search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் தேவை"

    • மே மாதம் தொடக்கத்தில் அது 22 ஆயிரம் மெகாவாட்டை கடந்து புதிய உச்சத்தை அடைந்தது.
    • சாமான்ய மக்களும் கோடை வெயிலை சமாளிக்க ஏ.சி.யை பயன்படுத்தினார்கள். இதனால் மின்தேவை உயர்ந்தது.

    சென்னை:

    தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் இருந்தது. பல மாவட்டங்களில் வெப்ப அலை வீசியது. மார்ச் மாதத்திலேயே வெயில் தாக்க தொடங்கி படிப்படியாக ஏப்ரல், மே மாதங்களில் அதிகரித்து உச்சத்தை தொட்டது.

    வெப்ப அலை இயல்பை விட 4, 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்தது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கினார்கள். பகலில் மட்டுமின்றி இரவிலும் புழுக்கம் காணப்பட்டது. இதனால் மின்சாரத் தேவை அதிகரித்தது. 16 ஆயிரம், 17 ஆயிரம் மெகாவாட் மின்சார தேவையானது படிப்படியாக அதிகரித்து 20 ஆயிரத்தை தொட்டது.

    மே மாதம் தொடக்கத்தில் அது 22 ஆயிரம் மெகாவாட்டை கடந்து புதிய உச்சத்தை அடைந்தது. இதுவரையில் இல்லாத அளவிற்கு மின்சார பயன்பாடு இருந்தது. வீடுகளில் ஏ.சி. அதிகளவில் பயன்படுத்தப்பட்டதே இதற்கு முக்கிய காரணம். சாமான்ய மக்களும் கோடை வெயிலை சமாளிக்க ஏ.சி.யை பயன்படுத்தினார்கள். இதனால் மின்தேவை உயர்ந்தது.

    இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் மின் தேவை குறைந்தது. அதிலும் ஒரு சில மாவட்டங்களில் கனமழையும் பெய்ததால் வெப்பம் தணிந்தது. 2 நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதியிலும் மிதமான மழை பெய்வதால் ஏ.சி. பயன்பாடு குறைந்தது. இதன் காரணமாக மின் தேவையும் கணிசமாக குறைந்துள்ளது. நேற்று 16,736 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டது. வரும் நாட்களிலும் படிப்படியாக குறைய வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கோடை வெயில் இந்த ஆண்டு மக்களை பாடாய் படுத்தி வருகிறது
    • பல மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது

    கோடை வெயில் இந்த ஆண்டு மக்களை பாடாய் படுத்தி வருகிறது. கடந்த பிப்ரவரி மாத இறுதியில் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. ஏப்ரல் மாதம் முழுவதும் வெயில் உக்கிரமாக இருந்தது. இதனால், மக்கள் கடும் அவதிபட்டு வந்தனர்.

    பல உள் மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாகவே காணப்படுகிறது. இயல்பை விட இந்த ஆண்டு மிக அதிகமாக வெப்பம் நிலவியதால் மக்கள் தவித்து வருகிறார்கள். கோடை வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.




    வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ளதால், ஏசி பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், மின் தேவை அதிகரிகரித்துள்ளது. இரவு நேரத்தில் மக்கள், 'ஏசி' சாதனங்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர். எனவே, மின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

    இந்நிலையில் வெப்ப அலை வீசுவதால் தமிழகத்தின் மின்சார தேவை தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. மாநிலத்தின் சீரான மின் விநியோகத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் உறுதி செய்து வருகிறது.



    கடந்த 30 - ந்தேதி அதிகபட்ச மின் தேவை 20,701 மெகாவாட் ஆகும். மேலும் தமிழ்நாட்டின் மின் தேவை தற்போது புதிய உச்சத்தை அடைந்துள்ளது. கோடை வெப்ப அலையின் தாக்கத்தால், தமிழ்நாட்டின் மின் தேவை 20,830 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

    இந்நிலையில் வெப்ப அலை காரணமாக நேற்று 2 -ந்தேதி முதல் மாநிலத்தின் மின் தேவை புதிய உச்சத்தை எட்டி உள்ளது. இந்த தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.

    • அரசுத்துறைக்கு சொந்தமான கட்டிடங்களில் சூரிய சக்தியை கொண்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
    • விடுமுறை மற்றும் பயன்பாட்டு திறனுக்கு எஞ்சிய மின்சாரத்தை, மின்வாரியத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

    மடத்துக்குளம் :

    தமிழகத்தில், அரசுத்துறைக்கு சொந்தமான கட்டிடங்களில் சூரிய சக்தியைக்கொண்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி அரசு அலுவலகங்களில் பகல் நேரங்களில் தினசரி தேவைப்படும் மின்சாரத்தின் அளவிற்கு ஏற்ப திறன் கொண்ட 'பேனல்' அமைத்து அதில் உற்பத்தியாகும் மின்சாரம் நேரடியாக பயன்படுத்தப்படுகிறது.

    விடுமுறை நாட்கள் மற்றும் பயன்பாட்டு திறனுக்கு எஞ்சிய மின்சாரத்தை, மின்வாரியத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. இத்திட்டத்தை உடுமலை நகரில் அமைந்துள்ள அரசு அலுவலகங்களுக்கு விரிவுபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், முதற்கட்டமாக, மின்வாரிய அலுவலக மேற்கூரைகளில், பேனல் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு கட்டடங்களிலும் சோலார் பேனல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகிறது என்றனர்.

    ×