search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேட்புமனு தாக்கல்"

    • காங்கிரஸ் சார்பில் ஜுலானா தொகுதியில் போட்டியிடும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை எதிர்த்து ஆம் ஆத்மி சார்பில் கவிதா தலால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்
    • காங்கிரஸ் எம்.பி. தீபேந்தர் எஸ் ஹூடா முன்னிலையில் வினேஷ் போகத் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

    அரியானா மாநில சட்டசபைத் தேர்தல் அக்டோபர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. காங்கிரசுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையே தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்சனையால் இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற இரண்டு கட்சிகளும் தனித்தனியே களம் காண்கின்றன. ஆம் ஆத்மி கட்சி சார்பில் நேற்று முன்தினம் 20 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

    தொடர்ந்து இன்று காலை வெளியான 2-வது கட்ட பட்டியலில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்பின் மதியம் 3வது கட்டமாக 11 வேட்பாளர்களின் பட்டியல் வெளியானது. இந்நிலையில் தற்போது 21 வேட்பாளர்கள் கொண்ட 4 வது வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. இதுவரை ஆம் ஆத்மி கட்சி 61 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    தற்போது வெளியாகியுள்ள 4 வது பட்டியலில் காங்கிரஸ் சார்பில் ஜுலானா தொகுதியில் போட்டியிடும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை எதிர்த்து ஆம் ஆத்மி சார்பில் கவிதா தலால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கவிதா தேவி என்ற பேயரில் அறியப்படும் கவிதா தலால் WWE உள்ளிட்டவற்றில் பங்கேற்ற தொழில்முறை மல்யுத்த வீரர் ஆவார். மேலும் ஜுலானா பகுதியைச் சேர்ந்தவரும் ஆவார்.

    இதன்படி இரண்டு மல்யுத்த வீராங்கனைகள் ஒரே தொகுதியில் மோத உள்ளனர். இதுதவிர்த்து பாஜக சார்பில் ஜுலானா தொகுதியில் யோகேஷ் பைராகி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இதற்கிடையே காங்கிரஸ் எம்.பி. தீபேந்தர் எஸ் ஹூடா முன்னிலையில் வினேஷ் போகத் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். "நான் அரசியலுக்கு வருவது எனது அதிர்ஷ்டம். ஒவ்வொரு பிரிவினரின் நலனுக்காகவும் நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். ஜுலானா மக்கள் எனக்குக் கொடுக்கும் அன்புக்கு நான் நன்றியுள்ளவளாக இருப்பேன்" என்று வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, வினேஷ் போகத் தெரிவித்தார். 

    • வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான நேற்று மட்டும் ஒரே நாளில் 32 சுயேச்சை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர்.
    • மனுக்கள் மீதான பரிசீலனை வருகிற 24-ந்தேதி நடைபெறுகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ம் தேதியன்று விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகமான தாலுகா அலுவலகத்தில் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.

    இத்தொகுதியில் போட்டியிடுவதற்காக திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சார்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    இதன் மூலம் மொத்தம் விக்கிரவாண்டி தொகுதியில் 56 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    இவர்களில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 3 மனுக்களும், பாமக வேட்பாளர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா, சுயேச்சை வேட்பாளர்கள் காந்தியவாதி ரமேஷ், அக்னி ஆழ்வார், நூர்முகமது, ராஜேந்திரன் ஆகியோர் தலா 2 மனுக்களும் தாக்கல் செய்துள்ளனர். அந்த வகையில் மொத்தம் 64 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

    இந்த மனுக்கள் மீதான பரிசீலனை வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. மனுக்களை வாபஸ் பெறுவதற்கு 26-ந்தேதி (புதன்கிழமை) கடைசி நாளாகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

    வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான நேற்று மட்டும் ஒரே நாளில் 32 சுயேச்சை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர். இதில் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி, விதவைக்கோலத்தில் ஆறுமுகம், எம்.ஜி.ஆர். வேடத்தில் நூர்முகமது உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

    இதன் காரணமாக விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் அலுவலகமான தாலுகா அலுவலகம் மிகவும் பரபரப்பாக இயங்கியது.

    • தி.மு.க. வேட்பாளரான அன்னியூர் சிவா, விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் இன்று காலை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
    • நாம் தமிழர் கட்சி வேட்பாளரான டாக்டர் அபிநயா வருகிற 20-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவை தொடர்ந்து அங்கு அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளராக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். அ.தி.மு.க. தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணித்துள்ளது.

    இதனால் விக்கிரவாண்டி தொகுதியில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தி.மு.க.-பா.ம.க. இடையேதான் நேரடி போட்டி நிலவி உள்ளது. இதனால் 2 கட்சிகளை சேர்ந்தவர்களும் வெற்றி பெறுவதற்காக வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார்கள்.

    தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் உள்பட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் விக்கிரவாண்டியில் முகாமிட்டு தேர்தல் பணியாற்றி வருகிறார்கள். பா.ம.க. நிர்வாகிகளும் பம்பரமாக சுழன்று ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

    விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த 14-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளான அன்று 5 சுயேட்சைகள் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் 7 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் தி.மு.க., பா.ம.க. வேட்பாளர்கள் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தனர். தி.மு.க. வேட்பாளரான அன்னியூர் சிவா, விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் இன்று காலை 11 மணி அளவில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    அவருடன் விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களான ஜெகத்ரட்சகன் எம்.பி., அமைச்சர் பொன்முடி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    பின்னர் பேட்டி அளித்த அமைச்சர் பொன்முடி கூறும்போது, கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தி 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது, ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்றார்.

    'இதைத் தொடர்ந்து பா.ம.க. வேட்பாளரான சி.அன்புமணியும் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இருவரும் தங்களது ஆதரவாளர்களோடு ஊர்வலமாக சென்று வேட்புமனுக்களை தாக்கல் செய்ததால் விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் களம் இன்று களைகட்டி காணப்பட்டது.

    நாம் தமிழர் கட்சி வேட்பாளரான டாக்டர் அபிநயா வருகிற 20-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

    முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ததை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் பிரசாரமும் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. நாளை முதல் தி.மு.க. மற்றும் பா.ம.க. கட்சி களை சேர்ந்தவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து ஏற்கனவே அமைச்சர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களான செல்வப்பெருந்தகை, திருமாவளவன், முத்தரசன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பிரசாரம் செய்ய உள்ளனர்.

    பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து டாக்டர் ராமதாஸ், தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோரும் பிரசாரம் செய்கிறார்கள்.

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயாவை ஆதரித்து சீமானும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

    வருகிற 24-ந்தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெற 26-ந்தேதி கடைசி நாளாகும். அன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது. இதன் பிறகு தேர்தல் களம் மேலும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பதவிக்காலம் வருகிற ஜூலை 1-ந்தேதியுடன் முடிவடைகிறது.
    • தமிழ்நாட்டை சேர்ந்த பத்தராஜனும் மனு சமர்ப்பித்திருந்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 3 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகிற ஜூலை 1-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அந்த பதவிகளுக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்க வேண்டியிருந்தது. அது தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. மேலும் போட்டியிடுபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அந்த பதவிகளுக்கு கேரள காங்கிரஸ்(எம்) கட்சி ஜோஸ் கே.மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சுனீர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஹரிஸ் பீரன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த பத்தராஜனும் மனு சமர்ப்பித்திருந்தார். அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதனால் ஜோஸ் கே.மணி, சுனீர், ஹரிஸ் பீரன் ஆகிய 3 பேரும் ராஜ்யசபா உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வானார்கள்.

    • தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் அத்தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
    • வேட்பு மனுதாக்கல் செய்ய 21-ந் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள், 24-ந் தேதி பரிசீலனை செய்யப்படும். மனுவை வாபஸ் பெற 26-ந் தேதி கடைசி நாளாகும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் பிடாகத்தை அடுத்த அத்தியூர்திருவாதி கிராமத்தை சேர்ந்தவர் நா.புகழேந்தி (வயது 71).

    விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த இவர், கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

    இதையடுத்து அந்த சட்டமன்ற தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 6 மாதத்திற்குள் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும்.

    அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முன்னெடுத்து தீவிர பணியில் இறங்கி தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. அந்த வகையில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி நடைபெற உள்ளது.

    இதன் வாக்கு எண்ணிக்கை ஜூலை 13-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.

    தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் அத்தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    இந்த சூழலில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்கியது.

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் இன்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வேட்பு மனுதாக்கல் செய்ய 21-ந் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள், 24-ந் தேதி பரிசீலனை செய்யப்படும். மனுவை வாபஸ் பெற 26-ந் தேதி கடைசி நாளாகும்.

    வேட்பு மனுதாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன் 4 பேர் என மொத்தம் 5 பேர் மட்டுமே தேர்தல் அலுவலகமான விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்திற்குள் செல்ல வேண்டும் என்றும் மற்ற அனைவரும் தேர்தல் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்கு அப்பால் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கடுமையான நிபந்தனை விதித்துள்ளது.

    இதனால் தேர்தல் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ளே யாரும் செல்லாத அளவிற்கு எல்லைக்கோடுகள் வரையப்பட்டுள்ளதோடு அங்கு போலீசார், பேரிகார்டு மூலம் தடுப்புகளை அமைத்துள்ளனர்.

    • தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி நடக்கிறது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13-ந்தேதி எண்ணப்படுகிறது. இதையொட்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 21-ந்தேதி கடைசி நாளாகும். 24-ந்தேதியன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. 26-ந்தேதி (புதன்கிழமை) மாலைக்குள் வேட்பு மனுவை திரும்பப்பெறலாம்.

    இத்தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களுடைய வேட்பு மனுவை விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்யலாம் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

    இதையொட்டி விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அங்குள்ள தனி அறையில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அமருவதற்கான இருக்கைகள் மற்றும் வேட்பு மனுதாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள், அவர்களுடைய வேட்பு மனுவை முன்மொழிய வருகை தருபவர்கள் அமருவதற்கான இருக்கைகள் போடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வேட்பு மனுதாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் மற்றும் அவருடன் வருபவர்கள் தேர்தல் விதிகளை முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்கும் வகையில் தாலுகா அலுவல கத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. 

    • பிரதமர் மோடி இன்று தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
    • பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி என தகவல்.

    உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி இன்று காலை 11.45 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்குச் சென்று, தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    அவருடன் பா.ஜ.க. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட தலைவர்கள் பிரதமருடன் காணப்பட்டனர்.

    பிரதமர் மோடியுடன் பண்டிட் கணேஷ்வர் சாஸ்திரி, லால்சந்த் குஷ்வாஹா, பைஜ்நாத் படேல் மற்றும் சஞ்சய் சோன்கர் ஆகிய நான்கு பேர் முன்மொழிந்தனர். 

    இந்நிலையில், பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி என பிரமாண பத்திரத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    2014ம் ஆண்டு முதல் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக வாரணாசியில் போட்டியிட்டு வரும் பிரதமர் மோடி, தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.

    இந்நிலையில், பிரதமர் மோடியின் பிரமாணப் பத்திரத்தில், அவர் ரூ.3.02 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்களையும், ரூ.52,920 ரொக்கத்தையும் வைத்திருக்கிறார் என்றும் அவருக்கு சொந்தமாக நிலம், வீடு, கார் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    பிரதமர் மோடியின் வரிக்கு உட்பட்ட வருமானம் 2018-19 நிதியாண்டில் ரூ.11 லட்சத்தில் இருந்து 2022-23ல் ரூ.23.5 லட்சம் என இரு மடங்காக உயர்ந்துள்ளது. 

    பாரத ஸ்டேட் வங்கியில் பிரதமர் மோடிக்கு இரண்டு கணக்குகள் உள்ளன. எஸ்பிஐயின் காந்திநகர் கிளையில் ரூ.73,304 டெபாசிட் செய்யப்பட்டுள்ள நிலையில், எஸ்பிஐயின் வாரணாசி கிளையில் ரூ.7,000 மட்டுமே உள்ளது.

    பிரதமருக்கு எஸ்பிஐயில் ரூ.2,85,60,338 நிலையான வைப்புத்தொகை உள்ளது.

    பிரதமரிடம் ரூ.2,67,750 மதிப்புள்ள நான்கு தங்க மோதிரங்களும் உள்ளன.

    கடந்த 2019ம் ஆண்டு தேர்தலைவிட இந்த முறை பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.

    • 13, 14-ந்தேதிகளில் பிரதமர் மோடியை வாரணாசியில் எந்தெந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்வது என்று கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
    • வாரணாசியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை உத்தரபிரதேச மாநில அரசு செய்து வருகிறது.

    வாரணாசி:

    பாராளுமன்றத்துக்கு நடத்தப்பட்டு வரும் 7 கட்ட தேர்தல்களில் இதுவரை 3 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. 4-வது கட்ட தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

    5-வது, 6-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் தற்போது வட மாநிலங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஜூன் 1-ந்தேதி இறுதி 7-வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

    7-வது கட்ட தேர்தலுக்கான மனுதாக்கல் கடந்த 7-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. வருகிற 14-ந்தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் 7-வது கட்ட தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

    வாரணாசி தொகுதியில் கடந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் 2-வது தடவை வெற்றி பெற்றுள்ள பிரதமர் மோடி தற்போது 3-வது முறையாக களம் இறங்கி உள்ளார். முந்தைய தேர்தல்களை விட இந்த தடவை வாரணாசி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

    இதற்காக பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் தேர்தல் பணிக்குழுக்களை ஏற்படுத்தி இருக்கிறார். அவர்கள் வீடு வீடாக சென்று பிரதமர் மோடிக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். இந்த நிலையில் பிரதமர் மோடி வருகிற 13, 14-ந்தேதிகளில் வாரணாசியில் தங்கி வேட்புமனு தாக்கல் செய்யவும், பிரசாரம் செய்யவும் திட்டமிட்டு இருக்கிறார்.

    பிரதமரின் இந்த 2 நாள் பயணம் தொடர்பாக பா.ஜ.க. தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினார்கள். 13, 14-ந்தேதிகளில் பிரதமர் மோடியை வாரணாசியில் எந்தெந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்வது என்று கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

    இன்று பிரதமரின் வாரணாசி பயண திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படுகிறது.

    நாளை மறுநாள் (13-ந்தேதி) மதியம் வாரணாசி செல்லும் பிரதமர் மோடி முதலில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துக்கு செல்கிறார். அங்கு பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மதன்மோகன் மாள்வியா சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.

    அதன் பிறகு அங்கிருந்து அவர் ரோடு ஷோ நடத்துகிறார். அந்த ரோடு ஷோ வாரணாசியின் முக்கிய சாலைகள் வழியாக நடைபெற உள்ளது. சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தி தனக்கு ஆதரவு திரட்டுவார் என்று தெரியவந்துள்ளது.

    அந்த ரோடு ஷோவில் பிரதமருடன் அமித்ஷா, நட்டா, ராஜ்நாத்சிங் உள்பட பா.ஜ.க. மூத்த தலைவர்கள், மத்திய மந்திரிகள் பங்கேற்க உள்ளனர். ரோடு ஷோவின் போது வழிநெடுக பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    6 கிலோ மீட்டர் தூர ரோடு ஷோவில் பிரதமர் மோடி 12-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனத்தை நிறுத்தி மக்களின் வாழ்த்துகளை பெற்றுக்கொள்வார். அப்போது மக்களுடன் மோடி கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதை கருத்தில் கொண்டு மோடியின் வாகன பேரணி நடக்கும் 6 கிலோ மீட்டர் தொலைவிலும் சாலையின் இருபுறமும் லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி வாரணாசியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை உத்தரபிரதேச மாநில அரசு செய்து வருகிறது. மோடியின் ரோடு ஷோ வாரணாசியில் கங்கை கரையில் உள்ள தசப்வம்தே காட் என்ற இடத்தில் நிறைவு பெறுகிறது.

    அங்கு கங்கை கரையில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு கங்கைக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு செய்ய உள்ளார். அவருடன் ஏராளமான பா.ஜ.க. நிர்வாகிகள் ஆரத்தியில் ஈடுபட உள்ளனர்.

    அதன் பிறகு அன்று இரவு பிரதமர் மோடி வாரணாசியில் தங்குகிறார். அன்று இரவு வாரணாசி தொகுதி பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் பிரதமர் மோடியை சந்தித்து பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    மறுநாள் (14-ந்தேதி) செவ்வாய்க்கிழமை காலை பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கு செல்கிறார். அங்கு அவர் சிறப்பு வழிபாடுகள் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆலய தரிசனம் முடிந்ததும் வாரணாசியில் நடக்கும் பா.ஜ.க. ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    அந்த ஆலோசனை கூட்டத்தில் வாரணாசி தொகுதி பா.ஜ.க. பூத் கமிட்டி உறுப்பினர்கள், நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்கிறார்கள். அவர்கள் மத்தியில் தேர்தல் பணி தொடர்பாக பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார். பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டுவது தொடர்பாக அப்போது பிரதமர் மோடி அறிவுரை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு பிரதமர் மோடி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய புறப்படுகிறார். மதியம் குறிப்பிட்ட நேரத்தில் அவர் மனுதாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    வேட்புமனு தாக்கல் செய்த பிறகு மீண்டும் வாரணாசியில் ஆதரவு திரட்ட உள்ளார். அன்று டெல்லி திரும்பும் அவர் மீண்டும் வாரணாசி தொகுதிக்கு சென்று பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

    • உ.பி. தியோரியா தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது.
    • வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் 15-ந்தேதியாகும்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஏழாவது மற்றும் கடைசி கட்டமாக 13 தொகுதிகளுக்கு ஜூன் 1-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மே 15-ந்தேதி ஆகும்.

    தியோரியா தொகுதியில் ஜூன் 1-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் ஷஷாங் மானி திரிபாதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய முடிவு செய்தார்.

    தேர்தல் அலுவலகத்திற்கு முன் அவரது ஆதரவாளர்கள் திரண்டு இருந்தனர். வேட்புமனு தாக்கல் செய்தவற்கான நேரம் முடியும் தருவாயில் இருந்து. இந்த நிலையில் ஷஷாங்க் வேட்பு மனுதாக்கல் செய்வதற்கான பைல் உடன் அலுவலகத்தை நோக்கி ஓடோடி வந்தார்.

    அவசரமாக தொண்டர்களை விலகச் சொல்லி நேரம் முடிவதற்குள் தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    பொதுவாக வேட்புமனு தாக்கல் செய்ய டோக்கன் வழங்கப்படும். அதன்படி வேட்பாளர்கள் சரியான நேரத்திற்கு முன்னதாகவே அங்கே இருப்பார்கள். ஆனால் தொண்டர்கள் காத்திருக்க வேட்பாளர் ஓடோடி வந்தது வியப்பாக பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் மோடி மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.
    • `ரோடு ஷோ' வாரணாசியில் நடைபெற உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, மே 14-ந் தேதி கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

    இதையொட்டி பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரம்மாண்ட ஊர்வலம் நடைபெற உள்ளது. பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் கிழக்கு உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசி உள்ளிட்ட 13 தொகுதிகளுக்கு கடைசி கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    வாரணாசி எம்.பி.யாக இரண்டாவது முறையாக தொடரும் பிரதமர் நரேந்திர மோடி, இங்கு மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.

    வாரணாசியில் நேற்று தொடங்கிய வேட்புமனு தாக்கல் மே 14-ந் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் இங்கு கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார்.

    இதையொட்டி இதற்கு முதல் நாளில் இருந்தே வாரணாசியில் பிரம்மாண்ட ஊர்வலங்கள் நடைபெற உள்ளன.

    உத்தரபிரதேசத்தில் புனித நகரமான வாரணாசி யின் மால்தஹியாவில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

    வரும் 14-ந் தேதியிலும் அதேபோல் படேல் சிலைக்கு பிரதமர் மோடி மாலை அணிவிக்க உள்ளார். இதற்கு ஒருநாள் முன்னதாக மே 13-ல் பிரதமர் மோடி வாரணாசி செல்ல உள்ளார். அதே நாளில் அவரது `ரோடு ஷோ' வாரணாசியில் நடைபெற உள்ளது.

    பிரதமர் தனது வேட்புமனுவை வாரணாசி தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க உள்ளார். இப்பதவியில் மாவட்ட ஆட்சியரான தமிழ்நாட்டை சேர்ந்த எஸ்.ராஜலிங்கம் உள்ளார். வாரணாசியுடன் சேர்த்து உத்தரபிரதேசத்தின் 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஜூன் 1-ல் நடைபெற உள்ளது. இதன் மூன்றாவது நாளான ஜூன் 4-ல் நாடு முழுவதிலுமான தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.

    • ஒவ்வொரு நாளும் மக்களுக்காக உழைக்கப்போகிறேன்.
    • ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு நான் ஒரு நாள் கூட வீணடிக்கமாட்டேன்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    இந்திய தேர்தல் பற்றி வழக்கமாக வெளிநாடுகள் பல்வேறு கருத்துக்களை தெரிவிக்கும். ஆனால் இந்த தடவை அதில் மாறுபாடு ஏற்பட்டுள்ளது.

    இந்திய தேர்தலை சீர்குலைக்கவும், ஆதிக்கம் செலுத்தவும் சில வெளிநாட்டு சக்திகள் முயற்சி செய்கின்றன. ஆனால் அந்த வெளிநாட்டு சக்திகளின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. அவர்களால் இந்த விசயத்தில் வெற்றிபெற இயலாது.

    இந்திய மக்கள் மத்தியில் வெளிநாட்டு சக்திகளின் ஆதிக்கம் ஒருபோதும் எடுபடாது. நெருக்கடி நிலைக்கு பிறகு இந்தியாவில் குறிப்பாக ஏழைகள் ஜனநாயகத்தை பாதுகாக்கி றார்கள். அவர்கள் வெளி நாட்டு சக்திகளின் சதிக்கு ஆதரவு அளிக்க மாட்டார்கள்.

    இந்த தடவை தேர்தலில் ஜெயித்தால் நான் சர்வாதிகாரி ஆகி விடுவேன் என்று சிலர் திட்டமிட்டு பிரசாரம் செய்கிறார்கள். அவர்களுடைய ஆட்சியை யும், அவர்களது மூதாதை யர்கள் செய்ததையும் எனது ஆட்சியையும் ஒப்பிட்டு பார்க்கட்டும். அவருடைய (ராகுல்காந்தி) பாட்டி என்ன செய்தார்? அவருடைய பெரிய தாத்தா என்ன செய்தார்?

    மோடி கட்சியின் ஆட்சியில் என்ன செய்யப்பட்டது? இதை ஒப்பிட்டு பார்த்தால் யார் சர்வாதிகாரி என்பது தெரிந்து விடும். இதுபற்றி யாராவது விவாதிப்பது உண்டா?

    அரசியல் சட்டத்தில் நேரு முதல் முதலில் பெரிய மாற்றங்கள் செய்தார். இந்திரா காந்தி காலத்தில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட போது என்னவெல்லாம் நடந்தது? இப்போது எனது ஆட்சியில் 10 ஆண்டுகளில் என்ன நடந்தது?

    காங்கிரஸ் ஆட்சியில் நடந்த தவறுகள் அனைத்தை யும் பட்டியலிட முடியும். எனது ஆட்சியில் அத்தகைய தவறுகள் ஒன்றைகூட சுட்டிகாட்ட முடியாது. ஜன நாயகம் என்பது எங்களது ரத்த நாளங்களில் ஓடியது. எனவே சர்வாதிகாரி என்ற பேச்சுக்கே இடமில்லை.

    அதுபோல நான் முஸ் லிம்களுக்கு எதிரானவன் என்பது போல சித்தரிக்கி றார்கள். வாஜ்பாய் ஆட்சி காலத்திலேயே ராமர் கோவில் கட்டுவது, 370-வது சட்ட பிரிவை நீக்குவது, பொது சிவில் சட்டம் கொண்டுவருவது என்று தேர்தல் அறிக்கைகளில் கூறப்பட்டது. அதைத்தான் நாங்கள் இப்போது நிறைவேற்றி உள்ளோம்.

    பா.ஜ.க. அரசின் கொள்கை திட்டங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும். ஒரு கிராமத்தில் 50 பேருக்கு வீடு தேவை என்றால் 50 பேருக்கும் வீடு கட்டி கொடுக்கப்படும். ஜாதி, மதம் பார்த்து எதுவும் நடக்காது.

    அனைத்து ஜாதி, மத மக்களும் அனைத்துவிதமான திட்ட பயன்களும் பெறுவார்கள். இதுதான் சமூகநீதியின் உத்தரவாதம். 2002-ம் ஆண்டு குஜராத்தில் மத கலவரம் ஏற்பட்டபோது நாங்கள் திட்டமிட்டு அதை ஒடுக்கினோம். அதன் பிறகு இன்று வரை மத கலவரம் ஏற்படவில்லை.

    முஸ்லிம்கள் நன்கு சிந்தித்து பார்க்க வேண்டும். நமது நாடு வேகமாக முன்னேறிக் கொண்டு இருக்கிறது. இதில் முஸ்லிம்களுக்கு எந்தவிதத்தில் இடையூறு ஏற்பட்டு இருப்பதாக கருத முடியும். முஸ்லிம்கள் தங்களது குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    ஒவ்வொரு இஸ்லாமியன ரும் இந்தியாவின் எதிர்காலத்தை சிந்தித்து பார்க்க வேண்டும். எந்தஒரு மதத்தை சார்ந்தவரும் கொத்தடிமை போல் வாழ்வதை நாங்கள் அனு மதிக்க மாட்டோம். என்றா லும் சிலர் பயம் காரணமாக திட்டமிட்டு வதந்தி பரப்புகிறார்கள்.

    வாரணாசி தொகுதிக்கு 2014-ம் ஆண்டு சென்ற போது நான் அங்கு போட்டியிடுவது என்று கடைசி நிமிடத்தில்தான் முடிவு செய்யப்பட்டது. அங்கு மனுதாக்கல் செய்து முடித்த பிறகு மக்கள் மத்தியில் பேசினேன். அப்போது நான் எனது பேச்சுக்கான குறிப்புகளை தயார் செய்திருக்கவில்லை.

    வாரணாசி மக்கள் மத்தியில் பேசுகையில், `என்னை யாரும் இங்கு அனுப்பவில்லை. கங்கை தாய் என்னை வரவழைத்து தத்து எடுத்து இருக்கிறாள்' என்று கூறினேன். அதை வாரணாசி மக்கள் ஏற்றுக் கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

    கடந்த 10 ஆண்டுகளாக நான் வாரணாசியில் தொடர்ந்து இருக்கிறேன். நான் பேசும்போதெல்லாம் எனது வாரணாசி என்று தான் குறிப்பிடுவேன். எனக்கும், வாரணாசி தொகுதிக்கும் இருக்கும் தொடர்பானது ஒரு தாய்க்கும், மகனுக்கும் இருக்கும் தொடர்பு போன்றது.

    வாரணாசி போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு நான் குஜராத்தில் உள்ள வீட்டுக்கு சென்றபோது எனது தாய் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்தார். அவர் 2 விசயங்களை என்னிடம் குறிப்பிட்டார். ஒன்று-எப்போதும் ஏழைகளுக்காக உழைத்துக் கொண்டே இரு. 2-வது எந்த காரணத்தை கொண்டும் ஊழலுக்கு இடம் கொடுக்காதே என்று கூறினார்.

    இந்த இரண்டையும் நான் இப்போதும் கடை பிடித்து வருகிறேன். ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் வேட்புமனு தாக்கலுக்கு முன்பு எனது தாயாரின் காலில் விழுந்து ஆசி பெற்று வருவதை வழக்கத்தில் வைத்திருந்தேன்.

    எனது தாயாரிடம் ஆசி பெறாமல் வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பது இப்போதுதான் முதல் தடவை. அதே சமயத்தில் 140 கோடி மக்கள் கொண்ட இந்தியாவில் கோடிக்கணக்கான தாய்கள் இருந்து என்னை ஆசிர்வதிக்கிறார்கள்.

    அந்த ஆசியுடன் நான் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்.

    2019-ம் ஆண்டு தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட இடங்களை பாரதீய ஜனதா பெற்றது. இந்த தடவை ஆந்திரா, ஒடிசா, வடக்கு கிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு செல்வாக்கு அதிகரித்து உள்ளது. எனவே 400 இடங்களை நிச்சயம் எட்டி பிடிப்போம்.

    கர்நாடகாவில் பிரஜ்வால் ரேவண்ணா மீதான குற்றச் சாட்டுகள் தொடர்பாக நான் மவுனமாக இருப்பதாக விமர்சிக்கிறார்கள். இத்தகைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. சட்டத்துக்கு உட்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.

    பிரஜ்வால் போன்றவர்க ளின் செயல்களை ஒருபோ தும் பொறுத்துக் கொள்ள இயலாது. என்றாலும் அவர் தொடர்பான ஆயிரக்க ணக்கான வீடியோக்கள் ஒரே நாளில் திட்டமிட்டு வெளியிடப்பட்டதுதான் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

    காங்கிரஸ் கட்சியினர் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி இந்த வீடியோக்களை தொகுத்து உள்ளனர். தேர்தல் சமயத்தில் சதிதிட்டத்துடன் அந்த வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    3-வது முறை பா.ஜ.க. ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. அதற்கான திட்டமிடலில் நான் ஈடுபட்டுள்ளேன். தேர்தலுக்கு பிறகு நான் மிக முக்கியமான பெரிய முடிவுகளை எடுக்க உள்ளேன். அந்த முடிவு களில் இருந்து ஒரு போதும் விலகப் போவதில்லை.

    ஆட்சி அமைத்ததும் முதல் 100 நாட்களில் செய்ய வேண்டிய திட்டப்பணிகள் குறித்து வரையறை செய்யப்பட்டுவிட்டது. ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு நான் ஒரு நாள் கூட வீணடிக்கமாட்டேன். ஒவ்வொரு நாளும் மக்களுக்காக உழைக்கப்போகிறேன்.

    எனது நாடு எந்த ஒரு சிறிய விசயத்திலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். கொள்கை முடிவுகளை செய்வதில் ஏற்பட்ட தாமதங்களால்தான் இந்தியாவில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. இனி அத்தகைய நிலை இருக்காது.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    • பிரதமர் மோடி 14-ந்தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.
    • தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 19, 26, மே 7, 12, 20 25, மற்றும் ஜூன் 1-ந்தேதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணை யம் அறிவித்தது.

    அதன்படி கடந்த மாதம் 19 மற்றும் 26-ந்தேதிகளில் முதல் 2 கட்ட தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டன. இன்று (மே 7-ந்தேதி) 3-வது கட்ட தேர்தல் 93 தொகுதிகளில் நடந்து வருகிறது.

    அடுத்து 4-வது கட்ட தேர்தல் வருகிற 13-ந்தேதி நடைபெற உள்ளது. 96 தொகுதிகளில் 4-வது கட்ட தேர்தலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    வருகிற சனிக்கிழமை 96 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் ஓய உள்ளது. இந்த நிலையில் 5-வது, 6-வது கட்டங்களுக்கான தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

    இந்த நிலையில் இறுதி 7-வது கட்ட தேர்தலுக்கான அறிவிக்கையை இன்று (செவ்வாய்க்கிழமை) தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதன் காரணமாக 57 தொகுதிகளில் 7-வது கட்ட தேர்தல் ஜூன் 1-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    7-வது கட்ட தேர்தல் நடக்கும் 57 தொகுதிகளில் பீகாரில் 8 தொகுதிகள், இமாச்சல பிரதேசத்தில் 4 தொகுதிகள், ஜார்க்கண்ட் டில் 3 தொகுதிகள், ஒடிசா வில் 6 தொகுதிகள், பஞ்சாப் பில் 13 தொகுதிகள், உத்தர பிரதேசத்தில் 13 தொகுதிகள், மேற்கு வங்காளத்தில் 9 தொகுதிகள், சண்டிகரில் ஒரு தொகுதி இடம் பெற்று உள்ளன.

    இந்த 8 மாநிலங்களில் பஞ்சாப்பில் 13 தொகுதி களுக்கும், இமாச்சல பிரதே சத்தில் 4 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த 8 மாநிலங்களிலும் ஓட்டுப்பதிவுக்கு இப்போதே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் 7-வது கட்ட தேர்தலுக்கான 57 தொகுதிகளிலும் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது. மனுதாக்கல் செய்ய 14-ந்தேதி கடைசி நாளாகும். 15-ந்தேதி மனுக்கள் மீதான பரிசீலனையும், 17-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படும்.

    பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி 7-வது கட்ட ஓட்டுப்பதிவில் இடம் பெற்றுள்ளது. அங்கு இன்று சில சுயேட்சைகள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    பிரதமர் மோடி மனுதாக்கலுக்கு கடைசி நாளான 14-ந்தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். அதன் பிறகு 18 நாட்களுக்கு தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெறும்.

    ×