search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருத்தணி கோவில்"

    • திருத்தணி முருகன் கோவிலில் கடந்த மாதம் 26-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
    • தங்கம் 665 கிராம், வெள்ளி 5 ஆயிரத்து 557 கிராம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவிலில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிருந்தும், அண்டை மாநிலங்களிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசனம் செய்ய வருவது வழக்கம். இந்த கோவிலில் கடந்த மாதம் 26-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

    இதையடுத்து பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம், மற்றும் திருத்தணி முருகன் கோவில் உடன் இணைந்த உப கோவில்கள் உண்டியல் பணம் அனைத்தும் திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் தேவர் மண்டபத்தில் கோவில் துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் விஜயா முன்னிலையில் கோவில் பணியாளர்களை கொண்டு எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில் 27 நாட்களில் ரூ.89 லட்சத்து 3 ஆயிரத்து 193 வருவாயாக கிடைத்தது. மேலும் தங்கம் 665 கிராம், வெள்ளி 5 ஆயிரத்து 557 கிராம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திருத்தணி கோவிலில் ஆடிக்கிருத்திகை விழாவுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
    • திருத்தணி கோவிலில் பக்தர்களுக்கு 5 நாட்களுக்கு 24 மணிநேரமும் அன்னதானம் வழங்கப்படும்.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா வருகிற 21-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை 5 நாட்கள் விமரிசையாக நடைபெற உள்ளது.

    இதையொட்டி கோவிலில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையில் திருத்தணி கோவிலில் செய்யப்பட்டு உள்ள ஆடிக்கிருத்திகை விழா முன்னேற்பாடுகள் பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.

    அவர் கோவில் வளாகம் முழுவதும் சுற்றிப்பார்த்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருத்தணி கோவிலில் ஆடிக்கிருத்திகை விழாவுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதையொட்டி வருகிற 21-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 5 நாட்களும் கோவில் நடைசாத்தப்படாமல் முழுவதும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து இருக்கும்.

    பக்தர்களுக்கு 5 நாட்களுக்கு 24 மணிநேரமும் அன்னதானம் வழங்கப்படும். பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

    இதேபோல் 60 இடங்களில் கழிவறை மற்றும் குடிநீர் வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. கூடுதலாக 452 தூய்மை பணியாளர்கள் எப்போதும் பணியில் ஈடுபடுவார்கள். குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்படும். கோவில் உள்ளேயும் 15 இடங்களில் பக்தர்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டு இருக்கிறது.

    5 தீயணைப்பு வாகனங்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்கும். பக்தர்களின் வசதிக்காக இலவச 'டோல் பிரி' எண் விரைவில் அறிவிக்கப்படும்.

    போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 4 இடங்களில் தற்காலிக வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    பாதுகாப்புக்காக 127 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். கூடுதலாக 4 ரெயில்கள் இயக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், கோவில் துணை ஆணையர் விஜயா உடன் இருந்தனர்.

    ×