search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமுதாயக்கூடம்"

    • சமுதாயக்கூடம்- அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டது.
    • மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் யூனியன் ஆமத்தூர் கிராமத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம், ரூ. 23.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள 2 அங்கன்வாடி மைய கட்டிடங்களை விருதுநகர் யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர் தலைமையில் சீனிவாசன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    இந்த விழாவில் விருதுநகர் யூனியன் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சீனிவாசன், கற்பக வல்லி, யூனியன் கவுன்சிலர் அமுதா செல்வராஜ், ஆமத்தூர் பஞ்சாயத்து தலைவர் குறிஞ்சி மலர், அழகர்சாமி, வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆவுடையம்மாள் மற்றும் பஞ்சாயத்து கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீனிவாசன் எம்.எல்.ஏ. பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு குறைகளை கேட்டறிந்தார். பின்னர் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.

    • ரூ.42.25 லட்சம் மதிப்பில் பல்நோக்கு சமுதாயக்கூடத்தினை அமைச்சர் ராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
    • கல்வி மற்றும் நல்லொழுக்கங்கள் கற்று தரப்படுகின்றன

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியம் உபதலை ஊராட்சி கரிமராஹட்டியில் ரூ.16.07 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் மற்றும் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கக்குச்சி ஊராட்சி ஒன்னதலையில் ரூ.42.25 லட்சம் மதிப்பில் பல்நோக்கு சமுதாயக்கூடத்தினை அமைச்சர் ராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.

    பின்னர் அமைச்சர் பேசியதாவது, அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு தேவையான உணவு, கல்வி மற்றும் நல்லொழுக்கங்கள் கற்று தரப்படுகின்றன. தாய்மார்கள் தங்களது குழந்தைகளை கட்டாயமாக அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். ஒன்னதலை கிராமத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மக்கள் பங்களிப்பு, அரசின் பங்களிப்புடன் ரூ.42.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பல்நோக்கு சமுதாய கூடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்து உள்ளது இவ்வாறு அவர் கூறினார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் மாயன் (எ) மாதன், குன்னூர் சுனிதா நேரு, உபதலை ஊராட்சி தலைவர், கக்குச்சி ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • மணக்கரம்பை எம்.ஜி.ஆர் நகரில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும்.
    • வடிகால் வசதி, பொது கழிப்பிட வசதி, சமுதாயக்கூடம் ஆகியவை அமைத்து கொடுக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த மணக்கரம்பை எம்.ஜி.ஆர். நகர் மக்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும், நிரந்தர வடிக்கால் வசதி செய்யப்பட வேண்டும், பொது கழிப்பிட வசதி, சமுதாயக்கூடம் அமைத்து கொடுக்க வேண்டும், வீடு இல்லாதவர்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கு மாநகர குழு ராஜன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் புனிதா, மகேஸ்வரி, உத்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் சின்னை. பாண்டியன், மாநகர செயலாளர் வடிவேலன், மாவட்ட குழு குருசாமி, வசந்தி, சரவணன் ஆகியோர் பேசினர்.

    இந்த காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சமையல் பாத்திரம், அடுப்புடன் வந்து கோஷமிட்டனர்.

    இந்தப் போராட்டத்தில் மாநகரக் குழு நிர்வாகிகள் கரிகாலன், அன்பு , கோஸ் கனி, அப்துல் நசீர், ராஜன், காதர் உசேன், அருண்குமார், வின்சிலா ராணி, பைந்தமிழ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மொரட்டுபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு தலைமை தாங்கினார்.
    • கலாமணி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ஊத்துக்குளி:

    ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் மொரட்டு பாளையம் ஊராட்சி புதிய ஆதிதிராவிடர் காலனியில் புதிதாக ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்காக பூமி பூஜை நடைபெற்றது. இதில் மொரட்டுபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி கலந்துகொண்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.மேலும் நிகழ்ச்சியில் துணைத் தலைவர் கணேஷ் குமார் , வார்டு உறுப்பினர்கள் தவமணி சக்திகதிரவன் , தங்கமணி கோவிந்தசாமி,உமா மகேஸ்வரி சுரேஷ், பாலமுருகன், கலாமணி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    • சமுதாயக்கூடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
    • மேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபாலன் மற்றும் அம்பலகாரர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    மேலூர்

    மேலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பதினெட்டாங்குடி ஊராட்சியில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவிலில் சட்டமன்றஉறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டும் பணியினை பெரியபுள்ளான் எம்.எல்.ஏ.,முன்னாள் எம்எல்ஏ தமிழரசன் ஆகியோர் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி, கொட்டாம்பட்டி முன்னாள் யூனியன் சேர்மன் வெற்றிச்செழியன், மேலூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பொன் ராஜேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், பதினெட்டாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் சுதா ஆண்டி, துணைத்தலைவர் முத்துகிருஷ்ணன், திருவாதவூர் ஊராட்சி மன்ற தலைவர் இளவரசன், கிடாரிப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், மேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபாலன் மற்றும் அம்பலகாரர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    ×