என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "3 லட்சம் மீன்குஞ்சுகள்"
- கெண்டை, லோகு, கட்லா, மிருகால் ஆகிய மீன்ரகங்கள் வளர்க்கப்பட்டு அணைகளில் விடப்படுகிறது.
- மீன்வளத்தை பெருக்க 6 லட்சம் மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ள நிலையில் மீதி குஞ்சுகள் அடுத்தடுத்து விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் மீன்வளத்துறை சார்பில் மீன்பிடிதொழில் நடந்து வருகிறது. இதில் 140-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தினந்தோறும் 500 முதல் 700 கிலோ மீன்கள் பிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அணையில் இயற்கையாக வளரும் மீன்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் உள்ளது.
வைகை அணை பகுதியில் உள்ள மீன்வளத்துறை அலுவலகம் மூலம் மணிமுத்தாறு, பவானிசாகர் அணைகளில் இருந்து நுண்மீன்குஞ்சுகள் வாங்கி அதனை மீன்வளத்துறை அலுவலகத்தில் உள்ள தொட்டிகளில் பராமரித்து வருகின்றனர். கெண்டை, லோகு, கட்லா, மிருகால் ஆகிய மீன்ரகங்கள் வளர்க்கப்பட்டு அணைகளில் விடப்படுகிறது.
கண்மாய் மற்றும் குளங்களில் மீன்வளர்ப்பவர்களுக்கும் மீன்குஞ்சுகள் விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் அணையின் நீர்தேக்கத்தில் புதிதாக மீன்குஞ்சுகள் விடப்படும். இந்த மாதம் முதல் வாரத்தில் 45 நாட்களில் வளர்ச்சி அடைந்த சுமார் 3 லட்சம் மீன்குஞ்சுகள் நீர்தேக்கத்தில் விடப்பட்டது.
தற்போது 2-ம் கட்டமாக ஒரு லட்சம் கட்லா மீன்குஞ்சுகள், 2 லட்சம் ரோகு மீன்குஞ்சுகள் என மொத்தம் 3 லட்சம் மீன்குஞ்சுகள் விடப்பட்டன. இந்த ஆண்டு மட்டும் 16 லட்சம் மீன்குஞ்சுகள் விடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 6 லட்சம் மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ள நிலையில் மீதி குஞ்சுகள் அடுத்தடுத்து விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- வைகை அணையில் மீன் வளத்தை பெருக்க 16 லட்சம் மீன்குஞ்சுகள் விட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
- முதற்கட்டமாக 3 லட்சம் குஞ்சுகள் வைகை நீர்த்தேக்கத்தில் விடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
ஆண்டிப்பட்டி:
வைகை அணையில் மீன் வளத்தை பெருக்க 16 லட்சம் மீன்குஞ்சுகள் விட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக அணையில் 3 லட்சம் மீன் குஞ்சுகள் நேற்று விடப்பட்டது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் மீன்பிடி தொழில் நடைபெறுகிறது. மீன்வளத்துறை சார்பில் நடைபெறும் இந்த மீன்பிடி தொழிலில் வைகை அணையை சுற்றியுள்ள 140க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஈடுபட்டு வரு கின்றனர்.
ஒரு நாளைக்கு 500 முதல் 700 கிலோ அளவிலான மீன்கள் பிடிக்கப்பட்டு மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இயற்கையான முறையில் வளரும் வைகை அணை மீன்களுக்கு பொது மக்களி டையே அதிக வரவேற்பு இருக்கும்.
இதன் காரணமாக மீன் வளத்தை பெருக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மீன் வளத்துறை சார்பில் வைகை அணை நீர்த்தேக்கத்தில் புதிதாக மீன்குஞ்சுகள் வளர்ப்புக்கு விடப்படும்.
இந்தாண்டு வைகை அணையில் புதிதாக 16 லட்சம் மீன்குஞ்சுகளை விட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக வைகை மீன்வளத்துறை இயக்குனர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டதொட்டி களில் 9 லட்சம் நுண்மீன்கு ஞ்சுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதில் 45 நாட்கள் வளர்ச்சியடைந்த சுமார் 3 லட்சம் குஞ்சுகள் வைகை நீர்த்தேக்கத்தில் விடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்தப்பணியை மதுரை மீன்வளத்துறை துணை இயக்குனர் பிரபாவதி நேற்று தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் பஞ்சராஜா மற்றும் மீன்வளர்ப்புத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.