என் மலர்
நீங்கள் தேடியது "அலகுமலை"
- எதிர்ப்பு தெரிவித்தவர்கள் சார்பில் தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
- இங்கு சமூக விரோத செயல்களும், பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ்நிலையும் நிலவும் என்றனர்.
பல்லடம் :
பொங்கலூர் அருகே அலகுமலையில் கைலாசநாதர் கோயில் உள்ளது. இந்த கோயில் முன்பு கொடி கம்பம் மற்றும் தேர் ஆகியன நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் பாதுகாப்பிற்காக கம்பி வேலி அமைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2019-ம் ஆண்டு அந்த பகுதியை சேர்ந்த ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தவர்கள் சார்பில் தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அப்போதைய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத் தலைவராக இருந்த முருகன் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். அதன் அடிப்படையில் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலியில் இருபுறமும் நுழைவாயில் அமைக்கப்பட்டது.
அந்த நுழைவாயில் பகல் நேரங்களில் திறக்கப்பட்டும், இரவு நேரங்களில் பூட்டப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் கோயிலின் அருகே உள்ள கேட் நிரந்தரமாகவும் மூடப்பட்டது. இந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு பிரிவினர் நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்றமும் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என தெரிவித்தது. அதன் பின்னர் அமைதியான சூழ்நிலை நிலவி வந்தது. ஆனால் தற்போது அந்த கம்பி வேலியை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த சிலர் நேற்று கம்பி வேலி அகற்றும் போராட்டம் மற்றும் தலித் மக்களின் 12 ஏக்கர் பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்துள்ளதை மீட்கும் போராட்டம் என போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதனை தொடர்ந்து நேற்று கோயிலுக்கு சம்பந்தப்பட்ட பிரிவினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடினர். இதன் காரணமாக பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு வெற்றிச்செல்வன், அவிநாசி பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டனர் மேலும் சம்பவ இடத்திற்கு திருப்பூர் தெற்கு தாசில்தார் கோவிந்தராஜன், கோவில் செயல் அலுவலர் சரவணபவன் ஆகியோரும் வந்தனர்.
போராட்டம் அறிவித்த தரப்பினரிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு வெற்றிசெல்வன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் சுசி. கலையரசன், பல்லடம் தொகுதி செயலாளர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் தரப்பில், இந்த கம்பி வேலியை முழுமையாக அகற்ற வேண்டும், பொதுமக்கள் சென்று வர எந்த விதமான தடையும் இருக்கக் கூடாது என்பதே எங்களது கோரிக்கை. மேலும் கோயிலின் அருகில் உள்ள கேட்டையும் திறந்து விட வேண்டும் என்று தெரிவித்தனர். இதற்கு போலீஸ் தரப்பில் திங்கட்கிழமை அமைதி பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளலாம். அதுவரை அமைதி காக்குமாறு கேட்டுக் கொண்டனர். இதனை ஏற்று அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் கோயில் தரப்பில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தரப்பில் கூறும்போது, ஏற்கனவே 2010 முதல் என்ன நடைமுறை அறிவிக்கப்பட்டதோ அது அப்படியே தொடர வேண்டும். இதில் எந்த விதமான மாறுதலும் செய்யக்கூடாது. அப்படி செய்தால் இங்கு சமூக விரோத செயல்களும், பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ்நிலையும் நிலவும் என்று தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
- செரங்காடு,ஆதியூர் பிரிவு, தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும்.
- கருணைப்பாளையம் பிரிவு, செங்கோடாம்பாளையம் பகுதிகளில் மின்சாரம் தடைபடும்.
திருப்பூர்:
திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் வி.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
செங்கப்பள்ளி துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 8 மணிமுதல் பகல் 12 மணி வரை செங்கப்பள்ளி, விருமாண்டாம்பாளையம், காடபாளையம், பள்ளப்பாளையம்,பழனிக்கவுண்டன்பாளையம், நீலாக்கவுண்டன்பாளையம், அம்மாபாளையம், காளிபாளையம்புதூர், வட்டாலப்பதி, செரங்காடு,ஆதியூர் பிரிவு, தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.
திருப்பூர் அலகுமலை துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) கண்டியன் கோவில் உயரழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடைபடும். இதனால் கண்டியன்கோவில், பூசாரிப்பாளையம், நவவாய்க்கால்மேடு, முதியாநெரிசல், வேலாங்காட்டுப்பாளையம், கருணைப்பாளையம் பிரிவு, செங்கோடாம்பாளையம் பகுதிகளில் மின்சாரம் தடைபடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.