என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய் மக்கள் இயக்கம்"

    • நடிகர் விஜய் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
    • இவர் தன் தொண்டர்கள் மூலம் சமூக சேவை பல செய்து வருகிறார்.

    நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் இயக்கமாக மாறும் என்ற எதிர்பார்ப்பு சில ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. இவர் தன் தொண்டர்கள் மூலம் சமூக சேவை பல செய்து வருகிறார்.

    இதையடுத்து பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டி, கல்வி உதவித்தொகை வழங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் மாவட்டம் தோறும் மாணவர்களின் விவரங்களை அனுப்ப விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.


    விஜய்

    மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளில் உள்ள 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற தலா மூன்று மாணவர்கள் வீதம் ஆயிரக்கணக்கான மாணவ - மாணவியருக்கு பரிசு, கல்வி உதவித் தொகை வழங்க, விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான நிகழ்ச்சி சென்னையில் நடைபெறும் என்று கூறப்பட்டது.

    இந்நிலையில், நடிகர் விஜய் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற சுமார் 1500 மாணவர்களை ஜூன் இரண்டாவது வாரத்தில் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பெற்றோரை இழந்த சூழ்நிலையிலும் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களை சந்திக்கவுள்ளதாகவும் அவர்களின் அடுத்தகட்ட படிப்பிற்கு தேவையான ஊக்கத்தொகையை வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • உலகம் முழுவதும் மே 28-ஆம் தேதி 'உலக பட்டினி தினம்’ அனுசரிக்கப்படுகிறது.
    • பட்டினியில் வாடும் மக்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த தினமானது ஆண்டு தோறும் அனுசரிக்கப்படுகிறது.

    உலகம் முழுவதும் மே 28-ஆம் தேதி 'உலக பட்டினி தினம்' அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் இருக்கக்கூடிய நீண்ட நாள் பட்டினியில் வாடும் மக்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்த தினமானது ஆண்டு தோறும் அனுசரிக்கப்படுகிறது.


    விஜய்

    நடிகர் விஜய்யின் உத்தரவுபடி இந்த ஆண்டு உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பசி என்னும் பிணி போக்கிடும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம் என்ற திட்டம் மூலம் வருகிற ஞாயிற்றுக்கிழமை (மே 28) மதியம் 11 மணி அளவில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் உள்ள நகரம், ஒன்றியம், பகுதியில் உள்ள அனைத்து ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு நாள் மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


    விஜய் மக்கள் இயக்கம் அறிக்கை

    இந்த திட்டமானது தமிழகம் , புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் மகராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பட்டினியால் வாடும் மக்களுக்கு இயன்ற வரை உணவளித்து பசியினை போக்கும் விழிப்புணர்வை சமுதாயத்தில் ஏற்படுத்தும் விதமாக விஜய் மக்கள் இயக்கம் செயல்படுத்துகிறது என்று விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பாக விலையில்லா உணவகம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    • உலகம் முழுவதும் இன்று (மே 28-ஆம் தேதி ) 'உலக பட்டினி தினம்’ அனுசரிக்கப்படுகிறது.
    • ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு நாள் மதிய உணவு வழங்க விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

    உலகம் முழுவதும் மே 28-ஆம் தேதி 'உலக பட்டினி தினம்' அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் இருக்கக்கூடிய நீண்ட நாள் பட்டினியில் வாடும் மக்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்த தினமானது ஆண்டு தோறும் அனுசரிக்கப்படுகிறது.


    விஜய் மக்கள் இயக்கம்

    விஜய் மக்கள் இயக்கம்

    நடிகர் விஜய்யின் உத்தரவுபடி உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பசி என்னும் பிணி போக்கிடும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம் என்ற திட்டம் மூலம் இன்று (மே 28) தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் உள்ள நகரம், ஒன்றியம், பகுதியில் உள்ள அனைத்து ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு நாள் மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    இந்நிலையில் அறிவித்தபடி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அனைத்து மக்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. பல்வேறு இடங்களில் வழங்கப்பட்ட இந்த மதிய உணவை மக்கள் பலரும் வாங்கி பயன் பெற்றனர்.

    • விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார்.
    • தற்போது 10, 12ஆம் வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களை வரும் 17ஆம் தேதி விஜய் சந்திக்கிறார்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். அவர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தொடர்சியாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ஏழை எளியோருக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு விஜய்யின் அரசியல் நகர்வாக பார்க்கப்பட்டது.


    விஜய் மக்கள் இயக்கம்

    விஜய் மக்கள் இயக்கம்

    தற்போது விஜய், 10, 12ஆம் வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களை வரும் 17ஆம் தேதி சந்திக்கிறார். அப்பொழுது 10,12ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை நடிகர் விஜய் வழங்க உள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு அறுசுவை விருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.2 கோடி செலவில் நலத்திட்ட உதவிகளையும் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


    விஜய்

    விஜய்

    இந்நிலையில் இந்த நிகழ்ச்சி தொடர்பாக விஜய் மக்கள இயக்க நிர்வாகிகளை இன்று சென்னை நீலாங்கரையில் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    விஜய் 10, 12ஆம் வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களை சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் அரங்கில் வரும் 17ஆம் தேதி சந்திக்கிறார். தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு அறுசுவை விருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.2 கோடி செலவில் நலத்திட்ட உதவிகளையும் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி தொடர்பாக விஜய் மக்கள இயக்க நிர்வாகிகளை இன்று சென்னை நீலாங்கரையில் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • விஜய், 10, 12ஆம் வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களை வரும் 17ஆம் தேதி சந்திக்கிறார்.
    • இந்த விழாவில் 6 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தொடர்சியாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ஏழை எளியோருக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு விஜய்யின் அரசியல் நகர்வாக பார்க்கப்பட்டது.


    விஜய்

    விஜய்

    தற்போது விஜய், 10, 12ஆம் வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களை வரும் 17ஆம் தேதி சந்திக்கிறார். அப்பொழுது 10,12ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை நடிகர் விஜய் வழங்க உள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு அறுசுவை விருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.2 கோடி செலவில் நலத்திட்ட உதவிகளையும் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


    விஜய்

    விஜய்

    இந்நிலையில் விருது பெறும் மாணவ, மாணவிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளது. மேலும் பெற்றோர்களுக்கும் அடையாள அட்டைகள் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அடையாள அட்டை மாவட்ட தலைவர்கள் மூலம் வழங்கப்படவுள்ளது. விஜய் கல்வி விருது வழங்கும் விழாவில் 6 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    • நடிகர் விஜய் 10,12-ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை வழங்க உள்ளார்.
    • மேலும் ரூ.2 கோடி செலவில் நலத்திட்ட உதவிகளையும் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தொடர்சியாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ஏழை எளியோருக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு விஜய்யின் அரசியல் நகர்வாக பார்க்கப்பட்டது.


    தற்போது 10, 12-ஆம் வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களை வரும் 17-ஆம் தேதி விஜய் சந்திக்கிறார். அப்பொழுது 10,12-ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை வழங்க உள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு அறுசுவை விருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.2 கோடி செலவில் நலத்திட்ட உதவிகளையும் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


    இந்நிகழ்ச்சியின் போது பொதுவெளியில் பேனர், கட் அவுட் வைக்கக் கூடாது என மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விழாவில் கலந்துகொள்ளும் 5000 பேருக்கு காலை உணவு மற்றும் மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • 10. 12-ம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை விஜய் நாளை சந்திக்கிறார்.
    • இந்த நிகழ்ச்சிக்காக இன்று முதலே நீலாங்கரை பகுதியில் சுவர் ஓவியங்கள் அலங்கார ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக 10. 12-ம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசு வழங்கும் நிகழ்ச்சி நாளை நடைபெற இருக்கிறது.

    இதற்காக நீலாங்கரை பகுதியில் பிரமாண்டமான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. விஜய் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து இந்த சான்றிதழையும், ரொக்கப் பரிசையும் வழங்க இருக்கிறார். தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களை 234 தொகுதிகளிலும் கணக்கெடுத்து அவர்களைப் பெற்றோர்களுடன் நாளை நீலாங்கரை பகுதியில் இருக்கும் ஆர்.கே. கன்வென்சன் சென்டருக்கு வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பெற்றோர்கள், மாணவர்களுக்கு உரிய அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்கிறது.

    நாளை நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்காக இன்று முதலே நீலாங்கரை பகுதியில் சுவர் ஓவியங்கள் அலங்கார ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தனது கட்அவுட்கள் எதுவும் வைக்கக்கூடாது என்று விஜய் தரப்பில் கூறப்பட்டிருப்பதால் சுவர் ஓவியங்கள் வரையும் பணியில் ரசிகர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன.

    இது பற்றி விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் கூறியதாவது:-

    மாணவர்கள் அனைவரும் பெற்றோர்களுடன் வந்து மேல்மருவத்தூர், தாம்பரம் பகுதியில் இருக்கும் குறிப்பிட்ட 2 மண்டபங்களில் வந்து தங்கி தயாராகி விடுவார்கள். அங்கேயே காலை உணவை முடித்துக் கொண்டு வண்டலூர், கேளம்பாக்கம் வழியாக வந்து நீலாங்கரையை அடைந்து விடுவார்கள்

    அனைவருக்கும் சினாக்ஸ், தண்ணீர் பாட்டில் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 8.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கி சரியாக 1 மணிக்குள் அனைவருக்கும் 12 வகை காய்கறிகளோடு சைவ விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    • நடிகர் விஜய் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு இன்று சான்றிதழ் வழங்கினார்.
    • இந்த நிகழ்ச்சியானது சென்னை, நீலாங்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

    தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று நடந்தது. விழாவில் மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை நடிகர் விஜய் வழங்கினார்.

    இந்நிலையில், விஜய் ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் பங்கேற்க வந்த ஒரு மாணவியின் பெற்றோர் கூறியதாவது:- 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர் வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்குவது மிகவும் நல்ல விஷயம். தமிழ்நாட்டில் இந்த மாதிரி நல்லவர்கள் வந்து தமிழகத்துக்கு முன்னேற்றம் வந்தால் நன்றாக இருக்கும்.

    நடிகர் விஜய் கல்விக்காக முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் நல்ல விஷயம். விஜய் அரசியலுக்கு வரட் டும். வந்தால் நல்லதுதான். இவரை போன்றவர்கள் அரசியலுக்கு வருவது தப்பே இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • நடிகர் விஜய் மாணவ- மாணவிகளுக்கு இன்று சான்றிதழ் வழங்கினார்.
    • இந்த நிகழ்வானது இன்று சென்னை நீலாங்கரையில் நடைபெற்றது.

    தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று நடந்தது. விழாவில் மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை நடிகர் விஜய் வழங்கினார்.



    விழாவில் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- சமுதாயத்தை தட்டி எழுப்பும் வகையில் விஜய்யின் சீரிய சிந்தனையில், உதிர்த்த கல்வி ஊக்கத் தொகை வழங்கும் திட் டத்தை விஜய் நேரடியாக தொடங்கி வைப்பது நமக்கு பெருமை அளிக்கும் விஷயமாகும்.

    விஜய் எங்களுக்கு சொல்வது முதலில் குடும்பத்தை பார்க்க வேண்டும். அடுத்த படியாக தொழிலை பார்க்க வேண்டும். தொழிலில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு சதவீதமோ, 2 சதவீதமோ முடிந்தால் ஏழை மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். எக்காரணத்தை கொண்டும், கடன் வாங்கி செலவு செய்யக்கூடாது என்று சொல்லக்கூடிய ஒரே தலைவர் விஜய். இவ்வாறு அவர் பேசினார்.

    • சென்னையில் மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு விழா இன்று நடைபெற்றது.
    • இதில் மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை நடிகர் விஜய் வழங்கினார்.

    தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று நடந்தது. விழாவில் மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை நடிகர் விஜய் வழங்கினார்.

    இவரின் செயல் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவதற்கான ஒத்திகையாக இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து கவிஞர் வைரமுத்துவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "அரசியலுக்கு நான் வருவேனா? என்று கேட்டால் என்னால் பதில் சொல்ல முடியும். நடிகர்கள் வருவது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. தெரியாமல் சொல்வது சரியாக இருக்காது" என்று கூறினார்.

    • நடிகர் விஜய் இன்று மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார்.
    • இந்த நிகழ்வானது சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நடந்தது.

    தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று நடந்தது. விழாவில் மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை நடிகர் விஜய் வழங்கினார். இந்த செயல் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவதற்கான ஒத்திகையாக இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


    மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய விஜய்

    இந்நிலையில், நடிகை கஸ்தூரி, விஜய் குறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "Hats off தளபதி விஜய். விஜய் மக்கள் இயக்கம் பாராட்டுக்குரியது. இனி அடுத்து என்ன என கூர்ந்து கவனிக்கும் தமிழகம். ஜூன் 22-இல் பெரிதாக எதிர்பார்க்கலாமா..?" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.



    ×