என் மலர்tooltip icon

    மலேசியா

    • கடந்த 11 ஆண்டுகளில் இரு முறை மிகப்பெரிய அளவிலான தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டது.
    • ஆனாலும் அவை பெரிய அளவில் பயனளிக்காமல் தோல்வியிலேயே முடிந்துள்ளன.

    கோலாலம்பூர்:

    மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகரான பெய்ஜிங்குக்கு 2014ம் மார்ச் 8-ம்ம் தேதி 227 பயணிகளையும் 12 விமானப் பணியாளர்களையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட 777 வடிவமைப்பு கொண்ட எம்.எச்.370 மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வியட்நாம் வான்பரப்பை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டு அறையுடன் விமானத்துக்கு இருந்த அனைத்து தொடர்புகளும் செயலிழந்தன.

    கடந்த 11 ஆண்டுகளில் இரு முறை மிகப்பெரிய அளவிலான தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அவை பெரிய அளவில் பயனளிக்காமல் தோல்வியிலேயே முடிந்துள்ளன.

    இந்நிலையில், 11 ஆண்டுக்கு முன் காணாமற்போன எம்.எச்.370 விமானத்தின் பாகங்களைத் தேடும் நடவடிக்கையை தொடர மலேசிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்த முறை இந்திய பெருங்கடலின் தென்பகுதியில் 15 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தேடுதல் பணி மேற்கொள்ளப்படும். அதற்காக பிரிட்டனில் செயல்படும் ஓஷன் இன்பினிடி நிறுவனத்துடன் மலேசியா ஒப்பந்தம் செய்துள்ளது.

    விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே மலேசிய அரசாங்கம் அந்நிறுவனத்துக்குக் கட்டணம் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வீட்டில் இருந்து வேலை செய்வதைவிட அலுவலகத்துக்கு சென்று வேலை செய்வதே சிறந்தது.
    • சக ஊழியர்களுடன் நேரடியாக இணைந்து பணி செய்வதால் வேலை எளிதாகிறது.

    உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களிலும் போக்குவரத்துக்காக கார்கள், பஸ்கள், ரெயில்கள் போன்றவற்றை அதிகம் பேர் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் மலேசியாவில் வசிக்கும் இந்தியாவை சேர்ந்த ரேச்சல் கவுர் என்ற பெண் வேலைக்காக தினமும் 700 கிலோ மீட்டர் தூரம் விமானத்தில் பயணம் செய்வது இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.

    ரேச்சல் கவுர் மலேசியாவில் உள்ள ஏர்-ஆசியா நிறுவனத்தின் நிதி நடவடிக்கைகளில் உதவி மேலாளராக பணிபுரிகிறார். இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இவர் தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து வீட்டு வேலைகளை முடித்துவிட்டு 5 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு பினாங்கு விமான நிலையத்தை அடைகிறார். அங்கிருந்து 6.30 மணிக்கு கோலாலம்பூருக்கு விமானத்தில் புறப்பட்டு 7.45 மணிக்கு அலுவலகம் செல்கிறார். வேலை முடிந்தவுடன் இரவு 8 மணிக்கு மீண்டும் வீட்டிற்கு திரும்புகிறார். தினமும் சுமார் 700 கிலோ மீட்டர் தூரம் விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் அவர் கூறுகையில், விமான செலவுகளை விட வீட்டு வாடகை அதிகமாக உள்ளது.

    வீட்டில் இருந்து வேலை செய்வதைவிட அலுவலகத்துக்கு சென்று வேலை செய்வதே சிறந்தது. ஏனெனில் சக ஊழியர்களுடன் நேரடியாக இணைந்து பணி செய்வதால் வேலை எளிதாகிறது. அலுவலக பணிகளில் முழு கவனம் செலுத்த முடிகிறது. தினமும் வீட்டிற்கு திரும்பியதும் குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்க முடிகிறது. இந்த அட்டவணை எனது வாழ்வில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது என்றார். ரேச்சல் கவுர் மாதம் ரூ.35 லட்சம் சம்பளம் வாங்குகிறாராம். அவர் தினமும் காலையில் எழுந்திருப்பது சோர்வை ஏற்படுத்தினாலும், இரவு வீடு திரும்பி குழந்தைகளை பார்க்கும் போது அந்த சோர்வு மாயமாகி விடுவதாக கூறுகிறார். மேலும் விமான பயணத்தின் போது இசை கேட்பது, இயற்கையை ரசிப்பது போன்றவை தனக்கான நேரமாக மாறி உள்ளது என்றார்.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 82 ரன்களில் ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய இந்தியா 84 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    கோலாலம்பூர்:

    2-வது ஜூனியர் பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மலேசியாவில் நடைபெற்றது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 82 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக வேன் வூர்ஸ்ட் 23 ரன்னும், ஃபே கௌலிங் 15 ரன்னும் எடுத்தனர்.

    இந்தியா சார்பில் கொங்கடி திரிஷா 3 விக்கெட்டும், வைஷ்ணவி ஷர்மா, ஆயுஷி ஷுக்லா, பருனிகா சிசோடியா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை கமலினி 8 ரன்னில் அவுட்டானார்.

    2வது விக்கெட்டுக்கு கொங்கடி திரிஷாவுடன் இணைந்த சானிகா சால்கே ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

    இறுதியில், இந்திய அணி 11.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 84 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் டி20 உலகக் கோப்பையை இரண்டாவது முறையாகக் கைப்பற்றி அசத்தியது. திரிஷா கொங்கடி 44 ரன்னும், சால்கே ஜோடி 26 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • இந்தியா மீண்டும் பட்டம் வெல்லுமா?
    • இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

    கோலாலம்பூர்:

    2-வது ஜூனியர் பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது.

    இதில் கோலாலம்பூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை (பகல் 12 மணி) சந்திக்கிறது.

    நிக்கி பிரசாத் தலைமையிலான இந்திய அணி இந்த போட்டி தொடரில் தோல்வியை சந்திக்காமல் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. லீக் சுற்றில் வெஸ்ட்இண்டீஸ், மலேசியா, இலங்கையையும், சூப்பர் 6 சுற்றில் வங்காளதேசம், ஸ்காட்லாந்தையும் பந்தாடிய இந்திய அணி அரை இறுதியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை விரட்டியடித்து தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்திய அணியில் பேட்டிங்கில் ரன் குவிப்பில் முதலிடத்தில் உள்ள கோங்காடி திரிஷா (265 ரன்), கமலினி (135) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    பந்து வீச்சில் அதிக விக்கெட் வீழ்த்தி முறையே முதல் 2 இடம் வகிக்கும் வைஷ்ணவி ஷர்மா (15 விக்கெட்), ஆயுஷி சுக்லா (12), பருனிகா சிசோடியா, ஜோஷிதா, ஷப்னம் ஷகீல் கலக்குகிறார்கள்.

    கைலா ரெனேக் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி லீக் சுற்றில் நியூசிலாந்து, சமோவ், நைஜீரியாவை தொடர்ச்சியாக வீழ்த்தியது. சூப்பர்6 சுற்றில் அயர்லாந்தை வென்றது.

    அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. அரைஇறுதியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    தென்ஆப்பிரிக்க அணியில் பேட்டிங்கில் ஜெம்மா போத்தா, சிமோன் லாரன்ஸ்சும், பந்து வீச்சில் கைலா ரெனேக், மோனலிசா லிகோடி, ஆஷ்லே வான் விக்கும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

    இந்திய அணி கோப்பையை தக்கவைத்துக்கொள்ள தனது முழு திறனையும் வெளிப்படுத்தும். அதேநேரத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய உத்வேகத்துடன் களம் காணும் தென்ஆப்பிரிக்க அணி முதல்முறையாக மகுடம் சூட மல்லுக்கட்டும் என்பதில் சந்தேகமில்லை. இருந்தாலும் வலுவான இந்திய அணியே மீண்டும் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது.

    • மலேசியாவின் சில பகுதிகளில் 700 மில்லிமீட்டருக்கும் மேல் மழை பதிவாகியுள்ளது.
    • 5000-த்திற்கும் மேற்பட்டார் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    மலேசியாவில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

    இந்த கனமழையினால் 5 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கிட்டத்தட்ட 5000-த்திற்கும் மேற்பட்டார் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    மலேசியாவின் சபா மற்றும் சரவாக்கின் சில பகுதிகளில் 700 மில்லிமீட்டருக்கும் மேல் மழை பதிவானதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதனிடையே, நாளை வரை கனமழை தொடரும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    • முதலில் ஆடிய இந்தியா 208 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய ஸ்காட்லாந்து 58 ரன்களில் ஆல் அவுட்டானது.

    கோலாலம்பூர்:

    ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சூப்பர் 6 சுற்றிn 2வது ஆட்டத்தில் ஸ்காட்லாந்துடன் இன்று மோதியது. டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 209 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனை கமாலினி அரை சதம் கடந்து 51 ரன்னில் அவுட்டானார்.

    மற்றொரு தொடக்க வீராங்கனை கோங்கடி திரிஷா அதிரடியில் மிரட்டினார். இவர் 59 பந்துகளில் 4 சிக்சர், 13 பவுண்டரி உள்பா 110 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 147 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

    இதையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஸ்காட்லாந்து களமிறங்கியது. இந்திய வீராங்கனைகள் துல்லியமாக பந்துவீசி அசத்தினர்.

    இறுதியில் ஸ்காட்லாந்து அணி 14 ஓவரில் 58 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்தியா 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தியா சார்பில் ஆயுஷி சுக்லா 4 விக்கெட்டும், வைஷ்ணவி சர்மா, கோங்கடி திரிஷா தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகி விருதை கோங்கடி திரிஷா வென்றார்.

    • நாடகம் போன்று நடத்தி அதற்காக பணம் ஈட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளாராம்.
    • வார நாட்களில் ரூ. 1,975, வார இறுதி நாட்களில் ரூ. 2,963 வரை வசூலிக்கிறார்.

    சினிமாக்களில் நடிக்க வேண்டும் என்பது இளைஞர்கள் பலரது கனவாக உள்ளது. அதில், சிலர் வில்லனாக நடித்து புகழ் பெற வேண்டும் என ஆசைப்படுவார்கள். ஆனால் மலேசியாவை சேர்ந்த ஷாசாலி சுலைமான் (வயது 28) என்பவர் சினிமாவில் வருவது போல நிஜத்திலும் வில்லனாக நடித்து பணம் சம்பாதிக்கிறார். அதாவது காதலி மற்றும் மனைவி முன்பு தங்களை ஹீரோ போல காட்டிக்கொள்ள நினைப்பவர்கள் இவரை தொடர்பு கொள்ளலாம்.

    உங்களுக்காக வில்லனாக மாற தயார் என்று விளம்பரம் செய்துள்ளார். காதலி மற்றும் கணவன் இல்லாத நேரத்தில் பெண்களை பின் தொடர்ந்து அவர்களுக்கு தொல்லை கொடுத்து பின்னர் கணவர் அல்லது காதலன் வரும் போது அவர்களிடம் அடி வாங்கி பெண்கள் முன்பு உங்களை ஹீரோவாக்கி கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

    நாடகம் போன்று நடத்தி அதற்காக பணம் ஈட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளாராம். ஆண்கள் மட்டுமல்லாது பெண்களும் கூட தன்னை அணுகலாம் என கூறியுள்ள சுலைமான் இதற்காக கட்டணம் வசூலிக்கிறார்.

    வார நாட்களில் ரூ. 1,975, வார இறுதி நாட்களில் ரூ. 2,963 வரை வசூலிக்கிறார். இவரது அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

    • முதலில் ஆடிய வங்கதேசம் 64 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 7.1 ஓவரில் 66 ரன்கள் எடுத்து வென்றது.

    கோலாலம்பூர்:

    ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சூப்பர் 6 சுற்றில் முதல் ஆட்டத்தில் வங்கதேசத்துடன் இன்று மோதியது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 64 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் சுமையா அக்தர் 21 ரன்னும், ஜன்னத்துல் மவுமா 14 ரன்னும் எடுத்தனர்.

    இந்தியா சார்பில் வைஷ்ணவி சர்மா 3 விக்கெட் கைப்பற்றினார்.

    அடுத்து ஆடிய இந்திய அணி 7.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 66 ரன் எடுத்து வெற்றி பெற்றது. திரிஷா 31 பந்தில் 40 ரன் விளாசினார்.

    இதன்மூலம் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகி விருதை வைஷ்ணவி வென்றார்.

    • வெறும் 2.5 ஓவரில் இந்திய அணி மலேசியாவை வீழ்த்தியது.
    • போட்டியின் ஆட்ட நாயகியாக வைஷ்ணவி சர்மா தேர்வு செய்யப்பட்டார்.

    கோலாலம்பூர்:

    ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் மலேசியாவுடன் இன்று மோதியது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மலேசியா, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை விரைவில் பறிகொடுத்தது. அந்த அணியில் ஒரு வீராங்கனை கூட இரட்டை இலக்கத்தை தொடவில்லை.

    இறுதியில், மலேசியா அணி 14.3 ஓவரில் 31 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் வைஷ்ணவி சர்மா ஹாட்ரிக் விக்கெட்டுடன் சேர்த்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    அடுத்து ஆடிய இந்திய அணி 2.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 32 ரன் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    5 விக்கெட் வீழ்த்திய வைஷ்ணவி சர்மா ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

    • 2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மலேசியாவில் நடந்து வருகிறது.
    • இதில் இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.

    கோலாலம்பூர்:

    இரண்டாவது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்குட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது.

    இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசுடன் மோதியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் நிக்கி பிரசாத் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 13.2 ஓவரில் வெறும் 44 ரன்களில் சுருண்டது.

    இந்தியா சார்பில் பருனிகா சிசோடியா 3 விக்கெட்டும், ஜோஷிதா மற்றும் ஆயுஷி சுக்லா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 45 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா 4.2 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 47 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்திய அணி அடுத்த லீக் ஆட்டத்தில் வரும் 21ம் தேதி மலேசியாவை எதிர்கொள்கிறது.

    • கோலாலம்பூரில் மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
    • இதில் இந்திய பெண்கள் ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    கோலாலம்பூர்:

    மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் ஆட்டம் ஒன்றில், இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி,

    தாய்லாந்தின் சுவாசாய்-ஜாங்சதாபாம்பான் ஜோடியுடன் மோதியது.

    இதில் இந்திய ஜோடி 21-10, 21-10 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    அடுத்த சுற்றில் இந்திய ஜோடி சீன ஜோடியுடன் மோதுகிறது.

    • கோலாலம்பூரில் மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
    • இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி வென்றது.

    கோலாலம்பூர்:

    மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் மலேசிய ஓபன் 2025 பேட்மிண்டன் போட்டி தொடர் நடந்து வருகிறது.

    இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, தைவானின் லு மிங் சே-டாங்க் கை வே ஜோடி உடன் மோதியது.

    இதில் முதல் செட்டை 21-10 என இந்திய ஜோடி வென்றது. இரண்டாவது செட்டை தைவான் ஜோடி 21-16 என கைப்பற்றியது.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை இந்திய ஜோடி 21-5 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    ×