என் மலர்
நீங்கள் தேடியது "சௌந்தரராஜா"
- புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு ஐக்கிய அமீரக தமிழக வெற்றிக்கழகம் துபாய் சார்பில் இப்தார் நோம்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது
- திரு மு. சொளந்தர ராஜா அவர்கள் கலந்து கொண்டு நோம்பு திறந்து வழிபாடுகளிலும் ஈடுபட்டார்
புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு ஐக்கிய அமீரக தமிழக வெற்றிக்கழகம் துபாய் சார்பில் இப்தார் நோம்பு திறக்கும் நிகழ்ச்சி 16/03/2025 அன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்வில் அமீரகம் முழுவதும் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்து இருந்தனர்.
இந்நிகழ்வினை அமீரக தமிழக வெற்றிக் கழத்தின் நிர்வாகிகளான தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு ரகுவரன், இணை ஒருங்கிணைப்பாளர் திரு. ஸ்மாயில், பொருளாளர் சதிஸ், மகளிர் அணிச் செயலாளர் RJ மாயா மற்றும் கழக நிர்வாகிகளான சுதாகர், சரவணன் சேதுபதி, காரல் மார்க்ஸ், விஜய், ரியாஸ், புவி, சரத் மற்றும் நிஜாம் ஆகியோர் ஒன்றிணைந்து நடத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் கழகத் தலைவர் திரு மு. சொளந்தர ராஜா அவர்கள் கலந்து கொண்டு நோம்பு திறந்து வழிபாடுகளிலும் ஈடுபட்டார்
மேலும் இந்த நிகழ்விற்கு கழகத் தலைவர் அவர்களின் தாய்வழி உறவினரான பல்லவி வினோத்குமார் மற்றும் வினோத்குமார் ஆகியோரும் பொது அமைப்புகள் மற்றும் மாற்றுக்கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சௌந்தர ராஜா, "தமிழக வெற்றிக் கழகம் மக்களுக்கும், மண்ணுக்கும் சேவை செய்ய வந்த அரசியல் கழகம். பொறாமை பிடித்த பலர் நம் மீது விமர்சனங்களை முன்வைப்பர். அத்தகைய விமர்சனங்களை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அனைவரும் ஒன்றாக ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இங்கு தமிழர்கள் யாருக்கு, எந்த பிரச்சனை என்றாலும் தமிழக வெற்றிக் கழகம் தோழர்கள் அவர்களுக்கு முன் நின்று உதவ வேண்டும், என்று தெரிவித்தார்.


- சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படத்தில் சௌந்தரராஜா நடித்திருந்தார்.
- தற்போது அனில் தேவ் இயக்கத்தில் உருவாகி வரும் "கட்டிஸ் கேங்" என்ற மலையாள படத்தில் சௌந்தரராஜா வில்லனாக நடித்து வருகிறார்.
சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், பிகில், சங்கத் தமிழன், ஜகமே தந்திரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் சௌந்தரராஜா. இவர் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படத்தில் நடித்திருந்தார்.

தற்போது அனில் தேவ் இயக்கத்தில் உருவாகி வரும் "கட்டிஸ் கேங்" என்ற மலையாள படத்தில் சௌந்தரராஜா வில்லனாக நடித்து வருகிறார். ஓசியானிக் மூவிஸ் சார்பில் சுபாஸ் ரகுராம் தயாரிக்கும் இப்படத்தின் கதாநாயகனாக உன்னி லால் மற்றும் கதாநாயகியாக விஷ்மயா நடிக்கின்றனர். ராஜ் கார்த்திக் எழுத்தில், நிகில் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் உலக சுற்றுச்சூழல் தினமான நேற்று "கட்டிஸ் கேங்" படக்குழுவினரோடு சேர்ந்து மரக்கன்றுகள் நட்டு இயற்கை மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை சௌந்தரராஜா வலியுறுத்தி உள்ளார்.
- கட்டிங் கேஸ் என்ற மலையாள படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
- மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையின் உறுப்பினர்களுடன் சேர்ந்து 240 மரக்கன்று நட்டார்.
தமிழில் சுந்தரபாண்டியன், பிகில், ஜிகர்தண்டா, தர்மதுரை, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என பல படங்களில் நடித்திருப்பவர் சௌந்தரராஜா. கட்டிங் கேஸ் என்ற மலையாள படத்தில் வில்லன் கதாபாத்திரத்திலும், சாயாவனம் என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சினிமா மட்டுமின்றி சுற்றுச்சூழல் ஆர்வலரான சௌந்தரராஜா இயற்கை வளத்தை மேம்படுத்தும் வகையில் ஏராளமான மரங்களை நட்டு வருகிறார். அந்த வகையில், சௌந்தரராஜா தனது பிறந்தநாள் மற்றும் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையின் 8 ஆம் ஆண்டு விழாவை நேற்று கொண்டாடினார்.
இதையொட்டி காஞ்சிபுரம் வாலாஜாபாத்தில் அருகே உள்ள தன்னூர் கிராமத்தில் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையின் உறுப்பினர்களுடன் சேர்ந்து 240 மரக்கன்று நட்டார். நேற்று மட்டும் தமிழகம் முழுவதும் 500 மரக்கன்றுகள் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை சார்பாக நடப்பட்டது. 6 மாதம் தொடர்ச்சியாக 5000 மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளார். நடுவது மட்டுமில்லாமல் அதை பராமரிக்கவும் முடிவு செய்துள்ளார்.
இதுதவிர மரங்களை நடுவதற்கும் தனது அறக்கட்டளை உதவி செய்யும் என்று சௌந்தரராஜா அறிவித்துள்ளார். மக்கள் தங்களது ஊரில் மரங்களை நடுவதற்கு முன்கூட்டியே தகவல் கொடுத்தால், அவரது குழுவினர் குறிப்பிட்ட ஊரில் மரக்கன்று நடுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் என்று அவர் தெரிவித்தார்.
நடிகர் சௌந்தரராஜா மீது கொண்ட அன்பிற்கும், சமூக அக்கறைக்கும் அவரது நண்பர் ஜேப்பியார் பேரன் ஜெய்குமார் (சத்தியபாமா பல்கலைக்கழகம்) மற்றும் அவரது மனைவி Dr சரண்யா ஜெய்குமார் ( Educational Psychologist ) விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை பிறந்த நாள் பரிசாக அளித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடி, பாடல் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.
- தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடி விவகாரம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது.
சுந்தரபாண்டியன் படத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா. அதன் தொடர்ச்சியாக அவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்திலும் நடித்திருந்தார்.
நடிகர் விஜய், தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை நேற்று (ஆகஸ்ட் 22) காலை அறிமுகம் செய்து வைத்தார். இதை கொண்டாடும் விதமாக நடிகர் சௌந்தரராஜா, அவர்மீது உள்ள பாசத்தின் காரணமாக, அவரின் அன்புதம்பியும், மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக அறக்கட்டளை சார்பாகவும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியை தனது சொந்த ஊரான மதுரைக்கு எடுத்து சென்று, அங்குள்ள மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் வைத்து விஜய் பெயரில் சிறப்பு அர்ச்சணையும், பூஜையும் செய்து, கட்சி கொடியை மீனாட்சி அம்மன் மற்றும் சொக்கநாதர் பாதத்தில் வைத்து சிறப்பு வழிபாடு செய்தார்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை விஜய்யிடம் வழங்க முடிவு செய்துள்ளார். மேலும், விஜய் மற்றும் அவர் துவங்கி இருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு ஒட்டுமொத்த தமிழக மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கோவிலில் வேண்டினார்.
சிறப்பு பூஜையை தொடர்ந்து நடிகர் சௌந்தரராஜா மதுரை மக்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடி அறிமுகத்தை கொண்டாடும் வகையில், இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தார். நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் மீது தான் கொண்டுள்ள தீரா அன்பு மற்றும் தமிழக மக்கள் மீது தலைவர் விஜய் வைத்துள்ள பேரன்பின் வெளிப்பாடாக நடிகர் சௌந்தரராஜா கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடியதாக தெரிவித்தார்.
- நடிகர்களுக்கே பொருளாதார ரீதியில் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது.
- நாடகத்தின் நிலை இன்னமும் மோசம், அவர்களுக்கு ஒரு வைராக்கியம் உண்டு.
விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் ஜீவாவின் சகோதரியாகவும், கடல் படத்தில் கவுதம் கார்த்திக்கின் சிறு வயது தாயாகவும் நடித்து கவனம் பெற்றவர் தேவி. இவர் தேவிரிக்ஷா என்ற பெயரில் நடிப்பு பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார்.
இந்த பள்ளியின் 15 ஆவது ஆண்டு நாடக திருவிழா சென்னையில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில் சிறப்பு நாடகம், துடும்பாட்டம், கதை சொல்லி மற்றும் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் நாடகத்துறை மற்றும் திரைத்துறை சார்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியில் இயக்குநர்கள் சேரன், சமுத்திரக்கனி, நடிகர் சௌந்தரராஜா, பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ லியோனி மற்றும் மறைந்த விஜே ஆனந்த கண்ணன் மனைவி ராணி கண்ணா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
நடிகர் சௌந்தரராஜா பேசும் போது, "நான் நாடகங்களை பார்த்து வளர்ந்தவன். நான் நாடகம் நடிக்க ஆசைப்பட்டவன். ஆனால், என்னால் அப்படி ஆக முடியவில்லை. அதற்கான பயிற்சியை நான் முறையாக எடுக்கவில்லை. அப்படியே சென்றுவிட்டது."
"இந்த காலத்தில் நடிகர்களுக்கே பொருளாதார ரீதியில் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது. ஆனால் நாடகத்தின் நிலை இன்னமும் மோசம், அவர்களுக்கு ஒரு வைராக்கியம் உண்டு. அதை சொல்லும் போதே எனக்கு புல்லரிக்கிறது. கதையில் முக்கியத்துவம் இருக்கிறதா, வசனம் இருக்கிறதா என கேட்டு, அப்படி இருந்தால் மட்டும் தான் ஒப்புக்கொள்வார்கள். அந்த தைரியம் உண்மையில் பாராட்டுக்குரியது," என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சைக்கிள் பேரணியின்போது வழி நெடுகிலும் பல்வேறு இடங்களில் மரக்கன்று நடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- விக்கிரவாண்டியில் மிதிவண்டி பேரணி நிறைவு பெறுகிறது.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சௌந்தரராஜா. இவர் சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, பூஜை, தெறி, தர்மதுரை, றெக்க, கத்தி சண்டை, பிகில் மற்றும் பல்வேறு படங்களில் நடித்து புகழ் பெற்றவர். பிகில் படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்த பிறகு அவருக்கு நெருக்கமான இவர், நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளில் சௌந்தரராஜா ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பெயர் அறிவிக்கப்பட்டு, கட்சி கொடி அறிமுகம் செய்யப்பட்ட மறுநாளே தமிழக வெற்றிக் கழக கட்சி கொடியுடன் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சென்ற நடிகர் சௌந்தரராஜா கோவில் சன்னதியில் கட்சி கொடியை வைத்து சிறப்பு பூஜைகளை செய்தார். மேலும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் குறித்து தொலைகாட்சி விவாதங்களிலும் தொடர்ச்சியாக பேசி வருகிறார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நாளை (அக்டோபர் 27) விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. மாநாட்டையொட்டி நடிகர் சௌந்தரராஜா மற்றும் அவரது மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை சார்பில் சைக்கிள் பேரணி சென்னையில் இருந்து விக்கிரவாண்டி நோக்கி புறப்பட்டது.

நடிகர் சௌந்தரராஜா தலைமையில் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையை சேர்ந்த நிர்வாகிகள் சென்னையில் இருந்து விக்கிரவாண்டிக்கு சைக்கிளிலேயே பயணம் செய்கின்றனர். சென்னையில் இருந்து புறப்பட்டுள்ள சைக்கிள் பேரணியின்போது வழி நெடுகிலும் பல்வேறு இடங்களில் மரக்கன்று நடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விக்கிரவாண்டியில் சைக்கிள் பேரணி நிறைவு பெறுகிறது.
பேரணியை முடித்துக்கொண்டதும் நடிகர் சௌந்தரராஜா தலைமையில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையை சேர்ந்த 250 பேர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
- தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா.
- மதுரையில் நடைபெற்ற தவத்திரு டி.டி. சங்கரதாஸ் சுவாமிகளின் 102-வது குருபூஜை விழாவில் நடிகர் சௌந்தரராஜா கலந்து கொண்டார்.
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா. இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக கடந்த 3 ஆண்டுகளாக இருந்து வருகிறார். நடிப்பு மட்டுமின்றி சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வரும் இவர், மரம் நடுவது மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த சேவைகளையும் செய்து வருகிறார்.

இந்த நிலையில், மதுரையில் நடைபெற்ற தவத்திரு டி.டி. சங்கரதாஸ் சுவாமிகளின் 102-வது குருபூஜை விழாவில் நடிகர் சௌந்தரராஜா கலந்து கொண்டார்.

சங்கரதாஸ் சுவாமிகளின் குருபூஜை விழாவில் மதுரை நாடக நடிகர் சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், சங்க உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தமிழ் நாடகத் தந்தை மற்றும் தமிழ் நாடக மறுமலர்ச்சியாளர் என்று அழைக்கப்படும் சங்கரதாஸ் சுவாமிகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் நாடகத்தை தனது மூச்சாக கொண்டு 63 நாடகங்களை மேடையில் அரங்கேற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 1922 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் புதுவையில் உயிரிழந்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா.
- அஞ்சலை அம்மாள் நினைவு நாளை ஒட்டி அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள இவர் தமிழ் அல்லாத மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
நடிப்பு மட்டுமின்றி சமூக பணிகள் சார்ந்து பல்வேறு முன்னெடுப்புகளில் சௌந்தரராஜா தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அந்த வரிசையில் தனது மண்ணும் மக்களுக்கும் அறக்கட்டளை சார்பில் புதுச்சேரியில் நடைபெற்ற அஞ்சலை அம்மாள் நினைவு நாளை ஒட்டி அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையை சேர்ந்தவர்களுடன் நடிகர் சௌந்தரராஜா மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சௌந்தரராஜா, "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை சார்பில் அண்ணன் த.வெ.க. தலைவர் விஜய் வழியில் புதுச்சேரியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொள்கை தலைவர்களில் ஒருவரான அஞ்சலை அம்மாள் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. இந்த நாளில் மரக்கன்றுகள் நட்டு, அன்னதானம் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுக்கு மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை பொறுப்பாளர் பரத் ஏற்பாடு செய்து இருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. இதில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் அண்ணன் ஆனந்த் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் வேலை பளு காரணமாக அவர் கலந்து கொள்ள முடியாமல் போனது. அவருக்கும் அண்ணன் விஜய்க்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். புதுச்சேரிக்கு வருவதில் எப்போதும் மகிழ்ச்சி தான்.
2026 தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம். மக்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது, கூட்டணி விவகாரங்கள் பற்றி கட்சியின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் அறிவிப்பார்கள். நான் ஒரு தம்பி மற்றும் தொண்டனாக இருக்கிறேன். கட்சி பொறுப்பாளர்களை நியமிக்கும் பணிகள் இன்னும் பத்து நாட்களில் முடியும் என்று கேள்விப்பட்டேன்.
ஆரம்பத்தில் இருந்து அண்ணன் தளபதிக்காக பணியாற்றியவர்கள் ஏராளமானோர் உள்ளனர். இதனால் இந்த விஷயத்தில் பலர் வருந்தும் படி எதுவும் நடக்கக்கூடாது என்பதில் பொதுச் செயலாளர் அண்ணன் ஆனந்த் கவனமுடன் ஒவ்வொருத்தரையும் தேர்வு செய்து வருகிறார். இன்னும் 15 நாட்களுக்குள் பொறுப்பாளர்களை நியமிக்கும் பணிகள் நிறைவடையும் என்று கேள்விப்பட்டேன்.
தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் தலைவர் விஜய்யை தமிழ் நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. அவர் போடும் ஒரு எக்ஸ் (முன்பு டுவிட்டர்) பதிவு கூட சில நொடிகளில் செய்தியாகி விடுகிறது. அண்ணன் விஜய்க்கு உலக தமிழர்களிடம் பெரிய வரவேற்பு உள்ளது. சமீபத்தில் நான் படித்த தகவலின் படி தமிழக வெற்றிக் கழகம் மற்றும் தலைவர் விஜய் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டால் அதனை மிக குறுகிய காலத்தில் கிட்டத்தட்ட 80 லட்சம் பேர் தொடர்ச்சியாக பின் தொடர்ந்து வருகின்றனர்.
இன்றைய ஆட்சியில் மக்களுக்கு நிறைய பிரச்சினைகள் உள்ளன. மக்கள் மாற்றத்தின் பக்கம் தான் உள்ளனர். உதாரணத்திற்கு மின் கட்டணத்தை எடுத்துக் கொள்ளலாம். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு செலுத்தியதை விட தற்போது மின் கட்டணம் பலமடங்கு அதிகரித்துள்ளது. முன்பு 500 ரூபாய் செலுத்திய நிலையில் தற்போது 2500 முதல் 3000 வரை நானே செலுத்தி வருகிறேன். இது மட்டுமின்றி விவசாயிகள் பிரச்சினை உள்ளது. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். எல்லாவற்றுக்கும் போராட்டம் தான் நடத்த வேண்டும் என்றில்லை. அகிம்சை வழியில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்," என்று கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வருகின்ற 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விஜய்க்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
- தேர்தலுக்கு இன்னும் காலம், நேரம் இருக்கிறது.
மதுரை:
மதுரை ஒத்தக்கடை நரசிங்கம் பகுதியில் யானை மலை அடிவாரத்தில் குடை வரை கோவிலாக அமைந்துள்ள நரசிங்கம் பெருமாள் கோவிலில் தமிழக வெற்றிக்கழக ஆதரவாளரும், நடிகரும், தனியார் அறக்கட்டளை தலைருமான சௌந்தரராஜா தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
அப்போது அவர் தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரிலும், அதன் தலைவரும் நடிகருமான விஜய் பெயரிலும் அர்ச்சனை செய்து வழிபட்டார். மேலும் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அப்போது இதே மகிழ்ச்சியுடன் எப்போதும் இருக்கவேண்டும் என்றும், வருகின்ற 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விஜய்க்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதையடுத்து பேசிய அவர் கூறியதாவது:-
மக்களுக்கு சந்தோஷத்தை கொடுத்து மண்ணுக்கு தேவையான ஒரு ஆட்சியை கொடுப்பதற்கான வழியை தமிழக வெற்றிக் தழகத்தின் தலைவர் விஜய் கையில் எடுத்திருக்கிறார். பேசும் பொருள் ஆனால் தான் அது கழகம், கலகம் வந்தால்தான் தீர்வு கிடைக்கும். எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில் கூறிய குறைகளை ஆட்சியாளர்கள் தாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் இதுவரை நிறைவேற்றவில்லை. மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள், நேர்மையாக அரசியல் செய்ய விரும்புபவர்கள் விஜய்யை விரும்புகிறார்கள்.
தேர்தலுக்கு இன்னும் காலம், நேரம் இருக்கிறது. கூட்டணி கட்சியினர் சீட்டுக்காக காத்திருக்கிறார்கள், சீட்டு கிடைக்கவில்லை என்றால் நல்லவர்கள் எங்களை தேடி வருவார்கள். அரசியலை பொறுத்தவரை நேர்மையான விமர்சனத்திற்கு பதில் சொல்லலாம் என்பதற்காக வாய்க்கு வந்ததெல்லாம் பேசுகிறார்கள். தவறு செய்பவர்களை சுட்டிக்காட்டுவதற்காக பாசிசமும் பாயாசமும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
நாங்கள் இதுவரை ஆட்சிக்கு வரவில்லை. எங்கள் மீது குற்றம் சுமத்த வேண்டிய காரணம் என்ன? அச்சுறுத்துவீர்கள், அவமானப்படுத்துவீர்கள், ஆட்சி அதிகாரத்தை வைத்து பயமுறுத்துவீர்கள். இதெல்லாம் விஜய் அண்ணனிடம் பலிக்காது.
அவரவர்கள் அவர்கள் கட்சியை வளர்ப்பதற்கு அடுத்தவர்களை வீழ்த்துவதற்கான வேலையை பார்க்கிறார்கள். இந்த கட்சிதான் மீண்டும் மீண்டும் ஆள வேண்டுமா, அ.தி.மு.க., பா.ஜ.க., தி.மு.க., காங்கிரஸ் தவிர வேறு கட்சிகளே இல்லையா? மக்களுக்கான பணியை செய்தால் உங்களை விமர்சனம் வேண்டிய அவசியம் இல்லை. பா.ஜ.க., அ.தி.மு.க. என மக்களுக்கு நல்லது செய்தால் ஆட்சி பிடிப்பதற்கு எதற்கு போட்டி வருகிறது? மக்கள் யாராவது நிம்மதியாக இருக்கிறார்களா?
மதுரையில் ஒத்தக்கடை நரசிங்கம்பட்டியில் பாறைகள் உடைக்கப்பட்டு இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டது, அதற்கு தீர்வு கிடைத்ததா? தீர்க்க வேண்டிய, திருத்தப்பட வேண்டிய விஷயம் தமிழ்நாட்டில் நிறைய இருக்கு. கூட்டணி என்பது வியூகம்தான், அவரவர் கருத்தை கூறுவார்கள். இது அனைத்திற்கும் இப்போது பதில் சொல்வது பொருத்தமாகாது.
எத்தனை ஆண்டு காலமாக என் தாய் ஒரே கட்சிக்குதான் சாகும் வரை வாக்களிப்பேன் எனக் கூறிவந்தார். தற்போது முதல் முறையாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிப்பதாக கூறியிருக்கிறார். இது ஒரு சான்று, இதேபோல் ஓராயிரம் சான்று உள்ளது. தமிழக வெற்றி கழகத்தை எதிர்நோக்கி மக்கள் காத்திருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நடிகர் சௌந்தரராஜா பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
- இவருக்கு சிறந்த மனிதநேய விருது வழங்கப்பட்டுள்ளது.
நடிகர் சௌந்தரராஜா 2012-ஆம் ஆண்டு மாதவன், ஆர்யா நடிப்பில் வெளியான 'வேட்டை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன்பின்னர் சுந்தரபாண்டியன், தெறி, பிகில் போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

சௌந்தரராஜா
இதையடுத்து நடிகர் சௌந்தரராஜாவிற்கு இந்த ஆண்டிற்கான சிறந்த மனிதநேய விருது வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரசெடிகளை நட்டு, இயற்கை மற்றும் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை மக்களிடம் எடுத்துக்கூறி பொது வாழ்க்கையிலும் ஈடுப்படுத்தி கொண்டதைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதர் என்ற விருது மலேஷியா கோலாலம்பூரில் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மலேஷியா செலங்கூர் மன்னர் சலாகுத்தீன் அப்துல் அஜிஸ் ஷா, டத்தோ சசிகலா சுப்ரமணியம் (துணை போலீஸ் இயக்குனர் - மலேசியா ராயல் போலீஸ்) மற்றும் கலாம் பவுண்டேஷன் சலீம், ஸ்ரீமதி கேசவன், டேக்கேர் இன்டர்நேஷனல் நிறுவனர் முகமது இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.

சௌந்தரராஜா
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சௌந்தரராஜா, "நான் செய்வது சேவை அல்ல கடமை. மாதம் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் இந்த மண்ணுக்காகவும் இந்த மண்ணில் பிறந்த மக்களுக்காவும் உழைப்போம் என்று கேட்டுக்கொண்டு இந்த விருதை விவசாயிகளுக்கும் இயற்கையை நேசிக்கும் அனைவருக்கும் அர்ப்பணிப்பு செய்கிறேன்" என்று பேசினார்.
- இவர் இயக்கியுள்ள 'மையா' படம் இந்தியில் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
- 'சாயாவனம்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சௌந்தரராஜா கதையின் நாயகனாக நடிக்கிறார்.
மலையாள திரையுலகில் நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் அனில். முன்னணி மலையாள கதாநாயகர்களுடன் பணியாற்றியுள்ள இவரின் சமீபத்திய 'மையா' படம் இந்தியில் ரிலீசுக்கு தயாராக உள்ளது. தற்போது 'வாழ்கண்ணாடி', 'இவர்', 'சந்திரோற்சவம்', 'குருஷேத்ரா' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த தாமோர் சினிமா தயாரிக்கும் அடுத்த படத்தை அனில் இயக்குகிறார். இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அனில் அறிமுகமாகிறார். இதில் 'கடைக்குட்டி சிங்கம்', 'தர்மதுரை', 'சுந்தரபாண்டியன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்த சௌந்தரராஜா கதையின் நாயகனாக நடிக்கிறார்.

சாயாவனம்
'சாயாவனம்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி, கர்ணன் புகழ் ஜானகி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஒளிப்பதிவை எல்.ராமச்சந்திரன் கையாள்கிறார். மோகன வீணை நிபுணரான போலி வர்கீஸ் இசையமைத்துள்ளார்.

சாயாவனம்
மேலும், இப்படத்தின் பெரும்பகுதி சிரபுஞ்சியில் படமாக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க மூடுபனி, மழை மற்றும் காடுகளின் பின்னணியில் படமாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. விரைவில் இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது.