என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உடுமலைப்பேட்டை"
- தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது.
- குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதலே பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்கதையாகிவிட்டன. பெண்களுக்கான பாதுகாப்பான மாநிலமாகத் திகழ்ந்த தமிழ் நாட்டை, பெண்கள் வெளியில் நடமாடவே அச்சப்படும் அளவிற்கு தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் 17 வயது சிறுமியை 9 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் கேட்டு மிகுந்த அதிர்ச்சியுற்றேன்.
கடந்த சில மாதங்களாகவே, தொடர்ச்சியாக அந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், 4 மாத கர்ப்பமான நிலையிலேயே வெளியில் தெரியவந்துள்ளது.
காவல் துறை விசாரணையில், இந்த கொடூரச் செயலை செய்த கும்பல் மேலும் ஒரு சிறுமியை இதேபோன்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதும் சமூக வலைதளங்கள் மூலமாகத் தெரியவந்துள்ளது.
தி.மு.க. ஆட்சியில் சிறார்கள்-இளைஞர்கள் போதையின் பிடியில் சிக்கி குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. தற்போது, நெஞ்சை பதைபதைக்கும் இத்தகு குற்றச் செயல்களைக் கூட சட்டத்தின் மீதோ, காவல் துறையின் மீதோ எவ்வித அச்சமும் இன்றி செய்யத் துணிந்துவிட்டனர் சமூக விரோதிகள்.
அன்று தன்னை பெண்களின் பாதுகாவலராக அறிவித்து முழங்கிய ஸ்டாலின், தற்போது முதல்-அமைச்சராக இருக்கும் இந்த தி.மு.க. ஆட்சியில், தொடர்ச்சியாக நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக நடக்கும் இத்தகு பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்தத் தவறிய தி.மு.க. அரசை, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மட்டுமல்லாமல், ஒரு தந்தை என்கிற அக்கறையுடனே கண்டிக்கிறேன்.
உடுமலைப்பேட்டை பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- சாக்கடை கால்வாயை சீரமைத்து சுகாதாரக் கேடு ஏற்படாமல் தடுக்க வேண்டும்.
- மூக்கை பிடித்துக் கொண்டு செல்ல வேண்டிய நிலையில் உள்ளது.
உடுமலை:
உடுமலை தாராபுரம் மெயின் ரோட்டில் யு .எஸ் .எஸ் .காலனியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் சாக்கடை கால்வாய் கட்டும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளதால் அந்த பகுதியில் தேங்கியுள்ள சாக்கடை கழிவு நீரால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.
மேலும் தேங்கியுள்ள கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி பாம்புகள் குடியிருப்பு பகுதியில் நுழைந்தும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது .மேலும் கால்வாய் பகுதியில் காட்டுச் செடிகள் புதர் போல் வளர்ந்து உள்ளதால் சாக்கடை நீர் வழிந்தோட வழியில்லாமல் உள்ளது. எனவே இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் சீரமைத்து சுகாதாரக் கேடு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை பஸ் நிலையம் அருகே உடுமலை வாரச்சந்தை அமைந்துள்ளது. இங்கு உடுமலை மற்றும் மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை சந்தைக்கு கொண்டு வந்து மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர். தவிர மேலும் வாரச்சந்தை நாளான திங்கட்கிழமை பல்வேறு பகுதியில் உள்ள வியாபாரிகள் காய்கறிகள் மற்றும் தானிய வகைகளையும் வாரச் சந்தையில் வியாபாரம் செய்து செய்கின்றனர்.
அப்போது மீதமாகும் காய்கறி கழிவுகள் அழுகிய நிலையில் கொட்டப்பட்டு ஒரே இடத்தில் குவிக்கப்படுவதால் தற்போது பெய்து வரும் மழையால் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மேலும் காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் அந்த பகுதியில் வழியாக நடந்து செல்ல செல்வதற்கு மூக்கை பிடித்துக் கொண்டு செல்ல வேண்டிய நிலையில் உள்ளது. எனவே அவ்வப்போது கழிவுகளை அகற்றி சுகாதார கேடு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்