search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காசிமேடு மார்க்கெட்"

    • வள்ளம், கட்டுமரம், பைபர் படகுகள் உள்ளிட்ட நாட்டுப் படகுகளில் மட்டும் மீனவர்கள் கரையோர பகுதியில் மீன் பிடிக்க செல்கிறார்கள்.
    • சங்கரா, பெரிய நெத்திலி, கவளை மீன்கள் மட்டுமே கிடைத்தது.

    ராயபுரம்:

    ஆழ்கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்களுக்கு, கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரையிலான கிழக்குக் கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை

    விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடை காலம் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது.

    இதையடுத்து மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையோரம் நிறுத்தி பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையடுத்து வள்ளம், கட்டுமரம், பைபர் படகுகள் உள்ளிட்ட நாட்டுப் படகுகளில் மட்டும் மீனவர்கள் கரையோர பகுதியில் மீன் பிடிக்க செல்கிறார்கள்.

    மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்த பிறகு முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று 100 பைபர் படகுகளில் மட்டுமே மீனவர்கள் மீன்பிடிக்க சென்று கரை திரும்பினார்கள். இதனால் காசிமேட்டுக்கு மீன்கள் வரத்து மிகவும் குறைந்துள்ளது. சங்கரா, பெரிய நெத்திலி, கவளை மீன்கள் மட்டுமே கிடைத்தது.

    இந்நிலையில் காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன்கள் வாங்க இன்று காலையில் பொதுமக்கள் குவிந்தனர். ஆனால் பெரிய மீன்கள் எதுவும் இல்லாததால் மீன் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். சிறிய மீன்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை.

    மேலும் விலையை பொருத்தவரை சங்கரா மீன் ஒரு கிலோ ரூ.400-க்கும், பெரிய நெத்திலி ரூ.300-க்கும், கவளை மீன் ரூ.300-க்கும் விற்கப்பட்டது.

    • வஞ்சிரம், வவ்வால், பாறை, சங்கரா, இறால், பால் சுறா உள்ளிட்ட மீன்கள் அதிகமாக விற்பனைக்கு வந்திருந்தன.
    • மீன்கள் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை.

    ராயபுரம்:

    பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோர் விரதம் இருந்து அசைவம் சாப்பிடாமல் இருப்பது வழக்கம். இதற்கிடையே கடந்த செவ்வாய்க்கிழமையுடன் புரட்டாசி மாதம் முடிவடைந்தது.

    இதைத்தொடர்ந்து புரட்டாசி மாதம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஒரு மாத விரதத்துக்கு பின்னர் ஏராளமானோர் குவிந்ததால் மீன் விற்பனை களைகட்டியது.

    இன்று காலை 110 விசை படகுகள் வரை கரைக்கு திரும்பியதால் பெரிய வகை, சிறிய வகை மீன்கள் வரத்து அதிகமாக காணப்பட்டது. வஞ்சிரம், வவ்வால், பாறை, சங்கரா, இறால், பால் சுறா உள்ளிட்ட மீன்கள் அதிகமாக விற்பனைக்கு வந்திருந்தன. மீன்கள் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. கடந்த வாரம் கிலோ ரூ. 350 விற்கப்பட்ட நண்டு இன்று ரூ.500 வரை கூடுதல் விலைக்கு விற்கப்பட்டது. வஞ்சிரம்-ரூ.700, சங்கரா-ரூ.400-க்கு விற்பனை ஆனது.

    புரட்டாசி மாதம் முடிந்தாலும் நவராத்திரி விழா தற்போது நடைபெற்று வருவதால் அதிகமானோர் இன்னும் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து வருகிறார்கள். எனவே நவராத்திரி விழா முடிந்த பிறகு மீன்கள் விலை அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல் கோழி, ஆடு இறைச்சி கடைகளிலும் வழக்கத்தை விட இன்று வியாபாரம் அதிகம் இருந்தது. புரட்டாசி மாதத்திற்கு பிறகு இறைச்சி வியாபாரம் பழைய நிலைக்கு வந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    காசிமேடு மார்க்கெட்டில் மீன்கள் விலை (கிலோவில்) பட்டியல்:-

    வஞ்சிரம் - ரூ.700

    வவ்வா - ரூ.450

    கடமா - ரூ.450

    இறால் - ரூ.400

    சங்கரா பெரியது - ரூ.400

    நண்டு - ரூ.500

    • வாரத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக் கிழமை என்பதால் வழக்கத்தை விட கூட்டம் களைகட்டியது.
    • அதிகாலை முதலே மீன்மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் குவிந்து விற்பனை அதிக அளவில் இருந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ராயபுரம்:

    புரட்டாசி மாதம் நாளை தொடங்க உள்ளது. பெருமாளுக்கு உகந்த இந்த மற்றும் முழுவதும் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருப்பது வழக்கம். இதைத்தொடர்ந்து இன்று காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன்வாங்க ஏராளமானோர் குவிந்தனர். வாரத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக் கிழமை என்பதால் வழக்கத்தை விட கூட்டம் களைகட்டியது.

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு இன்று காலை 180 முதல் 200 விசைப்படகுகள் கரைக்கு திரும்பின. வஞ்சிரம், சங்கரா உள்ளிட்ட பெரி யவகை மீன்கள் வரத்து அதிக அளவில் இருந்தன. இதனால் மீன்விலை குறைந்து இருந்தது. வஞ்சிரம் ரூ.500-க்கும், சங்கரா ரூ.300-க்கும் விற்கப்பட்டது. அதிகாலை முதலே மீன்மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் குவிந்து விற்பனை அதிக அளவில் இருந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    காசிமேடு மீன்மார்க் கெட்டில் மீன்விலை (கிலோவில்)வருமாறு:-

    பெரிய இறால் - ரூ. 300.

    இதேபோல் ஆடு, கோழி இறைச்சி கடைகளிலும் இன்று கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இதுகுறித்து இறைச்சி கடைக்காரர் ஒருவர் கூறும்போது, நாளை புரட்டாசி மாதம் தொடங்க உள்ள நிலையில் இன்று வழக்கத்தை விட வியாபாரம் அதிகம் தான். அடுத்த மாதம் முழுவதும் பெரிய அளவில் வியாபாரம் இருக்காது. அதைசமாளித்து தான் ஆக வேண்டும்.விலை சற்று குறைய வாய்ப்பு உள்ளது. என்றார்.

    • காசிமேடு சந்தையில் பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
    • குடும்பசெலவு, வாழ்க்கை தரம் மேம்பட உழைக்கிறோம். இதில் எங்களுக்கு மன நிறைவை தருகிறது.

    ராயபுரம்:

    சென்னையில் உள்ள காசிமேடு மீன்மார்க்கெட் மிகப்பெரிய மீன்சந்தையாக உள்ளது. சுமார் 1500 விசைப்படகுகள் மற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர்படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள்.

    மீன்பிடி தடைகாலத்தை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் காசிமேடு மீன்மார்க்கெட் களை கட்டி காணப்படும். இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    நள்ளிரவில் தொடங்கும் மீன்வியாபாரம் காலை 7 மணி வரை விறுவிறுப்பாக இருக்கும்.

    கடலுக்குள் சென்று படகுகளில் ஆண்கள் மீன் பிடித்து வந்தாலும் அதனை கரையில் இறக்கி மீன் ஏலக் கூடத்திற்கு எடுத்து செல்வது, மீன்களை தரம் பிரிப்பது, ஏலம் விடுவது, விற்பனை செய்வது, மீன்களை சுத்தம் செய்து கொடுப்பது என அனைத்திலும் பெண்கள் கொடி கட்டி பறக்கிறார்கள். இதனால் காசிமேடு சந்தையில் பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். பெரும்பாலும் காசிமேடு, தண்டையார்பேட்டை உள்ளிட்ட சுற்றி உள்ள பகுதியை சேர்ந்தவர்கள் இதில் அதிகம் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பெரும்பாலானோர் தங்களது குடும்பத்தினர் தலைமுறை, தலைமுறையாக இந்த மீன்விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கூறுகிறார்கள். இதுதொடர்பாக மீன்களை சுத்தப்படுத்தி கொடுக்கும் பெண் ஒருவர் கூறியதாவது:-

    காசிமேட்டில் மீன் விற்பனையில் பெரும்பாலும் பெண்கள் அதிகம் ஈடுபட்டு வருகிறார்கள்.வாடிக்கையாளர்கள் கேட்பதற்கு ஏற்ப சிறிய துண்டுகளாக வெட்டி கொடுப்போம். சில நிமிடத்திலேயே மீன்களை சுத்தப்படுத்தி கொடுத்து விடுவோம். ஒரு மீனை 65 துண்களாகவும் வெட்டி கொடுத்து உள்ளேன். ஒரு கிலோ சூறை மீனை 5 நிமிடத்தில் சுத்தம் செய்வோம். இறால் மீன்களை 10 நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் சுத்தம் செய்து கொடுத்து விடுவோம்.

    பல தலைமுறைகளாக பலர் இங்கு மீன் விற்பனை உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். எங்களது வாழ்வாதாரமே இந்த காசிமேடு சந்தைதான்.

    குடும்பசெலவு, வாழ்க்கை தரம் மேம்பட உழைக்கிறோம். இதில் எங்களுக்கு மன நிறைவை தருகிறது. காசிேமடு மீன்விற்பனை கூடத்தை நவீனமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காசிமேடு மார்க்கெட்டில் ஏராளமான பெண்கள் வியாபாரம் செய்து வருகிறார்கள்.
    • வாலிபர் ஒருவர் அங்கிருந்த பெண் வியாபாரிகளிடம் ஆபாசமாக பேசினார்.

    ராயபுரம்:

    காசிமேடு பழைய கடலோரம் பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டில் ஏராளமான பெண்கள் வியாபாரம் செய்து வருகிறார்கள். இன்று காலை வாலிபர் ஒருவர் அங்கிருந்த பெண் வியாபாரிகளிடம் ஆபாசமாக பேசினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் ஒன்று திரண்டு துடைப்பம், பிளாஸ்டிக் பைப்பால் அந்த வாலிபரை ஓட ஓட விரட்டி தாக்கினர். அடி தாங்க முடியாத அந்த வாலிபர் அங்கு மீன் வெட்டிக்கொண்டிருந்த ஒருவரது கத்தியை எடுத்து மிரட்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது. இதனால் மார்க்கெட் பகுதி இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது.

    • மாட்டுப் பொங்கல் விடுமுறை நாளான இன்று அசைவ பிரியர்கள் மீன், இறைச்சி வாங்க ஆர்வம் காட்டினர்.
    • அசைவ பிரியர்களின் கூட்டத்தால் ஞாயிற்று கிழமை போல காசிமேடு மீன்பிடி துறைமுகம் காட்சி அளித்தது.

    ராயபுரம்:

    பொங்கல் பண்டிகை விழா நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.

    வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் பெரும்பாலான அசைவ பிரியர்கள் மீன், இறைச்சி வாங்குவது வழக்கம். இதனால் காசிமேடு மீன் மார்க்கெட் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டத்தால் களை கட்டும்.

    ஆனால் நேற்று பொங்கல் பண்டிகை என்பதால் பெரும்பாலானோர் அசைவ உணவை தவிர்த்தனர். இதனால் காசிமேடு பகுதி நேற்று வழக்கமான பரபரப்பு இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

    இந்த நிலையில் மாட்டுப் பொங்கல் விடுமுறை நாளான இன்று அசைவ பிரியர்கள் மீன், இறைச்சி வாங்க ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக காசிமேடு மீன் ஏலம் விடும் பகுதியில் அதிகாலை 2 மணி முதலே சில்லரை மற்றும் மொத்த வியாபாரிகள் மீன் வாங்க திரண்டனர்.

    வழக்கத்திற்கு மாறாக திங்கட்கிழமையான இன்று கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் ஏராளமானோர் மீன் வாங்க குவிந்ததால் விற்பனை களை கட்டியது.

    அசைவ பிரியர்களின் கூட்டத்தால் ஞாயிற்று கிழமை போல காசிமேடு மீன்பிடி துறைமுகம் காட்சி அளித்தது.

    எனினும் மீன் விலை கடுமையாக உயர்ந்து இருந்தது. கடந்த வாரத்தில் ரூ.900-க்கு விற்ற வஞ்சிரம் மீன் இன்று ரூ.1500-க்கும், ரூ.600-க்கு விற்ற வவ்வாள் மீன்-ரூ.900-க்கும், ரூ.450-க்கு விற்ற சங்கரா ரூ.700-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இதேபோல் பழவேற்காடு மீன் ஏல கூடத்திலும் மீன் வாங்குவதற்காக கூட்டம் அலைமோதியது. இதனால் மீன்களின் விலை வழக்கத்தை விட இரு மடங்கு உயர்ந்து காணப்பட்டது.

    • ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றிருந்த சுமார் 300 விசைப்படகுகள் கரை திரும்பின.
    • காசிமேடு மார்க்கெட்டில் கூட்டம் அதிகமாக இருந்ததால் களை கட்டி இருந்தது.

    ராயபுரம்:

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 1,200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 800-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

    கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை மீன்பிடி தடை காலம் அமலில் இருந்தது. 61 நாட்கள் தடைகாலம் முடிந்ததை தொடர்ந்து கடந்த 14-ந் தேதி இரவு விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    கடந்த வாரம் தடைகாலம் முடிந்து முதல் ஞாயிற்றுக் கிழமையில் குறைந்த அளவு விசைப்படகுகள் மட்டுமே கரை திரும்பின. இதனால் எதிர்பார்த்த அளவு பெரிய மீன் வரத்து இல்லை. மீன்களின் விலையும் உயர்ந்து காணப்பட்டது.

    ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் விசைப்படகு மீனவர்கள் 15 நாட்களுக்கு பிறகு கரைதிரும்புவது வழக்கம். எனவே தடை காலம் முடிந்து 2-வது ஞாயிற்றுக்கிழமையான இன்று பெரிய அளவிலான மீன்கள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    அதன்படி இன்று அதிகாலை ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றிருந்த சுமார் 300 விசைப்படகுகள் கரை திரும்பின. கடந்த வாரத்தை விட பெரிய அளவிலான மீன்கள் அதிக அளவு சிக்கி இருந்ததால் அவை விற்பனைக்காக குவிந்து இருந்தது.

    இதையடுத்து இன்று அதிகாலை முதலே காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்வாங்க வியாபாரிகளும், பொதுமக்களும் அதிக அளவில் குவிந்தனர். மேலும் கடந்தவாரத்தை விட மீன்களின் விலை குறைவாகவே இருந்ததால் மீன் பிரியர்கள் போட்டி போட்டு பெரிய வகை மீன்களை வாங்கிச்சென்றனர்.

    கடந்த வாரம் கிலோ ரூ.1400 வரை விற்கப்பட்ட வஞ்சிரம் இன்று ரூ.1100-க்கு விற்கப்பட்டது.இதேபோல் ரூ.800-க்கு விற்கப்பட்ட வவ்வால் தற்போது ரூ. 550-க்கும், ரூ. 600-க்கு விற்ற பெரிய வகைசங்கரா ரூ. 400-க்கும் விற்கப்பட்டது.

    காசிமேடு மார்க்கெட்டில் கூட்டம் அதிகமாக இருந்ததால் களை கட்டி இருந்தது. மீன் விற்பனை ஜோராக நடைபெற்றது. இதனால் மீன் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து மீன்வியா பாரிகள் கூறும்போது, கடந்த இரண்டு மாதங்களாக மீன்பிடி தடை காலத்தில் வாழ்வாதாரமின்றி தவித்த எங்களுக்கு இந்த ஞாயிற்றுக்கிழமை மீன் விற்பனை மகிழ்ச்சியை கொடுத்தது. பெரிய வகை மீன்கள் அதிகளவு கிடைத்து இருந்தது. மீன்களின் விலையும் குறைந்து இருந்ததால் பொதுமக்களும் வியாபாரிகளும் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். வரும் நாட்களிலும் இதே நிலை நீடிக்கும் என்றனர்.

    காசிமேடு மார்க்கெட்டில் மீன்களின் விலை விபரம் (கிலோவில்) வருமாறு:-

    வஞ்சிரம்- ரூ.1100, பர்லா - ரூ.380, சங்கரா-ரூ.400, தோல் பாறை -ரூ.300, தேங்காய் பாறை -ரூ.700, கடம்பா- ரூ.280, நெத்திலி- ரூ.100

    வெள்ளை ஊடான்-ரூ.100, இறால், ரூ.350நண்டு-ரூ.300.

    ×