search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிக்கண்ணா அரசு கல்லூரி"

    • இரண்டாம் கட்ட கலந்தாய்வு நாளை 14, நாளை மறுநாள் 15 -ந் தேதிகளில் நடைபெறவுள்ளது.
    • தமிழக அரசின் இடஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும்.

    திருப்பூர் :

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலைப் பிரிவுகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நாளை 14, நாளை மறுநாள் 15 -ந் தேதிகளில் நடைபெறவுள்ளது. இது குறித்து கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் 2023-24 ம் ஆண்டுக்கான இளநிலைப்பிரிவுகளில் மாணவா் சோ்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஏற்கனவே முடிவடைந்துள்ளது.இந்நிலையில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 14, 15 -ந் தேதிகளில் நடைபெறுகிறது.

    இக்கலந்தாய்வின் முதல்நாளான ஜூன் 14 ந் தேதி காலை 9.30 மணிக்கு பி.காம், பி.காம்.சி.ஏ. ஆகிய பாடப் பிரிவுகளுக்கும், பி.காம்.ஐபி, பி.பி.ஏ., ஆகிய பாடப் பிரிவுகளுக்கு காலை 11 மணிக்கும், வரலாறு, பொருளியல், ஆடை வடிவமைப்பு நாகரிகம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு பிற்பகல் 12.30 மணிக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

    இரண்டாம் நாளான ஜூன் 15 ந் தேதி காலை 9.30 மணிக்கு இயற்பியல், வேதியியல், விலங்கியல் பாடப் பிரிவுகளுக்கும், காலை 11 மணிக்கு கணிதம், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும், பிற்பகல் 1.30 மணிக்கு தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

    தமிழக அரசின் இடஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும். விண்ணப்பித்தோரின் காத்திருப்போா் தரவரிசைப் பட்டியல் கல்லூரி இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சுற்றுச்சூழல் விழிப்புணா்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • புவி வெப்பமயமாதலைத் தடுத்து உயிரினங்களைப் பாதுகாக்க வேண்டும்.

    திருப்பூர் :

    உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் சாா்பில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் பேசியதாவது: -

    சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மாணவா்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். புவி வெப்பமயமாதலைத் தடுத்து உயிரினங்களைப் பாதுகாக்க வேண்டும். நெகிழிப் பொருள்கள் மனிதா்களுக்கு மட்டுமின்றி வன விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே நெகிழிப் பைகளுக்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மஞ்சப்பையைப் பயன்படுத்த வேண்டும் என்றாா்.

    தொடா்ந்து மாணவா்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது தொடா்பான உறுதிமொழியை எடுத்துக் கொண்டனா். நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்கள், பேராசிரியா் மற்றும் பெற்றோா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா். 

    • கல்லூரியில் இளநிலை பட்ட வகுப்புகளுக்கான கலந்தாய்வு வரும் மே 31 தொடங்கி ஜூன் 6ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • அசல் மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் இல்லாமல் இருப்பின் கலந்தாய்வில் பங்கேற்க இயலாது.

    திருப்பூர் :

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது.

    இது குறித்து கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:- சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பட்ட வகுப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வரும் மே 31 தொடங்கி ஜூன் 6ந் தேதி வரை நடைபெறுகிறது. தமிழக அரசின் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெற உள்ள நிலையில், விண்ணப்பித்தவா்களின் தரவரிசைப் பட்டியல் கல்லூரியின் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

    ஆகவே விண்ணப்பித்துள்ள மாணவா்கள் தங்கள் விண்ணப்ப எண்ணை குறிப்பிட்டு தங்கள் தரவரிசையை அறிந்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கும், கைப்பேசி எண்ணுக்கும் தகவல் தெரிவிக்கப்படும். இதனடிப்படையில் மாணவா்கள் கல்லூரியில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். கலந்தாய்வுக்கு அடுத்தடுத்த தரவரிசையில் இருந்தே அழைக்கப்படுவா். அழைக்கப்படுபவா்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க முடியும். மாற்றுத்திறனாளி, விளையாட்டுப் பிரிவு, முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், தேசிய மாணவா் படை 'ஏ' சான்றிதழ் பெற்றவா்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு அடிப்படையில் மாணவா் சோ்க்கை புதன்கிழமை காலை 9.30 மணி அளவில் நடைபெறுகிறது.

    இந்த சிறப்புப் பிரிவினருக்கான ஒதுக்கீட்டில் சேர விரும்பும் விளையாட்டு வீரா்கள் சா்வதேச, தேசிய, மாநில, மாவட்ட அளவில் விளையாட்டில் சிறப்பிடம் பெற்றவா்கள் உரிய சான்றிதழ்களை எடுத்துவர வேண்டும். மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றவா்களின் சான்றிதழ் மாவட்ட விளையாட்டு அலுவலரால் கையொப்பமிடப்பட்டவை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். பள்ளியில் தேசிய மாணவா் படையில் 'ஏ' சான்றிதழ் பெற்றவா்கள் சிறப்பு ஒதுக்கீட்டில் பங்கு பெறலாம். முன்னாள் மற்றும் தற்போதைய ராணுவத்தினரின் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், அந்தமான் நிகோபாா் தீவுகளின் தமிழா்கள் ஆகியோா் சிறப்பு ஒதுக்கீட்டில் கலந்து கொள்ள உரிய அசல் ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.

    கலந்தாய்வில் பங்கேற்க கல்லூரிக்கு வருவோா் கட்டாயம் பெற்றோா் உடன் வரவேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்து, பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தைக் கட்டாயம் கொண்டு வரவேண்டும். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல்பக்கம் ஆகியவற்றின் 2 நகல்கள் மற்றும் அசல் சான்றிதழ்கள் அனைத்தையும் கொண்டுவர வேண்டும். பாஸ்போா்ட் அளவிலான 6 புகைப்படம் மற்றும் கல்லூரிக்கு செலுத்த வேண்டிய கட்டணத் தொகையுடன் கலந்தாய்வில் பங்கேற்கலாம். அதே வேளையில், அசல் மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் இல்லாமல் இருப்பின் கலந்தாய்வில் பங்கேற்க இயலாது.

    உரிய நேரத்தில் கலந்தாய்வில் பங்கேற்காமல் தாமதமாக வந்தால் அந்த நேரத்தில் பாடப் பிரிவுகளில் இருக்கும் இடங்களின் அடிப்படையிலேயே தகுதியுள்ள பிரிவுகளில் சோ்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.
    • தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகவள்ளி, போதை தடுப்பு குறித்து பேசினார்.

    திருப்பூர்:

    தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் திருப்பூர் வடக்கு, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 சார்பில் நெகிழி இல்லா தமிழகம் கலைநிகழ்ச்சி திருப்பூர் மத்திய பஸ் நிலையம் முன் நடைபெற்றது. நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்–கு–மார் முன்–னிலை வகித்தார். உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் ரமேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசும்போது, 'பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும். நெகிழி பொருட்கள் அனைத்து உயிரினங்களுக்கும் ஆபத்தாக அமையும். அனைவரும் துணிப்பையை பயன்ப–டுத்த வேண்டும். பிளாஸ்டிக் இல்லா இந்தியாவை உருவாக்க சபதமேற்போம்' என்றார்.

    உதவி சுற்றுச்சூழல் பொறியாளர்கள் பாரதிராஜா, சத்தியன், சுற்றுச்சூழல் பொறியாளர் திப்பு சுல்தான் ஆகியோர் துணிப்பையை பயன்படுத்தும்போது இயற்கை எவ்வாறு பாதுகாக்கப்படு–கிறது என்பதை விளக்கி கூறினார்கள். தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகவள்ளி, போதை தடுப்பு குறித்து பேசினார். மாணவ செயலாளர்கள் காமராஜ், அருள்குமார், ராஜபிரபு ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் நடத்தியும், மஞ்சப்பை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மாணவர் ஒருவர், பிளாஸ்டிக் அரக்கன் போல் வேடமணிந்து துண்டு பிரசுரங்கள் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சரவணக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    • புதர் மண்டிக்கிடக்கும் பகுதிகளை தூய்மைப்படுத்தி டெங்கு கொசுவை ஒழிக்க மருந்து தெளித்தனர்.
    • மழைக்காலம் என்பதால் டெங்கு காய்ச்சல் மாணவர்கள் மத்தியில் பரவாமல் தடுக்க இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூரில் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில், டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

    இதற்கான துவக்க நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன் குமார் முன்னிலை வகித்தார். தொடர்ந்து மாணவர்கள், கழிப்பறைகள், வகுப்பறைகள், ஆய்வக ங்கள், நூலகம் மற்றும் புதர் மண்டிக்கிடக்கும் பகுதிகளை தூய்மைப்படுத்தி டெங்கு கொசுவை ஒழிக்க மருந்து தெளித்தனர். இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், "மழைக்காலம் என்பதால் டெங்கு காய்ச்சல் மாணவர்கள் மத்தியில் பரவாமல் தடுக்க இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், பருவ தேர்வுகள் தொடங்க இருப்பதால் டெங்கு காய்ச்சலில் இருந்து மாணவர்களை பாதுகாக்கவும், கல்லூரி வளாகத்தில் தண்ணீர் தேங்கி நிற்காமல் இருக்கவும், குழுக்களை அமைத்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ள து" என்றார்.

    • முதல் மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஏற்கனவே நடைபெற்றுள்ளது.
    • முதல் மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஏற்கனவே நடைபெற்றுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் ஆங்கில இலக்கியப் பாடப் பிரிவுக்கான 3 ம் கட்ட கலந்தாய்வு நாளை 29-ந்தேதி நடைபெறுகிறது.இது குறித்து சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: -திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2022-23 ம் ஆண்டுக்கான இளநிலை பட்ட வகுப்புகளுக்கான முதல் மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஏற்கனவே நடைபெற்றுள்ளது.

    இந்நிலையில், ஆங்கில இலக்கியப் பாடப் பிரிவுக்கான 3 ம் கட்ட கலந்தாய்வு கல்லூரி வளாகத்தில் நாளை 29-ந்தேதி நடைபெறுகிறது.

    இதில்,ஆங்கில இலக்கியப் பாடப்பிரிவுக்கான தரவரிசை 1,001 முதல் 2200 வரை உள்ளவா்கள் பங்கேற்கலாம். இக்கலந்தாய்வு குறித்த தகவல்கள் மாணவா்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி மற்றும் மின்னஞ்சல் முகவரிக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க கல்லூரி இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தரவரிசைக் கடிதம், பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் 2 பிரதி நகல்கள் எடுத்துவர வேண்டும்.மேலும் பாஸ்போா்ட் புகைப்படம் 6 மற்றும் கல்லூரிக்கு செலுத்த வேண்டிய கட்டணத்துடன், பெற்றோரையும் அழைத்துவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இளநிலைப் பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கை.
    • பட்டப் படிப்புகளில் ஒரு சில இடங்கள் காலியாக உள்ளன.

    திருப்பூர் :

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலைப் பிரிவுகளுக்கான 2வது கட்ட கலந்தாய்வு நாளை 18-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.இது குறித்து கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலைப் பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 10ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் 16ந் தேதி வரையில் நடைபெற்றது.

    இதில், அறிவியல் பாடப்பிரிவுகளில் கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல் ஆகிய பட்டப் படிப்புகளில் ஒரு சில இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான 2-வது கட்ட கலந்தாய்வு கல்லூரி வளாகத்தில் நாளை 18-ந்தேதி( வியாழக்கிழமை) காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.

    இதில் தரவரிசை எண் 1401 முதல் 2900 வரையில் உள்ள மாணவா்கள் பங்கேற்கலாம். தரவரிசைக்கான சோ்க்கை கடிதத்தை கல்லூரி இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துவர வேண்டும். மேலும், இணையவழியில் விண்ணப்பித்த விண்ணப்பத்தையும், அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள் கொண்டுவர வேண்டும். கல்லூரிக்கு செலுத்த வேண்டிய தொகையுடன், பெற்றோரையும் அழைத்துவர வேண்டும். தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்று முதல் கட்ட கலந்தாய்வில் பங்கேற்காதவா்களும் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விண்ணப்பிக்க கட்டணம் மற்றும் பதிவுக்கட்டணத்தை ஒருமுறை செலுத்தினால் போதும்.
    • தேசிய மாணவர் படை ‘சி’ சான்றிதழ் பெற்றவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு உண்டு.

    திருப்பூர் :

    தமிழக அரசின் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.கல்லூரியில் பி.ஏ., தமிழ் இலக்கியம் - 30, ஆங்கிலம் இலக்கியம் - 50, பொருளியல் - 30, வரலாறு - 50, பி.காம்., 100, பி.காம்.சி.ஏ., 60, பி.காம்., சர்வதேச வணிகம் - 50, பி.பி.ஏ., - 50, பி.சி.ஏ., - 50, பி.எஸ்சி கணினி அறிவியல் (ஷிப்ட் 1) - 60, பி.எஸ்சி., கணினி அறிவியல் (ஷிப்ட் 2) - 60, பி.எஸ்சி., இயற்பியல் - 24, வேதியியல் -48, கணிதம் - 75, விலங்கியல் - 48, ஆடை வடிவமைப்பு மற்றும் நாகரிகம் - 50 ஆகிய இளநிலை பட்டபடிப்புகள் வழங்கப்படுகின்றனர்.

    இந்தப் பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், www.tngasa.in மற்றும், www.tngasa.org என்றஅங்கீகரிக்கப்பட்ட இணையதளத்தின் மூலம் இன்று முதல் ஜூலை15 வரை விண்ணப்பிக்கலாம். இது குறித்து கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் கூறியதாவது:-

    இணையதளத்தில் கேட்கப்படும் சுய விவரங்கள், தேர்வு செய்யப்போகும் கல்லூரிகள் தேர்வு, பாடப்பிரிவுகள் அனைத்திற்கும் விண்ணப்பிக்கலாம்.

    ஒரு கல்லூரியில் விண்ணப்பிக்க கட்டணம் மற்றும் பதிவுக்கட்டணத்தை ஒருமுறை செலுத்தினால் போதும். ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரி எனில் கூடுதல் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.சந்தேகம் இருக்கும் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள தகவல் வழிகாட்டு மையத்தினை அணுகலாம். மாற்றுத்திறனாளி, விளையாட்டுப்பிரிவு, முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், தேசிய மாணவர் படை 'சி' சான்றிதழ் பெற்றவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு உண்டு. மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல், www.cgac.in இணையதள முகவரியில் வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    ×