என் மலர்
நீங்கள் தேடியது "கோமாதா"
- 33 கோடி தேவர் தேவியரின் வல்லமை ஒரு பசுவினுள் உள்ளது.
- பசுவினுடைய நெய்யும் பசுவினை போலவே புனிதத்துவம் பெற்றதாகும்.
இந்தியாவில் பசு புனித விலங்காக கருதப்படுகிறது. பசுவினை கோமாதா என்றே அழைக்கின்றனர். இந்தியா மட்டுமல்லாமல் எகிப்து, க்ரீஸ், பண்டைய இஸ்ரேல் மற்றும் ரோம் நகரிலும் பசு புனித விலங்காக கருதப்படுகிறது. இந்து மரபின் படி, கோமாதா கொண்டிருக்கும் விஷேச சக்திகள் பின்வருமாறு.
33 கோடி தேவர் தேவியரின் வல்லமை ஒரு பசுவினுள் உள்ளது. சுரபி லட்சுமி எனும் தேவி பசுவினுள் குடிக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஓர் இல்லத்தில் உள்ள பசுவினுடைய இருப்பு பலத்தரப்பட்ட நோய்களுக்கும் நிவராணமாக உள்ளது.
எப்போது ஒரு பசுவானது நிறைவடைகிறதோ அப்போது அப்பசுவை கவனித்து கொண்டவர் நிறைந்த அரோக்கியம் செல்வம் வளம் அனைத்தையும் பெறுவதாக நம்பப்படுகிறது. மேலும் வாஸ்து தோஷம் ஏதும் ஏற்பட்டிருந்தால் அதனை பசுவின் சாணம், கோமியம், நெய் ஆகியவற்றை கொண்டு அதற்கான நிவாரணத்தை காண முடியும். காலம் காலமாக முனிவர்கள், ரிஷிகள், அறிஞர்கள் புத்திவான்கள் அனைவரும் பசுவினை வழிபடும் வழக்கத்தை கொண்டுள்ளனர். ஒரு வார்த்தையில் சொல்வதனால், பசு என்பது நேர்மறை ஆற்றலின் பிறப்பிடமாகும். மேலும் பசுவிற்கு செய்யும் பணிவிடைகளின் மூலமும் நம் பிரச்சனைகளிலிருந்து நாம் விடுபட முடியும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன.

ஒவ்வொறு நாளும் பசுவிற்கு உணவினை அளிப்பது ஒருவருக்கு நல்வாழ்வை வழங்கும் என சொல்லப்படுகிறது. கோவில்களில் இருக்கும் கோசாலைகளில் பலர் பசுவிற்கு கீரைகளை அர்ப்பணம் செய்வதை நாம் பார்க்கக்கூடும். ஜாதகங்களில் ஏற்படும் பிரச்சனைக்கு பரிகாரமாக இவை செய்யப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம். மேலும், நீங்கள் எங்காவது ஒரு நல்ல காரியமாக செல்கிற போது பசுவினுடைய சப்தத்தை கேட்டால் அது அக்காரியம் வெற்றி என்பதை குறிப்பதாக கருதப்படுகிறது.
மேலும் ஏதேனும் கண் திருஷ்டி ஏற்பட்டிருப்பின் புனித பசுவின் வால் பகுதியில் அமைந்துள்ள ஜடையை கொண்டு ஏழு முறை மந்திரிப்பதை போன்ற செயலை செய்கிற போது திருஷ்டிகளை களைய முடியும். பசுவினுடைய நெய்யும் பசுவினை போலவே புனிதத்துவம் பெற்றதாகும். பசுவினுடைய நெய்யினால் தீபம் ஏற்றப்பட்டால் அது பல நல்ல அதிருவ்களை ஈர்ப்பதாக அமையும். வீட்டின் பூஜையறையில் கிருஷ்ணர் பசுவினுடன் இருப்பதை திருவுருவ படத்தை வைத்து வழிபட்டால் தொடர்ந்து வரும் பிரச்சனைகள் விலகும் என்பது நம்பிக்கை. நலம், வளம், செல்வம் என அனைத்து செளபாக்கியங்களையும் பசுவினை வழிபடுவது நம் நல்வாழ்விற்கு பெரும் உதவியாக அமையும். மகிழ்வான வாழ்விற்கு கோமாதாவின் ஆசிகளை பெறுவது அவசியமாகும்.
- பிறவிப் பிணி தீர்க்கும் கோ பூஜை... வழிபட்டால் தீரும் பிரச்சனைகள்
- ஜாதகத்தில் உள்ள அனைத்து விதமான தோஷங்களும் விலகும்.
மாட்டுப்பொங்கல்/திருவள்ளுவர் தினம் 16.1.2023, தை 2 , (திங்கட்கிழமை)
இந்து சமயத்தில் பசுவை வணங்குவதைப்பெரும் புண்ணியமாக கருதுகின்றனர். இந்தப் பசுவை கோமாதா என்றும் பெருமையுடன் அழைக்கின்றனர்.
பசுவின் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் தெய்வங்களும், புனிதத்திற்குரியவர்களும் இருப்பதாக கருதுகின்றனர்.
இப்பசுக்களில் மும்மூர்த்திகள் மட்டுமல்ல சத்தியம், தர்மம் என்று எல்லா தேவதைகளும் வசிக்கின்றனர். மாட்டுப்பொங்கல் அன்று கோமாதா எனப்படும் பசுவை பூஜை செய்து வழிபட்டால் பிறவிப் பிணி தீரும். ஜாதகத்தில் உள்ள அனைத்து விதமான தோஷங்களும் விலகும்.
கடும் உழைப்புக்கும் உழவுக்குத் துணை செய்த கால்நடைகளை ஆராதிக்கும் நாள். உழவுக்கு உதவிய கால் நடைகளுக்கும் பால் தரும் பசுக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாள் தான் மாட்டுப்பொங்கல். திங்கட்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கால்நடைகளை சுத்தப்படுத்தி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி மாலைகள் அணிவித்து அலங்கரிக்க வேண்டும்.
மாட்டுக் கொட்டகை சுத்தம் செய்து சர்க்கரை பொங்கல் படைத்து கோ பூஜை செய்வது சிறப்பு.மாடுகளை வணங்கி விட்டு வாழை இலையில் பொங்கல் வைத்து அவற்றிற்கு உண்ண கொடுக்க வேண்டும். தமிழக கிராமங்களில் உறவினர்கள் மேல் மஞ்சள் நீர் தெளிப்பது , ஜல்லிக்கட்டு என்னும் மாடுபிடி விளையாட்டு இந்நாளில் நடைபெறும். இந்த நாளில் பசுவை பூஜித்தால் சகல தேவதைகளையும் பூஜித்த பலன் கிட்டும்.
கோ பூஜை செய்தால் கோடி நன்மை பெறலாம் என்பது நமது முன்னோர் வாக்கு.தினமும் கோபூஜை செய்வது சிறப்பு. தினமும் செய்ய முடியாதவர்கள் வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டும். அதுவும் முடியாதவர்கள்.சகல ஐஸ்வர்யத்தையும் அள்ளித்தரும் கோ பூஜையை வருடம் ஒருமுறையாவது மாட்டுப்பொங்கல் அன்று செய்து வரவேண்டும்.
வருடத்திற்கு ஒருமுறையாவது பசுவை வீட்டிற்கு அழைத்து அதற்கு மஞ்சள்,குங்குமம் வைத்து, மலர்களால் அலங்காரம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து பழங்கள், அகத்திகீரை போன்றவற்றை தானியங்கள் சாப்பிட கொடுத்து, நெய் விளக்கு ஏற்றி, தீபஆராதனை செய்ய வேண்டும்.பிறகு நெய் விளக்கை கையில் எடுத்து அந்த பசுவை சுற்றி மூன்று முறை வலம் வர வேண்டும். இப்படி வருடத்திற்கு ஒருமுறையாவது கோபூஜை செய்து வந்தால், நம் இஷ்ட தெய்வ குல தெய்வ அருளாசியும் கிடைத்து, தலைமுறை தலைமுறைக்கு சுபிட்சம் கிடைக்கும்.உயர் ஜாதி பசுவை கன்றுடன் ஸ்ரீசுக்தம் சொல்லி கோபூஜை செய்து, தானம் செய்தால் கோர்ட் விவகாரங்கள், வழக்குகளில் வெற்றி ஏற்படும்.விரோதம் நீங்கும்.
பிதுர் சாபம், ரிஷிகள் சாபம், மூதாதையர் சாபம் ஆகியவை நீங்குகிறது. செல்வவளம் தரும் திருமகள் இதன் பிருஷ்டபாகத்தில்(பின்பாகம்) வசிக்கிறாள். இப்பகுதியைதொட்டு வழிபட்டால் முன் ஜென்ம பாவங்கள் விலகும். இந்திர பூஜையை விட கோ பூஜையே மேலானது என்று ஸ்ரீ கிருஷ்ணன் சொல்லி இருக்கிறார்.
- பசுவைப் பூஜிப்பது சகல பாக்கியங்களைத் தரும்.
- பசுவின் உடலில் பதினான்கு உலகங்களும் அடக்கம் என்கிறது தர்மசாஸ்திரம்.
இந்த நாளில் கோமாதாவான பசுவைப் பூஜிப்பது சகல பாக்கியங்களைத் தரும். பசுவின் உடலில் பதினான்கு உலகங்களும் அடக்கம் என்கிறது தர்மசாஸ்திரம். பசுவின் பாலில் சந்திரனும், நெய்யில் அக்னி தேவனும் உறைந்திருப்பார்கள் என்கிறது வேதம். கோமாதாவின் நான்கு கால்கள் நான்கு வேதங்களாகக் கருதப்படுகின்றன. செல்வ வளம் தரும் மகாலட்சுமி அதன் பின்பாகத்தில் வசிக்கிறாள்.
மாடுகளைப் போற்றி வளர்க்கும் இல்லங்களில், மகாலட்சுமி மகிழ்ந்துறைவாள். அவற்றை கொடுமைப்படுத்தினால், பெரும் பாபத்தை அடைந்து, பிறவிகளில் பெருந்துயரை அனுபவிக்க நேரிடும்.
பஞ்சகவ்யம் (பால்,தயிர், நெய்,சாணம், கோமூத்திரம்) அபிஷேகத்துக்கு உகந்தது; மருந்தாகவும் செயல்பட்டு பிணியை அகற்றும் என்கிறது ஆயுர்வேதம். பசுவின் காலடி பட்ட இடம் பரிசுத்தமாகும். மேய்ந்து, வீடு திரும்பும் பசுமாடுகளின் குளம்படி பட்டு தூசி மேலே கிளம்பும் வேளையை, நல்லதொரு வேளையாக `முகூர்த்த சாஸ்திரம்' சொல்கிறது. அதேபோல், நாம் செய்த பாவங்கள் அகல, `கோ' தானம் செய்யச் சொல்கிறது தர்மசாஸ்திரம்.
- “கோ” என்றால் கடவுள், அரசன், உலகம் என்று பொருள். மாதா என்றால் தாய்.
- இதனால் கடவுளைப் பெற்றவள் என்ற பெயரும் கோமாதா எனப்படும் பசுவுக்கு உண்டு.
கோமாதா என்னும் சொல்லில் கோ-மாதா என்னும் இருசொற்கள் அடங்கியுள்ளன.
"கோ" என்றால் கடவுள், அரசன், உலகம் என்று பொருள்.
மாதா என்றால் தாய்.
இதனால் கடவுளைப் பெற்றவள் என்ற பெயரும் கோமாதா எனப்படும் பசுவுக்கு உண்டு.
பசுவின் உடலின் அனைத்து பாகத்திலும் அனைத்து தேவர்களும் வசிப்பதாக வேத ஆகமங்கள் கூறுகின்றன.
கொம்புகளில் வீமனும், இந்திரனும், காதுகளில் அசுவினி குமாரர்களும், கழுத்து தாடைப் பகுதிகளில் ராகு கேதுவும்,
இரண்டு கண்களில் சூரியன் சந்திரனும், மூக்கின் மேல்பகுதியில் விநாயகரும் முருகனும், முன்னிரண்டு கால்களில்
பைரவரும் அனுமனும், கழுத்து முதலான பகுதிகளில் லட்சுமி, பரத்வாசர், குபேரர், வருணன், அக்னி, பிரம்மன்,
கங்காதேவி, நாரதர், வசிஷ்டர், ஜனக குமாரர்கள், பூமாதேவி, சரஸ்வதி, விஷ்ணு பராசரர், விஸ்வாமித்திரர்,
அமிர்தசாகரர் ஆகியோரும் வால்பகுதியில் நாகராஜனும், முன்குளம்பு பகுதியில் மந்திராசலம், துரோணசலம்
ஆகிய பர்வதங்களும், மடியில் அமிர்தசுரபிக் கலசமும் இன்னும் பிற தேவர்களும் வசிப்பதாக ஐதீகம்.
பசு கேட்டதையெல்லாம் கொடுப்பதால் காமதேனுவாக எல்லாருக்கும் பால் அளிப்பதால் கோமாதாவாக,
மங்காத செல்வமுடையதால் மாடு எனும் பெயருடனும் (மாடு செல்வம்) சிறப்பு பெற்றது.
- பசு வளர்ப்பது பூர்வ ஜென்மப் புண்ணியமாகும்.
- தீராத நோய் நொடிகளுக்கு பசுஞ்சாணத் திருநீறு மருந்தாகும்.
பசு வளர்ப்பது பூர்வ ஜென்மப் புண்ணியமாகும்.
திருமந்திரத்தில் இறைவனுக்கு ஒருபச்சிலை சாற்றுவது, உண்ணும் உணவில் ஒருபிடி உணவு தானம் செய்வது,
பசுமாட்டுக்கு ஒரு பிடி புல் கொடுப்பது, பிறரிடம் இனிமையாக பேசுவது ஆகிய நான்கும் தர்மமாக கூறப்பட்டுள்ளது.
பசுவிற்கு ஒரு பிடி புல் கொடுப்பதே தர்மம் என்றால் அந்த பசுவை வளர்த்துப் பேணி காப்பது எந்த அளவிற்கு புண்ணியத்தை கொடுக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்.
குழந்தை இல்லாதவர்கள் பசு வளர்த்து சேவை செய்தால் உடனடியாக குழந்தை பாக்கியம் உண்டாகும்.
தீராத நோய் நொடிகளுக்கு பசுஞ்சாணத் திருநீறு மருந்தாகும்.
குடும்பப் பீடை உள்ள இடங்களில் புண்ணிய அர்ச்சனை செய்து பசுமாட்டை உள்ளே வரவழைத்து பூஜை செய்தால் தோஷங்கள் விலகும்.
திருமணமாகாதவர்கள் பசுவை வெள்ளிக்கிழமை தோறும் மூன்று முறை வலம் வந்து வழிபாடு செய்தால் தோஷம் விலகித் திருமணமாகும்.
நோயாளிகள் ஒரே பசுமாட்டின் பாலை தண்ணீர் கலக்காமல் அருந்தினால் நோய் நீங்கும்.
இறைவன் உமையம்மையோடு பிரதோஷக் காலத்தில் காளை வாகனத்தில் ஆனந்தத் தாண்டவம் ஆடுகிறார்.
அப்போது வழிபட்டால் எல்லா குறைகளும் நீங்கும்.
மாடு மங்காத செல்வம் பெற்றது.
ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்க வேண்டிய அன்புத் தெய்வம் பசு.
பசுக்களை வளர்த்து மண்வளம் பெருக்குவோம். கோமாதா வழிபாடு செய்து சகல பாக்கியங்களையும் பெறுவோம்.
- பசுவை வலம் வந்து வணங்கி மங்களப் பொருட்களை சுமங்கலிப் பெண்களுக்கு வழங்க வேண்டும்.
- பூஜை முடிந்தவுடன் பசுமாடு விரும்பும் ஆகாரத்தை நிறைய வைத்து திருப்தி செய்ய வேண்டும்.
கன்று ஈன்ற பசுவை நன்றாக குளிப்பாட்டி, மஞ்சளால் துடைத்து குங்குமம், சந்தனம் வைத்து மாலை சூட்டி,
அதன் மீது ஒரு வஸ்திரம் சாற்றி, தூப தீபம் காட்டி, நிவேதனம் செய்து அதன் முன் மஞ்சள் கயிறு, வெற்றிலைப் பாக்கு,
குங்குமம், விரலி மஞ்சள், எலுமிச்சம் பழம், தேங்காய் முதலான மங்களப் பொருட்களை வைத்து பூஜிக்க வேண்டும்.
பசுவை வலம் வந்து வணங்கி மங்களப் பொருட்களை சுமங்கலிப் பெண்களுக்கு வழங்க வேண்டும்.
பூஜை முடிந்தவுடன் பசுமாடு விரும்பும் ஆகாரத்தை நிறைய வைத்து திருப்தி செய்ய வேண்டும்.
அவரவர் விருப்பம்போல கோமாதாவை முப்பெரும் தேவியாக பாவனை செய்து 108, 1008 போற்றித் துதிகளை உச்சரித்தும் வழிபடலாம்.
- கோகர்ண சேத்திரத்தின் பசுவுக்கு முக்தி அளித்த தலம் திருவேங்கை வாசல்.
- திருவேங்கை வாசல் காமதேனுவுக்கு சிவபெருமான் மோட்சம் அளித்த தலம்.
திருக்கோகர்ண தலத்தோடு நெருங்கிய தொடர்புடையது திருவேங்கை வாசல்.
கோகர்ண சேத்திரத்தின் பசுவுக்கு முக்தி அளித்த தலம் திருவேங்கை வாசல்.
இது திருக்கோகர்ணத்திலிருந்து 4 கி.மீ. தூரத்தில் உள்ளது.
தெய்வலோகத்தில் தேவேந்திரன் சபை கூடிற்று.
எல்லாத் தேவர்களும் நேரத்தில் வந்து விட்டார்கள்.
தெய்வ பசுவாகிய காமதேனு மட்டும் நேரம் கழித்து வந்தது.
கோபமுற்ற தேவேந்திரன் அது சாதாரணப் பசுவாக பூலோகத்தில் அலையும் படி சாபமிட்டார்.
ஆனால் காமதேனு உடனே இந்திராணியிடம் ஓடி முறையிட்டுக் கொண்டது.
அதன் பயனாக சாபத்தின் வேகம் தணிந்தது.
காமதேனு பூலோகத்தில் வெள்ளாற்றங்கரையில் உள்ள மகிழ வனத்திலே சிவபெருமானுக்கு தொண்டுபுரிந்து வரவேண்டும்.
சிவ பெருமான் அருளாலும் மங்கண ரிஷியின் அனுக்கிரகத்தாலும் மீண்டும் தேவலோகம் அடையும் என்று இந்திராணி சொன்னார்.
காமதேனு பூலோகத்தில் பசுவாய் பிறந்து வகுளாரண்ய சேத்திரத்தில் இருந்து வந்தது.
மங்கண ரிஷியின் உபதேசபடி தினந்தோறும் கங்கையைத் தன் காதுகளில் எடுத்து கொண்டு வந்து அத்தலத்தில் பார்வதி பரமேஸ்வரர்களுக்கு அபிஷேகம் செய்து வந்தது.
நாளடைவில் அது ஒரு கன்றையும் ஈன்றது.
வழக்கம்போல் பசு கன்றை விட்டுவிட்டு கங்கைக்கு சென்றது.
அப்போது குட்டி பசியாலும் வெய்யிலின் கடுமையாலும் தவித்துக் கொண்டு இருந்தது.
இக்கன்றின் பரிதாப நிலையை கண்ட பார்வதி தேவியார் சிவபெருமானை அருள்புரியும்படி வேண்டினார்.
சிவபெருமான் ஒரு புலிவடிவில் பசு வரும் வழியில் இருந்துக்கொண்டு அதன் மீது பாய்ந்தார்.
பசு புலியிடம் ஒரு வரம் வேண்டிற்று.
தன் தெய்வமான சிவபெருமானுக்கு அபிஷேகம் முதலியன செய்து விட்டு கன்றுக்கு பசி தீர்த்து விட்டு பிறகு தான் இரையாக வருவதாக கூறி சென்றது.
அதன்படியே பூஜை முதலியன முடித்துவிட்டு புலியிடம் திரும்பி வந்தது.
திடீரென்று புலி இருந்த இடத்தில் பார்வதி பரமேஸ்வரர் காட்சி அளித்தனர்.
பசுவின் காதுகளில் உள்ள கங்கையால் பூஜிக்கப்பட்டதால் இப்பெருமானுக்கு கோகர்ணேஸ்வரர் என்ற திருநாமம் உண்டாயிற்று.
மலைமேலுள்ள தீர்த்தம் காமதேனுவின் கொம்பால் உண்டாக்கப்பட்டது.
அதை கங்கா தீர்த்தம் என்பர். லிங்கத்தின் தலைமேல் உள்ள வடு அபிஷேகம் செய்யும் போது பசுவின் குளம்புகளால் ஏற்பட்டது.
திருவேங்கை வாசல் காமதேனுவுக்கு சிவபெருமான் மோட்சம் அளித்த தலம்.
சிவபெருமான் பெயர் வியாக்கிரபுரீசுவரர் (வேங்கை நாதர்) அம்பாள் பிருகதாம்பாள் முதலாவது ராஜராஜேசுவரனது சாசனம் இத்தலத்தைத் திருமேற்றளி என்று கூறுகிறது.
- பசுவின் பக்தியை பரிசோதிக்க ஈஸ்வரன் புலிரூபமாக திருவேங்கை வாசல் வந்து சோதிக்கின்றார்.
- இத்திருக்கோவில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையானது.
தேவேந்திரன் சுகர்னம் என்ற சபையில் வீற்றிருக்கையில் காமதேனு தாமதமாக வந்ததால் பூவுலகம் சென்று
திருக்கோகர்ணத்தில் உள்ள சிவனுக்குத் தொண்டு செய்து பின் தேவலோகம் திரும்பவும் என சாபமும்,
சாப விமோச்சனமும் செய்து விடுகிறார்.
காமதேனு திருகோகர்ணம் வந்து சேர்ந்தது.
பூமியில் கபிலமங்க மகரிஷிகளின் ஆசியுடன் தினமும் காசி சென்று கங்கை நீரை காதினால் கொண்டு வந்து
ஈஸ்வரனுக்கு அபிஷேகம் செய்து மீதி தண்ணீரை பாறையை கீறி அதிலிட்டு பரமசிவன் சாப விமோச்சனம் செய்வாய் என்று காமதேனு வேண்டியது.
பசுவின் பக்தியை பரிசோதிக்க ஈஸ்வரன் புலிரூபமாக திருவேங்கை வாசல் வந்து சோதிக்கின்றார்.
பசுவை சாப்பிடுவதாக பயமுறுத்தி பின் அதன் பக்தியை அறிந்து இந்திர சாப விமோச்சனம் செய்து ரிசபாருடராய் வந்து காமதேனுக்கு மோட்சம் அளித்தார்.
இவ்வளவு சிறப்புடைய திருக்கோகர்ணேஸ்வரர், பிரகதாம்பாள் திருத்தலத்திற்கு நாமும் சென்று இறைவனின் பேரருள் பெற்று வருவோம்.
இத்திருக்கோவில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையானது.
- முன்பு ஒவ்வொரு வீட்டிலும் பசுவினை வளர்த்து வந்தார்கள்.
- வசதியுள்ளவர்கள் 108 பசுக்களைக் கொண்டு பெரிய அளவில் கோபூஜை செய்யலாம்.
ஒருமுறை திலீப மகாராஜனின் அசுவமேதக் குதிரை யை தூக்கிச் சென்ற தேவேந்திரன் மாயையால் தன்னை மறைத்துக் கொண்டான்.
குதிரையை தேடிச்சென்ற ரகு மகாராஜன், கோசலத்தால் (கோமியம்) தன் கண்களைக் கழுவிக்கொள்ள,
தேவேந்திரனின் மாயை அகன்றது.
ரகு தேவேந்திரனிடமிருந்து அசுவமேதக் குதிரையை மீட்டு வந்தான்.
எனவே சகல சவுபாக்கியத்தை அள்ளித்தரும் கோ பூஜையை ஒவ்வொரு வரும் ஆண்டுக்கு ஒரு முறையாவது விதிப்படி செய்து வரவேண்டும்.
முன்பு ஒவ்வொரு வீட்டிலும் பசுவினை வளர்த்து வந்தார்கள்.
எனவே ஒவ்வொருவரும் அவரவர் வீட்டிலேயே கோபூஜை செய்தும் வந்தார்கள்.
இன்றைய தினத்தில் ஒவ்வொரு வீட்டிலும் பசு வழிபாடு செய்ய இயலாது என்பதால் ஆலயங்களில் கோசாலை
(பசுமடம்) அமைத்து, அன்றாடம் கோ பூஜை செய்யும் மரபு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆலயத்தில் பசுமடம் இருப்பின் மக்கள் அனைவருமே பசு பராமரிப்பிலும், கோ பூஜையிலும் கலந்து கொள்ளலாம்.
அன்றாடம் செய்ய இயலாதவர்கள் கூட வெள்ளிக்கிழமை கோபூஜை செய்ய வேண்டும்.
வசதியுள்ளவர்கள் 108 பசுக்களைக் கொண்டு பெரிய அளவில் கோபூஜை செய்யலாம்.
அவ்வாறு கோபூஜை செய்வது ஆலயத்திற்கும் மக்களுக்கும் மட்டுமின்றி அகிலத்திற்கே நன்மை அளிக்கும்.
- இயன்றவர்கள் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் கூட கோபூஜையை செய்து வரலாம்.
- பொதுவாக பசு வழிபாட்டினை இருவகையாக செய்யும் மரபு உண்டு.
லோகநாயகியான அன்னை புவனேஸ்வரி இப்பூலோகத்தில் வசிஷ்டர் ஆசிரமத்தில் தேவ பசுவாக இருந்த
நந்தினியின் சொரூபமாக விளங்குகிறாள் என்று தேவி புராணங்கள் கூறுகின்றன.
பசுவின் கால்பட்ட தூசியைத்தான் ரகு சக்ரவர்த்தி, அஜ சக்ரவர்த்தி, தசரதச் சக்ரவர்த்தி போன்ற ராஜாதி ராஜாக்கள் எல்லோரும் பூசிக்கொண்டார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தி (தை மாதம் முதல் தேதி) இந்திர பூஜையுடன் சேர்த்து கோபூஜையை செய்து வருவது வழக்கம்.
இயன்றவர்கள் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் கூட கோபூஜையை செய்து வரலாம்.
பொதுவாக பசு வழிபாட்டினை இருவகையாக செய்யும் மரபு உண்டு.
பசுமாடுகளை சந்தனம், குங்குமம் போன்றவற்றால் அலங்கரித்து எல்லா மந்திரங்களும் கூறி,
மலர்களால் அர்ச்சித்து தூப, தீப நிவேதனங்களால் வழிபடுவது ஒருமுறையாகும்.
இவ்வாறு வழிபட இயலாதவர்கள் கோமாதாவின் படத்தை மட்டும் வைத்து வழிபடுவதும் உண்டு.
இதைத்தவிர பசுவை வீட்டிலோ, ஆலயத்திலோ நேரடியாக வழிபடுவது மற்றொரு முறையாகும்.
- பஞ்ச கவ்யம் என்பது தெய்வீக ஆற்றல் பொருந்திய மருந்தாகும்.
- இப்போது பயிர்கள் செழித்து வளரவும், நோய் நீக்கியாகவும் பஞ்சகவ்யம் பயன்படுகின்றது.
பசு மனிதர்க்கு தேவையற்ற புல்லையும் வைக்கோலையும் உண்டாலும் மனிதர்க்குத் தேவையான பால், நெய், வெண்ணெய், தயிர் ஆகியவற்றைத் தந்து காக்கிறது.
பசுவின் சாணமும், சிறுநீரும் சுத்தி செய்யும் தன்மை வாய்ந்தன.
பஞ்சகவ்யம் என்பது பசுவின் பால், தயிர், நெய், கோசலம் (கோமுத்திரம்), கோமயம் (கோமலம்) ஆகியவற்றின் சேர்க்கையே ஆகும்.
பஞ்ச கவ்யம் என்பது தெய்வீக ஆற்றல் பொருந்திய மருந்தாகும்.
உடலின் புறத்தே தூய்மை செய்வது நீர்.
அகத்தே தூய்மை செய்வது பஞ்ச கவ்யம்.
சில வழிபாட்டு சடங்குகளில் பஞ்சகவ்யம் முக்கிய இடத்தைத் பெறுகிறது.
உதாரணமாக உபகர்மா அன்று பக்தர்கள் முதலில் நீராடி, பஞ்ச கவ்யத்தைப, பருகி மீண்டும் நீராடுகின்றனர்.
பஞ்சகவ்யமானத அதை உண்போரின் உடல், தோல், மாமிசம், ரத்தம் மற்றும் எலும்பு வரையுள்ள பாவங்களை அக்னி விறகுக் கட்டையை எரிப்பது போல எரித்து விடுகிறது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
ஆயுர்வேதத்தில் பஞ்ச கவ்யத்தை பஞ்சகவ்வியக் கிருதம் என்பர்.
கிருதம் என்றால் திரவ மருந்து, காக்காய் வலிப்பு முதலான சில நோய்களுக்கு இது ஓர் அரிய மருந்தாகும்.
இப்போது பயிர்கள் செழித்து வளரவும், நோய் நீக்கியாகவும் பஞ்சகவ்யம் பயன்படுகின்றது.
- பசுவும் பஞ்ச கவ்யமும் தெய்வீகத்தன்மை வாய்ந்தது.
- பஞ்ச கவ்யத்தின் ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு தெய்வங்கள் வாசம் செய்கின்றன.
பசுவும் பஞ்ச கவ்யமும் தெய்வீகத்தன்மை வாய்ந்தது.
எனவே தெய்வ வழிபாட்டில் பஞ்சகவ்யத்திற்கு முக்கிய பங்கு உண்டு.
பஞ்ச கவ்யத்தைப் பெறுவதற்காகவே ஆலயங்களில் கோசாலைகள் அமைக்கப்பெற்று பசுக்கள் வளர்க்கப்படுகின்றன.
முற்காலத்தில் மன்னர்களும் செல்வந்தர்களும் ஆலயங்களுக்கு பசுக்களைத் தானம் கொடுத்த காரணமும் இதுவே., இச்செய்திகள் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளன.
தானம் அளிக்கப்பட்ட பசுக்கள் வாழையடி வாழையாய் பெருகி வளர்வதால் இவற்றை முசா சாவாப் பசுக்கள் அதாவது முப்படையாத சாவாத பசுக்கள் என்று கல்வெட்டுகள், குறிப்பிடுகின்றன.
பஞ்ச கவ்யத்தின் ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு தெய்வங்கள் வாசம் செய்கின்றன.
பசுவின் பாலில் சந்திரனும், பசுவின் தயிரில் வாயு பகவானும் நெய்யில் சூரிய பகவானும், கோசலத்தில் (கோமியம்) வருணதேவனும், பசும் சாண்ததில் அக்னி தேவனும் வாசம் செய்கின்றனர்.