என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனுமதி மறுப்பு"

    • திண்டிவனம் மற்றும் திண்டிவனத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 26 விநாயகர் சிலைகளை பல்வேறு இடங்களில் வைத்துள்ளார்.
    • இந்து முன்னணி மாவட்ட தலைவர் பிரபு விநாயகர் சிலை வைப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    விழுப்புரம் :

    திண்டிவனத்தை சேர்ந்த இந்து முன்னணி மாவட்ட தலைவர் பிரபு. இவர் திண்டிவனம் மற்றும் திண்டிவனத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 26 விநாயகர் சிலைகளை பல்வேறு இடங்களில் வைத்துள்ளார். இந்நிலையில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் பிரபு தலைமையிலான குழுவினர் தற்போது திண்டிவனம் நேரு வீதியில் உள்ள காய்கறி மார்க்கெட் அருகே விநாயகர் சிலை வைக்க வேண்டி திண்டிவனம் சார் ஆட்சியரிடம் சென்று அனுமதி கேட்டார். இதற்கு சார் ஆட்சியர் அனுமதி மறுத்துவிட்டார். இதற்கு இந்து முன்னணி மாவட்ட தலைவர் பிரபு விநாயகர் சிலை வைப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் திண்டிவனம் ஏ.எஸ்பி. அபிஷேக் குப்தா தலைமையிலான போலீசார் நேரு வீதி பகுதியில் போலீசார்கள் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதி பெரும் பரபரப்பாக உள்ளது.

    • தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுகள் இன்று நடைபெற்றது.
    • 9 மணிக்குமேல் வந்தவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    கூடலூர்:

    தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுகள் இன்று நடைபெற்றது. இதற்காக தேனி மாவட்டத்தில் பல்வேறு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு காலை 9.30 மணிக்கு ெதாடங்கும் என்றும், 12.30 மணிவரை தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    தேர்வு எழுத வருபவர்கள் காலை 9 மணிக்கே அந்தந்த மையங்களுக்கு சென்றுவிடவேண்டும் எனவும், தாமதமாக வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    கூடலுரில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு இன்று 9 மணிக்கு மேலாக 15-க்கும் மேற்பட்டோர் வந்தனர். அதில் பலர் கைக்குழந்தைகளுடன் பெண்களும் வந்தனர். ஆனால் அவர்களுக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. 9 மணிக்குமேல் வருபவர்களை உள்ளே அனுமதிக்ககூடாது என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எனவே திரும்பிச்செல்ல வேண்டும் என தெரிவித்தனர்.

    இதனால் ஒருசிலர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கைக்குழந்தையுடன் வந்த பெண்கள் கண்ணீர் விட்டு அழுதனர். தேர்வுக்காக கடந்த 6 மாதம் கடுமையாக படித்து தயார்படுத்தி இருந்த நிலையில் தேர்வுஎழுத முடியவில்லையே என அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இதனால் அந்த தேர்வு மையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×