search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலந்தி"

    • சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவில்லை என கேரள அரசு வாதம்.
    • கேரளா அரசுக்கு உத்தரவிட்ட நிலையில், விசாரணை ஜூலை 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

    கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகா வட்டவடா கிராம ஊராட்சி எல்லைக்குட்பட்ட பெருகுடா எனும் இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே, கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது.

    இந்த ஆற்று நீர் அமராவதி அணைக்கு வரும் துணை ஆறான தேனாற்றின் ஒரு பகுதி ஆகும்.

    இந்த அணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, அணையை நம்பி இருக்கும் பொதுமக்களும், விவசாயிகளும் பாதிப்புக்கு ஆளாக நேரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    கேரளாவின் இந்த செயல், காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பை மீறும் செயல் என சமூக ஆவர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், உரிய அனுமதி பெறாமல் சிலந்தி ஆற்றில் மேற்கொள்ளப்படும் தடுப்பணை கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என கேரளா அரசுக்கு, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

    நாளிதழில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

    இதில், சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவில்லை. நீரை தடுத்து உள்ளூர் மக்களுக்கு தேவையான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான கலிங்கு தான் அமைப்பட்டு வருகிறது என கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், எந்த கட்டுமானது மேற்கொள்வதாக இருந்தாலும், உரிய அனுமதி பெற்றபின் தான் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், இந்நிலையில், உரிய அனுமதிகள் ஏற்கனவே பெறப்பட்டிருந்தால் அதனை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். இல்லை என்றால், சிலந்தி ஆற்றில் மேற்கொள்ளப்படும் தடுப்பணை கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என கேரளா அரசுக்கு, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

    மேலும், கேரளா அரசுக்கு உத்தரவிட்ட நிலையில், விசாரணை ஜூலை 23ம் தேதிக்கு தள்ளி வைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

    • உலகம் முழுவதும் இதுபோன்று 35 வகையான சிலந்தி வகைகள் உள்ளன. இந்தியாவில் இப்போதுதான் முதல்முறையாக இந்த வகை சிலந்தி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
    • எனவே தான் இந்த சிலந்தி வகைக்கு கேரள ஆராய்ச்சியாளரின் பெயரை சேர்த்து சூடோமோக்ரஸ் சுதி என பெயரிடப்பட்டு உள்ளது.

    திருவனந்தபுரம்:

    உலகம் முழுவதும் உள்ள பூச்சிகள் குறித்து விலங்கியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இதில் புதிதாக கண்டுபிடிக்கப்படும் பூச்சி வகைளுக்கு ஆராய்சியாளர்கள் பெயரை சூட்டுவது வழக்கம்.

    அந்த வகையில் இந்தியாவின் தார் பாலைவன பகுதியில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சிலந்தி வகைக்கு கேரளாவை சேர்ந்த பூச்சி இன ஆராய்ச்சியாளர் சுதிகுமாரின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

    இந்திய வனவிலங்கு ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த ஆஷிஷ் குமார், இங்கிலாந்தை சேர்ந்த டிமிட்ரி லோகுனோவ் மற்றும் ரிஷிகேஷ் பாலகிருஷ்ணா திரிபாதி ஆகியோர் தார் பாலைவன பகுதியில் கூட்டாக ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

    அங்குதான் பாலைவனத்தின் உலர்ந்த புற்களில் இந்த வகை சிலந்தி காணப்பட்டது. உலகம் முழுவதும் இதுபோன்று 35 வகையான சிலந்தி வகைகள் உள்ளன. இந்தியாவில் இப்போதுதான் முதல்முறையாக இந்த வகை சிலந்தி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. எனவே தான் இந்த சிலந்தி வகைக்கு கேரள ஆராய்ச்சியாளரின் பெயரை சேர்த்து சூடோமோக்ரஸ் சுதி என பெயரிடப்பட்டு உள்ளது.

    இந்த சிலந்தியின் தலை சிறிய வெள்ளை முடிகளால் மூடப்பட்டிருக்கும். வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும் இதன் வயிற்றில் இருண்ட நீள் வெட்டு பட்டை காணப்படும்.

    பெண் பூச்சியின் தலை மஞ்சள் நிறத்திலும், கண்கள் கருப்பு நிறத்திலும் காணப்படுகிறது. இப்பூச்சி பற்றிய தகவல்கள் இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் பூச்சிகள் பற்றிய அறிவியல் ஆய்வு இதழில் வெளியாகி உள்ளது.

    ×