என் மலர்
நீங்கள் தேடியது "திருத்தணி கோவில்"
- முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம், நகை ஆகியவற்றை செலுத்துகின்றனர்.
- போலீசார் 2 பெண்களிடம் இருந்து ரூ. 1.15 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
திருத்தணி:
திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசித்து விட்டு செல்கின்றனர்.
பக்தர்கள் அனைவரும் மலைக்கோவிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம், நகை ஆகியவற்றை செலுத்துகின்றனர்.
பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய பணத்தை முருகன் கோவில் தேவர் மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் முன்னிலையில் திறந்து எண்ணப்படுவத வழக்கம். அந்த வகையில் கடந்த மாதம் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை இணை ஆணையர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.
இதில் திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட கலந்து கொண்டு மலைக்கோவில் தேவர் மண்டபத்தில் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பெண் ஊழியர்கள் 2 பேர், பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் 1.15 லட்சத்தை திருடியது கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறியப்பட்டது. கோவில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் போலீசார் 2 பெண்களிடம் இருந்து ரூ. 1.15 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
திருத்தணி கோவில் உண்டியல் காணிக்கை பணத்தை அங்கு பணி செய்யும் 2 பெண் ஊழியர்களே திருடிய சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- திருத்தணி கோவிலில் ஆடிக்கிருத்திகை விழாவுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
- திருத்தணி கோவிலில் பக்தர்களுக்கு 5 நாட்களுக்கு 24 மணிநேரமும் அன்னதானம் வழங்கப்படும்.
திருத்தணி:
திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா வருகிற 21-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை 5 நாட்கள் விமரிசையாக நடைபெற உள்ளது.
இதையொட்டி கோவிலில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையில் திருத்தணி கோவிலில் செய்யப்பட்டு உள்ள ஆடிக்கிருத்திகை விழா முன்னேற்பாடுகள் பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
அவர் கோவில் வளாகம் முழுவதும் சுற்றிப்பார்த்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
திருத்தணி கோவிலில் ஆடிக்கிருத்திகை விழாவுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதையொட்டி வருகிற 21-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 5 நாட்களும் கோவில் நடைசாத்தப்படாமல் முழுவதும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து இருக்கும்.
பக்தர்களுக்கு 5 நாட்களுக்கு 24 மணிநேரமும் அன்னதானம் வழங்கப்படும். பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
இதேபோல் 60 இடங்களில் கழிவறை மற்றும் குடிநீர் வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. கூடுதலாக 452 தூய்மை பணியாளர்கள் எப்போதும் பணியில் ஈடுபடுவார்கள். குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்படும். கோவில் உள்ளேயும் 15 இடங்களில் பக்தர்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டு இருக்கிறது.
5 தீயணைப்பு வாகனங்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்கும். பக்தர்களின் வசதிக்காக இலவச 'டோல் பிரி' எண் விரைவில் அறிவிக்கப்படும்.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 4 இடங்களில் தற்காலிக வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
பாதுகாப்புக்காக 127 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். கூடுதலாக 4 ரெயில்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், கோவில் துணை ஆணையர் விஜயா உடன் இருந்தனர்.