்வி வாரியத்தில் மாணவர்கள் தோல்வி 6 சதவீதம். மாநில வாரியங்களின் தோல்வி 16 சதவீதம். பிளஸ்-2 தேர்வில், மத்திய வாரியத்தில் தேர்ச்சி பெறாதோர் 12 சதவீதமாகவும், மாநில வாரியங்களின் தேர்ச்சி பெறாதவர்கள் 18 சதவீதமாகவும் உள்ளது. 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் திறந்தநிலைப் பள்ளிகளின் செயல்திறன் மோசமாக உள்ளது.

    மத்தியபிரதேச மாநில வாரியத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் அதிக அளவில் தோல்வி அடைந்துள்ளனர். பீகார், உத்தரபிரதேச மாநிலங்களில் பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் அதிக அளவில் தோல்வி அடைந்துள்ளனர். 2022-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2023-ம் ஆண்டில் மாணவர்களின் ஒட்டுமொத்த செயல்திறன் குறைந்துள்ளது.

    அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் தேர்ச்சி பெறுவதில் மாணவிகளே ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

    மேற்கண்டவாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • விண்ணப்பிக்க, மே 16 முதல் ஜூன் 1 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
    • துணைத் தேர்வுகள் ஜூலை 2-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் 2023-2024-ம் ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதியும், பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மே 14-ந் தேதியும் வெளி யாகின. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, மே 16 முதல் ஜூன் 1 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

    தற்போது துணைத் தேர்வுக்கான கால அட்டவணையை அர சுத் தேர்வுகள் இயக்ககம் வெளி யிட்டுள்ளது. அதன்படி, பிளஸ் 2 துணைத் தேர்வுகள் ஜூன் 24-ந் தேதி தொடங்கி ஜூலை 1-ந் தேதி வரை நடைபெறுகிறது. அதே போல், பிளஸ் 2 துணைத் தேர்வுகள் ஜூலை 2-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடைபெறவுள்ளது.

    ஜூன் 24 மொழிப்பாடம், ஜூன் 25-ஆங்கிலம், ஜூன் 26-கணினி அறிவியல், அரசியல் அறிவியல், ஜூன் 27-வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல், ஜூன் 28-கணினி அறிவியல், புள்ளிவிவரங் கள், உயிர் வேதியியல், ஜூன் 28-இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம், ஜூன் 29-உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம் ஜூலை-1 கணிதம், விலங் கியல், வணிகவியல் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெற உள்ளன.

    ஜூலை 2-மொழிப் பாடம், ஜூலை 3-ஆங்கிலம், ஜூலை 4-இயற்பியல், பொருளியல், ஜூலை 5-கணினி அறிவியல், தொடர்பி யல் ஆங்கிலம், உயிரி வேதியியல், அரசியல் அறிவியல் ஜூலை 6-தாவரவியல், வரலாறு, ஜூலை 8-கணிதம், வணிகவியல், நுண்ணுயிரியல், ஜூலை 9-வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் தேர்வுகள் நடைபெறவுள்ளன.

    • பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 6-ந்தேதி வெளியானது.
    • மாணவரின் விடைத்தாளை திருத்திய ஆசிரியர் 88 மதிப்பெண்கள் கொடுத்துவிட்டு, மேலே 58 என பதிவு செய்துள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடந்தது.

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 6-ந்தேதி வெளியானது. விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் பள்ளிகள் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் விடைத்தாள்களை திருத்தியதில் குளறுபடி நடந்திருப்பது அம்பலமாகி உள்ளது.

    மறுகூட்டலுக்காக பணம் செலுத்தி விடைத்தாள் நகலை பெற்ற மாணவர் அதிர்ச்சி அடைந்தார்.

    மாணவரின் விடைத்தாளை திருத்திய ஆசிரியர் 88 மதிப்பெண்கள் கொடுத்துவிட்டு, மேலே 58 என பதிவு செய்துள்ளார். விடைத்தாளை திருத்திய தமிழ் ஆசிரியர் ஆங்கிலத்தில் கையொப்பம் இட்டதும் தெரிய வந்தது.

    மேலே குறிப்பிடப்படும் மதிப்பெண் மட்டுமே பதிவேற்றப்படும் என்பதால், சம்பந்தப்பட்ட மாணவருக்கு 30 மதிப்பெண்கள் குறைந்தது தற்போது தெரிய வந்துள்ளது.

    • சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் +2 பொதுத்தேர்வில் 578 மதிப்பெண் பெற்று ஆட்டோ ஓட்டுநரின் மகள் பூங்கோதை முதலிடம்.
    • பி.காம் அக்கவுண்டன்ஸ் அல்லது பைனாஸ் படிக்க ஆசைப்படுகிறேன் என பூங்கோதை தெரிவித்துள்ளார்.

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிகள் அபார சாதனை படைத்துள்ளனர்.

    4998 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதில் 4355 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 87.13 சதவீதமாகும். கடந்த ஆண்டைவிட 0.27 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது.

    சென்னை மாநகராட்சி பள்ளிகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி பூங்கோதை பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள பெண்கள் பள்ளியில் படித்தவர். இந்த மாணவி 600-க்கு 578 மதிப்பெண் பெற்றார். பள்ளியிலும் முதல் மாணவியாக வெற்றி பெற்றுள்ளார்.

    மாணவி பூங்கோதை கூறியதாவது:-

    ஏழை குடும்பத்தில் பிறந்தவள் நான். இவ்வளவு மதிப்பெண் பெறுவதற்கு எனது ஆசிரியைகள்தான் காரணம். என்னை ஊக்கப்படுத்தினார்கள். எப்போது சந்தேகம் கேட்டாலும் மனம் கோணாமல் சொல்லித் தருவார்கள். வீட்டில் அதிகமாக படிக்க மாட்டேன். இரவு 10 முதல் 11 மணி வரை மட்டுமே வீட்டில் படிப்பேன். பள்ளியில்தான் முழுமையாக படிப்பேன். சிறப்பு வகுப்பு எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. படிப்பிற்காக 6 மாதமாக டி.வி. பார்க்கவில்லை. காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளியில் இருந்து படிப்பேன்.

    பி.காம் அக்கவுண்டன்ஸ் அல்லது பைனாஸ் படிக்க ஆசைப்படுகிறேன். அம்மா வீட்டு வேலை செய்தும் அப்பா ஆட்டோ ஓட்டியும் குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனையடுத்து சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அரசுப் பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி பூங்கோதைக்கு உயர்கல்விக்கான முழு செலவையும் ஏற்பதாக எத்திராஜ் கல்லூரி நிர்வாகக் குழு தலைவர் முரளிதரன் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

    இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநரின் மகள் பூங்கோதைக்கு, எத்திராஜ் மகளிர் கல்லூரியில் இலவசமாகப் படிப்பதற்கான ஆணையை கல்லூரி நிர்வாகக் குழு தலைவர் முரளிதரன் நேரில் வழங்கியுள்ளார். 

    • நாடுமுழுவதும் தேர்வெழுதிய மாணவர்களில் 87.99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • cbse.gov.in, cbscresults.nic.in ஆகிய இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிபிஎஸ்இ நடத்திய 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எந்த ஒரு அறிவிப்பு இன்றி இன்று தேர்வு முடிவுகள் வெளியானது.

    இதை cbse.gov.in, cbscresults.nic.in ஆகிய இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிபிஎஸ்இ பொது தேர்வு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடைபெற்றது. இதில் 16,21,224 மாணவர்கள் தேர்வெழுதினர். இதில் 14,26,420 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

    நாடுமுழுவதும் தேர்வெழுதிய மாணவர்களில் 87.99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிக பட்சமாக திருவனந்தபுரத்தில் 99.91 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மண்டலத்தில் 98.47 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதில் பெங்களூர் மண்டலத்தில் 96.95 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி ஆகி உள்ளனர்.

    • படுகாயம் அடைந்த மாணவன் சின்னத்துரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார்
    • சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் வேறு பள்ளியில் சேர்ந்து படிப்பை தொடர அரசு நடவடிக்கை எடுத்தது.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பிளஸ்-2 படித்து வந்த சின்னதுரையை சாதிய மோதலால் சக மாணவர்கள் அரிவாளால் வெட்டினர். அதை தடுக்க வந்த அவரது தங்கை சந்திராவுக்கும் வெட்டு விழுந்தது.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

    இந்நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற நாங்குநேரி மாணவர் சின்னதுரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    இந்நிலையில், மாணவர் சின்னதுரையை நேரில் அழைத்து இயக்குநர் பா.ரஞ்சித் பாராட்டியுள்ளார்.

    மேலும், சின்னதுரையின் கல்லூரி கட்டணம் மற்றும் எவ்வித உதவியாக இருப்பினும் தனது 'நீலம் பண்பாட்டு மையம்' செய்வதற்கு தயாராக இருக்கிறது என்றும் பா.ரஞ்சித் உறுதியளித்துள்ளார்

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • படுகாயம் அடைந்த மாணவன் சின்னத்துரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.
    • சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் வேறு பள்ளியில் சேர்ந்து படிப்பை தொடர அரசு நடவடிக்கை எடுத்தது.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பிளஸ்-2 படித்து வந்த சின்னதுரையை சாதிய மோதலால் சக மாணவர்கள் அரிவாளால் வெட்டினர். அதை தடுக்க வந்த அவரது தங்கை சந்திராவுக்கும் வெட்டு விழுந்தது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

    இந்நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற நாங்குநேரி மாணவர் சின்னதுரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    அப்போது மாணவர் சின்னதுரைக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் பேனாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்பளிப்பாக வழங்கினார்

    அதன் பின்பு தலைமைச் செயலக வளாகத்தில் மாணவர் சின்னதுரை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "அதிக மதிப்பெண் எடுத்தற்காக முதலமைச்சர் என்னை நேரில் அழைத்து பாராட்டினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்களும் என்னை பாராட்டினார். நான் BCom படித்துவிட்டு CA படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். படிப்பதற்கான உதவிகளை செய்வதாக முதலமைச்சர் தெரிவித்தார்" என்று அவர் கூறினார்.

    தன்னை சாதிய வன்கொடுமைக்கு ஆளாக்கியவர்கள் குறித்து பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "எல்லாரும் ஒற்றுமையாக இருக்கணும். என்னை தாக்கிய மாணவர்களும் நன்றாக படித்து மேலே வர வேண்டும்" என்று தெரிவித்தார். 

    • ஏழை குடும்பத்தில் பிறந்தவள் நான். இவ்வளவு மதிப்பெண் பெறுவதற்கு எனது ஆசிரியைகள்தான் காரணம்
    • படிப்பிற்காக 6 மாதமாக டி.வி. பார்க்கவில்லை. காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளியில் இருந்து படிப்பேன்

    பிளஸ்-2 தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிகள் அபார சாதனை படைத்துள்ளனர்.

    4998 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதில் 4355 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 87.13 சதவீதமாகும். கடந்த ஆண்டைவிட 0.27 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது.

    மாநகராட்சி பள்ளிகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி பூங்கோதை பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள பெண்கள் பள்ளியில் படித்தவர். இந்த மாணவி 600-க்கு 578 மதிப்பெண் பெற்றார். பள்ளியிலும் முதல் மாணவியாக வெற்றி பெற்றுள்ளார்.

    மாணவி பூங்கோதை கூறியதாவது:-

    ஏழை குடும்பத்தில் பிறந்தவள் நான். இவ்வளவு மதிப்பெண் பெறுவதற்கு எனது ஆசிரியைகள்தான் காரணம். என்னை ஊக்கப்படுத்தினார்கள். எப்போது சந்தேகம் கேட்டாலும் மனம் கோணாமல் சொல்லித் தருவார்கள். வீட்டில் அதிகமாக படிக்க மாட்டேன். இரவு 10 முதல் 11 மணி வரை மட்டுமே வீட்டில் படிப்பேன். பள்ளியில்தான் முழுமையாக படிப்பேன். சிறப்பு வகுப்பு எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. படிப்பிற்காக 6 மாதமாக டி.வி. பார்க்கவில்லை. காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளியில் இருந்து படிப்பேன்.

    பி.காம் அக்கவுண்டன்ஸ் அல்லது பைனாஸ் படிக்க ஆசைப்படுகிறேன். அம்மா வீட்டு வேலை செய்தும் அப்பா ஆட்டோ ஓட்டியும் குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அரசுப் பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி பூங்கோதைக்கு உயர்கல்விக்கான முழு செலவையும் ஏற்பதாக எத்திராஜ் கல்லூரி சேர்மன் மைக் முரளிதரன் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.

    • பிளஸ்-2 தேர்வில் மாணவ-மாணவிகள் இந்த ஆண்டு 94.56 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
    • மாணவர் சின்னதுரை பிளஸ் 2 பொதுத்தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

    சென்னை:

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. பிளஸ்-2 தேர்வில் மாணவ-மாணவிகள் இந்த ஆண்டு 94.56 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த வருடம் தேர்ச்சி விகிதம் அரை சதவீதம் அதிகமாகும்.

    நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரை பிளஸ் 2 பொதுத்தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

    இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் தள பதிவில்,

    மாணவரை தொடர்புகொண்டு அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து, 11.08.2023 அன்று நான் உறுதியளித்தபடி அவர் விரும்பும் கல்லூரியில் இணைவதற்கு உதவுவதாகவும், அவரின் உயர் கல்விக்கு அனைத்து வகையிலும் துணை நிற்பேன் என்றும் உறுதிப்படுத்தினேன்.

    "கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம் - மு.க" என்று தெரிவித்துள்ளார்.


    • ஏழை, எளிய கூலி தொழிலாளர்கள் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் தான் மாநகராட்சி பள்ளியில் படிக்கின்றனர்.
    • முதலிடம் பெற்ற மாணவி பூங்கோதை ஆட்டோ டிரைவரின் மகள் ஆவார்.

    சென்னை:

    பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியானது. இதில் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிகள் அபார சாதனை படைத்துள்ளனர்.

    4998 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதில் 4355 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 87.13 சதவீதமாகும். கடந்த ஆண்டைவிட 0.27 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது.

    சென்னை மாநகராட்சி சார்பாக செயல்படும் 35 மேல்நிலைப் பள்ளிகளில் நுங்கம்பாக்கம் பள்ளி மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

    ஏழை, எளிய கூலி தொழிலாளர்கள் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் தான் மாநகராட்சி பள்ளியில் படிக்கின்றனர். அவர்களிலும் தனித்திறன் மிக்க கற்றல் திறன் உள்ள குழந்தைகள் பலர் உள்ளனர் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும்.

    பல்வேறு பாடங்களிலும் மாணவ-மாணவிகள் 100-க்கு 100 எடுத்து சாதனை படைத்துள்ளனர். வணிகவியல் பாடத்தில் 16 பேர், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்-14, பொருளாதாரம்-12, கணினி அறிவியல்-9, கணக்குப் பதிவியல்-2, புவியியல், கணிதம், விலங்கியல் பாடங்களில் தலா ஒருவர் வீதம் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர்.

    மாநகராட்சி பள்ளிகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி பூங்கோதை பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள பெண்கள் பள்ளியில் படித்தவர். இந்த மாணவி 600-க்கு 578 மதிப்பெண் பெற்றார். பள்ளியிலும் முதல் மாணவியாக வெற்றி பெற்றுள்ளார். 2-வது இடத்தில் கொளத்தூர் மாநகராட்சி பள்ளி மாணவர் ஷாரூக் 575 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தார். 3-வதாக பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலை பள்ளி மாணவிகள் ஹரினி பிரியா, திவ்யா ஸ்ரீ ஆகியோர் 573 மதிப்பெண்ணை பெற்றுள்ளனர்.

    முதலிடம் பெற்ற மாணவி பூங்கோதை ஆட்டோ டிரைவரின் மகள் ஆவார். அவரது தந்தை பார்த்திபன். தாயார் சிவகாமி வீட்டு வேலை செய்து வருகிறார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த பூங்கோதை சிறு வயது முதலே படிப்பில் சுட்டி.

    மாணவி பூங்கோதை கூறியதாவது:-

    ஏழை குடும்பத்தில் பிறந்தவள் நான். இவ்வளவு மதிப்பெண் பெறுவதற்கு எனது ஆசிரியைகள்தான் காரணம். என்னை ஊக்கப்படுத்தினார்கள். எப்போது சந்தேகம் கேட்டாலும் மனம் கோணாமல் சொல்லித் தருவார்கள். வீட்டில் அதிகமாக படிக்க மாட்டேன். இரவு 10 முதல் 11 மணி வரை மட்டுமே வீட்டில் படிப்பேன். பள்ளியில்தான் முழுமையாக படிப்பேன். சிறப்பு வகுப்பு எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. படிப்பிற்காக 6 மாதமாக டி.வி. பார்க்கவில்லை. காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளியில் இருந்து படிப்பேன்.

    பி.காம் அக்கவுண்டன்ஸ் அல்லது பைனாஸ் படிக்க ஆசைப்படுகிறேன். அம்மா வீட்டு வேலை செய்தும் அப்பா ஆட்டோ ஓட்டியும் குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாணவி பெற்ற மதிப்பெண் விவரம் தமிழ்-94, ஆங்கிலம்-89, பொருளாதாரம்-100, வணிகவியல்-100, கணக்குப் பதிவியல்-96, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்-99.

    கொளத்தூர் பள்ளி மாணவர் ஷாரூக் தமிழ்-97, ஆங்கிலம்-88, இயற்பியல்-93, வேதியியல்-98, கணினி அறிவியல்-100, கணிதம்-99, இவரது தந்தை ஷானவாஸ் எலக்ட்ரிஷன் ஆவார். 3-வது இடம் பிடித்த திவ்யாஸ்ரீ தந்தை காவலாளியாக வேலை பார்க்கிறார். அவர் பி.பி.ஏ. படிக்க வேண்டும் என்பதே ஆசை என்று தெரிவித்தார். சாதனை படைத்த மாணவிகளை பெரம்பூர் தலைமை ஆசிரியர் செல்வகுமாரி பாராட்டினார்.

    • பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த நிவேதா 2015-ம் ஆண்டில் திருநங்கைகளுடன் இணைந்து இருக்கிறார்.
    • நேற்று நடைபெற்ற நீட் தேர்வையும் நிவேதா எழுதி இருக்கிறார்.

    தமிழ்நாட்டில் இன்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283. தமிழகத்தில் தேர்வு எழுதியதும் அவர் ஒருவர்தான்.

    பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த நிவேதா 2015-ம் ஆண்டில் திருநங்கைகளுடன் இணைந்து இருக்கிறார். நேற்று நடைபெற்ற நீட் தேர்வையும் நிவேதா எழுதி இருக்கிறார். எப்படியாவது டாக்டர் ஆக வேண்டும் என்பதே அவரது ஆசையும். அவர் படிக்கும் லேடி வெலிங்டன் பள்ளியில் மாணவர் பேரவை தலைவராகவும் இருந்துள்ளார். மாணவி நிவேதாவை பள்ளி முதல்வர் ஹேமமாலினி பாராட்டினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • படுகாயம் அடைந்த மாணவன் சின்னத்துரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.
    • சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் வேறு பள்ளியில் சேர்ந்து படிப்பை தொடர அரசு நடவடிக்கை எடுத்தது.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்தவர் முனியாண்டி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி அம்பிகாபதி. இவர்களுக்கு சின்னத்துரை என்ற மகனும், சந்திரா என்ற மகளும் உள்ளனர்.

    இவர்கள் 2 பேரும் வள்ளியூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தனர்.

    பிளஸ்-2 படித்து வந்த சின்னத்துரைக்கும், நாங்குநேரியை சேர்ந்த மற்றொரு பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே சாதி ரீதியான மோதல் இருந்து வந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சின்னத்துரையை சக மாணவர்கள் அரிவாளால் வெட்டினர். அதை தடுக்க வந்த அவரது தங்கை சந்திராவுக்கும் வெட்டு விழுந்தது.

    இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படுகாயம் அடைந்த மாணவன் சின்னத்துரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவர் பிளஸ்-2 காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை மருத்துவமனையில் இருந்தவாறு எழுதினார். பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் வேறு பள்ளியில் சேர்ந்து படிப்பை தொடர அரசு நடவடிக்கை எடுத்தது.

    இந்நிலையில் இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மாணவர் சின்னத்துரை 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். 


    ×