search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவராத்திரி"

    • புதன் கல்வி,கலைகளுக்குரியவராகவும், புத்திகாரகராகவும் (புத்திக்கு உரியவர்), பண்புநலன்களைத் தருபவராகவும் இருப்பவர்.
    • அதனால் தான் கல்வி, கலைகளுக்குரிய கலைமகளை இம்மாதத்தில் வழிபாடு செய்கிறோம்.

    வடமாநிலங்களில் கொண்டாடப்படும் துர்கா பூஜை தமிழகத்தில் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.

    இதை புரட்டாசியில் கொண்டாட ஜோதிட ரீதியான காரணமும் உண்டு.

    நவக்கிரகங்களின் சஞ்சாரத்தை கோள்சாரம் என்று குறிப்பிடுவர்.

    இதில் சூரியனுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இவர் புரட்டாசி மாதத்தில் புதனுக்குரிய கன்னிராசியில் சஞ்சரிப்பார்.

    புதன் கல்வி,கலைகளுக்குரியவராகவும், புத்திகாரகராகவும் (புத்திக்கு உரியவர்), பண்புநலன்களைத் தருபவராகவும் இருப்பவர்.

    அதனால் தான் கல்வி, கலைகளுக்குரிய கலைமகளை இம்மாதத்தில் வழிபாடு செய்கிறோம்.

    இசை, நடனம், விளையாட்டு போன்ற கலை பயில்பவர்களும், அட்சர அப்யாசம் என்னும் முதல் படிப்பு சடங்கு செய்பவர்களும் புரட்டாசியில் வரும் விஜயதசமி நாளிலேயே தொடங்குகிறார்கள்.

    புரட்டாசியில் வரும் இந்நவராத்திரியை சரஸ்வதியின் பெயரை இணைத்து சாரதா நவராத்திரி என்று அக்காலத்தில் அழைத்தனர்.

    (சரஸ்வதிக்கு சாரதா என்ற பெயரும் உண்டு)கல்வி மட்டுமல்லாமல் செல்வம், தைரியமும் மனிதனுக்கு அவசியம்.

    அவற்றை பெற்று வாழ்வு வளம் பெறுவதற்காகவே புதனுக்குரிய புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம்.

    • வாழ்க்கைக்கு தேவை பணம் பிற வசதிகள்.
    • இதைப் பெறுவதற்கு லட்சுமியை முதலில் துதிக்கிறோம்.

    நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் லட்சுமிக்கும், அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரியதாக தமிழகத்தில் விழா எடுக்கிறோம்.

    இதற்கு காரணம் உண்டு. வாழ்க்கைக்கு தேவை பணம் பிற வசதிகள். இதைப் பெறுவதற்கு லட்சுமியை முதலில் துதிக்கிறோம்.

    பணமிருந்தால் போதுமா? அதைப் பாதுகாப்புடன் வைக்க வேண்டுமே! அதற்குரிய தைரியத்தையும் வழிமுறையையும் வேண்டி சக்தியாகிய துர்க்கை, காளி இன்னும் பிற காவல் தெய்வங்களை வணங்குகிறோம்.

    பாதுகாப்புடன் கூடிய செல்வம் மட்டும் போதுமா! அதை என்னென்ன பயனுள்ள காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்பது தெரிய வேண்டுமே! அதற்குத்தான் கல்வி.

    ஆக, காரண காரியங்க ளுடன் வகுக்கப்பட்டது நவராத்திரி பூஜை முறை.

    • மேலும், அம்பிகையின் கதை கேட்பவர்களை கிரகதோஷம் ஏதும் செய்யாது.
    • பிரிந்த உறவினர்கள், நண்பர்கள் மீண்டும் ஒன்று சேர்வர். திருடர்களால் பயமில்லை.

    நவராத்திரி விரதம் பிரதமையில் துவங்கி நவமியில் முடியும்.

    இதில் குறிப்பாக அஷ்டமி (நவராத்திரியின் எட்டாம் நாள்) நவமி (சரஸ்வதி பூஜை நாள்) திதிகளில் அம்பாளின் கதையைக் கேட்டாலோ படித்தாலோ அம்மை நோய் வராது என்பது நம்பிக்கை.

    மேலும், அம்பிகையின் கதை கேட்பவர்களை கிரகதோஷம் ஏதும் செய்யாது.

    பிரிந்த உறவினர்கள், நண்பர்கள் மீண்டும் ஒன்று சேர்வர். திருடர்களால் பயமில்லை.

    நெருப்பு, தண்ணீர், ஆயுதம் போன்றவற்றால் ஏற்படும் கண்டங்கள் இருந்தால் ஓடிப்போய் விடும். அம்மை நோய் வராது என்பது மிகவும் முக்கியம்.

    நவராத்திரி காலம் மட்டுமின்றி பிற அஷ்டமி, நவமி, சதுர்த்தசி திதிகளிலும் அம்பாளின் கதையை நீங்கள் வாசிக்கலாம்.

    • நிஜத்தில், இது ஆண்களும் அனுஷ்டிக்க வேண்டிய விரதமே.
    • ஏனெனில், எல்லா சக்திகளும் ஆண் தெய்வங்களின் பெண் சக்தியாகவே கருதப்படுகின்றன.

    நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்பது போலவும் ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

    நிஜத்தில், இது ஆண்களும் அனுஷ்டிக்க வேண்டிய விரதமே. ஏனெனில், எல்லா சக்திகளும் ஆண் தெய்வங்களின் பெண் சக்தியாகவே கருதப்படுகின்றன.

    பிராஹ்மணி (அபிராமி) - பிரம்மா

    மகேஸ்வரி- சிவன்

    கவுமாரி- குமரன் (முருகன்)

    வைஷ்ணவி- விஷ்ணு

    வராஹி- ஹரி (வராக அவதாரம்)

    நரசிம்மி- நரசிம்மர்

    இந்திராணி- இந்திரன்.

    இதிலிருந்து, நவராத்திரி ஆண்களுக்குரிய பண்டிகையாகவும் விளங்குவதைக் கவனிக்கலாம்.

    • நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் முதல் மூன்று மந்திரங்களையும்,
    • அடுத்த நான்கு நாட்கள் ஜெய் துர்க்கா என்ற மந்திரத்தையும் சொல்ல வேண்டும்.

    தேவியரின் வாகனம்

    இந்திராணி - யானை

    வைஷ்ணவி - கருடன்

    மகேஸ்வரி - ரிஷபம்

    கவுமாரி - மயில்

    வராகி - எருமை

    அபிராமி - அன்னம்

    நரசிம்மி - சிங்கம்

    சாமுண்டி - பூதம்

    அம்பாளை வணங்குவதன் பலன்

    அன்னை ஆதிபராசக்தியே பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறாள்.

    இவளை என்னென்ன பெயர்களால் வழிபட வேண்டும் என்பதற்கு ஸ்லோகங்கள் உள்ளன.

    இந்தப் பெயர்களைச் சொல்லி வழிபட்டால் கிடைக்கும் பலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

    ஜெய் காளி- எதிரிகளின் ஆதிக்கம் ஒழியும்

    ஜெய் சண்டிகாதேவி- செல்வம் சேரும்

    ஜெய் சாம்பவி- அரசு சார்ந்த செயல்பாடுகளில் வெற்றி பெறும்.

    ஜெய் துர்க்கா- ஏழ்மை அகலும், துன்பம்

    விலகும், போரில் வெற்றி கிடைக்கும்,

    மறுபிறவியிலும் நல்லதே நடக்கும்.

    ஜெய் சுபத்ரா- விருப்பங்கள் நிறைவேறும்

    ஜெய் ரோகிணி- நோய் தீரும்.

    நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் முதல் மூன்று மந்திரங்களையும், அடுத்த நான்கு நாட்கள் ஜெய் துர்க்கா என்ற மந்திரத்தையும் சொல்ல வேண்டும்.

    கடைசி இரண்டு நாட்களில் ஜெய் சுபத்ரா, ஜெய் ரோகிணி ஆகிய மந்திரங்களைச் சொல்லவும்.

    • நவராத்திரி விழாவை கொண்டாடுவது ஏன் என்று ஜனமேஜயன் என்ற மகாராஜா, வியாச முனிவரிடம் கேட்டான்.
    • அதற்கு அவர் அளித்த பதில் ஆச்சரியத்தைத் தருவதாக உள்ளது.

    உயிரைக் காக்கும் நவராத்திரி

    நவராத்திரி விழாவை கொண்டாடுவது ஏன் என்று ஜனமேஜயன் என்ற மகாராஜா, வியாச முனிவரிடம் கேட்டான்.

    அதற்கு அவர் அளித்த பதில் ஆச்சரியத்தைத் தருவதாக உள்ளது.

    அரசனே! நவராத்திரி விரத காலம் சரத்ருது (புரட்டாசி, ஐப்பசி), வசந்த ருது (சித்திரை) காலங்களில் அனுஷ்டிக்கப்பட வேண்டும்.

    இந்த மாதங்களைக் குறிப்பிடுவதற்கு காரணம் உண்டு.

    இவை எமனின் கோரைப்பற்கள் ஆகும். இந்த மாதங்களில் உயிரினங்களுக்கு கடுமையான நோய் ஏற்படும். அவை உயிரைப் பலி வாங்கும் அளவு வலிமையுடையவாய் இருக்கும்.

    இதில் இருந்து மீள வேண்டுமானால் சண்டிகை பூஜை செய்ய வேண்டும், என்றார்.

    இதனால் தான் பதினெட்டு கைகளையுடையவளாகவும், ஆயுதம் தரித்தவளாகவும் அம்பாளை அலங்கரித்து வழிபடும் வழக்கம் ஏற்பட்டது.

    வடமாநிலங்களில் துர்கா பூஜையாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது. நான்கு வகையான வசதிகளை விரும்புபவர்கள், நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டுமென்கிறார் வியாச மகரிஷி.

    கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள், எந்தச் செயலிலும் வெற்றி பெற விரும்புபவர்கள், அரசியலிலும் ஆட்சியிலும் தொடர எண்ணுபவர்கள், சுகமான வாழ்வு வேண்டுபவர்களுக்கு நவராத்திரி பூஜை உகந்தது.

    இவர்கள் தங்கள் இல்லங்களில் சக்திதேவி சிலை அல்லது படத்துக்கு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் மலர் மாலைகள் அணிவித்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நைவேத்யம் படைத்து வணங்க வேண்டும்.

    மேலும், இவர்கள் ஏழைகளுக்கு தானமும் செய்ய வேண்டும். இவ்வாறு செய்பவர்கள் நினைப்பது நடக்கும் என்பது ஐதீகம்.

    • ஏனென்றால் தட்சனின் யாகத்தை அழித்த பத்ரகாளி அஷ்டமி தினத்தன்று தோன்றினார்.
    • எனவே அன்று பூஜைகளை விசேஷமாகச் செய்ய வேண்டும்.

    ஒருவருக்கு நவராத்திரி நாட்களில் பூஜை நடத்துவதற்குப் போதிய வசதி இல்லாமலிருந்தால் அவர் நவராத்திரி எட்டாவது தினமான அஷ்டமி தினம் அவசியம் பூஜிக்க வேண்டும்.

    ஏனென்றால் தட்சனின் யாகத்தை அழித்த பத்ரகாளி அஷ்டமி தினத்தன்று தோன்றினார்.

    எனவே அன்று பூஜைகளை விசேஷமாகச் செய்ய வேண்டும்.

    அதுமட்டுமல்ல கம்சனை அழிக்க கிருஷ்ணன் அவதரித்த அதே அஷ்டமி தினத்தன்று தான் மகா மாயையான துர்க்கையும் நந்தகோபாலன் இல்லத்தில் அவதரித்தாள்.

    ஆகவே துர்க்காஷ்டமி மிகுந்த விசேஷமுடையது.

    சக்தியற்றவர்களாக இருப்போர் நவராத்திரி விரதத்தில் பூஜை செய்வதற்கு மிகவும் முக்கியமான நாட்கள் சப்தமி, அஷ்டமி, நவமி தினங்களாகும்.

    இந்த மூன்று நாட்களும் விரதத்தோடு பூஜித்தால் ஒன்பது நாட்கள் பூஜித்த பலன் கிடைக்கும்.

    நவராத்திரி விரதம் இருப்பவர்கள் இம்மையிலும் மறுமையிலும் நல்ல பயன் அடைவார்கள்.

    • ஏழு நகரங்களில் மக்களுடன், விஜய் டிவி ஸ்டார்ஸ் இணைந்து, நவராத்திரி கொண்டாட்ட விழாவைக் கொண்டாடியுள்ளனர்.
    • 2500 பெண்கள் கலந்துகொள்ள, 10000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக இந்த விழா நடந்துள்ளது.

    முன்னணி தொலைக்காட்சியான ஸ்டார் விஜய் தொலைக்காட்சி, நவராத்திரி விழாவைப் புதுமையான முறையில் தமிழக மக்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளது. தமிழ்நாடு எங்கும் ஏழு நகரங்களில் மக்களுடன், விஜய் டிவி ஸ்டார்ஸ் இணைந்து, நவராத்திரி கொண்டாட்ட விழாவைக் கொண்டாடியுள்ளனர். 2500 பெண்கள் கலந்துகொள்ள, 10000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக இந்த விழா நடந்துள்ளது.



    பொதுமக்கள் கலந்துகொள்ள திருவிளக்கு பூஜை, சொற்பொழிவு அமர்வு, சூப்பர் சிங்கர்ஸ் கலந்துகொள்ளும் பக்திப்பாடல் நிகழ்ச்சி, செஃப் தாமுவின் ஸ்டார் விஜய் நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதம் என பல்வேறு நிகழ்வுகள் மூலம் அசத்தியுள்ளது விஜய் டிவி.


    தமிழ் நாட்டில், காஞ்சிபுரம், சென்னை, ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், மதுரை ஆகிய ஏழு இடங்களில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. நவராத்திரி பெண்களுக்கு உரித்தான விழா என்பதால் ஸ்டார் விஜய் ஸ்டார்ஸ் பெண் பிரபலங்கள் அனைவரும் இதில் மக்களுடன் இணைந்து கலந்துகொண்டு நவராத்திரியைக் கொண்டாடினர். இவர்களுடன் ஸ்டார் விஜய் முன்னணி பிரபலங்கள் பலரும் இவ்விழாவினில் பங்கேற்றனர்.

    • குஞ்சு மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு சாமிக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தது.
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள குஞ்சு மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு சாமிக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று நவராத்திரி நிறைவு விழாவையொட்டி அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளையும் சில்லறை நாணயங்களையும் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

    • கொலு படிகளை ஒற்றைப்படையில் தான் வைக்க வேண்டும்.
    • கொலுப்படியில் பொம்மை வைப்பதற்கு முறை உள்ளது.

    நவராத்திரி என்றால் கொலு பொம்மை தான் முதலில் நமது நினைவிற்கு வரும். கொலுப் படிகளை ஒற்றைப்படை எண்ணிக்கையில் தான் வைக்க வேண்டும். எனவே கொலு படிகள் அமைக்கும் போது 3 அல்லது 5 என்ற எண்ணிக்கையில் வைக்கலாம். கொலு படிகள் அமைக்கும் போது கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி அமைக்க வேண்டும்.

    கொலுப்படியில் பொம்மை வைப்பதற்கு முறை உள்ளது. மேலே உள்ள படியில் இறைவனின் பொம்மைகளை வைப்பார்கள். ஆதற்கு கீழே ரிஷிகள் முனிகள் சித்தர்கள் போன்ற பொம்மைகள், அதற்கு கீழே மனிதர்கள், பின் விலங்குகள்,பறவைகள், போன்றவற்றை வைப்பார்கள். அதாவது கொலு படிகளில் கீழிருந்து ஓரறிவு, ஈரறிவு, மூன்றறிவு, ஐந்தறிவு, ஆறறிவு, ரிஷிகள், தெய்வங்கள் என்ற வரிசையில் பொம்மைகளை அடுக்கி வைத்து கொலுப் படிகளின் நடுவில் கலசம் வைப்பார்கள்.

    நவராத்திரி கொலுப் படியில் இருக்கும் கலசத்திற்கு தினமும் மஞ்சள், குங்குமம், அட்சதை மற்றும் பூக்கள் மற்றும் வஸ்திரம் சார்த்தி பூஜித்தி வருவார்கள். மாலையில் தினமும் சுண்டல் செய்து நிவேதனம் செய்து வீட்டில் கொலு பார்க்க வருபவர்களுக்கு வழங்க வேண்டும். பத்து நாட்கள் முடிந்த பிறகு கலசத்தில் வைத்த தேங்காயை வைத்து இனிப்பு பண்டங்களைச் செய்யலாம்.

    ஒரு சிலர் வீட்டில் பத்து நாட்களும் விளக்கு எரிய வைப்பார்கள். இதற்கு அகண்ட தீபம் என்று பொருள். இதில் மூன்று வித எண்ணெய் நல்லெண்ணெய், நெய் இலுப்பெண்ணெய்)அல்லது ஐந்து வித எண்ணெய் கலந்து தீபம் ஏற்றலாம்.

    கொலுப்படி மற்றும் பொம்மைகள் வைக்க இயலாதவர்கள் எளிமையாக வீட்டில் உள்ள ஏதாவது ஒரு அம்மன் படத்தை வைத்து அதற்கு முறையாக பூஜைகள், நைவேத்தியங்கள் படைத்து எளிய முறையில் வழிபடலாம்.

    நவராத்திரி ஒன்பது நாட்களும் தினமும் காலை மாலை என இரண்டு வேளை பூஜை செய்ய வேண்டும். அம்மன் பற்றிய பாடல்களை பாடுவார்கள். வீட்டிற்கு அக்கம் பக்கம், தெரிந்தவர்கள் மற்றும் விருந்தினர்களை அழைத்தது வெற்றிலை, பாக்கு, மஞ்சள் பழம், தட்சினை சுண்டல், மற்றும் நீங்கள் விரும்பினால் ஏதாவது பரிசுப்பொருட்கள அல்லது ரவிக்கை போன்றவற்றை அவரவர் தகுதி மற்றும் விருப்பத்திற்கேற்ப கொடுக்கலாம்.

    சிறு குழந்தைகள் வந்தால் அவர்கள் வயதிற்கேற்ற பொருட்களை வாங்கி கொடுக்கலாம். இந்த ஒன்பது நாட்களுள் ஏதாவது ஒரு நாள் ஒரு கன்னிப் பெண்ணை அழைத்து உணவளித்து வெற்றிலை, பாக்கு உடை எடுத்து அளிக்கலாம். இதனை செய்வது மிகவும் சிறப்பு.

    இத்தகைய சிறப்புமிக்க்க நவராத்திரி பண்டிகையையொட்டி சென்னை வடபழனியை சேர்ந்த பிரேமலதா-அரவிந்தன் தம்பதி லண்டனில் உள்ள தனது வீட்டில் கொலு வைத்துள்ளனர்.

     அதேபோன்று சென்னை தி.நகர் தண்டபாணி தெருவை சேர்ந்த சங்கர்-லட்சுமி தம்பதியினர் நவராத்திரி பண்டிகையை யொட்டி தங்கள் வீட்டில் கொலு வைத்துள்ளார்கள்.

    • துர்கா தேவியை மையமாக வைத்து பாடுபொருளாக இசைக்கப்படுவது கர்பா பாடல்கள்.
    • குஜராத்தில் நடந்த நவராத்திரி கொண்டாட்டத்தில் கர்பா நடனமாடிய 10 பேர் ஒரே நாளில் மாரடைப்பால் இறந்துள்ளனர்.

    அகமதாபாத்:

    நவராத்திரி விழாவின் போது பெண்ணின் தெய்வீக வடிவமான துர்கா தேவியை மையமாக வைத்து, 9 சக்தி வடிவ தெய்வங்களைப் பாடுபொருளாகக் கொண்டுள்ள கர்பா பாடல்கள் இசைக்கப்படும். கர்பா நடனத்தைப் பாரம்பரிய உடைகளுடன் ஆண்களும், பெண்களும் விடியும் வரை இசைக்கு ஏற்ப ஆடுவார்கள்.

    இந்நிலையில், குஜராத்தில் நடந்த நவராத்திரி கொண்டாட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கர்பா நடனமாடிய 10 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த 10 பேரும் இள வயது மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    பரோடாவைச் சேர்ந்த 13 வயது சிறுவன் கர்பா நடனம் ஆடிக் கொண்டிருந்தபோது திடீரென சுருண்டு விழுந்து இறந்தார். இதேபோல், அகமதாபாத்தைச் சேர்ந்த 24 வயது வாலிபரும் கர்பா நடனமாடிக் கொண்டிருந்தபோது உயிரிழந்துள்ளார். இதேபோல், மேலும் 8 உயிரிழப்புகள் குஜராத்தில் பதிவாகியுள்ளன.

    நவராத்திரி தொடங்கி முதல் 6 நாட்களில் கர்பா நடனமாடிய 609 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதேபோல், மாலை 6 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மாரடைப்பு தொடர்பாக 108 ஆம்புலன்சுக்கு 521 அழைப்புகள் வந்துள்ளன.

    இதையடுத்து, கர்பா நடனம் நடக்கும் இடங்களுக்கு அருகிலுள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் இருக்கவேண்டும் என குஜராத் அரசு அறிவுறுத்தியுள்ளது.

    மேலும், கர்பா நடன நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் மருத்துவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களை நிறுத்தி பாதுகாப்பை உறுதி செய்ய கர்பா அமைப்பாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    கொரோனா பெருந்தொற்று காலத்துக்குப் பிறகு, பல்வேறு நிகழ்ச்சிகளில் இள வயதினர் மாரடைப்பால் உயிரிழந்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது.

    • ஓதுவார்களின்அபிராமி அந்தாதி மற்றும் தேவார பாடலுடன் அம்மன் வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது.
    • வெளிப்பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படு கிறது. இந்த திருவிழா கடந்த 15-ந்தேதி தொடங்கியது. 6-ம் திருவிழாவான நேற்று அம்மனுக்கு நெல்லை சட்ட மன்ற தொகுதி எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், அரசு மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சார்பில் சிறப்பு அபிஷேகமும், அதைத்தொடர்ந்து அன்னதானமும் நடந்தது. மாலையில் ஆன்மீக உரையும், இரவு பரதநாட்டி யமும் நடந்தது. அதன் பிறகு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக்காமதேனு வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிபிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது. அம்மன் எழுந்தருளி இருந்த வாகனத்துக்கு முன்னால் நெற்றிப்பட்டம் அணிவித்து அலங்கரிக்கப் பட்ட யானை முன் சென்றது. கோவிலின் கிழக்கு பக்கம் உள்ள அலங்கார மண்ட பத்தில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி 3-வது முறை பவனி வரும்போது ஓதுவார்களின்அபிராமி அந்தாதி மற்றும் தேவார பாடலுடன் அம்மன் வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது.

    3-வது முறை கோவிலின் மேற்கு பக்கம் உள்ள வெளிப்பி ரகார மண்ட பத்தில் அம்மன் எழுந்தருளி இருந்த வெள்ளிக்காமதேனு வாகனத்தை மூங்கில் தண்டையத்தில் அமர வைத்து தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பிறகு இறுதியாக தாலாட்டு பாடலுடன் கூடிய நாதஸ்வர இசையுடன் அம்மனின் வாகன பவனி நிறைவ டைந்தது. இந்த நிகழ்ச்சியில் கன்னியா குமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. தள வாய்சுந்தரம், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    நிறைவாக கோவிலில் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடந்தது. 7-ம் திருவிழாவான இன்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து காலை 11.30 மணிக்கு அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் சந்தனக்காப்பு அலங்காரத்து டன் தீபாராதனையும் நடந்தது.

    பின்னர் சிறப்பு அன்ன தானம் நடந்தது. மாலையில் சாயரட்சை தீபாராதனையும், ஆன்மீக உரையும், இரவு 7 மணிக்கு பக்தி பஜனையும் 8 மணிக்கு வெள்ளி இமயகிரி வாகனத்தில் எழுந்தருளி அம்மன் கோவிலின் வெளிப்பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    ×