என் மலர்
நீங்கள் தேடியது "மலேசியா ஓபன்"
- கோலாலம்பூரில் மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
- இதில் இந்திய பெண்கள் ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
கோலாலம்பூர்:
மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் ஆட்டம் ஒன்றில், இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி,
தாய்லாந்தின் சுவாசாய்-ஜாங்சதாபாம்பான் ஜோடியுடன் மோதியது.
இதில் இந்திய ஜோடி 21-10, 21-10 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
அடுத்த சுற்றில் இந்திய ஜோடி சீன ஜோடியுடன் மோதுகிறது.
- மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் சீன வீராங்கனையிடம் பி.வி.சிந்து தோல்வி அடைந்தார்.
- இதன்மூலம் மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியிலிருந்து அவர் வெளியேறினார்.
கோலாலம்பூர்:
மலேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீன தைபே வீராங்கனை டாய் சூ யிங் ஆகியோர் மோதினர்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் சுற்றை 21-13 என்ற கணக்கில் பி.வி.சிந்து வென்றார். அடுத்து சுதாரித்துக் கொண்ட
சூ யிங் அடுத்த இரு செட்களை 21-15, 21-13 என்ற செட் கணக்கில் வென்றார். இந்த தோல்வியின் மூலம் மலேசிய ஓபன் போட்டியிலிருந்து பி.வி.சிந்து வெளியேறினார்.