என் மலர்
நீங்கள் தேடியது "ரஜினி மகள்"
- தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற பழமைவாய்ந்த வைத்தீஸ்வரன் கோவில்.
- கற்பக விநாயகர், தையல் நாயகி சன்னதிகளில் அர்ச்சனை செய்து சவுந்தர்யா வழிபட்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அமைந்துள்ளது தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில். தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற பழமைவாய்ந்த வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள நவ கிரகங்களில், செவ்வாய் பகவான், செல்வ முத்துக்குமார சுவாமி, சித்த மருத்துவத்தின் மூலவரான தன்வந்திரி சித்தர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
நவ கிரகங்களில் செவ்வாய் பரிகார தலமான இக்கோவிலுக்கு நடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா தனது கணவர் மற்றும் மகனுடன் தரிசனம் செய்தார். கற்பக விநாயகர், தையல் நாயகி சன்னதிகளில் அர்ச்சனை செய்து சவுந்தர்யா வழிபட்டார்.