என் மலர்
நீங்கள் தேடியது "வணிகர் சங்கங்கள்"
- ‘வணிகம் காக்க வெள்ளையன் இளைய தலைமுறை எழுச்சி மாநாடு’ என்ற தலைப்பில் நடைபெறுகிறது.
- அனைவரும் குடும்பத்தோடு வந்து இந்த மாநாட்டில் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பிக்க வேண்டும் என்றார்.
சென்னை:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் டைமண்ட் ராஜா வெள்ளையன் தலைமையில் பெரம்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
பொது செயலாளர் ராகவேந்திரா மணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில பொருளாளர் ஹரிகிருஷ்ணன், செங்கல்பட்டு மாவட்ட தலைவர் இமானுவேல் ஜெயசீலன், தென் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கிச்சா ரமேஷ், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் ஏ.எஸ்.அந்தோணி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் மாநில தலைவர் டைமண்ட் ராஜா வெள்ளையன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் வருகின்ற மே 5-ந்தேதி வணிகர் தின மாநாடு சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த மாநாடு 'வணிகம் காக்க வெள்ளையன் இளைய தலைமுறை எழுச்சி மாநாடு' என்ற தலைப்பில் நடைபெறுகிறது. தலைவர் த.வெள்ளையன் மறைவுக்கு பின்னர் எனது தலைமையில் செயல்படும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து முதன் முதலாக என்னுடைய தலைமையில் நடத்த இருக்கும் முதல் மாநாடு என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாநில, மாவட்ட மற்றும் கிளை சங்க நிர்வாகிகள் அனைவரும் குடும்பத்தோடு வந்து இந்த மாநாட்டில் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பிக்க வேண்டும் என்றார்.
- பொருளாளர் மெஞ்ஞானமூர்த்தி முன்னிலை வகித்தார்.
- ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உடுமலை:
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சங்க நிர்வாகிகள் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர்பாலநாக மாணிக்கம் தலைமை வகித்தார். செயலாளர் குமரன் வரவேற்று பேசினார். பொருளாளர் மெஞ்ஞானமூர்த்தி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தின் போது 40 விவசாய பொருள்களுக்கு ஒரு சதவீத செஸ்வரி ,அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருள்களுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி முதலியவற்றை ரத்து செய்ய கோரி வரும் 22ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரமராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதில் மாநிலம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான வியாபாரிகள் பங்கேற்க உள்ளனர். எனவே திருப்பூர் மாவட்டம் மற்றும் உடுமலை கிளை பகுதிகளில் இருந்து 2000 வியாபாரிகள் சென்னையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் உடுமலை நகர் பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.