என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆர்எஸ் பாரதி"
- கட்சி தொடங்குபவர்களெல்லாம் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது.
- தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்ததால்தான் எம்.ஜி.ஆர் நிலைக்க முடிந்தது.
நாகையில் கலைஞரின் 101-வது பிறந்த நாளை முன்னிட்டு மாற்றுக் கட்சியினர் தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. விழாவுக்கு தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவரும், மாவட்ட செயலாளருமான கவுதமன் தலைமை தாங்கினார். தி.மு.க. நகர செயலாளர் மாரிமுத்து வரவேற்றார். தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அமைச்சர் ரகுபதி ஆகியோர் முன்னிலையில் மாற்று கட்சியிலிருந்து விலகி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அப்போது ஆர்.எஸ். பாரதி பேசியதாவது:-
நாகையில் நடக்கும் இந்த கட்சியில் இணையும் நிகழ்ச்சியை பார்க்குபோது, மீனவர்கள் தி.மு.க.வின் மீது நம்பிக்கையோடு உள்ளனர் என்பது தெரிகிறது. முதல்- அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
யார் கட்சி ஆரம்பித்தாலும் நமக்கு கவலை இல்லை. ஒரு அமாவாசை தாங்கும். அல்லது இரு அமாவாசை தாங்கும். அதற்கு மேல் தாங்காது. ஏற்கனவே இருக்கும் கட்சியைப் பார்த்து புது கட்சி தொடங்குவது புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல உள்ளது.
யார் யாரெல்லாம் கட்சி தொடங்கினார்கள். கட்சி தொடங்குபவர்களெல்லாம் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது. தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்ததால்தான் எம்.ஜி.ஆர் நிலைக்க முடிந்தது. இளைஞர்கள் இன்றைக்கு புதிய கட்சிக்கு செல்வதற்கு காரணம் பதவி கிடைக்கும் என்ற நோக்கமே. கொள்கை, லட்சியம் என்பதை நிலையாக கொண்ட கட்சி தி.மு.க. இக்கட்சிக்கு வரும்போது எந்த அரவணைப்பு வழங்கப்படுகிறதோ? அதே அரவணைப்புடன் கடைசி வரை இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- இந்தியாவில் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஏற்படாத ஒரு சோதனை எங்களுக்கு ஏற்பட்டது.
- மக்கள் எப்போதும் தெளிவாக வாக்களிக்கக்கூடியவர்கள் என்பதை நிரூபித்து இருக்கிறார்கள்.
சென்னை:
தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தல் முடிந்து நாங்கள் 40-க்கு 40 இடங்களில் வெற்றி பெற்ற சில நாட்களிலேயே விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்தே தி.மு.க. அரசுக்கு, இந்தியாவிலேயே இதுவரை எந்த ஆட்சிக்கும் இடைத்தேர்தல் நேரத்தில் வராத சவால்கள் வந்தது.
விக்கிரவாண்டி தொகுதிக்கு மிக அருகாமையில் இருக்கிற கள்ளக்குறிச்சியில் ஒரு சோக சம்பவம் நிகழ்ந்தது. அதை பா.ஜ.க.வினர் பூதாகரமாக்கி பிரளயமே ஏற்பட்டு விட்டதை போல, அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் நடைபெற்றதை மறைத்து விட்டு இங்கு மிகப்பெரிய நாடகத்தை நடத்தி தி.மு.க.வின் வெற்றியை குலைத்துவிட வேண்டும் என்ற திட்டத்தோடு செயல்பட்டார்கள்.
தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு கொலை நடந்தது. அதற்கு அரசியல் சாயம் பூசி அதையும் இந்த தேர்தலில் மிகப்பெரிய பிரச்சனையாக்க முயற்சித்தார்கள்.
இந்த 2 மிகப்பெரிய சவால்களுக்கு மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 ஆண்டு காலம் நேர்மையாக ஆட்சி நடத்தியதை மக்கள் ஏற்றுக்கொண்டு மக்களாகிய நாங்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம் என்று நிரூபித்துக் காட்டியுள்ளனர். இந்த நேரத்தில் இவ்வளவு பெரிய மகத்தான வெற்றியை தேடிக்கொடுத்த விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கு தி.மு.க. வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டு உள்ளது.
இந்தியாவில் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஏற்படாத ஒரு சோதனை எங்களுக்கு ஏற்பட்டது. இந்த சவால்களுக்கு மத்தியில் தி.மு.க. தொண்டர்கள் கொஞ்சமும் சலிப்பில்லாமல் உறுதியோடு பணியாற்றியுள்ளனர். ஜாதியை தூண்டி விட்டு பேசியவர்கள் மத்தியில் கரியை பூசி இருக்கிறார்கள். மக்கள் எப்போதும் தெளிவாக வாக்களிக்கக்கூடியவர்கள் என்பதை நிரூபித்து இருக்கிறார்கள்.
இந்த தேர்தலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரவு பகலாக உழைத்து வாக்கு சேகரித்தார். அவர் அரசியலில் கால் வைத்த பிறகு அரசியலில் எங்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்து வருகிறது. இதன் மூலம் இன்னொரு வெற்றியும் தி.மு.க.வுக்கு கிடைத்திருகிறது. இந்த ஒரு மாதமாக பல தரப்பினரும் சேர்ந்து மனகுடைச்சல் கொடுத்தார்கள். அவை அத்தனையையும் தாங்கிக்கொண்டு உழைத்த தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசியலுக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் இதுவரை யார் மீதும் வழக்கு எதையும் நான் போடவில்லை.
- ஆர்.எஸ்.பாரதி மீது கோர்ட்டில் இன்று மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை:
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையை தொடர்பு படுத்தி தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியிருந்தார்.
இதையடுத்து ஆர்.எஸ்.பாரதி மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதன்படி சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு இன்று நேரில் சென்ற அண்ணாமலை, ஆர்.எஸ்.பாரதி மீது அவதூறு வழக்கை தொடர்ந்தார்.
பின்னர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஜூன் மாதம் 23-ந்தேதி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் 65 பேர் உயிரிழந்தது தொடர்பாக பேட்டி அளித்திருந்தார். அப்போது அவர் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்துக்கு அண்ணாமலைதான் காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தார்.
அண்ணாமலை கூட்டு சதி செய்து எங்கோ ஒரு இடத்தில் இருந்து கள்ளச்சாராயத்தை கொண்டு வந்து கொடுத்ததாலேயே மக்கள் இறந்துள்ளனர் என்று சொல்லி இருந்தார்.
ஆர்.எஸ்.பாரதியின் இந்த கருத்து எனக்கு பெரிய துக்கத்தை உண்டாக்கி இருக்கிறது. தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நான் போராடிக் கொண்டிருக்கிறேன்.
அரசியலுக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் இதுவரை யார் மீதும் வழக்கு எதையும் நான் போடவில்லை. என் மீது எத்தனையோ பொய் குற்றச்சாட்டுகள், அவதூறுகள் கூறப்பட்டுள்ளன.
ஆனால் நான் யார் மீதும் அவதூறு வழக்கு தொடுக்கவில்லை. ஆனால் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு எல்லை தாண்டி சென்று விட்டது. 80 வயதை தாண்டிய அரசியல்வாதியான ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க.வின் காலம் முழுமையாக முடிந்து விட்டது என்பதை தெரிந்த பிறகு அவரது வாயில் இருந்து அவதூறு மற்றும் பொய் பேச்சுகள் அதிகமாக வரத் தொடங்கியுள்ளன.
அதனுடைய வெளிப்பாடாகத்தான் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுக்கு நான்தான் காரணம் என்று குற்றம் சுமத்தி உள்ளார்.
இதனால் ஆர்.எஸ்.பாரதி மீது கோர்ட்டில் இன்று மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளது. ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டுள்ளோம். இந்த பணத்தை அவரிடமிருந்து பெற்று கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்காக அங்கேயே ஒரு முகாம் அமைக்க உள்ளோம். அதுவே எங்கள் நோக்கம்.
எனவே இந்த வழக்கை கம்பீரமாக எடுத்து நடத்த முடிவு செய்துள்ளோம். ஆர்.எஸ்.பாரதி மீது சட்டரீதியாக கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி உள்ளோம்.
இது தொடர்பாக ஆர்.எஸ்.பாரதிக்கு சம்மன் அனுப்பப்படும். இந்த வழக்கை கடைசி வரை எடுத்துக் கொண்டு செல்வோம். இத்தனை ஆண்டுகளாக தி.மு.க.வை யாரும் எதிர்காமலேயே இருந்தனர். இந்த வழக்கில் ஆர்.எஸ்.பாரதியை சிறைக்கு அனுப்பப் போகிறோம்.
அவரிடமிருந்து பெறப் போகும் ரூ.1 கோடி பணத்தை கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலவிடப் போவதாகவும் அபிடவிட் மனுவில் தெரிவித்து உள்ளோம்.
2 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்.எஸ்.பாரதி என்னைப் பார்த்து சின்னப் பையன் என கூறியிருந்தார். யார்-யாரையெல்லாமோ நான் சிறைக்கு அனுப்பி இருந்தேன். எனது கையில் ஜாதக ரேகை நன்றாக உள்ளது என்றும் அவர் கூறியிருந்தார். இந்த சின்ன பையன் இந்த வழக்கை வைத்து ஆர்.எஸ்.பாரதியையும், தி.மு.க.வையும் என்ன செய்யப் போகிறேன் என்பதையும் பார்க்கத்தான் போகிறீர்கள்.
இந்த சின்ன பையன் ஆர்.எஸ்.பாரதியின் ராசியான கைரேகையை என்ன செய்யப்போகிறார்? என்பதையும் நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.
ஆர்.எஸ்.பாரதியையும், தி.மு.க.வையும் நாங்கள் விடப் போவது இல்லை. எல்லோரும் ஒதுங்கிப் போவதால்தான் பி.ஏ. படித்தவர்களை அவர் நாய் என்று கூறியுள்ளார். ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு ஆணவத்தை தாண்டி அட்டூழியத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் சி.பி.ஐ. விசாரித்தால்தான் உண்மை வெளிவரும். டாஸ்மாக் மது விற்பனை பற்றியும் விசாரணை நடத்த வேண்டும். யாரெல்லாம் சாராய ஆலை வைத்துள்ளனர். முறையாக தயாரிக்கப்படுகிறதா? என்பது பற்றியெல்லாம் விசாரணை நடத்த வேண்டும்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று தி.மு.க. கூட்டணி கட்சியினரே கேட்கிறார்கள். அது போன்ற ஒரு விசாரணை நடைபெற்றால்தான் உண்மை வெளிவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு எல்லையை மீறி சென்றுவிட்டது.
- ஆர்.எஸ்.பாரதியிடம் இருந்து ரூ.1 கோடி பெற்று கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்குவேன்.
சென்னை:
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தன்னை பற்றி அவதூறு பேசியதாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:-
* நான் அரசியலுக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் யார் மீதும் மான நஷ்ட வழக்கு தொடர்ந்ததில்லை.
* ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு எல்லையை மீறி சென்றுவிட்டது.
* ஆர்.எஸ்.பாரதி மீது சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என நீதிபதியிடம் வலியுறுத்தியுள்ளேன்.
* ஆர்.எஸ்.பாரதியிடம் இருந்து ரூ.1 கோடி பெற்று கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்குவேன்.
* இந்த சின்ன பையன் என்ன செய்வான் என்பதை இனி பார்க்க போகிறீர்கள்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
- திமுக மாணவரணி சார்பில் இன்று நீட் எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
- அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மாணவரணி சார்பில் இன்று நடைறெ்ற நீட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துக் கொண்ட திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசிய கருத்து சர்ச்சைக்குள்ளானது.
அப்போது பேசிய ஆர்.எஸ்.பாரதி, " நான் ஒரு வக்கீல். எழிலரசன் பி.இ., பி.எல்., இவையெல்லாம் எங்களுக்கு குலப் பெருமையால், கோத்திரப் பெருமையால் வந்தததா? இந்த இயக்கம் போட்ட பிச்சை என்பதை நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். இப்போது நாய்கூட பி.ஏ. பட்டம் வாங்கும் நிலை வந்துவிட்டது நம்ம ஊரில்" என குறிப்பிட்டிருந்தார்.
ஆர்.எஸ்.பாரதி பேசிய இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இதுதொடர்பாக ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
எப்போதெல்லாம், திமுக ஆட்சிக்கு, பொதுமக்களிடையே பலத்த எதிர்ப்பு வருகிறதோ, அப்போதெல்லாம், அறிவாலய வாசலிலேயே இருக்கும் திரு. ஆர்.எஸ்.பாரதியை ஏவி விடுவார்கள் போல.
கள்ளக்குறிச்சியில், திமுக ஆதரவோடு நடந்த கள்ளச்சாராய விற்பனையில் 65 உயிர்கள் பலியானதை மடைமாற்ற, திரு. ஆர்.எஸ்.பாரதியைக் களமிறக்கியிருக்கிறார்கள்.
முன்பு ஒருமுறை, தமிழகத்தில் பட்டியல் சமுதாய மக்களுக்கு நீதிமன்றப் பதவிகள் கிடைத்தது திமுக போட்ட பிச்சை என்று பேசினார்.
இன்று, தமிழகத்தில் மருத்துவர்கள் உருவானது திமுக போட்ட பிச்சை என்று பேசியுள்ளார். அதோடு, தமிழகத்தில் இன்று நாய் கூட B.A. பட்டம் வாங்குகிறது என்று, ஒட்டு மொத்த மாணவ சமுதாயத்தையே அவமானப்படுத்திப் பேசியிருக்கிறார் திரு. ஆர்.எஸ்.பாரதி.
தமிழகத்தில், 1967 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக, இதுவரை வெறும் 5 அரசு மருத்துவக் கல்லூரிகளை மட்டுமே அமைத்துள்ளது என்பதை மறந்த திரு.ஆர்.எஸ்.பாரதி, தமிழகத்தில் மருத்துவர்களை உருவாக்கியதே திமுகதான் என்று போலிப் பெருமை பேசிக் கொள்கிறார்.
திமுக முதல் குடும்பத்தினர் மீதுள்ள வழக்குகளுக்கு வாதாட வேண்டுமானால், டெல்லி, மும்பையிலிருந்து பல மூத்த வழக்கறிஞர்களையும், தமிழக அரசு சார்பான வழக்குகளுக்கு, தமிழகத்தின் மூத்த வழக்கறிஞர்களையும் தேர்ந்தெடுக்கும் கோபாலபுர குடும்பம், திரு.ஆர்.எஸ்.பாரதியை வாதாட அனுப்புவது, கதைக்கு உதவாத வழக்குகளுக்காகத்தான்.
தங்கள் பெற்றோரின் கடின உழைப்பாலும், தங்கள் கடும் முயற்சியாலும் படித்து முன்னேறும் மாணவச் செல்வங்களை அவமானப்படுத்தி, அவர்கள் வளர்ச்சிக்கு திமுகதான் காரணம் என்று கூறிக் கொள்ளும் திரு.ஆர்.எஸ்.பாரதி போன்றவர்களைத்தான், திமுக உண்மையில் உருவாக்கியிருக்கிறது.
தமிழக மக்கள் அனைவரையும், பிச்சைக்காரர்கள் என்ற ரீதியில் தொடர்ச்சியாக கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கும் திமுகவின் ஆணவப் போக்கும், திரு.ஆர்.எஸ்.பாரதியின் வாய்த்துடுக்கும் கடும் கண்டனத்துக்குரியது. தமிழக மக்கள் அனைவரும் திமுகவினரை போன்றவர்கள் அல்ல. தமிழக மக்கள் தன்மானம் மிக்கவர்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசிய கருத்து சர்ச்சைக்குள்ளானது.
- நாய்கூட பி.ஏ. பட்டம் வாங்கும் நிலை வந்துவிட்டது நம்ம ஊரில்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மாணவரணி சார்பில் நீட் எதிர்ப்பு போராட்டம் இன்று நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், நீட் தேர்வுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நீட் தேர்வை நடத்துவதில் தீவிரம் காட்டும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்தின்போது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசிய கருத்து சர்ச்சைக்குள்ளானது.
அப்போது அவர் பேசியதாவது:-
நான் ஒரு வக்கீல். எழிலரசன் பி.இ., பி.எல்., இவையெல்லாம் எங்களுக்கு குலப் பெருமையால், கோத்திரப் பெருமையால் வந்தததா? இந்த இயக்கம் போட்ட பிச்சை என்பதை நான் வெளிப்படையாகவே சொல்கிறேன்.
திராவிட இயக்கம் இல்லையென்றால், கம்யூனல் அரசாணை இல்லை என்று சொன்னால், இத்தனை பேர் டாக்டர் பட்டம் பெற்றிருக்க முடியாது.
நான் பட்டம் பெறும் காலத்தில் ஒருவர் பி.ஏ. பட்டம் பெற்றால், உடனடியாக ஒரு பெயின்ட்ரை அழைத்து பி.ஏ. என்று போர்டு எழுதி மாட்டுவார்கள். காரணம் என்னவென்றால், அந்த ஊரிலேயே ஒரே ஒரு பி.ஏ. தான் இருக்கும்.
ஆனால், இப்போது நாய்கூட பி.ஏ. பட்டம் வாங்கும் நிலை வந்துவிட்டது நம்ம ஊரில். ஆனால், யாராவது போர்டு மாட்டுகிறார்களா?
எனவே, இந்த வளர்ச்சிக்கு யார் காரணம் என்பதை மக்களை எண்ணிப் பார்க்க வேண்டும். அதை அழிப்பதற்காகத்தான் இந்த நீட் தேர்வு வந்திருக்கிறது" என்று பேசினார்.
ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கடும் கண்டனங்கள் எழுந்தன.
இதைதொடர்ந்து, ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில், "இந்தப் பேச்சு சர்ச்சையான நிலையில், "ஒரு காலத்தில், ஒரு சில பிரிவினருக்கு மட்டுமே கிடைத்த கல்வி, அனைவருக்கும் கிடைக்க காரணம் திராவிட இயக்கம்தான் என்பதே தனது பேச்சின் நோக்கம். மேலும், நாய்கூட பி.ஏ. பட்டம் பெறுகிறது என்பது உள்நோக்கத்துடன் சொல்லப்பட்ட கருத்து அல்ல" என்று குறிப்பிட்டுள்ளார்.
- நீட் தேர்வுக்கு எதிராக ஆளும் கட்சி தீவிரமாக இருக்கிறோம்.
- விஜய் கூறி இருப்பது வரவேற்கத்தக்கது.
சென்னை:
நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்தை விஜய் ஆதரித்து பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. மேலும், அரசியலில் முதன் முதலாக கல்வி விவகாரம் குறித்து விஜய் கருத்து தெரிவித்து இருப்பது பேசு பொருளாகி இருக்கிறது.
இதனிடையே திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நீட் தேர்வுக்கு எதிராக ஆளும் கட்சி தீவிரமாக இருக்கிறோம்.
நீட் தேர்வு மட்டுமல்லாது கல்வியையும் மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று விஜய் வலியுறுத்தி இருக்கிறாரே என்று கேட்டதற்கு...
வரவேற்கத்தக்கது. கொஞ்ச கொஞ்சமாக he is on the line என்று கூறினார்.
?LIVE : திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர் சந்திப்பு https://t.co/mh8nsj62dV
— Thanthi TV (@ThanthiTV) July 3, 2024
- கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை திசை திருப்பும் வகையில், ஆர்.எஸ்.பாரதி அவதூறு கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
- இழப்பீட்டு தொகையை பயன்படுத்தி, கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் மது மறுவாழ்வு மையம் அமைக்கப்படும்.
சென்னை:
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்துக்கு பின்னால் அண்ணாமலையின் சதி இருக்கலாம் என்று தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். தன்னை தொடர்புபடுத்தி அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறி, ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு, தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனது வக்கீல், பா.ஜனதா மாநில துணைத்தலைவர் பால்கனகராஜ் வாயிலாக நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அதில், 'கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை திசை திருப்பும் வகையில், ஆர்.எஸ்.பாரதி அவதூறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். ஆதாரமின்றி தொடர்ந்து குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார். நோட்டீஸ் பெறப்பட்ட 3 நாட்களுக்குள் இதற்கு, அவர் மன்னிப்பு கோரவில்லை என்றால், ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். இந்த இழப்பீட்டு தொகையை பயன்படுத்தி, கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் மது மறுவாழ்வு மையம் அமைக்கப்படும்' என கூறப்பட்டுள்ளது.
- சிபிஐ விசாரணை தேவையில்லை. திமுக ஒருபோதும் கேட்டதும் இல்லை.
- இபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு விவகாரத்திலும், நாங்கள் சிபிஐ விசாரணை கோரவில்லை.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது;-
உண்மைக்கு புறம்பான தகவல்களை இபிஎஸ் பரப்பி வருகிறார். உண்மையை விளக்க வேண்டியது திமுகவின் கடமை. இபிஎஸ் தான் உத்தம புத்திரர் போல பேசுகிறார்.
இபிஎஸ் ஆட்சியில் இருந்த காலத்தில் அவரது உறவினர்களுக்கு முறைகேடாக நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டது.
அது மீது எந்த ஒரு விசாரணையும் நடைபெறாத நிலையில் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
சிபிஐ விசாரணை தேவையில்லை. திமுக ஒருபோதும் கேட்டதும் இல்லை.
சிபிஐ விசாரணை இருந்தால் வழக்கு தாமதமாகும் என்பதால்தான் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை செய்யப்பட்டு வருகிறதுற.
இபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு விவகாரத்திலும், நாங்கள் சிபிஐ விசாரணை கோரவில்லை.
சிபிஐ என்றால் என்னவென்று எங்களுக்கும் தெரியும். டெண்டர் முறைகேடு விவகாரத்தில் நிரபராதி என விடுவித்தது போல இபிஎஸ் பேசி வருகிறார்.
இபிஎஸ்க்கு வரலாறு தெரிந்திருக்க நியாயமில்லை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- டெபாசிட் பறிபோய்விடும் என்ற அச்சத்திலேயே விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது.
- தி.மு.க. ஆட்சியில் பயன்பெற்ற மக்கள் அனைவரும் அன்புமணி சொன்னால் கூட தி.மு.க.வுக்குத்தான் வாக்களிப்பர்.
சென்னை:
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதற்கு தி.மு.க.வை குறை கூறியதற்கு ஆர்.எஸ். பாரதி கண்டனம் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் பூத் கேப்சரிங்கை தொடங்கியதே அ.தி.மு.க.தான். வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் கலாச்சாரம் தொடங்கியது ஜெயலலிதா ஆட்சியில் தான். பா.ஜ.க.வுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க. சொல்லும் சாக்குதான் புறக்கணிப்பு. டெபாசிட் பறிபோய்விடும் என்ற அச்சத்திலேயே விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது.
இடைத்தேர்தலில் ஓட்டுப்போட வேண்டாம் என அதிமுகவினரிடம் சொல்ல எடப்பாடிக்கு தைரியம் உள்ளதா? விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. நிர்வாகிகள் வாக்களித்தால் எடப்பாடி பழனிசாமியை புறக்கணித்தார்கள் என்று அர்த்தம்.
வன்னியர் சமூகத்தினருக்கு பல நன்மைகளை செய்துள்ளதால் எதையும் சந்திக்கும் ஆற்றல் தி.மு.க.வுக்கு உள்ளது. தி.மு.க. ஆட்சியில் பயன்பெற்ற மக்கள் அனைவரும் அன்புமணி சொன்னால் கூட தி.மு.க.வுக்குத்தான் வாக்களிப்பர் என்றார்.
- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக வரும் ஒவ்வொருவரும் இது போன்று பேசுவது வாடிக்கைதான்.
- மு.க.ஸ்டாலின் நல்லாட்சி தந்து கொண்டிருக்கிறார். அவரை முழு மனதோடு பாராட்டுகிறேன்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்ன நிலையில் உள்ளது என்பது குறித்து பேசி வருகிறார்.
அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் 57 ஆண்டுகளாக நாம் ஏமாந்தது போதும். தேர்தல்களில் தொகுதிகளை கேட்கும் நிலையில் இருந்து, தொகுதிகளை பிரித்துக் கொடுக்கும் நிலைக்கு காங்கிரஸ் கட்சி வளர வேண்டும்" என்று பேசி இருந்தார். இன்னும் 2 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டசபைக்கு தேர்தல் வரும். அதுவரை நாம் அமைதியாக இருக்க வேண்டும். எவ்வளவு காலம் இன்னொரு கட்சியிடம் எங்களுக்கு தொகுதிகள் கொடுங்கள் என்று கையேந்தி நிற்பது?
ஒரு காலத்தில் நாம் அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகளை பங்கிட்டு கொடுத்து வந்தோம். அந்த நிலையை ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் மீண்டும் காமராஜர் ஆட்சி அமைய குறிக்கோளுடன் செயல்பட வேண்டும் என்று பேசி இருந்தார். ஆனாலும் தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியே செல்ல வாய்ப்பு இல்லை என்றும் கூறினார்.
செல்வப்பெருந்தகையின் இந்த பேச்சு பற்றி தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கருத்து கேட்ட போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் காமராஜர் விரும்பிய ஆட்சிதான் இப்போது நடக்கிறது. காமராஜர் எண்ணங்களை இந்த ஆட்சி நிறைவேற்றி வருகிறது.
தி.மு.க. ஆட்சியில்தான் அவரது பெயரால் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆகவே காமராஜர் விரும்பிய ஆட்சிதான் இப்போது நடைபெறுகிறது. அவர் என்னென்ன செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ அதை செய்து முடிக்கிற ஆட்சிதான் இப்போது நடக்கிறது.
அவர் கல்விக்கு வித்திட்டார். அந்த கல்வியை ஆலமரமாக்குவதற்கு நம்முடைய முதலமைச்சர் எல்லா நடவடிக்கையையும் எடுத்துள்ளார். அரசு பள்ளியில் படித்த மாணவ செல்வங்கள் 100-க்கு 100 வாங்கும் நிலை இன்றைக்கு தி.மு.க. ஆட்சியில் உருவாகி இருக்கிறது.
எவ்வளவு காலம்தான் இன்னொரு கட்சியிடம் தொகுதி கேட்டு கையேந்துவது. அந்த நிலை மாற வேண்டும் என்று செல்வப்பெருந்தகை பேசி இருக்கிறார். அது அவரது ஆசை. அது நிறைவேறுமா? என்பது மக்கள் கையில்தான் இருக்கிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக வரும் ஒவ்வொருவரும் இது போன்று பேசுவது வாடிக்கைதான். ஆகவே செல்வப்பெருந்தகை அதே ஆசையில் கூறி இருக்கிறார். அவரது ஆசையை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்பது மக்கள் விருப்பம்தான். எனவே காங்கிரஸ் செல்வாக்கை மக்கள்தான் முடிவு செய்கிறார்கள்.
இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
இதற்கிடையே ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில் ஈ.வி.கே. எஸ். இளங்கோவன் இன்று பேசும்போது கூறியதாவது:-
என்னை பொறுத்தவரையில் தொண்டர்களுக்கு மனவருத்தம் இருந்தாலும் கூட, மு.க.ஸ்டாலின் ஆட்சியை காமராஜர் ஆட்சி என சொல்வதில் சிறிதும் தயக்கம் கிடையாது.
தேர்தலுக்கு முன் காமராஜர் ஆட்சி பற்றி நாம் பேசியிருக்க முடியாது. பேசவும் கூடாது. நல்ல வேளை தேர்தல் முடிந்த பின் பேசினோம். யார் நல்லாட்சி தந்தாலும் அது காமராஜர் ஆட்சிதான்.
மு.க.ஸ்டாலின் நல்லாட்சி தந்து கொண்டிருக்கிறார். அவரை முழு மனதோடு பாராட்டுகிறேன். ஆட்சிக்கு எப்படி வேண்டுமானாலும் பெயர் வைக்கலாம்.
காமராஜர் ஆட்சி என பெயர் வைக்கலாம். திராவிட மாடல் ஆட்சி என்றும் பெயர் வைக்கலாம். கக்கனின் நேர்மையையும் சொல்லலாம். நல்லாட்சி நடத்துகிறவர்களுக்கு நாம் துணை நிற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. சார்பில் வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கடைசியாக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் கூட சொன்னேன்.
- வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் சரிபார்த்திருக்க வேண்டும்.
சென்னை:
தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன் என்பது பற்றி தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
வாக்குப்பதிவு சமயத்தில் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைத்ததால் சென்னையை பொறுத்தவரை பல பேர் வெளியூர் சென்றுவிட்டனர். அதனால் தான் வாக்குப்பதிவு குறைந்ததாக கருதுகிறோம்.
கேள்வி:- தமிழ்நாடு முழுவதும் பல தொகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளதே? வெயில் அதிகமாக இருந்ததால் பல பேர் ஓட்டு போட வரவில்லை என்று கூறுகிறார்களே?
ப:- வெயில் மட்டும் காரணம் கிடையாது. பொதுவாகவே ஒரு மாநில அரசு மீது வெறுப்பு இருந்தால் தான் வாக்குப்பதிவு அதிகமாகும். ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க. அரசு மீது மக்களுக்கு வெறுப்பு கிடையாது. இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
கே:- வாக்காளர் பட்டியலில் நிறையபேர் பெயர்கள் விடுபட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகிறார்களே?
ப:- ஆமாம். வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டுள்ளதை தேர்தல் கமிஷன் பார்த்திருக்க வேண்டும். தி.மு.க. சார்பில் நாங்கள் பலமுறை தேர்தல் கமிஷனில் வலியுறுத்தி இருக்கிறோம்.
தி.மு.க. சார்பில் வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கடைசியாக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் கூட சொன்னேன்.
ஆனால் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. இதுபற்றி அப்போதே நான் பேட்டியும் கொடுத்திருந்தேன்.
வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் சரிபார்த்திருக்க வேண்டும். ஆனால் அதை தவற விட்டார்கள். இது தேர்தல் கமிஷனின் அஜாக்கிரதை என்றுதான் சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்