search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜஸ்டின் பீபர்"

    • இவர்களது திருமணம் வரும் ஜூலை 12-ம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது.
    • இவர்களது சங்கீத் நிகழ்ச்சி கடந்த 5 ஆம் தேதி நடைபெற்றது.

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும், அவரது காதலியும், வைர வியாபாரியின் மகளுமான ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் முடிவானது.

    இவர்களது திருமணம் வரும் ஜூலை 12-ம் தேதி மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் 3 நாள் நடைபெறவுள்ளது.

    திருமணத்திற்கு முன் ஐரோப்பாவில் சொகுசு கப்பலில் பிரமாண்ட விழா ஒன்று நடந்தது. அதில் ஏராளமான பிரபிலங்கள் கலந்துக் கொண்டனர். தமிழ் மற்றும் இந்தி திரையுலக நடிகர்கள் அதில் கலந்துக் கொண்டனர்.

    ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்டின் திருமணம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இவர்களது சங்கீத் நிகழ்ச்சி கடந்த 5 ஆம் தேதி நடைபெற்றது.

    இந்த சங்கீத் நிகழ்ச்சியிலும் பல பிரபலங்கள் உற்சாகமாக கலந்துக் கொண்டனர். தோனி, ஷ்ரேயாஸ் ஐயர், நடிகை நேஹா சர்மா, மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி தாக்கரே மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.

    இவர்களுடன் பிரபல பாப் பாடகரான ஜஸ்டின் பீபர் கலந்துக் கொண்டார். அவர் ஆனந்த் அம்பானியின் சங்கீத் விழாவில் பங்கேற்ற வீடியோ மற்றும் புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அதில் ஜஸ்டீன் பீபர், ஆனந்த் அம்பானி குடும்பத்தினர், நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. சங்கீத் விழாவில் ஜஸ்டீன் பீபர் அவரது பிரபலமான பாடல்களான பேபி, பீச்சஸ், லவ் யுவர்செல்ஃப் மற்றும் சாரி போன்ற பாடல்களை பாடி அரங்கத்தை அதிர வைத்தார்.

    ஆனந்த் அம்பானியின் திருமணம் வரும் 12 ஆம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெறவுள்ளது. ஜூலை 14 ஆம் தேதி வரவேற்பு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • புதுடெல்லி ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் இசை கச்சேரியை நடத்துகிறார்.
    • இதற்கான டிக்கெட்டுகள் விற்பனை தற்போது தொடங்கியுள்ளது.

    நியூயார்க் :

    பிரபல பாப் இசை பாடகர் ஜஸ்டின் பீபர் (வயது 28). ஜஸ்டிஸ் உலக சுற்றுலா என்ற பெயரில் பல்வேறு உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாப் இசை கச்சேரிகளை நடத்தி வருபவர். உலகம் முழுவதும் இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். கடந்த ஜூனில் இவருக்கு பக்கவாதம் ஏற்பட்ட விசயம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    இதனால், டொரண்டோவில் நடைபெற இருந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்கு முன் ரசிகர்களுக்கு அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், ஜஸ்டிஸ் உலக சுற்றுலாவானது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தனக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார். அவருக்கு ராம்சே ஹன்ட் சிண்ட்ரோம் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. இதனால், ஒரு காதின் பக்கத்தில் உள்ள முக நரம்பு பாதிக்கப்படும்.

    இதனால், முகம் முடக்குவாதம் ஏற்படுவதுடன் கேட்கும் திறனையும் இழக்க கூடிய ஆபத்து உள்ளது. அந்த வீடியோவில் அவர், மிக முக்கியம். இந்த வீடியோவை காணுங்கள். ரசிகர்களாகிய உங்களை நான் விரும்புகிறேன். உங்களுடைய பிரார்த்தனையில் எனக்கும் இடம் கொடுங்கள் என தலைப்பிட்டார்.

    அவர் அதில் கூறும்போது, இந்த கண் துடிப்பு இல்லாமல் உள்ளது. இதனை நீங்கள் காணலாம். எனது முகத்தின் ஒரு பக்கத்தில் என்னால் புன்னகைக்க முடியவில்லை. மூக்கு துவாரம் ஒரு பக்கம் அசைக்க முடியவில்லை. முகத்தின் ஒரு பக்கம் முழு அளவில் முடங்கி போயுள்ளது. முக முடக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

    அதனால், அடுத்த எனது நிகழ்ச்சிகளை நான் ரத்து செய்து விட்டதற்காக பெருத்த ஏமாற்றம் அடைந்தவர்களுக்கு, என்னால் உடல்ரீதியாக, செயல்பட முடியவில்லை என வெளிப்படையாக தெரிவித்து கொள்கிறேன். இது சற்று தீவிரம் வாய்ந்தது. நீங்கள் அதனை காணலாம் என்று கூறியுள்ளார். அவர் தொடர்ந்து பேசும்போது, முகத்திற்கு வேண்டிய பயிற்சிகள் அளித்து வருகிறேன். ஓய்வு எடுத்து கொள்கிறேன்.

    நான் என்ன சாதிக்க வேண்டும் என பிறந்தேனோ அதற்காக தயாராகி 100 சதவீதம் முழுமையாக திரும்பி வருவேன் என தெரிவித்து உள்ளார். எனினும், அவர் முழுமையாக குணமடைந்து எப்போது திரும்பி வருவார் என்பதற்கான காலஅளவு எதனையும் தெரிவிக்கவில்லை. கொரோனா பெருந்தொற்று பரவலின்போது கடந்த 2 முறை அவரது சுற்றுப்பயணம் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், 3வது முறையாக இந்த சுற்றுப்பயணமும் தள்ளி வைக்கப்பட்டது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    24 கோடி பேர் தொடரும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான இந்த வீடியோவை, 37 லட்சத்திற்கும் கூடுதலானோர் பார்த்து வேதனை அடைந்தனர். 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அவருக்கு ஆறுதல் தெரிவித்து பதிவுகளை வெளியிட்டனர். இந்த சூழலில், ஜஸ்டின் பீபர் ரசிகர்களை மீண்டும் மகிழ்விக்க வருகிறார்.

    அவர் உலக சுற்றுலாவில் ஈடுபட உள்ளார். இதில் விரைவில் இந்தியாவுக்கும் வந்து பாப் இசை கச்சேரிகளை நடத்த இருக்கிறார். இதன்படி, இந்தியாவுக்கு வருகிற அக்டோபர் 18ந்தேதி வருகிறார். புதுடெல்லி ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் அவர் இசை கச்சேரியை நடத்துகிறார். இதற்கான டிக்கெட்டுகள் விற்பனை தற்போது தொடங்கியுள்ளது.

    ரூ.4 ஆயிரத்தில் இருந்து டிக்கெட் விலை தொடங்குகிறது. ஜஸ்டினுக்கு முக முடக்குவாதம் ஏற்பட்ட அதே வாரத்தில், அவரது மனைவி ஹெய்லி பீபர் கூறும்போது, ஒவ்வொரு நாளும் தனது கணவர் நன்றாக குணமடைந்து வருகிறார். இது அரிதான மற்றும் அதிக அச்சமூட்டும் விசயம் ஆகவும் இருந்தது என அவர் கூறினார்.

    இதன்பின்பு கடந்த ஜூனில் இருவரும் சர்ச்சுக்கு ஒன்றாக செல்வது, நடப்பு ஜூலையில் சுற்றுலா செல்வது என பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். ஜஸ்டின் பீபர் முக முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டபோது, வடக்கு அமெரிக்காவில் நடைபெற இருந்த பல்வேறு நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தது ரசிகர்களை வருத்தமடைய செய்தது. அவர் மீண்டும் புத்தெழுச்சி பெற்று பாப் இசை பாடல்களை பாட இருப்பது அவரது ரசிகர்களுக்கு புது உற்சாகம் ஏற்படுத்தி உள்ளது.

    ×