search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீனர்கள்"

    • மேலதிகாரிகளை பழைய பொருட்களை வாங்கும் இ காமர்ஸ் வெப்சைட்டில் விற்பதுப் போல் விளம்பரம் செய்கின்றனர்.
    • அனைவரும் ஏதோ ஒரு வேலை செய்தாக வேண்டும் என்ற சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளனர்.

    தற்போதைய சமூதாய சூழ்நிலையில் அனைவரும் ஏதோ ஒரு வேலை செய்தாக வேண்டும் என்ற சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளனர். அந்த வேலை பிடிக்கிறதோ, இல்லையோ அதை அனைவரும் செய்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

    எல்லா வேலைகளிலும் நமக்கு மேல் அதிகாரி என்பவர் இருப்பார், அவர் கொடுக்கும் வேலை பளுவினால் வருவது மனசோர்வு, கோபம் மட்டும்தான். சில நபர்களுக்கு அவர்களுக்கு வேலை செய்யும் நிறுவனம் பிடிக்காது, மேலதிகாரி மற்றும் மேலதிகாரி நடத்தும் விதமும், அவர்கள் நடந்து கொள்ளும் விதமும் பிடிக்காது. இதனை சீன மக்கள் புதுவிதமான அணுகியுள்ளனர்.

    அவர்களது மன சோர்வை குறைத்துக்கொள்ள அவர்களுக்கு பிடிக்காத வேலையையும் , பிடிக்காத மேலதிகாரிகளையும் பழைய பொருட்களை வாங்கும் இ காமர்ஸ் வெப்சைட்டில் விற்பதுப் போல் விளம்பரம் செய்கின்றனர்.

    அலிபாபா என்ற இந்த தளத்தில் அவர்களது வேலை பளுவை குறைத்துக் கொள்ள இப்படி செய்து வருகின்றனர். இந்த வேலையையும் , தொல்லை பிடித்த மேலதிகாரிகளை 4 முதல் 9 லட்ச ரூபாய் வரை விற்பதாக சீன மக்கள் பதிவிடுகின்றனர்.

    அதில் ஒரு நபர் அவர் மாதம் 33 ஆயிரம் ஈட்டித்தரும் வேலையை 91000 ரூபாய்க்கு விற்பதாகவும் நீங்கள் முதலீடு செய்யும் பணத்தை 3 மாதங்களில் திரும்பி எடுத்துக் கொள்ளலாம் என்றும் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

    மற்றொருவர் அவருடன் வேலை பார்க்கும் சக நக்கல் பிடித்த ஊழியரை 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்பதாக பதிவிட்டுள்ளார். கூடுதலாக அவரை எப்படி சமாளிக்கவேண்டும் என்பதை நானே கற்று தருகிறேன் என்று அதில் எழுதியுள்ளார்.

    ஆனால் இதெல்லாம் ஒரு விளையாட்டுக்காகவும், மன சோர்வை குறைக்கும் ஒரு செயலுக்காக தான் இப்படி செய்கிறார்கள். யாரும் இதன் மூலம் பணபரிவர்தனை செய்யக்கூடாது. அப்படி யாரெனும் விளம்பரத்தை பார்த்து முன்வந்தால் அவர்கள் அந்த பதிவை அழித்து விடுகின்றனர்.

    இப்படி உங்களுக்கும் உங்கள் வேலையில் மனசோர்வு மற்றும் பிடிக்காத மேலதிகாரி அல்லது கடுப்பேற்றும் சக ஊழியர்கள் இருந்தால் இப்படி எதையாவது புதுவிதமாக முயற்சி செய்து உங்கள் மனசோர்வை குறைத்துக் கொள்ளுங்கள்.

    • பாகிஸ்தானில் சீனர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
    • பாகிஸ்தானில் வசிக்கும் சீனாவை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில்லை என்றார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் சீன என்ஜினீயர்கள், பணியாளர்கள் பல்வேறு திட்டப்பணிகளில் பணியாற்றி வருகிறார்கள். இதற்கிடையே சீனர்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

    கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பயங்கரவாதிகளின் தற்கொலை படைத்தாக்குதலில் சீன என்ஜினீயர்கள் 5 பேர் பலியானார்கள்.

    இதையடுத்து சீனர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என சீனா பாகிஸ்தானை கேட்டுக்கொண்டது.

    இந்நிலையில், பாகிஸ்தானில் வசிக்கும் சீனாவை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில்லை என பஞ்சாப் மாகாண முதல்மந்திரியும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகளுமான மரியம் நவாஸ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மரியம் நவாஸ் கூறுகையில், பாகிஸ்தானில் இருக்கும் சீனர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற விரும்பவில்லை. பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றும்படி கேட்கும்போது அவர்கள் கோபப்படுகிறார்கள். அவர்கள் எந்த ஒழுக்கத்தின் கீழும் வர விரும்பவில்லை. பயங்கரவாதம் கடினமான போரின் வடிவத்தை எடுத்துள்ளது. பயங்கரவாதிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளனர். அத்தகைய தளங்களில் நாம் அவர்களை விட முன்னால் இருக்கவேண்டும். பயங்கரவாதிகளிடம் நவீன ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பம் உள்ளது. ஆப்கானிஸ்தானில் கிடைத்த அமெரிக்க ஆயுதங்கள் அவர்களிடம் உள்ளன. இது பெரும் சவாலாக உள்ளது என தெரிவித்தார்.

    • கடந்த ஆண்டு தம்பதியர் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளவும் அனுமதி தந்து சட்டதிருத்தம் செய்யப்பட்டது.
    • சீனாவில் வாழ்கிற மக்களின் ஆயுட்காலம் 0.6 ஆண்டு அதிகரித்து 77.93 ஆண்டுகளாகி இருக்கிறது.

    பீஜிங்:

    உலகிலேயே அதிக மக்கள் தொகையை கொண்ட நாடான சீனாவில் இப்போது குழந்தைகள் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு, தம்பதியர் 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி அளித்தும் நிலைமையில் பெரிதான மாற்றம் இல்லை. கடந்த ஆண்டு, தம்பதியர் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளவும் அனுமதி தந்து சட்டதிருத்தம் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் அங்கு வாழ்கிற மக்களின் ஆயுட்காலம் 0.6 ஆண்டு அதிகரித்து 77.93 ஆண்டுகளாகி இருக்கிறது.

    கடந்த 2020-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்புபடி சீனாவில் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரின் எண்ணிக்கை 26 கோடியே 40 லட்சமாக உள்ளது.

    சீனாவின் அங்கமாக உள்ள திபெத்தில் உயரமான நிலப்பரப்பு காரணமாக ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளதால், அங்கு மக்களின் ஆயுட்காலம் 1951-ல் 35.5 ஆண்டுகளாக இருந்தது. தற்போது அது 72.19 ஆண்டுகளாக இருக்கிறது.

    ×