என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்க உச்சநீதிமன்றம்"

    • டிக்டாக் செயலி விற்பனைக்கு தடை கோரி பைட்டான்ஸ் நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தது.
    • இந்த மனுவை கடந்த மாதம் 18-ம் தேதி சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை மேற்கோள் காட்டி சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலியை அடுத்த 270 நாட்களுக்குள் விற்பனை செய்வதற்கு அவகாசம் வழங்கும் சட்டத்தை கடந்த ஏப்ரல் மாதம் இயற்றினார்.

    அவ்வாறு விற்பனை செய்யாவிட்டால் ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிக்டாக் செயலியை அகற்ற உத்தரவிடப்படும் என அந்தச் சட்டத்தில் கூறப்பட்டிருந்தது.

    இந்தச் சட்டத்திற்கு தடை கோரி பைட்டான்ஸ் நிறுவனம் கடந்த மே மாதம் வாஷிங்டன் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதையடுத்து பைட்டான்ஸ் நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவில், ஜனவரி 19-ம் தேதிக்குள் டிக்டாக் செயலியை விற்க வேண்டும் என்ற சட்டத்தால் அமெரிக்க மக்களிடம் மிகவும் பிரபலமாகியுள்ள டிக்டாக் செயலி தடை செய்யப்படுமானால், அந்தச் செயலியை பயன்படுத்தி வரும் மக்களின் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்த மனுவை கடந்த மாதம் 18-ம் தேதி சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

    இந்நிலையில், டிக்டாக்கை அதன் சீன தாய் நிறுவனமான பைட் டான்ஸ் லிமிடெட் வரும் 19-ம் தேதிக்குள் அமெரிக்க நிறுவனத்துக்கு விற்க வேண்டும். இல்லையெனில் டிக்டாக்கைத் தடை செய்யப்படும் என அமெரிக்க உச்சநீதிமன்றம் உறுதிபட தெரிவித்தது.

    தேசிய பாதுகாப்புக்கான வெளிப்படையான ஆபத்து முதல் திருத்த உரிமைகள் தொடர்பான கவலைகளைவிட அதிகமாக உள்ளது எனவும் தீர்ப்பளித்ததுடன், டிக் டாக் தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் கிட்டத்தட்ட 17 கோடி கணக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • புளோரிடாவில், 15 வாரங்களுக்குப் பிந்தைய கருக்கலைப்புகளைத் தடைசெய்யும் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
    • டெக்சாஸில் உள்ள கிளினிக்குகள் கருக்கலைப்புகளை மீண்டும் தொடங்கியதாக தகவல்,

    டெக்சாஸ்:

    அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வதற்கான சட்டப்பூர்வ உரிமையை உறுதிப்படுத்திய 1973 ஆம் ஆண்டின் முக்கிய தீர்ப்பை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்துச் செய்தது.

    இது தொடர்பாக கடந்த 24ஆம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பில் கருக்கலைப்பை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் அமெரிக்கா மாகாணங்களுக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதன் பிரதிநிதிகளுக்கும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அமெக்க உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

    இந்த தீர்ப்பை தொடர்ந்து அமெரிக்காவின் 13 மாகாணங்கள் கருக்கலைப்பு தடை சட்டத்தை அமல்படுத்தியுள்ளதாக தகவல் வெளியானது. அதேபோல், 25-க்கும் மேற்பட்ட மாகாணங்கள் கருக்கலைப்புக்கு தடை விதித்தல் அல்லது கருக்கலைப்புக்கான விதிகளை கடுமையாக்கும் சட்டத்தை அமல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளன.

    இதனிடையே, கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு டெக்சாஸ் அட்டர்னி ஜெனரல் கென் பாக்ஸ்டன் கேட்டுக் கொண்டிருந்தார்.

    இந்த தீர்ப்பு வந்த சில நாட்களுக்கு பின்பு டெக்சாஸில் உள்ள கிளினிக்குகள் கருக்கலைப்புகளை மீண்டும் தொடங்கியதாக தகவல்கள் வெளியாகின. புளோரிடாவில், 15 வாரங்களுக்குப் பிறகு கருக்கலைப்புகளைத் தடைசெய்யும் சட்டம் வெள்ளிக்கிழமை நடைமுறைக்கு வந்தது,

    எனினும் அந்த மாகாண ஒரு நீதிபதி, இந்த தீர்ப்பு மாநில அரசியலமைப்பை மீறுவதாகக் கூறி அடுத்த வாரம் சட்டத்தை தற்காலிகமாகத் தடுக்கும் உத்தரவில் கையெழுத்திடுவதாக தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் கர்ப்பமாகி ஆறு வாரங்கள் வரை கருக்கலைப்புகளை தற்காலிகமாக மீண்டும் தொடங்கலாம் என்று கடந்த செவ்வாயன்று ஹூஸ்டன் நீதிமன்ற நீதிபதி, அனுமதி அளித்திருந்தார். இந்நிலையில் கருக்கலைப்புகளை மீண்டும் தொடங்கும் உத்தரவை டெக்சாஸ் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இந்த மாத இறுதியில் மீண்டும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ×