என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாராஷ்டிரா அரசியல்"

    • தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜக- சிவசேனா கூட்டணி அரசின் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
    • பிரதமர் மோடிக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.

    தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவியேற்றது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சரத் பவார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது, செய்தியாளர் ஒருவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நம்பத்தகுந்த முகமாக யார் இருப்பார்கள்? என கேட்டதற்கு கையை உயர்த்தி "சரத் பவார்" என அக்கட்சியின் தலைவர் சரத் பவார் பதிலளித்துள்ளார்.

    செய்தியாளர்கள் சந்திப்பில் மேலும் அவர் கூறியதாவது:-

    தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன என 2 நாட்களுக்கு முன் பிரதமர் மோடி பேசியிருந்தார்.

    இப்போது சில எம்எல்ஏக்கள் பாஜக- சிவசேனா கூட்டணி அரசின் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். இதன்மூலம், அவர்கள் மீத இருந்த குற்றச்சாட்டுகள் நீங்கிவிட்டன என தெளிவாக தெரிகிறது.

    இதனால் பிரதமர் மோடிக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.

    எவ்வாறாயினும், எனக்கு இது ஒன்றும் புதிதல்ல. 1980ல் நான் தலைமை வகித்த கட்சியில் 58 எம்எல்ஏக்கள் இருந்தனர். பின்னர் அனைவரும் வெளியேறி 6 எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்தனர். ஆனால் நான் எண்ணிக்கையை பலப்படுத்தினேன். என்னை விட்டுச் சென்றவர்கள் தங்கள் தொகுதிகளில் தோல்வியடைந்தனர்.

    நான் நாளை கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன். அங்கு இந்த விவகாரம் குறித்து விவாதிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அஜித் பவாருக்கு மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இன்று அன்பான வரவேற்பு அளித்தார்.
    • அஜித் பவார் பதவி ஏற்றது தொடர்பாக அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கருத்து தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநில எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) மூத்த தலைவர் அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவு அளித்து மாநிலத்தின் துணை முதல்வராக பதவியேற்றார்.

    ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் ரமேஷ் பைஸ், அஜித் பவாருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சகன் புஜ்பால், தனஞ்சய் முண்டே, திலீப் வால்ஸ் பாட்டீல் உள்பட மொத்தம் 9 மூத்த தலைவர்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

    ஆளும் கூட்டணியில் இணைந்த அஜித் பவாருக்கு மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இன்று அன்பான வரவேற்பு அளித்தார்.

    பின்னர் அஜித் பவார் பதவி ஏற்றது தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், "மகாராஷ்டிராவில் இப்போது இரட்டை எஞ்சின் அரசாங்கத்தில் மூன்று இயந்திரம் உள்ளது. இது இனி புல்லட் ரெயிலாக இயங்கும். மாநிலம் வளர்ச்சிப் பாதையில் விரைந்து செல்லும்" என்றார்.

    • மகாராஷ்டிர மாநில துணை முதல் மந்திரியாக அஜித் பவார் பதவியேற்றார்.
    • அங்கு நடக்கும் அரசியல் விளையாட்டை மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றார் சஞ்சய் ராவத்.

    மும்பை:

    மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் அஜித் பவார் அதிருப்தியில் இருந்தார். அண்மையில் கட்சியின் செயல் தலைவர் பொறுப்பில் சுப்ரியா சுலே நியமனம் செய்யட்டார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த அஜித் பவார் ஆளும் சிவசேனா- பா.ஜ.க. கூட்டணியில் இணைந்துள்ளார்.

    இதற்கிடையே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மகாராஷ்டிர எதிர்க்கட்சி தலைவருமான அஜித் பவார் இன்று தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 9 பேருடன் மகாராஷ்டிர ஆளுநரைச் சந்தித்தார்.

    ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் அஜித் பவார் இணைந்துள்ளார். மகாராஷ்டிர துணை முதல் மந்திரியாக அஜித் பவார் பதவியேற்றார். அவருடன் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 8 பேர் மந்திரிகளாக பதவியேற்றனர்.

    இந்நிலையில், பா.ஜ.க. கூட்டணியில் அஜித் பவார் துணை முதல்மந்திரியாக பதவியேற்றது குறித்து உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் டுவீட் செய்துள்ளார். அதில்,

    மகாராஷ்டிர அரசியலை சுத்தப்படுத்தும் பணியை சிலர் கையில் எடுத்துள்ளனர், அவர்கள் வழிக்கு வரட்டும். நான் சரத் பவாருடன் இப்போதுதான் பேசினேன். அவர், நான் வலிமையானவன். எங்களுக்கு மக்கள் ஆதரவு உள்ளது. உத்தவ் தாக்கரே மூலம் அனைத்தையும் மீண்டும் உருவாக்குவோம். ஆம், இந்த விளையாட்டை மக்கள் நீண்ட காலம் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என பதிவிட்டுள்ளார்.

    மேலும், பா.ஜ.க. எதிர்க்கட்சிகளை உடைக்கிறது. அவர்கள் ஆட்சியை உருவாக்குகிறார்கள், உடைக்கிறார்கள். பிரதமர் மோடியால் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் இன்று பதவியேற்றனர். அதாவது அந்தக் கூற்றுகள் தவறானவை அல்லது பாஜக ஊழல்வாதிகளை தங்கள் கட்சியில் சேர்க்கிறது என தெரிவித்தார்.

    • ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் அஜித் பவார் இணைந்துள்ளார்.
    • அவருடன் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 8 பேர் மந்திரிகளாக பதவியேற்றனர்.

    மும்பை:

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மகாராஷ்டிர எதிர்க்கட்சி தலைவருமான அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 9 பேருடன் மகாராஷ்டிர ஆளுநரைச் சந்தித்தார். மகாராஷ்டிர துணை முதல் மந்திரியாக அஜித் பவார் பதவியேற்றார். அவருடன் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 8 பேர் மந்திரிகளாக பதவியேற்றனர். இதனால் மகாராஷ்டிரா அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    எது நடந்தாலும் வேதனையானது, கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவோம்.

     தேசியவாத காங்கிரஸ் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியாது. சரத் பவாரின் அந்தஸ்து மேலும் உயரும். இதற்குப் பிறகுதான் எங்கள் நம்பகத்தன்மை உயரும்.

    அஜித் பவாருக்கு வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம். என்னால் ஒருபோதும் எனது மூத்த சகோதரருடன் சண்டையிட முடியாது.

    ஒரு சகோதரியாக அவரை எப்போதும் நேசிக்கிறேன் என தெரிவித்தார்.

    • மகாராஷ்டிர துணை முதல் மந்திரியாக அஜித் பவார் நேற்று பதவியேற்றார்.
    • இதனால் மகாராஷ்டிரா மாநில அரசியலில் திடீரென பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    மும்பை:

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மகாராஷ்டிர எதிர்க்கட்சி தலைவருமான அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 9 பேருடன் மகாராஷ்டிர ஆளுநரைச் சந்தித்தார். மகாராஷ்டிர துணை முதல் மந்திரியாக அஜித் பவார் பதவியேற்றார். அவருடன் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 8 பேர் மந்திரிகளாக பதவியேற்றனர். இதனால் மகாராஷ்டிரா அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயந்த் பாட்டீல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    மகாராஷ்டிர சட்டசபை சபாநாயகரிடம், தகுதி நீக்க மனு ஒன்றை நாங்கள் வழங்கி உள்ளோம்.

    அதற்கான நகல்களை விரைவில் அனுப்புவோம். இந்த தகுதி நீக்க மனு அஜித் பவார் உள்பட 9 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    கட்சியை விட்டுச் செல்கிறோம் என அவர்கள் எந்தவொரு நபரிடமும் தகவல் தெரிவிக்கவில்லை. இது தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு எதிரானது.

    அவர்கள் மீண்டும் கட்சிக்கு திரும்புவார்கள் என நம்புகிறோம். அவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என தெரிவித்தார்.

    • 40 எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு இருப்பதாக அஜித் பவார் தகவல்
    • கடந்த ஆண்டு உத்தவ் தாக்கரே கட்சி உடைக்கப்படடு ஷிண்டே முதல்வராக பதவி ஏற்றார்

    மகாராஷ்டிர மாநில அரசில் நேற்று திடீர் திருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் (சரத் பவார் அண்ணன் மகன்) 39 எம்.எல்.ஏ.க்களுடன் ஆளுங்கட்சிக்கு ஆதரவு அளித்து துணை முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் 8 எம்.எல்.ஏ.க்களும் அமைச்சராக பதவி ஏற்றனர்.

    2019-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் இருந்து மகாராஷ்டிர மாநில அரசின் நகர்வுகளை பார்த்தோம் என்றால், ஸ்திரதன்மையற்ற நிலை என்றே கூறலாம்.

    சட்டசபை தேர்தலின்போது பா.ஜனதா மற்றும் சிவசேனா கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. பா.ஜனதா 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. 288 இடங்களை கொண்ட மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க போதுமான பெரும்பான்மையை பா.ஜனதா தலைமையிலான கூட்டணி பிடித்தது.

    என்றாலும் உத்தவ் தாக்கரே தனக்கு முதலமைச்சர் பதவி வேண்டும் என அடம்பிடித்ததால் சிக்கல் நீடித்தது. இறுதியில் அஜித் பவார் துணையுடன் பா.ஜனதாவின் பட்நாவிஸ் முதல்வராக பதவி ஏற்றார். ஆனால் சர்த் பவார் அப்போது அஜித் பவாருடன் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் செல்வதை தடுத்து 60 மணி நேரத்திற்குள் பட்நாவிஸை ராஜினாமா செய்ய வைத்தார்.

    அதன்பின் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, காங்கிரஸ் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைத்தன. இந்த கூட்டணி நீண்ட நாட்கள் நீடிக்காது என்று கூறிவந்த பா.ஜனதா, எப்படியாவது இந்த ஆட்சியை கவிழ்த்துவிட திட்டமிட்டது.

    இதற்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் வாய்ப்பு கிடைத்தது. உத்தவ் தாக்கரே கட்சியில் இருந்து ஏக் நாத் ஷிண்டே பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களுடன் வெளியேறி பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தார். உத்தவ் தாக்கரேயின் கட்சி உடைந்தால் போதும் என்று நினைத்த பா.ஜனதா துணை முதல்வர் பதவியை பெற்றுக் கொண்டது.

    சரியாக ஒரு வருடம் முடிந்த நிலையில் தற்போது அடுத்த ஸ்ட்ரைக். சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைக்கப்பட்டுள்ளது.

    53 எம்.எல்.ஏ.-க்களில் 40 பேர் ஆதரவுடன் அஜித் பவார் துணை முதல்வராக பதவி ஏற்றுள்ளார். மேலும், தேசியவாத காங்கிரஸ் நாங்கள்தான் எனவும் தெரிவித்துள்ளார். சரத் பவார் சட்டப்போராட்டம் நடத்தினாலும் உத்தவ் தாக்கரேவுக்கு ஏற்பட்ட நிலை ஏற்படலாம்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் 48 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி 41 இடங்களை பிடித்தது. தற்போது பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்று சேரும் நிலை உள்ளது. இதில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா உள்ளது.

    பா.ஜனதாவுக்கு அதிக இடங்களை பெற்றுத்தரும் ஒரு மாநிலமாக மகாராஷ்டிரா பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் கூட்டணியால் பல இடங்கள் பறிபோனால் என்னவாகும் என்பதை யோசித்த பா.ஜனதா அதற்கு பின்னால் இருந்து வேலை செய்திருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 27.84 சதவீத வாக்குகள் பெற்றிருந்தன. சிவசேனா 23.5 சதவீதம், தேசியவாத காங்கிரஸ் 15.66 சதவீதம், காங்கிரஸ் 16.41 சதவீதம். இந்த மூன்று கட்சிகளின் சதவீதம் 45-ஐ தாண்டும்.

    அதனால் கட்சிகளை துண்டு துண்டாக்கினால் வாக்குகள் பிரிந்து அது தங்களுக்கு சாதகமாகும் என கணக்கு போட்டிருக்கலாம்.

    கடந்த சில நாட்களுக்கு முன், 2019-ல் பா.ஜனதா ஆட்சியமைக்கு ஆதரவு தருவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சம்மதம் தெரிவித்தார் என பட்நாவிஸ் தெரிவித்திருந்தார். அதற்கு எந்த நேரத்தில் எந்த முடிவு எடுக்க வேண்டும். கூக்லி வீசுவதற்கான நேரம் தனக்கு தெரியும் என்று சரத் பவார் பதில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சரத் பவார் அண்ணன் மகன் அஜித் பவார் நேற்று மகாராஷ்டிரா அமைச்சரவையில் இணைந்தார்
    • தன்னுடன் 40 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதாக தெரிவித்துள்ளதால், சரத் பவாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது

    சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஒரு கலகத்தை உண்டாக்கி, நேற்று ஏக் நாத் ஷிண்டேவின் மகாராஷ்டிர மாநில அரசில் இணைந்தார். அவர் துணை மந்திரியாக பதவி ஏற்றுக் கொண்ட நிலையில், மேலும் 8 எம்.எல்.ஏ.க்கள் மந்திரியாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

    மொத்தம் 53 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில் 40-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தன்னுடன் இருப்பதாகவும், தேசியவாத காங்கிரஸ் நாங்கள்தான் என்னும் குறிப்பிட்டுள்ளார்.

    இது சரத் பவாருக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது. தன்னுடைய சொந்த அண்ணன் மகனே துரோகம் செய்துள்ளார். கட்சியின் நிலை என்ன? என்பது குறித்து அவர் முக்கிய முடிவு எடுக்க வேண்டிய நிலையில் அஜித் பவார் துரோகம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு சரத் பவார் ''குடும்பத்திற்குள் எந்த பிரச்சினையும் இல்லை. குடும்பத்திற்குள் அரசியல் குறித்து விவாதிப்பதில்லை. ஒவ்வொருவரும் அவர்களது தங்களது சொந்த முடிவை எடுக்கிறார்கள்'' என்றார்.

    சரத் பவார் இன்று காலை சுதந்திர போராட்ட வீரரும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஒய்.பி. சவான் நினைவிடத்திற்கு செல்கிறார். புறப்படும் முன் ''நான் இதுவரை யாரையும் அணுகவில்லை. நேற்றில் இருந்து யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. தற்பேது சதாரா செல்கிறேன்'' என்றார்.

    • சரத் பவார் கிரிக்கெட்டுடன் தொடர்பு உள்ளவர் என்பதால் கூக்லி குறித்து பேசுவார்
    • தற்போது அஜித் பவார் வெளியேறியதை ஹிட்விக்கெட் என ஷிண்டே தெரிவித்துள்ளார்

    மகாராஷ்டிர மாநில அரசியலில் நேற்று திடீர் கலகம் ஒன்று ஏற்பட்டது. சரத் பவாரின் தேசியவாத கங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த அஜித் பவார், ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் இணைந்தார். அவர் துணை முதல்வராக பதவி ஏற்ற நிலையில் மேலும் 8 எம்.எல்.ஏ.-க்கள் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.

    53 எம்.எல்.ஏ.-க்களில் 40 பேர் தன்னுடன் இருப்பதாகவும், இனிமேல் நாங்கள்தான் தேசிவாத காங்கிரஸ் என்றும் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

    அரசியல் அனுபவத்தில் இந்தியாவின் தலைசிறந்தவரான சரத் பவாருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளதா? என அரசியல் விமர்சகர்கள் மூக்கின்மேல் கைவைத்துள்ளனர்.

    அரசியலில் எந்தவொரு சூழ்நிலையிலும் தெளிவான முடிவை எடுக்கக் கூடியவர் சரத் பவார். இவருக்கும் கிரிக்கெட்டிற்கும் அதிக தொடர்பு உண்டு. இவரது மாமனார் சுழற்பந்து பந்து வீச்சாளர். கூக்லி பந்து வீசுவதில் தலைசிறந்தவர். சரத் பவாரும் ஐசிசி தலைவராக இருந்துள்ளார்.

    இதனால் அரசியல் முடிவு எடுக்கப்படும்போது, எந்தநேரத்தில் எந்த முடிவு எடுக்க வேண்டும் என்பதை, கூக்லி பந்தை எப்போது வீச வேண்டும் என்பது எனக்குத் தெரியும் என்பார்.

    2019-ம் ஆண்டு இதேபோன்று அஜித் பவார் கலகத்தை ஏற்படுத்தும்போது, துரிதமாக செயல்பட்டு அதை முறியடித்தார். அப்போது அஜித் பவாரை நம்பி ஏமாந்த பட்நாவிஸ், தங்களுடன் கூட்டணி வைக்க சரத் பவார் சம்மதம் தெரிவித்தார். அந்த நிலையில் எப்போது 'கூக்லி' பந்து வீசுவது என்பது எனக்குத் தெரியும்.

    நேற்றைய விவகாரத்திற்குப்பின் சரத் பவாருக்கு உரித்த பாணியில் மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக் நாத் ஷிண்டே பதில் அளித்துள்ளார்.

    ஏக் நாத் ஷிண்டே கூறுகையில் ''இது புதிய அரசு அல்லை. பிரதமர் மோடி தலைமையின் கீழ் சிவசேனா- பாஜனதா அமைத்த அரசு செயல்பட்டு வருகிறது. மகாராஷ்டிர மாநில முன்னேற்றத்திற்கான வேலைகள் சென்று கொண்டிருக்கின்றன. அஜித் பவார் அதனை நம்பியுள்ளார். அதன்காரணமாக எங்களுக்கு ஆதரவு அளித்து, அரசுடன் இணைந்துள்ளார்.

    பரந்த மனதுடன் அவரையும், அவருடைய எம்.எல்.ஏ.க்களையும் வரவேற்கிறேன். அவருடனான எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மகாராஷ்டிர மாநில முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள். இரண்டு என்ஜின் அரசு, புல்லட் ரெயில் வேகத்தில் இயங்கும். எம்.வி.ஏ. அரசு உடைந்து விட்டது. சிலர் கூக்லி, க்ளீன் போல்டு குறித்து பேசி வருகிறார்கள். ஆனால், க்ளீன் போல்டு... அதுவும் ஹிட் விக்கெட் என்பதை எல்லோரும் பார்த்து இருப்பார்கள்'' என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அஜித் பவார் உடன் 9 பேர் நேற்று மந்திரியாக பதவி ஏற்றனர்
    • தேசியவாத காங்கிரஸ் ஜிதேந்திர அவாத்தை எதிர்க்கட்சி தலைவராக நியமித்துள்ளது

    மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜித் பவார் மற்றும் 8 எம்.எல்.ஏ.க்கள் நேற்று மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டனர். துணை முதல்வராக பதவி ஏற்ற அஜித் பவார், 40 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்து இனிமேல் நாங்கள்தான் தேசியவாத காங்கிரஸ் எனத் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே சரத் பவார் ஆதரவாளர் ஜெயந்த் பாட்டீல், சபாநாயகருக்கு ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் அஜித் பவார் உள்ளிட்ட 9 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதுகுறித்து மகாராஷ்டிர மாநில சபாநாயகர் கூறுகையில் ''9 தேசியவாத எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற ஜெயந்த் பாட்டீல் மனுவை பெற்றுக் கொண்டேன். அதை கவனமாக படிப்பேன். அவர் குறிப்பிட்டுள்ள விவரங்களை ஆய்வு செய்து, அதற்குரிய நடவடிக்கையை எடுப்பேன்'' என்றார்.

    அஜித் பவாருக்கு எத்தனை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவாக உள்ளனர் என்ற கேள்விக்கு, ''அதுபற்றி தகவல் என்னிடம் இல்லை என்ற அவர், புதிய எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வது சபாநாயகரின் தனியுரிமை என்றார்.

    நேற்று தேசியவாத காங்கிரஸ் ஜிதேந்திர அவாத்தை எதிர்க்கட்சி தலைவராக நியமித்துள்ளது.

    • சரத்பவார், அஜித்பவார் தங்கள் பலத்தை நிரூபிக்க இன்று களத்தில் இறங்குகின்றனர்.
    • அஜித்பவார் தரப்பும் இன்று எம்.எல்.ஏ.க்கள், ஆதரவாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளது.

    மும்பை:

    மகாராஷ்டிரத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவை உடைத்ததால் மாநிலத்தில் மீண்டும் பா.ஜனதா கூட்டணி ஆட்சி மலர்ந்தது.

    இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாரும் எதிர்பாராத வகையில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த தேசியவாத காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் அஜித்பவார் பா.ஜனதா கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்தார். மேலும் ராஜ்பவனில் அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும், அவரது ஆதரவாளர்கள் 8 பேர் மந்திரியாகவும் பதவி ஏற்றனர்.

    ஏக்நாத் ஷிண்டே பின்பற்றிய அதே பாணியில் அஜித்பவார் தேசியவாத காங்கிரசை உடைத்தார். அஜித்பவார் கட்சியை உடைத்ததை அடுத்து சரத்பவார், அவரது ஆதரவாளர் ஜித்தேந்திர அவாத்தை எதிர்க்கட்சி தலைவராக அறிவித்தார். மேலும் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக அஜித்பவார் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்ற செயல் தலைவர் பிரபுல் பட்டேல், சுனில் தட்காரே எம்.பி.யை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார்.

    இதேபோல மந்திரி பதவி ஏற்ற அஜித்பவார் உள்பட 9 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யவும் சரத்பவார் தரப்பு சபாநாயகர் ராகுல் நர்வேக்கரிடம் கடிதம் கொடுத்தது.

    இதேபோல அஜித்பவார் தரப்பும் சரத்பவார் ஆதரவாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது. அவர்கள் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீலை நீக்கி, அவருக்கு பதிலாக மாநில தலைவராக சுனில் தட்காரேயை நியமித்தது. மேலும் ஜெயந்த் பாட்டீல், ஜித்தேந்திர அவாத்தை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு கடிதம் கொடுத்து உள்ளது.

    தங்களுக்கு 40 எம்.எல். ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக அஜித்பவார் தரப்பு கூறிவருகிறது. இதேபோல பதவி ஏற்ற 9 எம்.எல்.ஏ.க்கள் தவிர மற்ற அனைத்து எம்.எல்.ஏ.க்களும் எங்கள் அணியில் இருப்பதாக சரத்பவார் அணி கூறியுள்ளது. எனினும் யாருக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என்ற விவரம் தெரியாமல் உள்ளது.

    இந்த விவகாரம் குறித்து சபாநாயகர் ராகுல் நர்வேக்கர் நேற்று கூறுகையில், "அஜித்பவாருக்கு எத்தனை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்து உள்ளனர் என்பது எனக்கு தெரியாது. கட்சி உடைந்தது தொடர்பாகவும் யாரும் மனு கொடுக்கவில்லை. அஜித்பவார் உள்ளிட்ட 9 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய ஜெயந்த் பாட்டீல் மனு கொடுத்து உள்ளார். தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசில் உள்ளதா அல்லது எதிர்க்கட்சியாக உள்ளதா என்பது உறுதியாக தெரியவில்லை" என்றார்.

    அஜித்பவாருக்கு 25 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.

    இதேபோல சரத்பவாருக்கு ஆதரவாக ஜெயந்த் பாட்டீல், ஜித்தேந்திர அவாத், ரோகித் பவார், ராஜேஸ் தோபே, அனில் தேஷ்முக், பாலாசாகேப் பாட்டீல் உள்பட 15 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக தெரிகிறது. 15 எம்.எல். ஏ.க்கள் எந்த அணியில் உள்ளனர் என்பது மர்மமாக உள்ளது.

    இதற்கிடையே தேசியவாத காங்கிரஸ் கட்சியில் நிலவும் நெருக்கடி குறித்து சட்ட வல்லுனர்களிடம் சரத்பவார் நேற்று ஆலோசனை நடத்தியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    இந்தநிலையில் சரத்பவார், அஜித்பவார் தங்கள் பலத்தை நிரூபிக்க இன்று (புதன்கிழமை) களத்தில் இறங்குகின்றனர். இருவரும் தனித்தனியாக தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

    சரத்பவார் நடத்தும் கூட்டம் மதியம் 1 மணிக்கு ஒர்லியில் உள்ள யஷ்வந்த்ராவ் சவான் அரங்கில் நடக்கிறது. கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கலந்து கொள்ளவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    இதேபோல அஜித்பவார் தரப்பும் இன்று எம்.எல்.ஏ.க்கள், ஆதரவாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளது. அஜித்பவார் நடத்தும் கூட்டம் பாந்திரா மேற்கு பகுதியில் உள்ள புஜ்பால் நாலேஜ் சிட்டி அரங்கில் நடக்கிறது. காலை 11 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது. மாநில தலைவர் சுனில் தட்காரே தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என கூறப்பட்டுள்ளது.

    இன்று நடைபெற உள்ள இரு அணிகளின் கூட்டங்கள் மூலம் யாருக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு யாருக்கு உள்ளது என்பது தெரியவர உள்ளது. கூட்டம் முடிந்த பிறகு பலம் அதிகம் உள்ள அணிகள் அடுத்த கட்ட அரசியல் நகர்வுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே துரோகம் செய்தவர்கள் எனது புகைப்படத்தை பயன்படுத்தக்கூடாது என சரத் பவார் தெரிவித்து உள்ளார்.

    தெற்கு மும்பையில் புதிதாக திறக்கப்பட்ட அஜித்பவார் அணியின் புதிய அலுவலகத்தில் சரத்பவாரின் புகைப்படம் வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அஜித் பவார் நுழைந்தது ஏக்நாத் ஷிண்டேவை ஆதரிக்கும் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் அதிருப்தி.
    • சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் ஒருபோதும் இணைந்திருக்க மாட்டார்.

    மகாராஷ்டிர மாநில அரசில் திடீர் திருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் (சரத் பவார் அண்ணன் மகன்) 39 எம்.எல்.ஏ.க்களுடன் ஆளுங்கட்சிக்கு ஆதரவு அளித்து துணை முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் 8 எம்.எல்.ஏ.க்களும் அமைச்சராக பதவி ஏற்றனர்.

    மகாராஷ்டிராவின் ஆளும் கூட்டணியில் அஜித் பவார் நுழைந்தது ஏக்நாத் ஷிண்டேவை ஆதரிக்கும் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே, முதல்வர் இன்று அவரது அனைத்து திட்டங்களையும் ரத்து செய்துவிட்டு தனது இல்லத்தில் அவசர கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    இந்நிலையில், சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் ஒருபோதும் இணைந்திருக்க மாட்டார் என்பதை சுட்டிக்காட்டி எம்எல்ஏக்கள் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    • அஜித் பவாரை அரசில் இணைத்துக் கொண்டதால் ஷிண்டே கட்சி எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி
    • ஏக்நாத் ஷிண்டேதான் தொடர்ந்து முதல்வராக இருப்பார் அக்கட்சி தலைவர்கள் உறுதி

    மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டும் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், ஸ்திரதன்மையற்ற நிலை இருந்து கொண்டே வருகிறது.

    முதலில் பா.ஜனதா, அஜித் பவார் ஆதரவுடன் ஆட்சியமைத்தார். அது உடனடியாக முடிவுக்கு வந்தது. அதன்பின் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசோன கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைத்தன.

    திடீரென கடந்த வரும் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியில் இருந்து பிரிந்து பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து முதலமைச்சரானார். தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்று அஜித் பவார் அமைச்சரவையில் இணைந்துள்ளார். அவருடன் மேலும் 8 எம்.எல்.ஏ.-க்கள் அமைச்சராக பதவி ஏற்றுள்ளனர்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சி யாருக்கு சொந்தம் என்பதில் சரத் பவார்- அஜித் பவார் இடையே போட்டி இருந்து வரும் நிலையில், தேசியவாத காங்கிரஸ் உடன் எப்படி கூட்டணி அமைக்கலாம் என ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.-க்கள் கொடி பிடித்தனர்.

    பால் தாக்கரே சித்தாந்தம் வேறு. தேசியவாத காங்கிரஸ் சித்தாந்ததம் வேறு. ஒருபோதும் தேசியவாத காங்கிரஸ் உடன் இணைந்து செல்ல வேண்டும் என பால் தாக்கரே நினைத்தது கிடையாது. அப்படி இருக்கும்போது அவரது கட்சியான சிவசேனா எப்படி அஜித் பவார் உடன் இணைந்து செயலாற்ற முடியும்? என்ற கேள்வியை எழுப்பினர்.

    இதற்கிடையே ஒருநாள் முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசை இருப்பதாக அஜித் பவார் கூறியிருந்தார். மேலும், அஜித் பவார் கட்சி எம.எல்.ஏ.-க்களுக்கு மந்திரி பதவி கொடுக்கும் நிலையில், தங்களது நிலை என்னவாகும் என்பதாலும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் ஷிண்டேவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. உடனடியாக நேற்று அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் ஷிண்டே தொடர்ந்து முதல்வராக இருக்க ஆதரவு தெரிவித்தனர்.

    மகாராஷ்டிர மாநில மந்திரி ஷம்புராஜ் தேசாய் ''முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ராஜினாமா செய்வார் என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்களுக்கு 200-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது.



     


    எல்லோரும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறோம். ஏக்நாத் ஷிண்டேயின் தலைமை மீது நம்பிக்கை வைத்துள்ளோம்'' என்றார்.

    மற்றொரு மந்திரி உதய் சமந்த் ''வர்ஷா பங்களாவில் ஏக்நாத் ஷிண்டே உடன் சிவசேனா தலைவர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையின் கீழ் மக்களவை தேர்தல், மகாராஷ்டிரா சட்டசபை கூட்டம், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி.க்கள் எதிர்காலத்தில் செய்ய வேண்டியது, எப்படி பணிகளை முடிக்கி விடுவது, அமைப்புகளை எப்படி வளர்ப்பது குறித்து ஆலோசனை செய்யப்படடது.

    யார் வருகையாலும் (அஜித் பவார் குரூப் வருகை) சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.க்கள் யாரும் மகிழ்ச்சியில்லாமல் இல்லை. ஏக்நாத் ஷிண்டே மீது நம்பிக்கை வைத்துள்ளோம். ஏக்நாத் ஷிண்டே ராஜினிமா என்ற செய்து வதந்திகள். எம்.எல்.ஏ.- எம்.பி. தேர்தலை ஷிண்டே தலைமையின் கீழ் எதிர்கொள்வோம்'' என்றார்.

    மகாராஷ்டிர மாநில பா.ஜனதா தலைவர் சந்திரசேகர் பவன்குலே ''ஏக்நாத் ஷிண்டேயின் முதல்வர் பதவி குறித்து எதிர்க்கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.


    ஆனால், ஏக்நாத் ஷிண்டே தொடர்ந்து முதல்வராக செயல்படுவார். அவர் சிறப்பான முறையில் ஆட்சி செய்து வருகிறார்'' என்றார்.

    ×