search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னிமலை போலீஸ் நிலையத்தில் காதல் திருமணம் செய்த ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம்
    X

    சென்னிமலை போலீஸ் நிலையத்தில் காதல் திருமணம் செய்த ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

    • 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
    • இருதரப்பு பெற்றோர்களும் திருமணத்தை ஏற்றுக்கொண்டதால் மணமக்களை மகிழ்ச்சியுடன் அழைத்து சென்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், முகாசிபிடாரியூர் ஊராட்சி, 1010 நெசவாளர் காலனியில் வசிப்பவர் கிருஷ்ணன், இவரது மகன் ரஞ்சித் குமார் (30). பெருந்துறை தனியார் பத்திர எழுத்தரிடம் பணியாற்றி வருகிறார்.

    சென்னிமலை அடுத்துள்ள தகடூர், முருங்கையம்மன் கோவில் அருகில் வசிப்பவர் சரவணன். இவரது மகள் சுகன்யா (21). இவர்கள் இருவரின் குடும்பங்களும் முகாசிபிடாரியூர் 1010 காலனியில் அருகருகே வசித்த போது பழக்கம் ஏற்பட்டு 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

    இருவர் வீட்டிலும் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளாத நிலையில் வீட்டை விட்டு வெளியேறி சிவன்மலை மலை அடிவாரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு சென்னிமலை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    போலீசார் இருதரப்பு பெற்றோர்களுக்கு தகவல் சொல்லி வரவழைக்கப்பட்டு இருதரப்பு பெற்றோர்களும் திருமணத்தை ஏற்றுக்கொண்டதால் மணமக்களை மகிழ்ச்சியுடன் அழைத்து சென்றனர்.

    Next Story
    ×