search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5 பேர் காயம்"

    • பாலசுப்பிரமணியன் எலக்டிரிக்கல் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்.
    • மோட்டார் சைக்கிள் மோதியதில், 5 பேரும் தூக்கி எறியப்பட்டு காயம் அடைந்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் அபிராமி தெற்குத் தெருவைச்சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது37). இவர் எலக்டிரிக்கல் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று மாலை, தனது மனைவி கர்பகாம்பாள் (32), 6 மாத கைகுழந்தை மோகனசெல்வராஜனுடன் மோட்டார் சைக்களில் சென்றார். காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி அருகே சென்றபோது, எதிர் திசையில் நிரவி அக்கரை வட்டத்தைச் சேர்ந்த ஆரோக்கிய விக்னேஸ் (25), அவரது அண்ணன் எபிநேசர் (28) ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில், 5 பேரும் தூக்கி எறியப்பட்டு காயம் அடைந்தனர். தொடர்ந்து, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், அவர்களை மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து, பாலசுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில், காரைக்கால் நகர போக்குவரத்து போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • 200 காளைகள் பங்கேற்று ஓடியது
    • முதலிடம் பெற்ற காளைக்கு ரூ 55 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள மேல்வல்லம் கிராமத்தில் ஆண்டு தோறும் காதலர் தினத்தில் காளைவிடும் திருவிழா நடத்துவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் காளைவிடும் திருவிழா கிராம சார்பில் நடத்தப்பட்டது.

    இந்த விழாவை வேலூர் தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் நரசிம்மன் உள்பட வருவாய் துறையினர் மேற்பார்வையிட்டனர்.பாதுகாப்பு ஏற்பாடுகளை பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் வேலூர் தாலுகா போலீசார் செய்திருந்தனர்.

    இதில் சுமார் 200 மாடுகள் பல்வேறு ஊர்களிலிருந்து கொண்டு வரப்பட்டு ஓட விடப்பட்டது. அப்போது காளைகள் முட்டியதில் 5 பேர் காயம் அடைந்தனர்.அவர்களுக்கு அங்குள்ள சிகிச்சை மையத்தில முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    முதலிடம் பெற்ற ஜோலார்பேட்டை அன்வர்பாய் காளைக்கு ரூ 55 ஆயிரம், இரண்டாமிடம் திருப்பத்தூர் நந்தினி எக்ஸ்பிரஸ் காளைக்கு ரூ 50 ஆயிரம், மூன்றாமிடம் பெற்ற லத்தேரி பாபு காளைக்கு ரூ.45 ஆயிரம் உள்பட பல்வேறு காளைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.

    முன்னதாக விநாயகர், மஞசியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்யப்பட்டது.இரவில் நாடகம் நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை பெரியதனம், வல்லம் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார், துணை தலைவர் அமுதாபழனி, ஒன்றிய கவுன்சிலர் எழிலரசிஅருள் மாவட்ட கவுன்சிலர் தேவிசிவா, இளைஞர்கள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • சதீஷ் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அஜித்குமார் மோட்டார்சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதி விபத்தை ஏற்படுத்தியது.
    • விபத்தில் பலத்த காயம் அடைந்த அஜித்குமார் பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

    பவானி, டிச. 2-

    ஆப்பக்கூடல் காமராஜர் காலனி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (22). இவர் இரவு தனது மோட்டார் சைக்கிளில் பவானி-ஆப்பக்கூடல் மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது திப்பிச்செட்டிப்பாளையம் பகுதியில் சென்ற போது எடப்பாடியை சேர்ந்த சதீஷ் தனது மோட்டார் சைக்கிளில் சின்னமணி (60), ராஜா (37), பூபதி (27) ஆகிய 3 பேரை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த போது அஜித் குமார் மோட்டார்சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதி விபத்தை ஏற்படுத்தியது.

    இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அஜித்குமார் பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

    மேலும், சதீஷ் பவானி தனியார் அரசு மருத்துவ மனையிலும், சின்னமணி, ராஜா, பூபதி ஆகிய 3 பேர் பவானி அரசு மருத்துவ மனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    • 5 நபர்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
    • திடீரென்று குளவிகள் நடந்து சென்றவர்களை சரமாரியாக கடித்தது.

    கடலூர்:

    கடலூர் அருகே நெல்லிக்குப்பம் சித்தரசூர் ரயில் நிலையம் அருகே அதே பகுதியை சேர்ந்த 5 நபர்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று குளவிகள் நடந்து சென்றவர்களை சரமாரியாக கடித்தது. இதில் ஐந்து நபர்கள் வலி தாங்காமல் கதறி துடித்தனர். இதனை தொடர்ந்து 5 பேரை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • கரூர் மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன்
    • கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் வந்தபோது லாரிக்கு பின்னால் வந்த ஆம்னி பஸ் லாரியின் மீது மோதியது.

    கள்ளக்குறிச்சி:

    கரூர் மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 48), இவர் மதுராந்தகத்திலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி டாரஸ் லாரியை ஓட்டிக் கொண்டு வந்தார். அப்போது கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் வந்தபோது லாரிக்கு பின்னால் வந்த ஆம்னி பஸ் லாரியின் மீது மோதியது.

    இதில் பஸ்சில் வந்த சென்னை சத்யா நகரை சேர்ந்த பாண்டுரங்கன் மகன் ராதா (26), கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த தேவகுமார் (36), சேலம் மாதேஸ்வரன் மகள் சத்யபிரியா (23), ரவி மகன் சுதாகர் (27), நாமக்கல் மாவட்டம் ஏ.எஸ்.பேட்டை ராஜூ மனைவி சுமதி (47) ஆகிய 5 பேர் காயமடைந்தனர். அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • முன்னால் சென்ற லாரி மீது கார் எதிர்பாராதவிதமாக மோதியது.
    • காரில் இருந்த கலைமணி, ஜெகதீசன், பூர்ணிமா, பிரசன்னா, சங்கீதபிரியா ஆகிய 5 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கோபால். ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான இவரது மனைவி கலைமணி (வயது65). இவரது உறவினர்களான ஜெகதீசன், பூர்ணிமா, பிரசன்னா (12), சங்கீதபிரியா (16) உள்பட 8 பேர் திருப்பதிக்கு காரில் சென்றனர். அங்கு சாமி கும்பிட்டு விட்டு அவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது இன்றுகாலை தருமபுரிைய அடுத்த குண்டல்பட்டி பகுதியில் வந்த போது முன்னால் சென்ற லாரி மீது கார் எதிர்பாராதவிதமாக மோதியது.

    இதில் காரில் இருந்த கலைமணி, ஜெகதீசன், பூர்ணிமா, பிரசன்னா, சங்கீதபிரியா ஆகிய 5 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி மதிகோன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    விபத்தில் படுகாயம் இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்தில் சிக்கிய கார்-லாரியை அப்புறப்படுத்தினர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×