என் மலர்
நீங்கள் தேடியது "மட்டன் சமையல்"
- முஸ்லீம்கள் நோன்பு காலத்தில் மட்டனை சமைத்து சாப்பிடுவார்கள்.
- சூடான சாதத்துடன் சாப்பிடவும் இந்த ரெசிபி சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
மட்டன் - அரை கிலோ
வரமிளகாய் - 18
வெங்காயம் - 2
பட்டை - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
மட்டன் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்
புளி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வாக்கி, பின் மட்டனை சேர்த்து சிறிது நேரம் பிரட்டி விட வேண்டும்.
அடுத்து அதில் பட்டை, ஏலக்காய், இஞ்சி பூண்டு பேஸ்ட், சோம்பு பொடி, சீரகப் பொடி மற்றும் மட்டன் மசாலா சேர்த்து ஒரு முறை நன்கு பிரட்டி, பின் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி, 15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
பின் குக்கரை மூடி 2 விசில் போட வேண்டும்.
வரமிளகாயில் உள்ள விதைகளை நீக்கி விட்டு தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைக்க வேண்டும். நன்றாக ஊறியதும் தண்ணீரை வடித்துவிட்டு மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த மிளகாய் விழுதுடன் புளிச்சாற்றினை சேர்த்து கலந்து, அதனை குக்கரில் உள்ள மட்டனுடன் சேர்த்து பிரட்டி, பச்சை வாசனை நீங்கி, மட்டனுடன் மசாலா அனைத்து ஒன்று சேரும் வரை நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், காஷ்மீரி மட்டன் குருமா ரெடி!!!
- தென் மாவட்டங்களில் மட்டன் உப்புகண்டம் மிகவும் பிரபலம்.
- பழைய சோறு, தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்
ஆட்டு இறைச்சி - 1 கிலோ
பூண்டு - 20 பல்,
காய்ந்த மிளகாய் - 15
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
ஆட்டு இறைச்சியை நன்றாக கழுவி பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
பூண்டு, இஞ்சி, மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். உப்பு சிறிதளவு தான் போட வேண்டும். ஏனெனில் மட்டன் காயும் போது சுருங்கும். அதனால் உப்பு அதிகரித்து விடக்கூடாது.
இந்த விழுதினை நறுக்கி வைத்த மட்டனில் சேர்த்து நன்கு கலக்கவும். மசாலா நன்றாக பிடிக்க வேண்டும்.
இதனை ஒரு நூலில் கோர்த்து வெயிலில் காய வைக்கவும். ஈரம் வற்றும் வரை 1 வாரம் காய வைக்கவும். நன்றாக காய்ந்த உடன் காற்று புகாதா டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். ஒரு மாதம் வரை கெட்டுப்போகாது.
தேவைப்படும் போது உப்புக்கண்டத்தை எடுத்து அம்மிக்கல்லில் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து சாப்பிடவும்.
சுவையான ருசியான உப்புக்கண்டம் ரெடி.
- மட்டன் தால்சா சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
- இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
மட்டன் - 1/2 கிலோ
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 2
சின்ன வெங்காயம் - 12
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
கத்திரிக்காய் - 1
மாங்காய் - 1/2
கொத்தமல்லி - சிறிது
பிரியாணி இலை - 1
பட்டை - 1
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
துவரம் பருப்பு - 1/2 கப்
கடலை பருப்பு - 1/4 கப்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
புளிச்சாறு - 1/4 கப்
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு..
வெங்காயம் - 1/2 கப்
கடுகு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* தக்காளி, வெங்காயம், கத்தரிக்காய், மாங்காய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ப.மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும்.
* கடலை பருப்பு, துவரம் பருப்பை நன்றாக கழுவி அரை மணிநேரம் ஊறவைக்கவும்.
* மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
* முதலில் குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை, கிராம்பு சேர்த்து தாளித்த பின்னர் சின்ன பச்சை மிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்கு வதங்கியதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து சிறிது நேரம் நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மட்டனை கழுவிப் போட்டு நன்கு நிறம் மாறும் வரை கிளறி விட வேண்டும். அதன் பின் கடலை பருப்பு, துவரம் பருப்பு மற்றும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித் தூள், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் போதுமான நீரை, அதாவது வழக்கமாக பருப்பு வேக வைக்க ஊற்றும் அளவை விட அதிகமாக நீரை ஊற்றி, குக்கரை மூடி மிதமான தீயில் 5-6 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும். மட்டனும், பருப்புக்களும் நன்கு வெந்ததும், கத்திரிக்காய், மாங்காய் சேர்த்து புளிச்சாற்றினையும் சிறிது ஊற்றி மூடி வைத்து, 10 நிமிடம் காய்கறிகள் வேகும் வரை கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய், மிளகு மற்றும் சிறிது வெங்காயத்தை சேர்த்து வதக்கி, குக்கரில் உள்ள மட்டன் தால்சாவில் ஊற்றி கிளறி, மேலே சிறிது கொத்தமல்லியை தூவினால், மட்டன் தால்சா தயார்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இதை சூப் போன்றும் குடிக்கலாம்.
- இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மட்டன் எலும்புடன் - அரை கிலோ
மட்டன் கொழுப்பு - 100 கிராம்
பச்சை மிளகாய் - 4
கொத்தமல்லி தூள் - 2 டீஸ்பூன்
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - 2 கொத்து
மசாலா அரைக்க :
மரசெக்கு கடலை எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி
சின்ன வெங்காயம் - 8
பூண்டு பற்கள் - 8
சீரகம், மிளகு - தலா 1 டீஸ்பூன்
செய்முறை
* மட்டனை நன்றாக கழுவி சிறிய துண்டுகளாக வெட்டிகொள்ளவும்.
* தக்காளியை விழுதாக அரைத்து கொள்ளவும்.
* ப.மிளகாயை விழுதாக அம்மிகல்லில் நசுக்கி கொள்ளவும்.
* ஒரு பிரஷர் குக்கரில் மட்டன், மட்டன் கொழுப்பை போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக மூடியை மூடி 4 விசில் வரை வேக வைக்க வேண்டும்.
* பின்னர் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக மிக்ஸியில் சேர்த்து நைசாக விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.
* ஒரு அகலமான வாணலியில் மரசெக்கு கடலை எண்ணெய் விட்டு நன்றாக காய்ந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
* பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் . சிறிதளவு உப்பு , மிளகாய் தூள் , கொத்தமல்லி தூள் மற்றும் அம்மிகல்லில் நசுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
* கடைசியாக வேக வைத்த மட்டனை நீருடன் முழுவதுமாக சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் . நன்றாக கொதி வந்ததும் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.
* இப்போது சூப்பரான மட்டன் ரசம் ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இதை சூடான சாதத்துடன் சாப்பிடவும் சூப்பராக இருக்கும்.
- இந்த ரெசிபி செய்வது மிகவும் எளிது.
தேவையான பொருட்கள்:
ஆட்டுக்கறி - 500 கிராம்
வெங்காயம் - 2
கோதுமை மாவு - 4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
பிரியாணி இலை - 3
தனியா - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
கருப்பு ஏலக்காய் - 2
பச்சை ஏலக்காய் - 6
அன்னாசி பூ - 1
கடுக்காய் - 1 சிறியது
கிராம்பு - 6
சீரகம் - 1 டீஸ்பூன்
பட்டை - 2 துண்டு
ஜாதிப்பத்திரி - 3 துண்டு
கருஞ்சீரகம் - ½ டீஸ்பூன்
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
சுக்குப்பொடி - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 2½ டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
நிஹாரி மசாலா தயாரிப்பதற்கு பிரியாணி இலை, தனியா, மிளகு, காய்ந்த மிளகாய், ஏலக்காய், அன்னாசி பூ, கடுக்காய், கிராம்பு, சீரகம், பட்டை, ஜாதி பத்திரி, கருஞ்சீரகம், சோம்பு ஆகியவற்றை மிதமான தீயில் வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும். இவை 1 கிலோ ஆட்டுக்கறிக்கான மசாலா அளவாகும்.
ஆட்டுக்கறியை நன்றாக கழுவி அதனுடன் மல்லித்தூள், சுக்குப்பொடி, 2 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு, இஞ்சி பூண்டு விழுது மற்றும் அரைத்து வைத்துள்ள 'நிஹாரி' மசாலாவில் பாதி அளவு சேர்த்து நன்றாகப் பிசைந்து கலந்து கொள்ளவும். இந்தக் கலவையை ஒரு மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும்.
பின்பு பிரஷர் குக்கரில் ஒரு கப் அளவு எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். அதில் பொடிதாக நறுக்கிய ஒரு வெங்காயம்(முக்கால் பாகம்) சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதனுடன் ஊற வைத்துள்ள ஆட்டுக்கறி கலவையை சேர்த்து, கறி பொரியும் வரை வறுக்கவும். சிறிது நேரத்தில் எண்ணெய் பிரிந்து மேலே வரும்.
அப்போது இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி கறியை வேக வைக்கவும். இரண்டு விசில் வந்து ஆவி அடங்கியதும் குக்கரை திறக்கவும்.
வெந்திருக்கும் கலவையில் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவுடன் தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைக்கவும். இந்தக் கரைசலை அடுப்பில் இருக்கும் கலவையில் ஊற்றி கிளறவும். கலவை சிறிது சிறிதாக கெட்டியாக ஆரம்பிக்கும்.
பிறகு அதனை மூடி குறைவான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
இப்போது வாணலியில் நெய் ஊற்றி அது சூடானதும், அதில் மீதியுள்ள வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு அதனுடன் அரை டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள், அரை டீஸ்பூன் 'நிஹாரி மசாலா' சேர்த்து வறுக்கவும்.
பின்பு இந்த தாளிப்பை கொதித்துக் கொண்டிருக்கும் நிஹாரியுடன் சேர்த்து கிளறவும். இப்போது சுவையான 'மட்டன் நிஹாரி' தயார்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- சாம்பார் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
- இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம்.
தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத மட்டன் - 300 கிராம்
சின்ன வெங்காயம் - 20
பூண்டு - 20 பற்கள்
இஞ்சி - 1 இன்ச்
குண்டு வரமிளகாய் - 10
தக்காளி - 1
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
வெங்காயம், தக்காளி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பூண்டை தட்டிக் கொள்ளவும்.
மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்துகொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, இஞ்சி, பூண்டு, பாதி வெங்காயம், பாதி மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
பின் அதில் மட்டன் துண்டுகளை சேர்த்து, அதோடு, தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு தூவி பிரட்டி விட வேண்டும்.
மட்டனின் நிறம் சற்று மாற தொடங்கும் போது, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் மீதமுள்ள வரமிளகாயை இரண்டாக உடைத்து சேர்த்து லேசாக வதக்கிய பின் எஞ்சிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, சிறிது உப்பு தூவி வெங்காயம் நன்கு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
பிறகு குக்கரை திறந்து, அதனை வாணலியில் சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை பிரட்டி இறக்கினால், சுவையான செட்டிநாடு உப்பு கறி தயார்!
- இட்லி, சூடான சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
- மட்டன் குழம்பிற்கு மாற்றாக இந்த ரெசிபியை செய்யலாம்.
தேவையான பொருட்கள்
மட்டன் எலும்பு - 200 கிராம்,
துவரம்பருப்பு - 50 கிராம்,
கடலை பருப்பு - 50 கிராம்,
கத்தரிக்காய் - 2,
வாழைக்காய் - 1/2 காய்,
புளி - 10 கிராம்,
மாங்காய் - 1/2,
இஞ்சி, பூண்டு விழுது - 50 கிராம்,
பச்சை மிளகாய் - 4,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
பட்டை - 5 கிராம்,
பிரிஞ்சி இலை - 2,
உப்பு - தேவைக்கு.
செய்முறை
துவரம் பருப்பு, கடலைப்பருப்பை நன்கு கழுவி, ஊற வைக்கவும்.
வாழைக்காய், கத்தரிக்காய், மாங்காயை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு குக்கரில் இரண்டு பருப்புகள், மட்டன் எலும்பு, சிறிது கொழுப்பு, கத்தரிக்காய், வாழைக்காய், மாங்காய், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேகவைக்கவும்.
தேவைப்பட்டால் புளியை கரைத்து அதனை பருப்பு வெந்தவுடன் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கலாம்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, பிரிஞ்சி இலை தாளித்து இதனுடன் சேர்த்து கலந்து பரிமாறவும்.
- மாலையில் டீ, காபியுடன் சாப்பிட அருமையான ஸ்நாக்ஸ் இது.
- மட்டன் கீமா வைத்து சூப்பரான பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மட்டன் கீமா - 150 கிராம்
வெங்காயம் - 1 + 1
இஞ்சி பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
சோம்பு - 1 டீஸ்பூன்
ப.மிளகாய் - 2
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
பஜ்ஜி மாவு - தேவையான அளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
மட்டனை நன்றாக கழுவி வைக்கவும்.
ஒரு வெங்காயத்தை பொடியாகவும். மற்றொரு வெங்காயத்தை நீள வாக்கிலும் வெட்டிக்கொள்ளவும்.
கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயத் போட்டு தாளிக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, மட்டன் கீமா, மஞ்சள்தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
இத்துடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து 5 விசில் விடவும். மட்டனில் தண்ணீர் இருக்கும். தனியாக அதிகம் தண்ணீர் சேர்க்க வேண்டிய தேவையில்லை.
கறி வெந்தவுடன் தண்ணீரை வடிகட்டி தனியே வைக்கவும்.
வேக வைத்த மட்டன் கீமா ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பஜ்ஜி மாவு, சிறிது உப்பு, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருஞ்சீரகம் அனைத்தையும் போட்டு நன்றாக கலக்கவும்.
பக்கோடா மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். தேவைப்பட்டால் வேக வைத்த மட்டன் நீரை பயன்படுத்தி கொள்ளலாம்.
வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் மட்டன் கலவையை உதிரியாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சுண்டி இழுக்கும் சுவையில் மட்டன் கீமா பக்கோடா ரெடி.
- சிலருக்கு பரோட்டா விருப்ப உணவாக இருக்க சால்னா முக்கிய காரணமாக இருக்கும்.
- இன்று ஹோட்டல் ஸ்டைல் மட்டன் சால்னா செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
மட்டன் எலும்பு கறி - கால் கிலோ
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 4
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1/2 டிஸ்பூன்டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 1 கப்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
சோம்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
மிளகு - 1/4 டீஸ்பூன்
கல்பாசி பூ - 2
ஏலக்காய் - 2
பட்டை, லவங்கம் - சிறிது
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
மட்டன் எலும்பு கறியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
தேங்காய் துருவல், சோம்பு, சீரகம், மிளகு ஆகியவற்றை பேஸ்ட் போல அரைத்து கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் கல்பாசி பூ, ஏலக்காய், பட்டை, லவங்கம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.
அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
பின்னர் சுத்தம் செய்யப்பட்ட மட்டன் எலும்பு கறியை போட்டு அதனுடன் தேவையான தண்ணீர் விட்டு குக்கரை மூடி 8 விசில் வரும் வரை அடுப்பில் வைக்கவும்.
விசில் போனதும் குக்கர் மூடியை திறந்து கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சூடான ஹோட்டல் ஸ்டைல் மட்டன் சால்னா ரெடி.