search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லட்சுமி நரசிம்மர்"

    • ஒரு பக்தர் வழக்கமாக திருக்கோவிலுக்கு வந்து செல்வார்.
    • லட்சுமி நரசிம்மர் புன்னகையுடன் விளையாடினார்.

    சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு பக்தர் வழக்கமாக திருக்கோவிலுக்கு வந்து செல்வார். எந்த காரியமாக இருந்தாலும் நரசிம்மரிடம் சம்மதம் (பூ போட்டு பார்த்தல்) கேட்டுவிட்டுத்தான் செய்வார். இவரிடம் லட்சுமி நரசிம்மர் கொஞ்சம் விளையாடி பார்த்தார்.

    அவரது பையனுக்கு கல்லூரி அட்மிஷனுக்கு அலைந்து கொண்டிருந்த நேரத்தில், இன்னொரு பக்தர் இவரிடம் அறிமுகம் ஆனார். அவர் கல்லூரி அட்மிஷன் விசயத்தில் விவரம் தெரிந்தவர். ஆனாலும் பணத்தாசை. எனவே இந்த அட்மிஷனில் முதலாம் வருடம் இருந்து பெரிய தொகை பெற்றுக்கொண்டு அட்மிஷன் வாங்கித் தருவதாக வாக்களித்தார்.

    வழக்கப்படி பையனின் தந்தை லட்சுமி நரசிம்மரிடம் பூப்போட்டு பார்த்தார். மல்லிகை பூ வந்தால் சரி, அரளிப்பூ வந்தால் வேண்டாம் என்ற நியதியில். லட்சுமி நரசிம்மர் இங்கு தான் புன்னகையுடன் விளையாடினார். சரி என்று மல்லிகை பூவே வந்தது.

    தொடர்ந்து மகிழ்ச்சியுடன் பணத்தை கொடுத்துவிட்டு அட்மிஷனுக்காக காத்துக்கொண்டு இருந்தார். காலம் கடந்து ஏமாந்தது தெரியவந்தது. பெருமாளே விளையாடி விட்டானே என்று நொந்து கொண்டார். இருப்பினும் கோவிலுக்கு வருவதை நிறுத்தவில்லை.

    சுமார் ஒரு வாரம் கழித்து பணம் வாங்கிய பெரிய மனிதர் அடித்து கட்டிக்கொண்டு பெருமாள் காலடியில் விழுந்தார். அவருக்கு ஒரு கனவு வந்ததாம். அதில் ஒரு சிம்மம் அவரை உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவிலை நோக்கி துரத்திக்கொண்டு வந்ததாம். மனிதர் அப்படியே அரண்டு போய் பணத்தை கொண்டுவந்து பணம் தந்தவரிடம் கொடுத்து சென்று விட்டார்.

    ஒரு கேள்வி அனைவரது மனதிலும் தோன்றும். பூ கட்டி பார்த்தபோது வேண்டாம் என்று பெருமாள் காண்பித்து இருக்கலாமே? ஆனால் அந்த பணம் பெற்று ஏமாற்ற நினைத்தவரை திருத்தி நல்வழிப்படுத்த முடியாதே? அதற்குதான் இந்த விளையாட்டு.

    • பூலோகத்தில் உடனடியாக எடுக்கப்பட்ட அவதாரம் நரசிம்ம அவதாரம்.
    • மகாவிஷ்ணுவின் நான்காவது அவதாரம் நரசிம்ம அவதாரம்.

    மகாவிஷ்ணுவின் நான்காவது அவதாரம் நரசிம்ம அவதாரம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று.

    சிங்க தலையும், மனித உடலும் கொண்ட இந்த அவதாரம், எந்த முன்னேற்பாடும் இல்லாமல், தன் பக்தனை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே ஒரு நொடிப்பொழுதில் பூலோகத்தில் உடனடியாக எடுக்கப்பட்ட அவதாரம் நரசிம்ம அவதாரம்.

    நரசிம்ம ஜெயந்தி அன்று அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையிலேயே எழுந்து, தீபம் ஏற்றி வைத்து, நரசிம்மரை மனதார வேண்டிக்கொண்டு, தூய்மையான பக்தியில் எவரொருவர் தனக்குள்ள கஷ்டங்களை எல்லாம் தீர்க்கவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறாரோ, அவருக்கு நிச்சயமாக நல்ல தீர்வு உடனடியாக கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

    பக்த பிரகலாதனை மடியில் அமர வைத்திருக்கும் நரசிம்மர் படத்தையோ அல்லது லட்சுமி தேவியை மடியில் அமரவைத்திருக்கும் நரசிம்மர் படத்தையோ தாராளமாக வீட்டில் வைத்து பூஜை செய்யலாம்.

    நரசிம்மர், விஷ்ணுவின் அம்சம் என்பதால் இவருக்கு துளசி இலைகளால் அர்ச்சனை செய்யலாம். இது தவிர, செவ்வரளி சிகப்பு செம்பருத்தி போன்ற பூக்களையும் நரசிம் மருக்கு சமர்ப்பணம் செய்யலாம்.

    நரசிம்மர் ஜெயந்தி தினத்தன்று மாலை உங்களுடைய விரதத்தை நிறைவு செய்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களால் முடிந்த நைவேத்தியத்தை நரசிம்மருக்கு படைக்கலாம். அவரவர் உடல் சூழ்நிலைக்கு ஏற்ப விரதமிருந்து, நரசிம்ம ஜெயந்தி விரதத்தை சிறப்பாக நிறைவு செய்ய வேண்டும்.

    "யஸ்ப அபவத் பக் தஜன ஆர்த்திஹந்து

    பித்ருத்வம் அந்யேஷூ அவிசார்ய தூர்ணம்

    ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம்

    லக்ஷ்மி ந்ருஸிம் ஹம் சரணம் பிரபத்யே"

    பொருள்: பக்தியற்றவர்களால் அடைய முடியாதவனே, தாயின் கர்ப்பத்தில் அவதரித்தால் தாமதமாகுமென்று தூணில் அவதரித்தவனே, நினைத்த மாத்திரத்தில் உங்களுடைய பக்தர்களின் துன்பத்தை போக்குபவனே, லட்சுமி நரசிம்மனே. இந்த மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்தால், முழுமையான ஆசீர்வாதத்தையும் பெற்றுவிடலாம். 

    • நரசிம்ம ஜெயந்தி விரதம் இருப்பவர்களுக்கு எதிரிகள் பயம் நீங்கும்.
    • இன்பங்களை நரசிம்மர் வாரி வழங்குவார்.

    பிரம்மா தன் படைப்புக்கு உதவிபுரிய, சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நான்கு புத்திரர்களை படைத்தார். அவர்கள் பிறவியிலேயே பிரம்ம ஞானியாக இருந்ததால், இல்லறத்தில் ஈடுபடாமல் தவயோகியாக எல்லா உலகங்களும் சுற்றி வந்தனர்.

    அதன்படி வைகுண்டத்திற்கும் சென்றனர். அப்பொழுது மகாவிஷ்ணுவின் பாதுகாவலர்களாக இருக்கக்கூடிய ஜெய மற்றும் விஜய என்ற இரு துவார பாலகர்களும், பிரம்மஞானிகள் நால்வரையும் உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். இதனால் வருத்தம் அடைந்த பிரம்ம குமாரர்கள், துவார பாலகர்கள் இருவரையும் சபித்தனர்.

    வைகுண்டத்தின் உள்ளே இருந்த மகாவிஷ்ணு நடந்ததை அறிந்து பிரம்ம குமாரர்களுக்கு காட்சி கொடுத்து அருள்புரிந்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த பிரம்ம குமாரர்கள், ஜெய, விஜயர்களின் சாபத்தை போக்க எண்ணினர். மகாவிஷ்ணுவும் அதையே நினைத்தார். அவர் ஜெய, விஜயர்களை நோக்கி, "நீங்கள் பிரம்ம குமாரர்கள் சாபத்தின்படி பூலோகத்தில் பிறந்துதான் ஆக வேண்டும்.

    அதே நேரத்தில் என்னிடம் பக்தி செய்து என்னை மறுபடியும் அடைய விரும்பினால், நீங்கள் ஏழு பிறவி எடுக்க வேண்டும். எனக்கு விரோதியாக பிறந்தால் மூன்று பிறவி எடுத்தால் போதும்" என்றார். ஜெய, விஜயர்கள் "நாங்கள் ஏழு பிறவி வரை காத்திருக்க விரும்பவில்லை. உங்களுக்கு விரோதியாகவே பிறந்து மூன்று பிறவிகளில் உங்களை அடைகிறோம்" என்றனர். (அவர்கள் முதலில் இரண்யாட்சன்- இரண்யகசிபு, பின்னர் ராவணன்- கும்பகர்ணன், இறுதியாக சிசுபாலன்- தந்துவர்த்தன் ஆகிய மூன்று பிறவிகளை எடுத்து இறைவனை அடைந்தனர்.)

    அதே நேரத்தில் காசியப முனிவரின் மனைவியரில் ஒருவரான திதி, 'தங்களுக்கு புத்திர பாக்கியம் இல்லையே' என்று வருந்தினாள். ஒரு முறை ஆசிரமத்தில் காசியப முனிவர் இருந்த தருணத்தில் தனது ஆசையை அவள் வெளிப்படுத்தினாள். அப்போது காசியபர், "பெண்ணே.. இது சந்தியா காலம். இந்த நேரத்தில் புத்திர உற்பத்தி நல்லது இல்லை. இரவும் பகலும் சேரக்கூடிய இந்த பிரதோஷ வேளை, பூதங்களும், பிசாசுகளும் விரும்புகின்ற நேரம். இவ்வேளையில் சிவதரிசனம் மட்டுமே சிறந்தது. வேறு சிந்தனை கூடாது. இன்னும் ஒரு முகூர்த்தம் பொறுத்துக்கொள்" என்றார்.

    ஆனால் திதி கேட்பதாக இல்லை. "இவ்வளவு காலம் பொறுத்தாகி விட்டது. புத்திர பாக்கியத்திற்காக இன்னும் தாமதிக்க எனக்கு விருப்பமில்லை" என்று கூறிவிட்டாள். 'இது விதியின் சதியே' என்ற முடிவுக்கு வந்தார், காசியப முனிவர்.

    திதியை நோக்கி, "உனக்கு இரண்டு புதல்வர்கள் பிறப்பார்கள். பிரதோஷ நேரத்தில் நாம் சேர்ந்ததால், அவர்கள் ராட்சச தன்மையுடன் இருப்பார்கள். அவர்கள் இருவரும் சக்கரத்தை கையில் ஏந்திய திருமாலால் அழிவார்கள்" என்றார்.

    உடனே திதி, "இத்தனை காலம் ஆன பிறகு பிறக்கும் பிள்ளைகள், அசுரர்களாகவா பிறக்க வேண்டும். நம் வம்சம் சிறக்க ஹரி பக்தியுடன் குழந்தைகள் இருக்க வேண்டாமா?" என்று கேட்டாள். அதற்கு காசியபர், "கவலைப்படாதே. உனக்கு பிறக்கும் இரு பிள்ளைகளில் ஒருவனுக்கு பிறக்கும் குழந்தை, விஷ்ணு பக்தியுடன் விளங்குவான். சிறந்த பக்தனாகவும், நாராயண மந்திரத்தை உலகத்துக்கு எடுத்துச் சொல்லக் கூடியவனாகவும் இருப்பான்" என்றார்.

    தொடர்ந்து காசியபர்- திதி தம்பதியருக்கு, இரண்யாட்சன், இரணியகசிபு ஆகிய இருவரும் பிறந்தனர். இரண்யாட்சனை மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து கொன்றார். இதை அறிந்த இரண்யகசிபு, மகாவிஷ்ணுவை வெற்றிகொள்ள கடும் தவம் செய்யத் தொடங்கினான்.

    இரண்யகசிபு மந்தார மலையில் தவம் செய்த நேரத்தில், அவன் அரண்மனையில் புகுந்த இந்திரன், இரண்யகசிபுவின் மனைவியை தூக்கிச் சென்றான். அப்போது நாரதர், "இந்திரா.. நீ இவ்வாறு செய்யக்கூடாது. இந்த பெண் கர்ப்பவதியாக இருக்கிறாள்" என்று கூறினார். அதற்கு இந்திரன், "நாரதரே.. இரணியன் எங்களுக்கு மிகுந்த தொல்லையை கொடுக்கிறான். இவனுக்கு குழந்தை பிறந்தால், இதைவிட எங்களுக்கு வேறு என்ன அபாயம் வேண்டும்" என்றான்.

    அதற்கு நாரதர் "இப்பொழுது பிறக்கப் போகும் குழந்தை, சிறந்த ஹரி பக்தன். நீ அவனை அழிக்க முடியாது" என்றார். அதைக் கேட்ட இந்திரன், இரண்யகசிபுவின் மனைவியை விட்டு விட்டுச் சென்று விட்டான். நாரதர், அந்த பெண்ணை தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று, அவளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தார். அந்த பெண்ணுக்கு நாராயண மந்திரத்தை தொடர்ந்து கூறும்படி அறிவுறுத்தினார். அந்த பெண் சொல்வதை, கருவில் இருந்த குழந்தையும் மந்திர உபதேசமாக எடுத்துக் கொண்டது. அப்படி இறைவனின் நாமத்தைக் கேட்டு பிறந்தவர்தான், பிரகலாதன்.

    இந்த நிலையில் இரண்யகசிபு செய்த கடும் தவந்தால், மூன்று உலகங்களும் தகித்தன. பூகம்பம் ஏற்பட்டது. காடுகள் தீப்பற்றி எறிந்தன. இதனால் தேவர்கள் அனைவரும் பிரம்மனை சரணடைந்தனர்.

    பிரம்மதேவர் உடனடியாக இரண்யகசிபு முன்பாக தோன்றினார். "உன் தவத்தை இத்துடன் நிறுத்து. உனக்கு என்ன வரம் வேண்டும்" என்றார். அதற்கு இரண்யகசிபு, "எனக்கு மரணம் இல்லாத வரத்தை அருளுங்கள்" என்றான். "மரணமே இல்லாத வரத்தை யாருக்கும் அருள முடியாது. ஆனால் நீ வேறு விதமாக வரம் கேள், தருகிறோம்" என்றார், பிரம்மன்.

    உடனே இரண்யகசிபு, "ஆணாலோ, பெண்ணாலோ, தேவர்களாலோ, அசுரர்களாலோ, உங்களால் படைக்கப்பட்ட எந்த ஒரு ஜீவராசிகளாலும் என் உயிர் போகக்கூடாது. மேலும் பூமியிலும், ஆகாயத்திலும், வீட்டின் உட்புறத்திலும், வீட்டின் வெளிப்புறத்திலும் என் உயிர் பிரியக் கூடாது.

    ஆயுதங்களாலோ அல்லது விஷங்களாலோ என் உயிர் பிரியக்கூடாது" என்று பல விதமான வரங்களைக் கேட்டான். பிரம்மாவும் அவன் கேட்டபடி வரம் அருளினார். இதையடுத்து இரணியகசிபு மூன்று உலகத்தையும் வென்றான். மண்ணுலகும் விண்ணுலகும் அவன் வசமாகியது.

    இரண்யகசிபு தனது குருவான சுக்ராச்சாரியாரின் புதல்வர்களாகிய சண்டன் மற்றும் அமர்க்கன் ஆகியோரிடம், பிரகலாதனுக்கு கல்வி கற்றுக் கொடுக்க உத்தரவிட்டான். பிரகலாதனுக்கு பல வித்தைகளை அவர்கள் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தனர். பிரகலாதனுக்கு குருகுல வாசம் ஆரம்பமாகியது. சில காலம் சென்ற பிறகு இரண்ய கசிபு, குருகுலத்திற்கு வந்து பிரகலாதனிடம் "என்ன கற்றாய்?" என கேட்டான். தன் பிள்ளை 'தன்னைவிட மேலான சக்தி உலகத்தில் எதுவும் இல்லை. தானே மிகப் பெரிய சக்தி, பிரம்மம்' என்று கூறி புகழ்வான் என்று நினைத்தான்.

    ஆனால் பிரகலாதனோ "தந்தையே.. இந்த ஜென்மத்தில் மோட்சம் அடைய ஒரே வழி, ஹரி பக்தி மட்டுமே" எனக் கூறினான். இதைக்கேட்ட இரண்யகசிபு கடும் கோபம் கொண்டு ஆசிரியர்களை நோக்கி, "நீங்கள் என்ன சொல்லிக் கொடுத்தீர்கள். இவன் என்ன சொல்கிறான்" என்று கடுமையாக கேட்டான்.

    பின்னர் தன் மகனிடம் திரும்பி, 'என் விரோதியான விஷ்ணுவை புகழ்பவன், மகனாயினும் தண்டிக்கத்தக்கவன்' என கூறி, கடலில் தூக்கிப்போட்டான். ஆனால் அதில் இருந்து பிரகலாதன் மீண்டு வந்தான். பின்னர் ஆயுதங்களால் தாக்கச் சொன்னான். யானையை விட்டு மிதிக்கச் சொன்னான். விஷம் அருந்தக் கொடுத்தான். அனைத்திலும் இருந்து மீண்ட பிரகலாதன், 'எமன் அறியாமல் உயிர் போகாது. விஷ்ணுவே பரம்பொருள்' என்று நிரூபித்தான்.

    இனிமேலும் பிரகலாதனை தண்டிக்க முடியாது என்பதை புரிந்து கொண்ட இரண்யகசிபு, நேரடியாக விஷ்ணுவுடன் மோத முடிவு செய்தான். தேவர்களால் மரணம் நேராது என்ற வரத்தை நினைத்துக் கொண்டான். பின்னர் பிரகலாதனை நோக்கி, "உன் விஷ்ணுவை எனக்கு காட்டு. அவனிடம் நான் யுத்தம் செய்கிறேன்" என்றான்.

    "மரியாதைக்குரிய எனது தெய்வமான விஷ்ணு பகவான், நீங்கள் நினைப்பது போல் ஓரிடத்தில் மட்டுமே இருப்பவர் அல்ல.. அவர் எங்கும் நிறைந்திருப்பவர்" என்றான், பிரகலாதன். அப்போது இரண்யகசிபு அங்கிருந்த ஒரு தூணைக் காட்டி "இந்த தூணில் உன் ஹரி இருக்கிறானா?" என்றான். அதற்கு பிரகலாதன் "நிச்சயம் இருப்பார்" என்று பதிலளித்தான். உடனே இரண்யகசிபு, தன் வலிமையான கதாயுதத்தைக் கொண்டு அந்தத் தூணை பிளந்தான். அப்போது அதன் உள்ளே இருந்து, சிங்க முகமும், மனித உடலும் கொண்ட நரசிம்மர் தோன்றினார்.

    நரசிம்மர் இரண்யகசிபுவுடன் கடுமையான யுத்தம் செய்தார். பின்னர் அவர் பெற்ற வரத்தின்படியே, இரவும் இல்லாமல், பகலும் இல்லாத பிரதோஷ வேளையில், வீட்டில் உள்ளேயும், வெளியேயும் இல்லாமல் வாசல் படியின் மேல், ஆகாயத்திலும் இல்லாமல், பூமியிலும் இல்லாமல் தன் மடியின் மேல் வைத்து, ஆயுதங்கள் இல்லாமல் தன் கை நகங்களால் அவனை வதம் செய்தார்.

    இரண்யகசிபு வதம் முடிந்த பிறகு லட்சுமி நரசிம்மராக காட்சி கொடுத்து, பிரகலாதனிடம் "உனக்கு என்ன வரம் வேண்டும்" என்று கேட்டார் நரசிம்மர். அதற்கு பிரகலாதன், "என் தந்தை தவம் செய்து பெற்ற வரத்தை தவறாக பயன்படுத்தி, தங்களால் வதம் செய்யப்பட்டார். இருப்பினும் அவருக்கு மோட்சம் வழங்க வேண்டும்" என்றான்.

    அதற்கு நரசிம்மர், "நீ என் மீது பக்தி கொண்டு பிறந்த காரணத்தினால், உன் தந்தைக்கு மட்டுமல்ல.. உனக்குப் பின் வரக்கூடிய 21 தலைமுறையினர் உன்னால் மோட்சம் அடையப் போகிறார்கள்" என்றார்.

    நரசிம்ம ஜெயந்தி அன்று விரதம் இருந்து பூஜிப்பவர்களுக்கு எதிரிகள் பயம் நீங்கும். செய்வினை, ஏவல் போன்ற பிரச்சினை அகலும். இன்பங்களை நரசிம்மர் வாரி வழங்குவார்.

    • உற்சவமூர்த்தி சாந்த நரசிம்மர் (லட்சுமி நரசிம்மர்) ஆவார்.
    • இவருக்கு உகந்த நாட்கள் சுவாதி நட்சத்திரம்.

    இந்த சன்னதி அலங்கார மண்டபத்தில் மேற்கு நோக்கி ஸ்ரீ ஆண்டாள் சன்னதிக்கு நேர் எதிரே மூல நரசிம்மர் ஸ்ரீ அமிர்தவல்லி தாயாருடன் எழுந்தருளி உள்ளார்.

    உற்சவமூர்த்தி சாந்த நரசிம்மர் (லட்சுமி நரசிம்மர்) ஆவார்.

    அதே சமயம் மூலவர் உக்கிரமூர்த்தியாக காட்சி அளிக்கிறார்.

    அவருடைய தோற்றத்திற்கும் அமைப்பிற்கும் பொருந்துவது போல கண்கள் சிவக்க காட்சி அளிக்கிறார்.

    இவருடைய கண்கள் தீப ஆர்த்தியின் போது இயற்கையாக சிம்மத்தின் கண்கள் ஒளியை உமிழ்வது போல தோற்றம் அளிப்பது இங்கு மிகச் சிறந்த விசேஷம் ஆகும்.

    உடல்நிலை, மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், பில்லி சூனியம் இவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு மண்டலம்

    (48 நாட்கள்) தரிசித்தால் அவர்கள் குறைகள் தீரும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    இவருக்கு உகந்த நாட்கள் சுவாதி நட்சத்திரம்.

    வெள்ளி, ஞாயிறு, நரசிம்மர் ஜெயந்தி அன்று ஸ்தம்பமாக (தூண்) அலங்காரம் செய்து, உபவாசம் விரதம் இருந்து

    நரசிம்மர் வேடம் தரித்து பிரகலாதனையும், இரணியக சிபுவையும் உருவகப்படுத்தி சுமார் ஒரு மணி நேரம் மாலை

    நேரத்தில் நடைபெறும் வைபவம் குறிப்பிடத்தக்கது ஆகும்.

    (திருக்குறுங்குடியில் கைசிக துவாதசியில் நடைபெறும் விழா போல் இந்த விழாவும் நடைபெறுகிறது)

    மன அமைதி இழந்த, மனநிலை சரி இல்லாதவர்களுக்கு இந்த சன்னதியில் சங்கு தீர்த்தம் தெளிப்பது முக்கிய விசேஷம் ஆகும்.

    இதனுடைய பலனை உடனடியாக அறிய முடியும்.

    அந்த அளவுக்கு வரப்பிரசாதியாக லட்சுமி நரசிம்மர் அருள்பாலிக்கிறார்.

    • சிம்மத்தின் கர்ஜனையைக் கேட்டால் யானைகள் அஞ்சி ஓடும்.
    • மகாவீரரான நரசிம்கரே! கடன் தொல்லைகளில் இருந்து விடுபட உம்மை பிரார்த்திக்கிறேன்.

    தேவகாரியங்கள் பூரணத்துவம் பெற சபா மண்டபத்தில் அவதரித்தவரே! மகாவீரரே! என் கடன்களில் இருந்து என்னை

    விடுக்கும்படி வேண்டிக் கொண்டு பிரார்த்திக்கிறேன்.

    மகாலட்சுமியால் தழுவப் பெற்ற இடது பாகத்தை உடையவரே! பக்தர்கள் கேட்கும் வரத்தைக் தருபவரே! மகாவீரரே!

    என் கடன்களில் இருந்து என்னை விடுவிக்கும்படி பிரார்த்தித்துக் கொண்டு பிரார்த்தனை செய்கிறேன்.

    நரம்புகளை மாலையாக அணிந்து கொண்டவரே! சங்கு, சக்கரம், தாமரை, ஆயுதம் இவைகளைச் தரித்துக்

    கொண்டவரே! மகாவீரரே! என்னைக் கடன் உபாதைகளில் இருந்து காத்தருள பிரார்த்திக்கிறேன்.

    நினைத்த மாத்திரத்திலேயே பாவங்களை நீக்குபவரே! கத்ரூபுத்திரர்களான நாக விஷங்களால் ஆபத்து ஏற்படாமல்

    காப்பவரே! மகாவீரரே! கடன் தொல்லையில் இருந்து விடுபட உம்மை பிரார்த்திக்கிறேன்.

    சிம்மத்தின் கர்ஜனையைக் கேட்டால் யானைகள் அஞ்சி ஓடும்.

    அப்பேற்பட்ட பெரிய பயங்களையே போக்கும் மகாவீரரே! கடன் தொல்லைகளில் இருந்து நான் விடுதலை பெற உம்மை பிரார்த்திக்கிறேன்.

    பிரகலாதனுக்கு வரம் அளித்தவரே! லட்சுமிபதியே அசுர வேந்தனான இரண்யகசிபுவின் நெஞ்சை கிழித்தவரே!

    மகாவீரரான நரசிம்கரே! என் கடன்களில் இருந்து விடுபட உம்மை பிரார்த்திக்கிறேன்.

    குரூரமான கிரக பார்வையால் கஷ்டத்தில் இருக்கும் பக்தர்களுக்கு உபயம் தருபவரே! மகாவீரரான நரசிம்கரே!

    கடன் உபாதையில் இருந்து நிவாரணம் பெற உம்மை பிரார்த்திக்கிறேன்.

    வேதம், உபிநிஷத் யக்ஞம் இவைகளின் ஈச்வரனே பிரம்மா, ருத்ரன் இவர்களால் நமஸ்கரிக்கப்பட்டவரே!

    மகாவீரரான நரசிம்கரே! கடன் தொல்லைகளில் இருந்து விடுபட உம்மை பிரார்த்திக்கிறேன்.

    ருணமோசனம் என்ற இந்த ஸ்தோத்திரத்தினை தினமும் மனமுருகிப் படிப்பதற்கு எவ்வளவு பெரிய கடனும் விரைவில்

    சூரியனைக் கண்ட பனிமலையின் நிலையை அடையும்.

    அதோடு மட்டுமல்லாமல் நியாயமான முறையில் சம்பத்தும் சேரும்.

    ஸ்ரீ நரசிம்ம காயத்ரீ மந்திரம் சொல்லிவர அனைத்து நன்மைகளும் கைகூடும்

    ஓம், வஜ்ரநகாய வித்மஹே, தீக்ண தம்ட்ராயதீமஹே, தந்னோ, நாரசிஹ்ம ப்ரசோதயாது.

    ஸ்ரீ நரசிம்ம அனுஷ்டுப் மந்திரம் :

    ஓம், உக்ரம், வீரம், மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம், நரசிஹ்மம் பீஷணம் பத்ரம், ம்ருத்தும் ம்ருத்து நாம்யஹம்.

    • பிரதி வருடமும் மாசி மக சமுத்திர ஸ்னானத்திற்கு புதுச்சேரிக்கு புறப்படுகிறார்.
    • 6-ம் நூற்றாண்டில் பல்லவ ராஜாக்களால் இந்த கோவில் கட்டப்பட்டது.

    1. ஒவ்வொரு வருடமும் ஸ்ரீ நரசிம்ம ஜெயந்திக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டு ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி அன்று ரதோஸ்வம் நடைபெறுகிறது.

    2. பிரதி வருடமும் மாசி மக சமுத்திர ஸ்னானத்திற்கு புதுச்சேரிக்கு புறப்படுகிறார்.

    3. கோவில் தமிழ்நாட்டில் உள்ளது. புதுவை மாநிலம், தமிழ்நாடு மாநிலம் இவர்களால் நியமிக்கப்பட்ட அறங்காவலர்கள் ஆட்சிக்குட்பட்டது.

    4. 6-ம் நூற்றாண்டில் பல்லவ ராஜாக்களால் இந்த கோவில் கட்டப்பட்டது. 16-ம் நூற்றாண்டில் ஸ்ரீ கிருஷ்ண தேவராயரால் திருப்பணி செய்யப்பட்டது.

    5. ஸ்ரீ ராஜ ராஜசோழன், விஜயநகர மன்னர் ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் ஆகியோர்களாலும் சில கைகங்கர்யங்கள் செய்யப்பட்டுள்ளன.

    6. இந்த கோவிலுக்கு பின்புறம் ஸ்ரீமத் அகோபில மடம் 4-வது பட்டம் ஸ்ரீயர் சுவாமிகள் பிருந்தாவனம் உள்ளது.

    • இத்தலம் வரலாறு சிறப்புமிக்கது.
    • இது ஒரு பிரார்த்தனை ஸ்தலம் பலபேர்கள் இந்த பெருமானை வேண்டி பலன் பெற்றுள்ளனர்.

    இத்தலம் வரலாறு சிறப்புமிக்கது.

    இத்தலத்தில் எழுந்தருளியுள்ள மூர்த்தி இந்தியாவிலேயே உள்ள ஒரு ஒருவர் தான் என்பது தனிச்சிறப்பு

    தவிர இந்த பழமை வாய்ந்த திருக்கோவில் ஸ்ரீ நரசிம்ம அனுஷ்டிப்பு மந்திரத்தில் உள்ள எழுத்துக்களைக் கொண்டது என்பது விசேஷமான அம்சம்.

    இது ஒரு பிரார்த்தனை ஸ்தலம் பலபேர்கள் இந்த பெருமானை வேண்டி பலன் பெற்றுள்ளனர்.

    முக்கியமாக நவக்கிரக தோஷங்கள் போகும்.

    சுவாதி நட்சத்திரத்திலும், பிரதோஷத்திலும் மற்றும் செவ்வாய்க் கிழமையில் இந்த மூர்த்தியை (ஸ்ரீ லட்சுமி நரசிம்மனை) தரிசித்தால் மிகவும் நல்லது.

    எல்லா குறைகளும் தீரும்.

    சிங்கிரிகோவில், பூவரங்குப்பம், பரிக்கல் ஆகிய ஊர்கள் ஒரே நேர்க்கோட்டில் உள்ளதால் இந்த மூன்று நரசிம்மனை

    ஒரே நாளில் தரிசித்தால் தீராத கஷ்டங்கள் யாவும் தீரும்.

    • இங்குள்ள எல்லா கல்வெட்டுக்களும் முற்றுப் பெறாத கல்வெட்டுக்களே.
    • இந்த கோவிலை பிரித்துக் கட்டும்போது கற்கள் பல மாறி இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.

    இதுவரை தலபுராணத்தை பற்றி பார்த்தோம்.

    இந்த ஆலயத்துள் துண்டு கல்வெட்டுகள் உள்ளன.

    இங்குள்ள எல்லா கல்வெட்டுக்களும் முற்றுப் பெறாத கல்வெட்டுக்களே.

    இந்த கோவிலை பிரித்துக் கட்டும்போது கற்கள் பல மாறி இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.

    ராஜ கோபுரவாயிலில், 16-ம் நூற்றாண்டை சேர்ந்து எழுத்தமைதியுடைய ஒரு கல்வெட்டு செய்யுள் வடிவில் அமைந்து இருக்கிறது.

    இப்பாடல் எழுசீர்க்கழி நெடிலடி ஆசிரியவிருத்த வடிவில் அமைந்துள்ளது.

    • ஆற்காட்டு நவாப் நரசிம்மருக்கு திருவாபரணம் சமர்ப்பித்தார்.
    • இந்த ஆலயம் வைகானச முறைப்படி பூஜைகள் நடக்கும் இடம்.

    சன்னதிக்கு எதிரில் இருக்கும் விநாயகரை எடுத்து கோபுர நுழைவாயிலுக்கு பக்கத்தில் வைக்க எண்ணி ஒரு கோவில்

    அமைத்து விநாயகரை எடுத்ததும் ஊரில் தீ விபத்து ஏற்பட்டதால் பழைய இடத்திலேயே வைத்துவிட்டதாக பரம்பரை வரலாறு உள்ளது.

    ஆற்காட்டு நவாப் நரசிம்மருக்கு திருவாபரணம் சமர்ப்பித்தார்.

    பிரெஞ்சுக்காரர்களும் சுவாமிக்கு திருவாரணங்கள் சமர்ப்பித்து உள்ளனர்.

    புராணம், சரித்திரம் ஆகிய இரு வகைகளிலும் சிறப்புடையதும் இந்தியாவிலேயே அபூர்வமானதுமான

    ஸ்ரீ நரசிம்மர் சன்னதி உள்ள தலம் சிங்கிரிகுடி என்பதை இதுவரை கண்டோம்.

    இந்த ஆலயம் வைகானச முறைப்படி பூஜைகள் நடக்கும் இடம்.

    இந்த ஊரில் கல்வி கேள்விகளில் வல்ல பல சான்றோர்கள் இருந்திருக்கிறார்கள்.

    மூலஸ்தானம் மட்டும் தான் பழமையானது.

    தாயார் சன்னதி, ஆண்டாள் சன்னதி இவைகள் பிற்காலத்தவையாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

    திருவந்திரபுரம், ஸ்ரீ தேவனாதப்பெருமாள், பிரகலாதனின் பிரார்த்தனையின் நிமித்தமாக ஹிரண்ய சம்கார

    நரசிம்மனாக பிரகலாதனுக்கு சேவை சாதித்தருளினார்.

    • ஆலயத்திற்குப் பின்புறம் தோப்புக்குள் பத்து தூண்களை உடைய மண்டபம் உள்ளது.
    • இதில் தாயாருக்கு ஊஞ்சல் நடைபெறுகிறது.

    இந்தியாவிலேயே அபூர்வமாக இரண்டு இடங்களில் தான் நரசிம்மர் பதினாறு கைகளுடன் காட்சி அளிக்கிறார்.

    அந்த இரு சேத்திரங்களுள் ஒன்று சிங்கர்கோவில் மற்றொன்று ராஜஸ்தானில் உள்ளது.

    மூர்த்தியின் கைகளில் காணப்படும் ஆயுதங்களும் அவற்றின் நிலைகளும்:

    பதாகஸ்தம், ப்ரயோக சக்ரம், ஷீரிகை என்னும் குத்துக்கத்தி, பாணம், ராட்சனின் தலையை அறுத்தல், கத்தியால் அசூரன் ஒருவனைக் கொல்லுதல், இரணியனின் கைகளில், குடல் மாலையைப் பிடித்திருப்பது, சங்கம், வில், கதை, கேடயம்,வெட்டப்பட்ட தலை, இரணியனின் தலையை அழுத்திப் பிடித்திருப்பது, குடலைக் கிழிப்பது.

    மூலாயத்தில் பெரிய வடிவில் பதினாறு கைகளுடன் இரணியனைச் சங்கரிப்பவராகப் பெருமாள் எழுந்தருளியுள்ளார்.

    கீழே இடப்புறம் இரணியனின் மனைவியான நீலாவதி, கீழே வலப்புறம் மூன்று அசூரர்கள், பிரகலாதர்,

    சுக்கிரர் வஷிட்டர் ஆகியவர்கள் இருக்கிறார்கள்.

    வடக்கு நோக்கியவர்களாகச் சிறிய வடிவில் யோக நரசிம்மர், பால நரசிம்மர் என இருவர் இருக்கிறார்கள்.

    ஆலயத்திற்குப் பின்புறம் தோப்புக்குள் பத்து தூண்களை உடைய மண்டபம் உள்ளது.

    இதில் தாயாருக்கு ஊஞ்சல் நடைபெறுகிறது.

    திரு.ஆனந்தரங்கப் பிள்ளை அவர்களின் நாட்குறிப்பில் இருந்து பிரெஞ்சு அரசாங்கம் நரசிம்ம சுவாமிக்கு

    அவிசுப்பாக்கத்தில் உள்ள குளத்தில் தெப்ப உற்சவம் செய்து வந்ததாகத் தெரிகிறது.

    • இங்கு கோவில் கொண்டுள்ள மூலவர் நரசிங்கர் பதினாறு திருக்கைகளுடன் ஆச்சரியமாகக் காட்சியளிக்கிறார்.
    • இவரைத் தரிசித்தால் எல்லா வகைப் பாவங்களும், குறைகளும் நீங்கும்.

    சிங்கிரிகுடி (சிங்கர்கோவில்) என்னும் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி சேஷத்திரத்தின் தலவரலாறு கூறும் இச்சிறு நூல்

    சிங்கர் கோவிலில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீலட்சுமி நரசிம்மரின் திருவடித் தாமரைகளில் அடியோங்களால் சமர்ப்பிக்கப்படுகிறது.

    இத்திருத்தலம் இக்காலம் தமிழ்நாட்டில் தென்னாற்காடு மாவட்டம் கடலூர் வட்டத்துள் இருக்கிறது.

    சிங்கர்கோவில் என நரசிம்மர் பெயராலேயே வழங்கப்படுகிறது.

    இங்கு கோவில் கொண்டுள்ள மூலவர் நரசிங்கர் பதினாறு திருக்கைகளுடன் ஆச்சரியமாகக் காட்சியளிக்கிறார்.

    இவரைத் தரிசித்தால் எல்லா வகைப் பாவங்களும், குறைகளும் நீங்கும்.

    வசிஷ்டமாமுனிவர் இத்திருத்தலத்தில் நரசிங்கரைத் தியானம் செய்து கொண்டு தவம் புரிந்து சித்தி பெற்றுத்

    தம்முடைய பாவங்களைப் போக்கி கொண்டார்.

    இவ்வூரைப் பற்றிச் சுருக்கமாகத் தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்களுக்கு கீழ்க்கண்ட முறையில் கூறலாம்.

    ஊர் பெயர்: சிங்கர்கோவில்

    புராணப்பெயர்: கிருஷ்ணாரண்யசேத்ரம்

    சுவாமி பெயர்: லட்சுமி நரசிம்மர்

    தாயார் பெயர்: கனகவல்லித்தாயார்

    விமானத்தின் பெயர்: பாவன விமானம்

    தீர்த்தங்கள் ஐந்து: ஜமதக்னி தீர்த்தம்,

    இந்திர தீர்த்தம், ப்ருகு தீர்த்தம்,

    வாமன தீர்த்தம், கருட தீர்த்தம்.

    ×