search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதல்ஜோடி"

    • 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
    • இருதரப்பு பெற்றோர்களும் திருமணத்தை ஏற்றுக்கொண்டதால் மணமக்களை மகிழ்ச்சியுடன் அழைத்து சென்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், முகாசிபிடாரியூர் ஊராட்சி, 1010 நெசவாளர் காலனியில் வசிப்பவர் கிருஷ்ணன், இவரது மகன் ரஞ்சித் குமார் (30). பெருந்துறை தனியார் பத்திர எழுத்தரிடம் பணியாற்றி வருகிறார்.

    சென்னிமலை அடுத்துள்ள தகடூர், முருங்கையம்மன் கோவில் அருகில் வசிப்பவர் சரவணன். இவரது மகள் சுகன்யா (21). இவர்கள் இருவரின் குடும்பங்களும் முகாசிபிடாரியூர் 1010 காலனியில் அருகருகே வசித்த போது பழக்கம் ஏற்பட்டு 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

    இருவர் வீட்டிலும் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளாத நிலையில் வீட்டை விட்டு வெளியேறி சிவன்மலை மலை அடிவாரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு சென்னிமலை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    போலீசார் இருதரப்பு பெற்றோர்களுக்கு தகவல் சொல்லி வரவழைக்கப்பட்டு இருதரப்பு பெற்றோர்களும் திருமணத்தை ஏற்றுக்கொண்டதால் மணமக்களை மகிழ்ச்சியுடன் அழைத்து சென்றனர்.

    • கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.
    • பெண் வீட்டில் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள மானாசிபாளையத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகன் சிவராமகிருஷ்ணன். இவர் திருப்பூர், ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த தெய்வசிகாமணி என்பவரது மகள் ரம்யாவை கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். பெண் வீட்டில் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை வீட்டை விட்டு ரம்யா வெளியேறினார். பின்னர் கோவை மாவட்டம், சூலூர் வட்டம், செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவிலில் சிவராம கிருஷ்ணனும், ரம்யாவும் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த நிலையில் பாதுகாப்பு கேட்டு அவர்கள் இருவரும் காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    அப்போது தனது பெற்றோர் எங்களை பிரிக்க முயற்சிப்பதாகவும், எனவே தங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறும் ரம்யா போலீசாரிடம் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ரம்யாவின் வயது சான்றிதழை ஆய்வு செய்த போது அவர் மேஜர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரது விருப்பப்படி கணவர் சிவராமன் வீட்டிற்கு செல்லலாம் என்று தெரிவித்தனர் .இதையடுத்து புதுமண தம்பதிகள் இருவரும் மானாசிபாளையத்தில் உள்ள சிவராமகிருஷ்ணன் வீட்டிற்கு சென்றனர்.

    • திருமணம் செய்து கொண்ட காதல்ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
    • போலீசார் அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சாத்தம்பாடி கிராமம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பிரசாந்த் (வயது24).டிப்ளமோ மெக்கானிக்கல் படித்துள்ளார். இவர் அதே பகுதி தெற்கு தெருவைச் சேர்ந்த சக்கரவர்த்தி மகள் விந்தியா (20) (நர்சிங் மாணவி) என்பவரை கடந்த ஒரு வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் பெண்ணின் பெற்றோர்களிடம் பெண் கேட்டதாக கூறப்படுகிறது.பெண் கொடுக்க மறுத்ததால் விந்தியாவை பிரசாந்த் கும்பகோணம் அருகே உள்ள வலங்கைமான் மாரியம்மன் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பிறகு இவர்கள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுமதி புதுமணத் தம்பதிகளிடம் விசாரணை செய்து இரு தரப்பு பெற்றோர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்த பெண்ணின் பெற்றோர்கள் தாங்கள் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்ததால் வர மறுத்து விட்டனர். இந்நிலையில் பிரசாந்தின் பெற்றோர்கள் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு வந்தனர். அவர்களிடம் அறிவுரைகள் கூறி காதல் ஜோடியான புதுமண தம்பதிகளை அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.

    ×