என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விதிமுறைகள்"

    • சட்டபூா்வமாக இந்திய குடியுரிமை கோருவோா், தங்களைப் பற்றி தெரிவிக்கும் தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து பிரமாண பத்திரம் சமா்ப்பிக்க வேண்டும்.
    • அட்டவணையில் இடம்பெற்றுள்ள மொழிகளில் ஏதேனும் ஒன்று தமக்குத் தெரியும் என்பதற்கான உறுதி மொழியை வழங்க வேண்டும்.

    குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) நேற்று அமல்படுத்தப்பட்ட நிலையில், அந்தச் சட்ட விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அந்த விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சிஏஏ 2019-ன் கீழ், இந்திய குடியுரிமை கோருவோா், அதற்காக விண்ணப்பிப்பதற்கு முன்பு குறைந்தபட்சம் ஓராண்டு இந்தியாவில் கட்டாயம் தங்கியிருக்க வேண்டும். அந்த ஓராண்டுக்கு முந்தைய 8 ஆண்டுகளில் 6 ஆண்டு களுக்கு குறையாமல் விண்ணப்பதாரா் இந்தியாவில் தங்கியிருந்தால், அவா் இந்திய குடியுரிமை பெற தகுதியுடையவா்.

    சொந்த நாட்டு குடியுரிமையைக் கைவிடுவ தாகவும், இந்தியாவை தங்கள் நிரந்தர தாயகமாக்கிக் கொள்ள விரும்புவதாகவும் விண்ணப்பதாரா் உறுதிமொழி அளிக்க வேண்டும். இந்தியாவை பூா்வீகமாக கொண்டவா், இந்திய குடியுரிமை பெற்ற வரைத் திருமணம் செய்தவா், இந்திய குடியுரிமை பெற்ற வரின் 18 வயதுக்குட்பட்ட பிள்ளை, இந்திய பெற்றோருக்குப் பிறந்தவா், வெளிநாடு வாழ் இந்திய குடிமகன் அட்டையை வைத்திருப்பதாகப் பதிவு செய்துள்ளவா் தனி விண்ணப்பம் சமா்ப்பிக்க வேண்டும்.

    சட்டபூா்வமாக இந்திய குடியுரிமை கோருவோா், தங்களைப் பற்றி தெரிவிக்கும் தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து பிரமாண பத்திரம் சமா்ப்பிக்க வேண்டும். அத்துடன் விண்ணப்பதாரரின் நடத்தை குறித்து இந்திய குடிமகன் ஒருவரின் பிரமாண பத்திரத்தையும் இணைக்க வேண்டும். இத்தகைய விண்ணப்பதாரா்கள் அரசமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள மொழிகளில் ஏதேனும் ஒன்று தமக்குத் தெரியும் என்பதற்கான உறுதி மொழியை வழங்க வேண்டும்.

    இந்திய குடியுரிமை வழங்க அங்கீகரிக்கப்பட்டால், 'இந்திய அரசமைப்புச் சட்டம் மீது நம்பிக்கை மற்றும் விசுவாசம் கொண்டி ருப்போம்', 'இந்திய சட்டங் களை முழு நம்பிக்கையுடன் பின்பற்றுவோம்', 'இந்திய குடிமகனுக்கான கடமைகளை பூா்த்தி செய்வோம்' என்று விண்ணப்பதாரா் உறுதி மொழி ஏற்க வேண்டும். விண்ணப்பதாரரின் செல்லுபடியாகும் அல்லது காலாவதியான வெளிநாட்டு கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்), தங்கும் அனுமதி, வாழ்க்கைத் துணையின் இந்திய குடியுரிமைக்கான ஆதாரமாக அவரின் இந்திய கடவுச்சீட்டு, பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை சமா்ப்பிக்க வேண்டும். எனினும் இந்த ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டியது கட்டாயமல்ல.

    இந்திய குடியுரிமை வழங்குவதற்கான நடைமுறைகள் நிறைவடைந்த பின்னா், சிஏஏ 2019-இன் கீழ் இந்திய குடியுரிமை பெற்றவராகப் பதிவு செய்யப்படும் விண்ணப்ப தாரருக்கு அதற்கான எண்ம (டிஜிட்டல்) சான்றிதழ் வழங்கப்படும். ஆவண வடிவில் இந்திய குடியுரிமை சான்றிதழ் கோருவோா் அதற்குத் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9-ந் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
    • தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 30.04.2022வரை காலியாக உள்ள திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கழுமலம் மற்றும் வடமருதூர், உளுந்தூர் பேட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த நெய்வனை ஆகிய 3 ஊராட்சி மன்ற தலைவர் பதவியிடங்கள் மற்றும் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் அ.பாண்டலம் ஊராட்சி மன்ற வார்டு எண்-6, நெடுமானூர் ஊராட்சி மன்ற வார்டு எண்-7, ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தின் பள்ளிப்பட்டு ஊராட்சி மன்ற வார்டு எண்-3, உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் எல்லைகிராமம் ஊராட்சி மன்ற வார்டு எண்-1 மற்றும் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தின் நிறைமதி ஊராட்சி மன்ற வார்டு எண்-4 ஆகிய 5 ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் காலிப்பதவி யிடங்களுக்கான தற்செயல் தேர்தல்கள் நடத்திடும் பொருட்டு தமிழ்நாடுமாநில தேர்தல் ஆணையத்தால் திட்ட அறிவிக்கை வெளி யிடப்பட்டுள்ளது.

    அதன்படி வேட்பு மனுத்தாக்கல் இன்று முதல் வருகின்ற 27 - ந் தேதி வரை நடைபெற உள்ளது. வேட்புமனு பரிசீலனை 28- ந் தேதியும், வேட்பு மனுக்கள் திரும்பப் பெறும் நாள் 30- ந் தேதி ஆகும். அடுத்த மாதம் ஜூலை 9-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 12- ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

    எனவே மேற்கண்ட பகுதியில் வருகின்ற ஜூலை 14- ந் தேதி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேற்கண்ட 8 கிராம ஊராட்சிகள் முழுவதும் 18.06.2022 முதல் 14.07.2022 வரை நடைமுறையில் இருக்கும், மேற்படி பகுதிகளில் பொது இடங்களில் வேட்பாளர்கள் பெயரிலோ, கட்சிகளின் பெயரிலோ மற்றும் அதன் தொடர்பான அனைத்து விதமான வாசகங்கள் அச்சிடப்பட்ட எவ்வித விளம்பரத்தட்டிகளோ விளம்பரப் பட்டிகைகளோ சுவரொட்டிகளோ, விளம்பர படங்களோ இருப்பின் அவற்றை நீக்கவும், அரசுக் கட்டிடம், தனியார் கட்டிட சுவர்களில் வேட்பாளர்கள் பெயரோ, கட்சிகளின் பெயரோ அல்லது அதன் தொடர்பான வாசகங்கள் வண்ணப்பூச்சுகளால் எழுதப்பட்டிருந்தால், அவைகள் அனைத்தையும் இடத்திற்கு தகுந்தாற்போல் வேறுவிதமான வண்ணப்பூச்சு களால் மறைத்து உடனடியாக அழிக்கப்பட வேண்டும் என சம்மந்தப்பட்ட கட்சிகள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்கள் கேட்டுக் கொள் ளப்படுகிறார்கள்.மேற்படி தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

    ×