என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்வே"

    • புதுச்சேரியை மீண்டும் காங்கிரசின் கோட்டை என உறுதிப்படுத்த காங்கிரஸ் முயற்சிகள் எடுத்து வருகிறது.
    • கூட்டணியை பற்றி கவலைப்படாமல் காங்கிரஸ் அடுத்தகட்ட நகர்வுக்கு முன்னேறி செல்கிறது.

    புதுச்சேரி:

    அகில இந்திய அளவில் பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து போட்டியிட்டாலும், மாநில அளவிலான தேர்தல்களில் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

    டெல்லி மாநில தேர்தலில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரசும் எதிர் எதிரில் போட்டியிட்டது. அடுத்த ஆண்டில் பீகார், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, புதுச்சேரி என அடுத்தடுத்து மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

    தமிழகம், புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் இப்போதே அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள வியூகத்தை தொடங்கியுள்ளனர். காங்கிரஸ் கோட்டை என கருதப்பட்ட புதுச்சேரி கடந்த சட்டமன்ற தேர்தலில் கைநழுவி போனதோடு, 30 தொகுதிகளில் காங்கிரசுக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே கிடைத்து பலகீனமாகியுள்ளது.

    இதனால் புதுச்சேரியை மீண்டும் காங்கிரசின் கோட்டை என உறுதிப்படுத்த காங்கிரஸ் முயற்சிகள் எடுத்து வருகிறது. சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வேட்பாளரை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி கண்டது.

    ஆனாலும் இந்த வெற்றியை காங்கிரசாரால் முழுமையாக தனதாக்கிக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியில் இடம்பெற்ற தி.மு.க. சரிபாதி தொகுதிகளை பிரித்து தேர்தல் பணிகளை மேற்கொண்டது.

    அதோடு, தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின், புதுச்சேரிக்கு வந்து தேர்தல் பிரசாரம் செய்தார்.

    இதுதான் காங்கிரசின் வெற்றிக்கு காரணம் என தி.மு.க. உரக்க குரல் கொடுத்து வருகிறது. அதோடு, சுமார் கால் நுாற்றாண்டாக ஆட்சியில் இல்லாத தி.மு.க., வருகிற சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியை கைப்பற்றி ஆட்சியை பிடிக்க வேண்டும் என நினைக்கிறது.

    இதனால் அவ்வப்போது இந்தியா கூட்டணிக்கு தாங்கள்தான் தலைமை என்ற ரீதியில் தி.மு.க. பேசியும், செயல்பட்டும் வருகிறது. அதேநேரத்தில் தமிழகத்தில் இந்தியா கூட்டணிக்கு தி.மு.க. தலைமை தாங்குவதுபோல, புதுச்சேரிக்கு காங்கிரஸ்தான் தலைமை தாங்கும் என காங்கிரசார் அடித்து கூறி வருகின்றனர்.

    இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள பிரதான கட்சிகளான தி.மு.க.வும், காங்கிரசும் இப்படி மோதி கொள்ளும் சூழ்நிலையில், மற்ற கட்சிகளான இந்தியகம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு ஆகிய கட்சிகள் தனி ஆவர்த்தனம் செய்து வருகின்றன. ஆளும் என். ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. அரசை எதிர்த்து தனித்தனி போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே சமீபத்தில் புதுச்சேரிக்கு வந்த புதிய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர், கூட்டணியை பற்றி காங்கிரசார் கவலைப்பட வேண்டாம். அனைத்து தொகுதியிலும் காங்கிரஸ் போட்டியிடும் என்ற நிலையில் தேர்தல் பணிகளை தொடங்குங்கள், பூத்களை வலுப்படுத்துங்கள் என கூறினார்.

    இதேபோல மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோரும் கூட்டணி பற்றி தேர்தலின்போது முடிவு செய்யலாம், அனைத்து தொகுதியிலும் காங்கிரஸ் தேர்தல் பணிகளை மேற்கொள்ளுங்கள் என அறிவுறுத்தினர்.

    எந்த தொகுதியில் யாருக்கு செல்வாக்கு உள்ளதோ? அவர்களுக்குத்தான் போட்டியிட வாய்ப்பு தரப்படும். கூட்டணி கட்சிகளின் தொகுதியாக இருந்தாலும், அந்த தொகுதியை காங்கிரசுக்கு கேட்டு பெறுவோம் என தெரிவித்துள்ளனர். அதோடு காங்கிரஸ் சார்பில் தொகுதிவாரியாக செயல்வீரர்கள் கூட்டமும் நடத்தி, கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையும் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட அகில இந்திய தலைமை தனியார் நிறுவனம் மூலம் ரகசிய சர்வே நடத்தியுள்ளது. இதில், புதுவை, காரைக்காலில் 12 தொகுதிகள் காங்கிரசுக்கு சாதகமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இது புதுச்சேரி காங்கிரசாருக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதில் ஒரு சில தொகுதிகள் தி.மு.க. போட்டியிட்டு, வெற்றி பெற்ற தொகுதிகள். இருப்பினும் இந்த தொகுதிகளில் பணிகளை தீவிரப்படுத்த கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. மேலும் பெரும்பான்மை பெரும் வகையில் இன்னும் சில தொகுதிகளை சுட்டிக்காட்டி, அந்த தொகுதிகளிலும் கடுமையாக பணியாற்றும்படி கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.

    இதனால் கூட்டணியை பற்றி கவலைப்படாமல் காங்கிரஸ் அடுத்தகட்ட நகர்வுக்கு முன்னேறி செல்கிறது.

    • செடி, கொடி, மரங்களை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • மாஸ் கிளினீங் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் தலைமையில் தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர் பங்கேற்ற காலாண்டு நுகர்வோர் கூட்டம், கடந்த மார்ச் மாதம் கூட்டப்பட்டது. அதன் தீர்மான விபரம் தற்போது நுகர்வோர் அமைப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    அதில்,தெருக்களில் சரியான முறையில் வாட்டமாக மழைநீர் வடிகால் அமைத்து, பிரதான ஓடை, ஆறுகளின் வழியாக தண்ணீர் வழிந்தோடி செல்லும் வகையில் கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும் என நுகர்வோர் அமைப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். அதற்கு, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அளித்துள்ள விளக்கத்தில், 15வது நிதிக்குழு மானிய நிதியிலும், தூய்மை பாரத இயக்க திட்டத்தின் மூலமும் மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சிகளில் உள்ள தெருக்களில் நீர் தேங்காத வண்ணம் மழைநீர் வடிகால் அமைப்பு, வடிகால் அமைப்பு, தனிநபர் இல்லம் மற்றும் சமுதாய உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

    ஊராட்சிகளில் உள்ள குளங்கள் வற்றிய நிலையில் புதர், செடி, கொடி மண்டி, மரம் வளர்ந்து, குப்பைகள் கொட்டப்பட்டு அதில் வழிந்தோடி வரும் மழைநீர் தடைபடும் வகையில் உள்ளது என நுகர்வோர் அமைப்பினர் கூறியிருந்தனர்.இதற்கு ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அளித்துள்ள விளக்கத்தில், கிராம உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள குளம், ஊரணிகள் குடிமராமத்து திட்டத்தில் தூர்வாரப்பட்டுள்ளன. நீர் நிலைகளில் உள்ள புதர், செடி, கொடி, மரங்களை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மாதந்தோறும் 5 மற்றும் 20-ந் தேதிகளில் கிராம ஊராட்சிகளில் உள்ள குடிநீர் ஆதாரங்களை சுத்தம் செய்தல், குப்பை அகற்றுதல் போன்ற மாஸ் கிளினீங் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    அதிகாரிகளின் இந்த விளக்கம் குறித்து, தி கன்ஸ்யூமர் கேர் அசோசியேஷன் தலைவர் காதர்பாஷா கூறியதாவது:-

    நுகர்வோர் அமைப்பினரின் கேள்விகளுக்கு, சம்பந்தப்பட்ட துறையினர் விளக்கமளிப்பது பாரட்டுக்குரியது,வரவேற்கதக்கது. அதே நேரம், சரியான தகவலை அளிக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தின் பல இடங்களில் நீர்நிலைகள் சுத்தமாக இல்லை. உதாரணமாக நல்லாறு, கவுசிகா நதிக்கரையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன.பல ஊராட்சிகளை ஒட்டிய சாலையோர மழைநீர் கால்வாய் புதர்மண்டி, மழைநீர் வெளியேற வழியில்லாமல் உள்ளன. எனவே, ஊராட்சிகள் வாரியாக ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்தில் நீர்நிலைகளை சர்வே செய்து அவற்றை சுத்தப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    ×